"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, June 10, 2005

கடவுளைக் காட்டு......

கடவுளைக் காட்டு
என்று ஒரு போர் -
நண்பர்களுக்குள்...

நம்பிக்கையின்
எல்லையில் நிற்கிறார்
கடவுள்.

நம்பிக்கைகள்
உண்டாவது
முயற்சியால்!

முயற்சிக்க வேண்டுமே
ஓர் மனதின்
சிந்தனை -
அங்கே
கடவுளின் வாசம்....

சிந்தனை எழுவது
என் தலையில் -
மூளையின்
மெல்லிய திசுக்களில்....

திசுக்கள்
துடித்தால் தான்
சிந்தனை.

ஓர் துடிப்பை
தூண்டியவர்
கடவுள்...


துடிப்பது
உண்டானது
பிறப்பின்
நியதி.

பிறப்பிற்கு
நியதி
வைத்தவன் யார்?
அவர் தானே -
கடவுள்?

கடவுளைக் காட்டு
என்ற போரின் விவாதம்
சூடாக தொடர்ந்தது
நண்பர்களுக்குள்.


பக்கத்து பள்ளியில்
இறைவணக்கப் பிரார்த்தனை -
'என் மதம் எனக்கு....
உன் மதம் உனக்கு.......'

1 comment:

நண்பன் said...

நன்றி பிரியா....

உங்கள் பாராட்டுதலுக்கு.....

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்