"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, September 19, 2005

ஒரே வித்தியாசம்.

ஒரே வித்தியாசம்


அவளை விட
உயர்ந்தவள் தானென்று
நிறுவுவதில்
அதீத கவனம் கொள்கிறாய்.

பூவும் பொட்டும் வைப்பதும்
தாலி கட்டுவதும் கட்டாததும்
அதிக வித்தியாசப்படுத்துவதில்லை.

பணிகள் நிமித்தம்
தேவைகள் நிமித்தம்
எல்லாவிடத்தும் போய்வருவதில்
என்ன பெரிய வித்தியாசமிருக்கப் போகிறது?

ஒன்றில் மட்டும்
உன்னிடம் அவள் தோற்றுப்போவாள் -
பகட்டாகவும் படோடபமாகவும்
மணச்சடங்கு இல்லங்களில்
உனக்குக் கிடைக்கும் வரவேற்பு
அவளுக்குக் கிடைக்கப் போவதில்லை தான்.

என்றாலும் உனக்குத் தெரியுமா -
நீ அறியாத
வித்தியாசமொன்று உண்டு என்பதை.

பூசணிக்காயையும் எலிகளையும் கொண்டு
சிந்தெரல்லாவிற்கு
தேர் கொடுத்த தேவதையாக
வருடத்திற்கொரு மாதம்
புலம் பெயர்ந்த உன் புருஷனை
உனக்குத் தருவது போல்
அவளுக்குத் தராத
அந்த இறைவன் தான்
அந்த வித்தியாசமென்று?

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்