"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்
Showing posts with label மனித உரிமை. Show all posts
Showing posts with label மனித உரிமை. Show all posts

Saturday, November 22, 2008

மைக்கெல் ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைந்தார்.

பெப்ருவரி 25, 2007 அன்று நான் எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன் - ஜாக்ஸன் இஸ்லாத்தில் இணைகிறார். அதற்கான காலம் கனிந்து வருகிறேன் என்று.

இன்றைய செய்தி - ஜாக்ஸன் இணைந்தே விட்டார் என்று.

Good Luck and Welcome Jackson.

வணக்கம், மைக்கெல் ஜாக்ஸன், வாருங்கள்.





மிக்காயீல் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு அவர் இஸ்லாத்தில் இணைந்த செய்தியும், கடந்த வருடம் நான் எழுதிய பதிவின் மீள் பிரசுரமும் இதோ கீழே::



Troubled pop star Michael Jackson has converted to Islam and changed his name to Mikaeel.

Jackson, 50, was dressed in the Islamic garb as he pledged his allegiance to the Koran at a friend's house in Los Angeles. He sat on the floor as an Imam was called to officiate the ceremony.

Jackson, who was raised a Jehovah's Witness, decided to convert after discussing religion with a music producer and songwriter on his new album - both of them converts to Islam.

"They began talking to him about their beliefs and how they thought they had become better people after they converted. Michael soon began warming to the idea. An Imam was summoned, and Michael went through the shahada, which is the Muslim declaration of belief," a source was quoted as saying.

Mikaeel is the name of one of Allah's angels.

கடந்த வருடம் நான் எழுதிய பதிவு இது தான்.


மைக்கெல் ஜாக்ஸன் வெகு விரைவில் இஸ்லாத்தில் இணைவார் என அவரது சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் ஒரு பிரிட்டிஷ் இஸ்லாமிய செய்தித் தாளில் அறிவித்துள்ளார். இதைப் பற்றிய செய்தி, இன்று கலீஜ் டைம்ஸிலும் வெளியாகியுள்ளது.

தன்னைப் பின்பற்றி, தனது சகோதரனும் தனது நம்பிக்கைகளை மாற்றிக் கொள்வார் என கூறியுள்ள அவர், தனது ஹஜ் கடமைகளை முடித்து விட்டு, திரும்புகையில் தனது சகோதரனுக்காக நிறைய இஸ்லாமிய புத்தகங்களை வாங்கி வந்ததாகவும், அவர் இஸ்லாம் மதம் பற்றி தன்னிடம் நிறைய கேள்விகள் கேட்டதாகவும், தான் அதற்கு இஸ்லாம் அமைதியான, அழகிய மார்க்கம் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து விட்ட மைக்கேல் ஜாக்ஸன், அமைதியையும், மன வலிமையையும் தரக்கூடிய வழியைக் கண்டு கொண்ட தன் சகோதரனைக் குறித்துப் பெருமையடைந்ததாக சகோதரர் ஜெர்மய்ன் ஜாக்ஸன் (52) கூறினார். 'வெகு விரைவில் அவர் இஸ்லாத்தில் இணையக் கூடும்" என்ற ஜெர்மய்ன், மைக்கேல் இஸ்லாத்தில் இணைந்தால், தானும் அவரும் சேர்ந்து இவ்வுலகில் பெரும் மாற்றங்களைத் தோற்றுவிக்க முடியும் என்றார்.

'மைக்கேலால் நிறையச் செய்ய முடியும். நான் முயற்சிப்பதைப் போல். நான், மைக்கேல் ஜாக்ஸன், மற்றும் இறைவனின் வார்த்தைகளால் நிறையச் செய்ய முடியும்.' என்கிறார் ஜெர்மய்ன். 1989ல் தன்னை இணைத்துக் கொண்ட, ஜெர்மய்ன், சமீபத்தில் நடைபெற்ற Big Brother Celebrityயில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் - அதாவது ஷில்பா ஷெட்டிக்கு அடுத்த இடம். இன துவேஷத்திற்கு ஷில்பா ஆளான பொழுது, அவருக்கு ஆதரவாக இருந்து, நண்பனானவர்.

பல வழக்குகளில் சிக்கி மன அமைதி இழந்து, நிம்மதியின்றி தவித்தவர் - ஜாக்ஸன்.

செய்தியின் சுட்டி.
http://news.yahoo.com/s/afp/20070222/ennew_afp/afpentertainmentislam_070222184705
The Khaleej Times, 25-2-07.

செய்தியைப் படித்ததும் மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். அமெரிக்காவிலிருந்து வெளியான பின்பு அவர் பஹ்ரைன் வந்தார். அங்கேயே பெரும்பகுதியைக் கழித்தவர். அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்குகளிலெல்லாம் விடுபட்டாலும் இன்னமும் புதிது புதிதாக ஏதாவது ஒரு காரணத்தைக் கொண்டு, வழக்குகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றன. இப்பொழுது கூட, அவர் மீதும், ஒரு மருத்துவ மனை மீதும் வழக்குகள் போடப்பட்டுள்ளது. காரணம் - அவர் காய்ச்சலுடன் உடல் நலமின்றி வந்த பொழுது, ஒரு நோயாளிப் பெண்மணியை அகற்றி விட்டு, அவருக்கு அந்த இடத்தைத் தந்தார்கள். அந்தப் பெண்மணி, சிறிது நேரத்தில் இறந்து விட்டார். அவர் சாவிற்கு ஜாக்ஸன் தான் காரணம் என்று ஒரு வழக்கு.

ஒரு மனிதனை எத்தனை தூரம் ஒரு சமூகம் சின்னாபின்னா படுத்த முடியும் என்பதற்கு மைக்கேல் ஜாக்ஸன் ஒரு உதாரணம். மன அமைதியைக் குலைத்து, தங்கள் சுயலாபத்திற்காக எதையும் செய்யத் தயாராகி விட்ட ஒரு சமூகத்தின் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள, அவர் தேர்வு செய்து கொண்ட பாதை: இஸ்லாம்.

வலுக்கட்டாயமான கருத்துத் திணிப்பினால், அவர் தன் வழியை மாற்றிக் கொள்ளவில்லை. மாறாக முற்றிலும் அறிந்து, பின் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார். அவர் அவ்வாறு தன்னை இணைத்துக் கொள்வாரானால், இஸ்லாம் அவரை வரவேற்கும். அவருக்கு அமைதியை வழங்கும்.

புலம்புபவர்கள் புலம்பித் திரியட்டும்.

இஸ்லாம் அமைதியாக தன்னை வளர்த்துக் கொண்டேயிருக்கும்

Friday, October 03, 2008

நேசமிகு மரணம்

நேசமிகு மரணம்
*****



எனக்கு அவசரதேவையாக
ஒரு கோப்பை நீரும்
ஒரு சிட்டிகை நச்சுப்பொடியும்
மேலும்
விஷக்குவளையை உதடுகளில் பொருத்தவும்
நானில்லாத என்னுடலை
படுக்கையில் கிடத்தவும்
துணையாக ஒரு மனித உயிர்.


நீங்கள் தயாராகும் முன்
சற்று தெரிந்து கொள்ளுங்கள்


என்ன செய்து கொள்ள வேண்டுமென்ற
தீர்மானமான முடிவை எட்டிவிட்டாலும்
வினைமுடிக்கவியலா முடக்கத்தினுள்
தாவரமாய் துவண்டு கிடக்கின்ற என்னை
நானே காலியாக்கிக் கொள்ளும் முடிவிற்கு
உங்களால் எளிதாக உதவிட முடியாது
கொலையாளியெனும் பட்டமேற்காமல்


என்னைக் கொலை செய்வதன் மூலமே
உங்களால் நிரூபிக்க இயலும்
என் மீது உங்களுக்கெந்த அதிகாரமுமில்லையென்பதையும்
நீங்கள் என்னை நேசித்தீர்கள் என்பதையும்
****






Voluntary euthanasia: When the person who is killed has requested to
be killed.


துயரமும் அவலமும் ததும்பும் நாட்களை அசையவியலா ஓருயிர் தாவரமாய் படுக்கையிலோ, நகரும் நாற்காலியிலோ கழிக்கும் விரக்தியில் - இந்த உடலை விட்டு விலகிப் போவதன் மூலம் தனக்கும் தன்நேசத்திற்குரியவர்களுக்க்கும் நிரந்தரமான தீர்வைத் தேடி எடுக்கும் முடிவு தான் தன்னழிப்பு. மரணத்தின் மூலமே நேசத்தைத் தக்க வைத்துக் கொள்ளவியலும் என்பதே ஒரு முரண் தான்.


சில நாடுகள் இதை சட்டபூர்வமானதாக அறிவித்திருந்தாலும், இங்கு வந்து இறந்து போனவர்களின் துணை சொந்த நாடு திரும்பும் பொழுது கைது செய்யப்படலாம்.


இதை விவாதமாகக் கொண்டு, the sea inside என்ற ஸ்பானிஷ் திரைப்படம் ஒன்று
வந்திருக்கிறது.


சமீபத்தில், இங்கிலாந்தில் இது சம்பந்தமாக பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. அதன் விபரங்கள் –


Debbie Purdy என்ற பெண், தன் நோயின் தன்மையால் மேலும் வாழ்வது அர்த்தமற்றதென முடிவு செய்து செத்துப் போவதற்கு முடிவு செய்தார். ஆனால், அவரால் பிறர் உதவியின்றி, எதுவும் செய்து கொள்ள இயலாது. மேலும் இங்கிலாந்தில் தற்கொலை செய்து கொள்வதற்கு அனுமதி இல்லை. அவர் ஸ்விட்சர்லாந்து செல்ல வேண்டும். அங்கு சென்று தன் சாவிற்கு தன் கணவர் சட்டத்திற்குட்பட்டு, எத்தனை தூரம் உதவ முடியுமென்று தெரிந்து கொள்ள
விரும்புவதாக நீதிமன்றத்திடம் முறையிட்டுள்ளார். (Gulfnews, 3/10/08)


அதுவே இங்கு கவிதையாக....

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்