"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, March 31, 2007

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (இறுதி பதிவு)

மௌலானா மௌதூதி மற்றும் சர் சையத் அஹமத் கான் அவர்களது முயற்சியால் உண்மைகளை உணரத்துவங்கினர் - ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள். அவர்களும் இதை பகுத்து ஆராயத் தலைப்பட்டனர்.

Professor Kenneth Cragg of Cambridge, a Christian scholar deeply involved in reckoning with his neighbour's scripture', asks, 'In a situation so charged, in any event, with ambiguity, will the theory of deliberate, almost negotiated, compromise, made and withdrawn, be the only or the likeliest hypothesis? Did the Quraish think Muhammad was still negotiable?

Cragg answers himself: 'It would not have been the first time that worship at once common and contrasted. Certainly in the sequel the struggle continued with Muhammed resolute and the paganism stubborn.'

ப்ரொபஸ்ஸர் கென்னத் உறுதிபடுத்துகிறார் ' குரைஷிகளுக்கும் முகமதுவிற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவரவர் நிலைபாட்டில் அவர்கள் உறுதியாகவே இருந்திருக்கின்றனர். '

இந்த சாத்தானிக் வெர்ஸஸை மறுத்து, இத்தாலிய அறிஞர் Caetani தனது Annali dell'Islam என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

When one considers the contempt and enmity which the Quraish tribe, who inhabitated Mecca, showed toward Mohammed on other occasions, it would seem highly improbable that they ever condescended to listen to the Prophet's reading of the Koran, to say nothing of acknowledging him as a prophet on occasion of an insignificant concession. Furthermore, such a sudden abandonment of a principle which he had previously championed so energetically would have utterly cancelled his previous success, and entirely undermined the prestige which he had gained among his followers. And one might add that a compromise with the Quraish tribe could not possibly have been reached by merely changing a few lines of the Koran at a time when a large portion of it was filled with bitter attacks upon the Meccan pagans and their gods.

(முகமதுவின் மீது குரைஷிகள் கொண்டிருந்த வெறுப்பையும், பகையையும் கணக்கிலெடுத்துக் கொண்டால், அந்த குரைஷிகள் முகமது பிரசங்கத்தைப் போய் அமர்ந்து காது கொடுத்து கேட்டிருப்பார்கள் என்ற சாத்தியப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை. காசு பெறாத ஒரு சலுகைக்கு (ஒரு வரியை மாற்றிச் சொல்லுதல்) அவரை நபியாக மறுசொல் இல்லாது ஒப்புக் கொண்டிருக்கவும் மாட்டார்கள். மேலும் இந்த திடீரென்ற கொள்கை கைவிடுதலால், அதுவரையிலும் தன்னைப் பின்பற்றும் மக்களிடையே தனக்கிருந்த செல்வாக்கை முகமது இழந்திருப்பார். இத்துடன் மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் ' குரானில் ஒரு வரியை மட்டும் மாற்றி விட்டு, அதைவிட மோசமாக குரைஷிகளைத் தாக்கும் வசனங்களையெல்லாம் விட்டுவைத்திருக்க ஒப்புக்கொண்டு, ஒரு சமதான உடன்படிக்கைக்கு குரைஷிகள் வந்திருப்பார்கள் என நம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. )

Caetani ஐக் மேற்கோள் காட்டி, Tor Andrae தனது Mohammad: The Man and his Faith என்ற புத்தகத்தில் எழுதுகிறார்:

It is very apparent that in this form the whole narrative is historically and psychologically contradictory.

இவர் குறிப்பிடும் narrative இப்னு ச'ஆத்-னுடையது.

அடுத்து இன்னுமொரு ஆய்வாளர் Hichem Djait - the well known, historian attached to the universities of McGill and Berkely writes:

Over the centuries Christian tradition came to look upon Islam as a disturbing upstart movement that awakened such bitter passion precisely because it laid claim to the same territory as Christianity.

தாங்கள் இயங்கும் அதே தளத்தில் அதே நிலப்பரப்பில் எழுச்சிமிகு மதமாக வளரத் தொடங்கிய இஸ்லாம் கிறித்துவ ஸ்தாபனங்களைக் கலவரப்படுத்தியது.

இது தான் உண்மை. மனம் தளர்ந்த கிறித்துவ துறவிகள் குரானின் மீதும் முகமதுவின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசினர். இந்த நிலைமை க்ருசேட் என்னும் சிலுவை யுத்தங்கள் தொடங்கிய காலத்தில் இன்னும் மோசமாகியது.

இவற்றைக் குறித்து, எழுதும் இத்தாலிய வரலாற்றியலாளர் Professor Francesco Francesco Gabrieli யின் வார்த்தைகள்:

We find it in various versions, inconsistent in their content, but entirely consistent in their spirit of vituperation and hatred, in the writing of chroniclers, apologists, hagiographers and encyclopaedists of the Latin Middle Ages; Guibert of Nogent and Hildebert of Tours in the eleventh century, Peter the venerable in the twelfth, Jacques de Vitry, Martinus Polonus, Vincent of Beauvais and Jacobus, a Varagine, in the thirteenth, up to Brunetto Latini and his imitators, an Dante and his commentators

ஆக, மொத்த ஐரோப்பியர்களும் கூட்டணி வைத்து எழுதி இருக்கிறார்கள் - தங்கள் வக்கிரத்தை இஸ்லாத்தின் மீது காட்டி இருக்கிறார்கள்.

அது மட்டுமா? இவர்களுடைய கூட்டணியின் லட்சணத்தைப் பாருங்கள் -

லூதர் என்பவர் முகமதுவையும், போப் ஆண்டவரையும் ஒரு அணியில் வைக்கிறார் - இருவரையும் கிறிஸ்துவின் எதிரி என்கிறார். கத்தோலிக்கர்கள் சொல்கிறார்கள் - முகமது பிராட்டஸ்டண்டுன் இணைந்து கிறிஸ்துவிற்கு எதிராக இருக்கிறார். என்ன சொல்வது!

இத்தனைக்கும் கிறிஸ்துவைத் தூக்கிப் பிடிப்பதிலும், அவரை ஏற்றுக் கொள்வதிலும் முன்னணியில் இருப்பது இஸ்லாம். ஈஸா நபிகளின் பெயர் சொல்லப்படும் பொழுதெல்லாம் - peace be upon him என்ற வாழ்த்தையும் சேர்த்தே கூறுமாறு இஸ்லாமியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இஸ்லாமியத்தை முழுதாக அறியாதவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள் ' முகமது நபிகளை anti-Christ' என்று!!!

இதற்கு நடுவே, இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள நேர்மையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. குரானின் சிறந்த மொழி பெயர்ப்புகளும் ஆங்கிலத்திலும் ப்ரெஞ்சு மொழியிலும் வெளிவந்தது ' குறிப்பாக Sale ஆங்கிலத்திலும் Savary ப்ரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்த்த குரான்கள் சிறப்பாக அமைந்தன. Boulainvilliers and Goethe முகமது நபிகள் மற்றும் அவரது பணியைப் பற்றியும் நேர்மையாக எழுதினார்கள்.

ஆனால், எல்லாம் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதை தான். 1742ல் Voltaire என்பவர் Mahomet என்ற நாடகத்தை எழுதினார் - காழ்ப்புணர்ச்சியின் உச்சம் அது. நேர்மையான மனதில் கூட நஞ்சைக் கலக்கும் நாடகம் அது.

அதை சரி செய்யும் பணி Thomas Carlyle என்பவரால் செய்யப்பட்டது. அவரது புத்தகம் - 'Hero's and Hero-worship' என்ற புத்தகத்தில், 1840ல், நபிகள் அனைவரிலும் ஹீரோவாக தேர்வு செய்து எழுதுகிறார்:

Our current hypothesis about Mahomet, that he was a scheming Imposter, a Falsehood incarnate, that his religion is a mere mass of quackery and fatuity, begins really to be now untenable to anyone. The lies, which well meaning zeal has heaped round this man, are disgraceful to ourselves only

அவர் இஸ்லாம் என்பதன் உண்மையான பொருளை தன் இனத்தவருக்குச் சொல்கிறார் - Islam means surrendering to God. If that's so, then we all live in Islam.

மேலை நாட்டினர் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மைக்கேல் எம் ஹார்ட் என்ற அமெரிக்கர் வெளியிட்ட புத்தகத்தில் - Top 100 - புத்தகத்தின் No 1 - முகமது நபிகள். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள், மற்றும் விபரங்களை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இவ்வாறு அனைவரும் தங்களது எண்ணங்களை மாற்றிக் கொண்டு, காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டவற்றைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்ட பின்பு - அந்த குப்பையைக் கிளறி, எச்சில் இலைகளிலிருந்து நக்கி எடுத்து வந்த கருவைத் தான் தனது கற்பனையாக வெளியிட்ட கேவலமான மனிதன் - சல்மான் ருஷ்டி. அயோதுல்லா கொமேனியின் அதிதீவிர தண்டனை தீர்ப்பால், எழுந்த அனுதாபம் தான் - இந்த மனிதருக்குக் கிடைத்த பரிதாபம் தான் - இன்று பலருக்கு இந்த மனிதனைப் பற்றி பரிந்து பேச தூண்டுகிறது. கொமெய்னி ஆணையிட்ட தண்டனை தேவையற்றது. முட்டாள்தனமானது. இந்தத் துரோகிக்கு அதுவே ஒரு பாதுகாப்புக் கேடயமாக மாறிவிட்டது. தன் ஈனத்தை freedom of expression என்ற சொற்றோடர்களுக்குப் பின் மறைத்து தான் தப்புவதற்கு வழி ஏற்படுத்திக் கொண்டார் இந்த மனிதன்.

ஆனால் வரலாறுகளின் உண்மையை அறிந்த எந்த ஒரு மனிதனும், மதமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, இந்த மனிதனை வர்ணிப்பார்கள் -

'இவன் ஒரு இனத்துரோகி என்று'


பொறுமையாக வாசித்தவர்களுக்கு நன்றி.

இன்று நபிகள் பிறந்த தினம். அவரது பிறந்த நாளில் அவர் மீது தூற்றப்பட்ட ஒரு குற்றச்சாட்டிற்கு தகுந்த பதில் எழுத முடிந்த நிறைவினால், கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது.

ஒருவர் சொன்னார் - அல்லாஹ்வைக் கூட தூற்றி விட்டு, இந்த இஸ்லாமியர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்; ஆனால், முகமது நபிகளைப் பற்றி தூற்றி விட்டு தப்பித்துக் கொள்ள முடியாது என்று.

உண்மை தான் - ஒரு உண்மையான இஸ்லாமியனின் உணர்வில், உடலின் உயிர் மூச்சில் கலந்து விட்ட பெருமித உணர்வு - முகமது நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம். உலகின் எந்த சிறப்பான பொருளுக்கும் பண்டமாற்று செய்ய இயலாத உணர்வு அது. அல்லாஹ் - ஏக இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் - எனக்கு, உங்களுக்கு, மனிதர்களுக்கு, இன்னும் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், உயிரற்றவைகளுக்கும் அவன் தான் இறைவன்.

ஆனால், முகமது நபிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவர். அவர் மீது இறைவனுக்கு அடுத்த படியாக பற்றும் பாசமும் வைப்பது இஸ்லாமியர்களின் இருப்பிற்கு ஆதாரம்.

HAPPY EID MILAD TO ONE AND ALL

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (பதிவு 3)

இதன் முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி வாசித்து விட்டு தொடருங்கள், இங்கே:


ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்த சாத்தானிக் வெர்ஸஸ்-ஐ கையிலெடுத்டுக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாக தூற்றி எழுதினார்கள். Sir William Muir என்ற வரலாற்றியலாளர் தபரி, வாஹிதி எழுதியவற்றை முழுவதுமாக தன் விருப்பத்திற்கேற்றவாறு பயன் படுத்திக் கொண்டார்.

முய்ரின் வார்த்தைகளில்:

It is hardly possible to conceive how the tale, if not in some shape or other founded in truth, could ever have been invented. The stubborn fact remains, and is by all admitted, that the first refugees did return about this time from Abyssinia; and that they returned in consequence of a rumor that Mecca was converted. To this fact the narrative of Waqidi and Tabari affords the only intelligible clue. At the same time it is by no means necessary that we should literally adopt the exculpatory version of Mohammetan tradition, or seek in a supernatural interpolation, the explanation of actions to be equally accounted for by the natural workings of the Prophets mind. It is obvious that the lapse was no sudden event. It was not a concession won by surprise, or an error of the tongue committed unawares, and immediately withdrawn. The hostility of the people had long pressed upon the spirit of the Mahomet; and, in his inward musings, it is admitted even by othodox tradition that he had been mediating the very expression which, as is alleged, the devil prompted him to utter.

ஆக, முய்ர்ன் வாதம் 'நெருப்பில்லாமல் புகையாது' இது தான் மாண்புமிகு முய்ரின் சிந்தனையின் மாண்பு. இந்த வாதத்தை முன்னரே விளக்கி விட்டேன். To make an ass of yourself - Assume!

இந்த வாஹிதி மற்றும் தபரியை உபயோகித்துக் கொண்ட மற்ற அறிஞர்களுள் சிலர் -

German Scholar - Dr. A. Sprenger எழுதிய Leben des Muhammad புத்தகத்தில் முகமது நபிகளைத் தாக்கி எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார். எந்த ஒரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளாது எழுதிய இவர், கிறித்துவ பாதிரிகள் எழுதியவற்றிலுமிருந்த கற்பனைகளையும் தாராளமாக எடுத்துக் கையாண்டிருக்கிறார். மேலும் H.Grimme and H.Lammens, என்ற ஆசிரியர்கள் முகமதுவை நபிகள் அல்ல என தூற்றுவதில் முன்னணியில் இருந்தனர். என்றாலும் Grimme கூறுவது ' முகமது ஒரு இறைத்தூதர் அல்ல - என்றாலும் முகமது ஒரு சிறந்த சீர்திருத்தவாதி.' அதாவது, முகமது நபிகளை ஏற்றுக் கொள்வதில் தான் அவருக்கு சிரமமிருந்தது - கிறித்துவ மத சிந்தனைகளை ஒட்டி, முகமதுவை மறுத்தாக வேண்டிய கட்டாயத்தினால் எழுதியவர் அவர். லெம்மன்ஸ் ஒப்புக் கொள்கிறார் - இஸ்லாமிய வாய் வழியான மரபுகள் பலவும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல - ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதற்காக இந்தத் தகவலை புறக்கணிக்கவும் இல்லை. அவற்றை முழுதாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ஒருபுறம் - இந்த செய்திகள் தவறானவை என்ற அறிவு; மறுபுறம் அதை பயன்படுத்திக் கொள்ளும் மோசடித்தனம் - நப்பாசை.

Maxime Rodinson எழுதுகிறார் தனது Mohammed என்ற புத்தகத்தில் ' There was one incident, in fact, which may reasonably be accepted as true because the makers of Muslim tradition would never have invented a story with such damaging implications' இஸ்லாமிய எழுத்தாளர்கள் இவர்களுக்குப் பெருந்தெய்வம் ஆயினர். தங்கள் காலத்தில் கிடைக்கும் பல வேறு தகவல்களையும் இவர்கள் பொருட்படுத்துவது இல்லை.

Montgomery Watt நபிகளை மதிப்புடன் அணுகினாலும், இந்த சாத்தானிக் வெர்ஸஸ் பற்றி பல பக்கங்கள் எழுதி உள்ளார் - தனது Bell's Introduction to the Qur'an என்ற புத்தகத்தில். அவர் எழுதுகிறார் - 'In essentials, it would seem that the account is true since no Muslim could have invented such a story about Muhammad and, indeed, there is confirmation of it in the Quran.' இவர் ஒரு நிலை கடந்து, முஸ்லிம் எழுத்தாளர்கள் சிலரையும் கடந்து, குரானைப் பற்றியும் பேசியவர்.

இவர்கள் கிளப்பிய அவதூறுகள் இஸ்லாமியர்களை மிகவும் பாதித்தது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் - சர். சையத் அஹமத் கான் (1817 - 1898) இந்திய முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவரும் ஆவார். அவர் தன் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, லண்டன் பயணமானார். இரண்டு வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து, பல வரலாற்று ஆவணங்களையும் ஊன்றிப் படித்தார். நூல்களையும் படித்தார். பின்னர் இஸ்லாமியர்கள் எழுதிய பல புத்தகங்களையும் ஆவணங்களையும் முழுவதுமாகப் படித்து முடித்தார். பின்னர் அவற்றைத் தொகுத்து, உருது மொழியில், குதாபெட் - இ - அஹமதிய்யா என்ற புத்தகத்தை எழுதினார். பின்னர் அதை ஆங்கிலத்திலும் அவரே மொழி பெயர்த்தார். விரிவான ஆராய்ச்சிகள் மூலம், பல அறிஞர்களையும் ஆய்ந்து, மேற்கோள் காட்டி, இந்த சாத்தானிக் வெர்ஸஸ் என்ற செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை நிருவினார்.

அவரது புத்தகத்தில் இருந்து -

ஹாபிஸ் இப்னு ஹாஜ்ர், மத ஆய்வாளர் எழுதுகிறார் - ' தபரி எடுத்துக் கொண்ட மரபுகள் யாவற்றிலும் துளியும் உண்மை இல்லை' என்று. மற்றுமொரு அறிஞரான மௌலானா ஷிப்லி நுமானி (சீரத்துன் நபி எழுதியவர்) சொல்கிறார் ' உண்மையை சற்றும் விரும்பாதவர் - புரணி மற்றும் ஊழல்களில் பெரிதும் விருப்பமுள்ளவர்' இப்னு ச'ஆத் இஷாக்கின் புத்தகத்தில் இருந்து பலவற்றையும் எடுத்துக் கொண்டாலும், தீர்மானமாக எதையும் கூறிவிடாமல், இவையெல்லாம் 'interpretive jugglery' என்றே கூறுகிறார். இவர்களை எல்லாம் இஸ்லாமியர்கள் ஒதுக்கி வைத்தாலும் இவர்களைத் தான் இஸ்லாமிய விமர்சகர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால், மேற்கொண்ட ஆராய்ச்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு முஸ்லிமைக் கொண்டே அவர்களை விமர்சித்தால் போதுமே என்ற எண்ணம் தான்.

மேலே கூறிய 'வாட்'ஐத் தான் சல்மான் ருஷ்டி தனது ஆதாரமாகக் கொண்டார். சர் சையத் அஹமத் கான், மௌலான மௌதூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் தந்த கருத்துகளை இவர் அறிந்திருக்கவே இல்லை. அல்லது மூடி மறைத்து விட்டு, இஸ்லாமியர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு, பதிலே சொல்லாத மாதிரி நினைத்துக் கொண்டு, அவர் தன் இனத்துக்கு எதிராக தன் அறியாமையால் வரலாறாகக் கூட அல்லாமல், புனைவாக முன் வைத்து தன் மீது நீக்க முடியாத இழிவை அள்ளிப் பூசிக் கொண்ட idiot - இந்த சல்மான் ருஷ்டி.

முஸ்லிம்கள் எழுதி வைத்த ஆதாரம் தானே என்றாலும், இது குறித்து ஒரு சிறு ஐயப்பாட்டைக் கூட எழுப்பாது, ஒரு சுட்டுவிரலைக் கூட அசைக்காது, தனது புரணி பேசும் நூலுக்கு - It would sell in millions என்ற வியாபார நோக்கில், தனது கற்பனைகளையும் கலந்து விற்பதற்குத் தயாரானார்.

மற்ற வரலாற்றாசிரியர்கள், தாங்கள் சார்ந்த நம்பிக்கைகளின்படி, மத-வரலாற்றுத் தளங்களில் மட்டுமே விவாதித்துக் கொண்டிருந்த இந்த விஷயத்தை, அது தீர்ந்து பல ஆண்டுகள் கழித்து - வரலாற்றியலாளர்களே தங்கள் தவறை உணர்ந்து, தொடர்ந்து வரும் நூல்களில் இந்த சம்பவத்தைக் குறிப்பிடுவதை தவிர்த்துக் கொண்ட பின்னரும், தனது புத்தக விற்பனையை மட்டுமே நோக்காகக் கொண்டு, ஒரு வரலாற்றுப் புரட்டை மீண்டும், fiction என்று புனைவாக, நஞ்சாக, விற்க முயன்ற கீழ்மையை, கிளம்பிய எதிர்ப்பைக் கண்டதும், அய்யோ, freedom of speech இல்லாமல் போயிற்றே என்று புலம்பிய கோழைத்தனம் ' இவை தான் இந்த நபர் மீது வெறுப்பு கொள்ள வைத்தது. வரலாற்றை சரியாக அறிந்த எந்த ஒரு மனிதனும் - இஸ்லாமியன் அல்ல என்றால் கூட, இந்த ஈனன் மீது காறி துப்புவான். மேலை நாட்டு ஆய்வாளர்கள், கிறித்துவ போதகர்கள் சிறிது சிறிதாக தங்களை மாற்றிக் கொள்ளும் நேரத்தில், இனத்தின் உள்ளிருந்து கிளம்பிய ஒரு நச்சுப் புழு, மீண்டும் இஸ்லாமியர்களின் காயத்தை ஆழ்ந்து கீறியது. உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இஸ்லாமிய இதயங்களையும் கீறியது - இதயம் என்று ஒன்று உள்ள எந்த ஒரு இஸ்லாமியனும் இந்த ஈனனின் பெயர் கேட்டால் - இதயம் கொதிப்பான்.

வாட் குரானைப் பற்றி பேசினார் அல்லவா? ஆதையும் ஆராய்ந்து விடுவோமே! மௌலானா அபுல் ஆலா மௌதூதி (founder of Jamat-i-Islami) மிக ஆழ்ந்து இந்தப் பிரச்சினைக்குரிய குரான் வாசகங்களை ஆராய்ந்தார். வரலாற்றை எழுதியவர்கள் எத்தகைய ஆதாரங்களை வைக்கிறார்கள் என்று பரிசோதித்தார். மேலும், இந்த சாத்தானிக் வெர்ஸஸ் நிகழ்ந்ததாக நடந்த காலத்தைப் பரிசோதித்தார். இந்த நிகழ்வு, இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது என்பதால், இந்த வசனங்கள் என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்டார். நீக்கப்பட்டது என்றால், எவ்வாறு? எப்பொழுது இந்த re-proof by Allah had come? என்ற கேள்வியை எழுப்பினார்! Reproof பார்த்த பின் எப்பொழுது நீக்கும் உத்தரவிடப்பட்டது? When the order to expunge had come?

மௌதூதி தனது வாதங்களை வைக்கிறார் -


அல்நஜ்ம் என்ற அத்தியாயத்தில் இருந்து,

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)

53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

உச்சரிக்கப்பட்டதினாலே, ஏற்றுக் கொண்டதாகப் பேசப்பட்ட இந்த வசனங்களில், they are exalted birds, whose intercession is hoped for என்ற வரிகள் என்ன ஆயிற்று? இந்த வரிகள் நீக்கப்படவில்லை என்றால், இந்த வசனங்களின் பொருள் ஒன்றுக்கொன்று முரணாகப் போகின்றதே? தொடர்பில்லாத இந்த வரி, இந்த வசனங்களில் பொருந்த வில்லையே என்ற வாதத்திற்குப் பதில் இல்லை.

53:23 இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை. நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை. நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள். எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.

53:24 அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?

53:25 ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.

அதாவது முதல் வரிகளில், அவைகள் உய்விக்கப்பட்ட பறவைகள் - அவைகளின் குறுக்கீடுகள் விரும்பத்தக்கதே என்று சொல்லிவிட்டு அடுத்த வாக்கியத்தில், 53:23ல், இவைகளெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம்? ( உண்மை, சாத்தானிக் வெர்ஸஸ் என்ற வாக்கியம் பேசப்படவே இல்லை.)

மேலும், குரைஷிகள் என்ன அத்தனை முட்டாள்களா? அடுத்த வாக்கியம் முற்றிலும் எதிரான ஒரு பொருளைத்தருவது குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல், அப்படியே விழுந்து வணங்கி விட அவர்கள் என்ன முட்டாள்களா? இது நியாயமாக சிந்திக்கக்கூடிய அறிவிற்குப் பொருத்தமாக இல்லையே?

சரி, அப்புறம் இந்த் re-proof எப்பொழுது எப்படி வந்தது? எந்த வசனத்தின் மூலமாக? அது பனுஇஸ்ரெய்ல் என்னும் அத்தியாயத்தில், வசனம் 73-5 மூலமாக இந்தத் திருத்தம் அனுப்பப்பட்டதாம். அதன் பின்னர் அல்-ஹஜ் என்னும் அத்தியாயம் மூலம் 22:52-3 வசனங்கள் மூலம் நீக்கம் செய்யப்பட்டதாம். வேடிக்கை தான்.

வசனம் 73-5 இறங்கிய காலம், சாத்தானிக் வெர்ஸஸ் ஓதப்பட்டதாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து - ஆறு வருடங்கள்!!! நீக்கம் செய்யப்பட்ட வசனம் வந்த காலம் மேலும் மூன்றாண்டுகள் கழித்து. அதாவது அந்த தவறான வசனம் - சாத்தானின் வேதம் - நீக்கப்பட 9 வருடங்கள் காலமாகியதாம்!!! இந்த 9 வருடங்களும் குரைஷிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே சமாதானம் நிலவியதா? இல்லையே! சமாதான உடன்படிக்கையின் படி தான், இந்த வசனத்தை நபிகள் முன்மொழிந்தார் என்றால், இந்த 9 வருடங்களும் சமாதானம் நிலவி இருக்க வேண்டுமே - ஏன் இல்லை? இந்தத் தவறை உணர்வதற்கு 9 வருடங்கள் ஆகியதா, இறைவனுக்கு?

ஒரு குருட்டு மனிதனை அவமானப்படுத்தியதற்காக, நபிகளை கடிந்து இறைவன் இறக்கித்தந்த வசனம், அந்த குருட்டு மனிதன் திரும்பி போகுமுன் வந்தது.


80:1 அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2 அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3 (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4 அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:5 (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:6 நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7 ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8 ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9 அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10 அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

கணப்பொழுதில், கடிந்து கொள்ளும் வசனத்தை நபிகள் ஒளித்து வைக்கவில்லை. மாறாக அதையும் தன் சகாக்களிடம் கூறி, எழுதி வைக்குமாறு கூறினார். எப்படி தனக்கு வசனங்கள் கூறப்பட்டதோ, அப்படியே. கூடுதலும் கிடையாது, குறைவும் கிடையாது.

இவ்வாறிருக்கும் பொழுது, ஒரு தவறைக் கண்டுபிடிக்க ஆறு வருடங்கள் இறைவன் காத்திருந்தானா? ஏன்? ஆறு வருடங்களுக்குப் பின் அதை நீக்குவதற்கு மேலும் மூன்று வருடங்கள் காத்திருந்தானா? அறிவிற்குப் பொருந்தாத இந்த தர்க்கங்களை, தன்னைக் கழுதையாக்கிக் கொள்ளும் தத்துவக்காரர்களால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள இயலும். எந்த நேர்மையான ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அடுத்த கட்டமாக, இந்த வசனங்கள் தான் திருத்துவதற்கும், நீக்குவதற்கும் அனுப்பப்பட்டது என்று கொண்டாலும், அந்த வாசகங்கள் அந்தப் பொருளைத் தான் தருகின்றனவா? கிடையாது.

கிடையவே கிடையாது. இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒட்ட இயலாதவை. சூழ்நிலை விட்டு விலகி நிற்பவை. பனுஇஸ்ரெய்ல் வசனம் (73-5):

17:73 (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள், (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

17:74 மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.

17:75 (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம், பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்

இதில் என்ன திருத்தம் அனுப்பப்பட்டது என்று இந்த வசனத்தை முன் வைத்தவர்களால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. 'அவர்கள் முனைந்தார்கள்' என்ற வார்த்தைகள் நபிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களையே அடையாளம் காட்டுகிறதே தவிர, நபிகள் தவறான வசனங்களை மொழிந்தார் என்று கூறவில்லை. அவ்வாறு செய்யவில்லை நீர் என்பதை உறுதிபடுத்துகிறது. மேலும், தவறான பாதையை நோக்கி சாய்ந்தால் கூட, அதற்கு எத்தனை கொடிய தண்டனையை வழங்குவோம் என்ற எச்சரிக்கையும் கலந்திருந்தது. இத்தகைய எச்சரிக்கைகள், ஆங்காங்கு இருக்கின்றது - நம்பிக்கையாளர்களுக்கு.

அத்தகைய வசனங்களில் ஒன்று தான் இது தவிர, இதில் எந்த reproofம் அனுப்பப்படவில்லை. அடுத்ததாக சொல்லப்பட்ட, expunging order அந்த வசனங்களைப் பார்ப்போம் -

22:52 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும் நபியும் (ஓதவோ நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை, எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

22:53 ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.

இது ஒரு பொதுவான, எந்த ஒரு நிகழ்வையும் குறித்து சொல்லப்படாமல், ஒவ்வொரு நபிமார்களின் வாழ்விலும் சாத்தான் ஏற்படுத்தும் குழப்பங்களை எவ்வாறு இறைவன் நீக்கி, எல்லா நபிமார்களின் சொற்களையும் உறுதிபடுத்தினான் என்பதைத் தான் பொதுப்படையாக பேசி இருக்கிறதே தவிர, நபியே நீர் கூறிய தவறான வசனத்தை மாற்றிக் கொள்ளும் என்ற உத்தரவெல்லாம் இல்லை.

எல்லா நபிமார்களும் சாத்தானால் குழப்பத்திற்குள்ளாக்கப்பட்டார்கள். அவற்றிலிருந்து அவர்களைக் காத்து, இறைவன் தன் சொன்னவற்றை நிரூபித்தான் என்ற வசனம் இவர்களால் தவறாக மேற்கோளிடப்பட்டது. அத்தனையே!!!

மேலும் இந்த வசனங்களுக்கு முன்னும் பின்னும் அமைந்த வசனங்கள், இவை சாத்தானிக் வெர்ஸஸ் என்ற வசனத்தை நீக்குவதற்காக ஏற்பட்டதாகச் சொல்லப்படும் வசனங்களுடன் இணைத்துப் பார்த்தால், தெரியும் - பொருத்தமின்மை.

இவ்வாறு அனைத்து வாதங்களுக்கும் மறுப்பு தெரிவித்த பின்னர், என்ன நடந்தது என்பதை மௌதூதி அவர்களே தொகுத்து வழங்கினார்கள்.
1. குரைஷிகள் தலை தாழ்த்தி வணங்கியது.
2. லாத், உஸ்ஸா, மனாத் என்ற அவர்களின் ப்ரிய தெய்வங்களின் பெயர் சொல்லப்பட்டதும் பரவசம் கொண்டது. (இவைகள் வெற்று பெயர்களே என்ற கண்டன வரிகள் பின்னர் வருவதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. கண்டுகொள்ளவுமில்லை.)
3. அபிசீனியாவில் இருந்து முஸ்லிம்கள் மக்கா திரும்பத் துவங்கினர்.


இவைகளெல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு, சாத்தானிச் வெர்ஸஸ் என்ற கதை உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டுக்கதையை ஆராயாது, கேட்டதை கேட்டவாறே எழுதி வைத்தனர் - உண்மையை விட, Romantic fables ஐ அதிகம் விரும்பிய சில இஸ்லாமிய அறிஞர்கள். தங்களுக்குக் கூறப்படும் வசனத் தொடர்கள் - strong / weak என ஆராய முற்படவில்லை. மேலும் இவர்கள் தாங்கள் கேட்டதை கேட்டவாறு எழுதி வைத்திருக்கிறோம் என்ற Disclaimerஐயும் எழுதி வைத்திருந்தார்கள். இவர்களை மேற்கோள் காட்டிய ஐரோப்பிய அறிவுஜீவிகள் இந்த டிஸ்க்ளெய்மர்களை சாதூர்யமாக மறைத்துக் கொண்டனர்.

இவர்கள் (இஸ்லாமிய / ஐரோப்பியர்கள் ) செய்த தவறையெல்லாம், மௌதூதியின் வாதங்கள் தவிடு பொடியாக்கியது. 'தன்னைக் கழுதையாக்கிக் கொள்ளும் தத்துவவாதிகள்' அத்துடன் தொலைந்து போயினர்.

புதிய வரலாற்றாசிரியர்கள் தோன்றினர். அவர்கள் எழுதியதைப் பற்றி...

அடுத்த - இறுதிப் பதிவில்... ... ...

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (பதிவு 2)

இதன் முதல் பகுதியைப் படித்த பின்னர் தொடருங்கள்.


நபிகள் பொய் பேசாதவர் என்ற நற்பெயரைக் கெடுக்க வேண்டும். இந்த உத்தியின் முதல் கட்டமாக அவர்கள் செய்தது - சமாதானம் என்ற நேசக்கரம். எப்படியாவது, அவரைத் தங்கள் மேலாண்மையை ஏற்கச் செய்து விட்டால், அதற்குப் பகரமாக, அவரது மதத்தையும் அங்கீகரிப்பது, பொருள் மற்றும் அதிகாரமுள்ள பதவி ஒன்றைத் தருவது. காலங்காலமாக மனிதனைப் போதை கொள்ளச் செய்வது அதிகாரம். அந்த அதிகாரத்தைத் தருவதற்கு அவர்கள் முன் வந்தனர். சராசரி மனிதனால் புறந்தள்ள முடியாத கவர்ச்சிகரமான - சலுகைகள்!!!

நபிகளுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இத்தனைக்கும் நபிகள் தன்னை 'உங்களைப் போன்ற மனிதன் நான்' என்று சொல்லி அவ்வாறே வாழ்ந்து கொண்டிருப்பவர். என் ஒரு கையில் சூர்யனையும், மறு கையில் நிலவையும் கொடுத்தாலும் கூட, ஏக இறை வணக்கத்தை நான் கைவிடேன் என்று உறுதிபட கூறி மறுத்து விடுகிறார். இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒரு புறமிருந்தாலும், மறுபுறத்தில், அவரைச் சுற்றி ஒரு கூட்டம் தூற்றுவதற்கென்று எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் அந்தச் சூழ்நிலையில் தான், அச்சம்பவம் நிகழ்கிறது.

இஸ்லாமியர்களின் இறைவணக்கத்தைக் கூர்ந்து கவனித்தவர்கள் - ஒன்றைப் புரிந்து கொண்டிருப்பார்கள் - குரானிலிருந்து சில வாக்கியங்களை சப்தமிட்டு ஓதி, தங்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். நபிகளின் காலத்தில், கஃஃபா ஆலயத்தில், முஸ்லிம்களும் தங்கள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்வர் - பகான் அரபிகளும் தங்கள் சிலை வணக்கத்தை செய்து கொள்வர்.

அன்று நடந்ததும் இது போல் ஒரு சாதாரண நிகழ்வே. வரலாறு 1400 வருடங்கள் கழித்தும் இதை விவாதித்துக் கொண்டிருக்கும் என்று எவரும் நினைத்துக் கூடப் பார்த்திராத வக்கிரத்தை அன்றைய இஸ்லாமிய எதிரிகள் தோற்றுவித்தார்கள்.

அவர்கள் பரப்பிய செய்தி இது தான் - முகமது நமது தெய்வங்களை ஏற்றுக் கொண்டார் என்ற பொய்யைப் பரப்பினர்.


அன்று தொழுகையின் போது நபிகள் வாசித்த குரான் வாக்கியங்கள் இவை தாம்.

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)

53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

நபிகளின் கம்பீரமான குரலில், லாத், உஸ்ஸா மற்றும் மனாத் என்ற சிலைகளின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டதும், அவர் தங்கள் தெய்வங்களின் இருப்பை ஏற்றுக் கொண்டதாக நினைத்துக் கொண்ட பகான் அரபிகள், அந்த வாக்கியங்களின் முழு பொருளையும் உணர்ந்திருக்கவில்லை. மாறாக, குலவை ஒலி எழுப்பி, தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். தாங்களும் தலை தாழ்த்தி, தரையில் சிரம் புதைத்து, வணங்கிக் கொண்டனர்.

இவர்கள் கிளப்பிய பொய் செய்தி, மக்காவின் எல்லைகள் பல கடந்து, அபிசீனியா தேசம் வரைக்கும் சென்றது. அங்கிருந்த முஸ்லிமகள் உண்மை அறியாது, தங்களின் துயரங்களைக் கண்டு, சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார் நபிகள் என்று எண்ணி மக்கா திரும்பத் துவங்கினர். பின்னர் தான் இது தவறான செய்தி என உணர்ந்து, தங்கள் வருகையை தள்ளிப் போட்டனர்.

இந்தப் பொய், கிளம்பிய சில நாட்களிலே அடங்கி விட்டது. எல்லோரும் மறந்து போன செய்தியாகியது. ஆனால், வரலாறு அவ்வாறு நிறுத்திக் கொள்ளவில்லை. இஸ்லாத்தை எதிர்த்தவர்கள், இஸ்லாம் பரந்து விரிந்த பின்னும் இருக்கத் தான் செய்தனர். இந்தப் பொய் செய்திக்கு, கண் காது மூக்கு வைத்து ரகசியமாக வளர்த்துக் கொண்டிருந்தனர். சாதாரணமாக உச்சரிக்கப்பட்ட பெயர்கள் ஒன்றே தங்கள் தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சொல்வதற்கு தகுந்தது அல்ல என்பதால், அவர்களே இல்லாத ஒரு வாக்கியத்தை உருவாக்கிக் கொண்டனர். அது - 'they are exalted birds whose intercession is hoped for'

'அவைகள் உய்விக்கப்பட்ட பறவைகள் - அவற்றின் குறுக்கீடுகள் விரும்பத்தக்கது..'

இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்தப் பொய் வாக்கியங்கள் பின் என்னவாயிற்று?

அவை நீக்கப்பட்டன. நபிகள் சொன்னாராம் 'இந்த வாக்கியங்களை நான் சொல்லவில்லை. அவைகளை சாத்தான் என் காதில் ஓதிற்று. அதை நானும் கூறினேன். பின்னர் நான் தவறை உணர்ந்தேன் - அதை நீக்கிவிட்டேன்.'

பின்னர் அனைத்தும் அமைதியாயிற்று. இந்த அண்டப் புளுகு முஸ்லிம்களிடையே எடுபடவில்லை. யாரும் இந்தப் பொய்யர்களை துளிகூட மதிக்கவில்லை. ஆனால், இஸ்லாம் தனக்குள் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த காலத்தில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்ட இந்த வதந்தி, பின்னர், இஸ்லாம் தன் கதவுகளைத் திறந்து கொண்டு, மேற்கு நோக்கிய பயணத்தைப் புறப்பட்ட பொழுது, கிறித்துவ மதம் தனது நிலங்களையும் மேலாண்மையையும் முஸ்லிம்களிடம் இழக்கத் தொடங்கியது. கிறித்துவமும், இஸ்லாமும் நேருக்கு நேர் நின்ற பொழுது, இஸ்லாத்தை எதிர்கொள்ள அன்றைய கிறித்துவ தத்துவவியலாளர்கள் எடுத்துக் கொண்ட வழிமுறை - அவதூறுகளுக்கு உயிரூட்டுவது - கற்பனை கதைகளை அடுக்கி வைப்பது.

இந்த வரலாற்றாசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஞானத்துடன், மொழி அறியாது, இஸ்லாமிய வழிமுறைகளை வரலாற்றை தத்துவவியலை எல்லாம் ஆராயத் துவங்கினர். அவர்களுக்குக் கை கொடுத்தது - சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி வைத்த - உண்மையோ, பொய்யோ தாங்கள் கேள்விப்பட்ட அனைத்தையும் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்ட சில அறிஞர்கள், இதையும் பதிவு செய்து வைத்தனர் - ஒரு செய்தி என்ற அளவில்.

புகாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்கள் ஒவ்வொரு செய்தியையும், அதை கூறியவர் தந்த சங்கிலித் தொடர் போன்ற நபர்களின் வரிசையைத் தொடர்ந்து, மூலநபரை அடைந்து, அவர் நபிகளுடன் எவ்வாறு தொடர்புடையவர் என்ற மூலத்தை ஆராய்ந்து, அதில் துளியும் சந்தேகமில்லாத பொழுது அதை ஏற்றுக் கொண்டனர். சிலருக்கு அத்தகைய பொறுமை இருந்ததில்லை. ஆனாலும் தங்கள் அறிவை பறைசாற்றிக் கொள்ள, அல்லது தாங்களும் வரலாற்றில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவலுடன், செய்தி சொல்ல வரும் நபர்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு பதிவு செய்து வைத்தனர்.

அவர்களில் ஒருவர் - இப்னு இஷாக்.

இப்னு இஷாக் இஸ்லாத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது. போற்றப்பட வேண்டியது. அவர் தான் முதன்முதலாக நபிகளின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க முனைந்தவர். அவரது காலம் - d.768. அதாவது நபிகளின் காலத்திற்கு பின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து மறித்தவர்.

நபிகள் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருந்தார். தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தொகுப்பதற்கு தடை விதித்திருந்தார். தான் கூறும் வார்த்தைகளைக் கூட தொகுப்பதற்கு தடை விதித்திருந்தார். தான் கூறும் குரான் வாக்கியங்களைத் தவிர மற்ற அனைத்தும் பிரதி எடுக்கப்படுவது தடை விதிக்கப்பட்டிருந்தது. தன்னை இறைவன் அளவிற்கு பக்தியினால், பாசத்தினால் மனிதர்கள் உயர்த்தி விடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அதனால், தன்னை ஓவியமாக வரைவது, தன்னைப் பற்றிய குறிப்புகள் என்று எதையும் பதிவு பெறாமல் பார்த்துக் கொண்டார். தன் கல்லறையில், எந்த ஒரு கட்டிடமும், நினைவுக் குறிப்பும் செய்யக் கூடாது என்றும் தடை விதித்திருந்தார். இன்றுவரையிலும் அது அவ்வாறே காப்பாற்றப் பட்டிருக்கிறது.

ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின்னே, தான் இந்த வாழ்க்கை வரலாறும், மற்றும் நபி மொழிகளும் பதிவு பெற முயற்சிகள் தொடங்கப்பட்டன. அதன் காரணமும் கூட, நபிகளின் பெயரால், பலரும், பலவாறான கதைகளையும், புது மொழிகளையும் கூறிக்கொண்டிருந்தனர். அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், முறைப்படி தொகுக்கப்பட்ட, ஹதீது நூற்களும், வாழ்க்கை வரலாறும் அத்தியாவசியம் என்பதால், அவைகள் தொகுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு சாரார் - நபிகளின் மொழியை - அதன் தாக்கம் இந்த உலகம் இருக்கும் வரையிலும் வாழும் என்பதால், மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து ஆராய்ந்து, உண்மை என துல்லியமாக அறியப்பட்டவைகளை மட்டுமே பதிந்து வைத்தனர்.

ஆனால், வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க முனைந்தவர்கள் இத்தகைய ஆராய்ச்சி மனப்பான்மையை மேற்கொள்ளவில்லை. வெறும் தர்க்க விதிகளை மட்டும் வைத்துக் கொண்டு, விளங்கிக்கொண்டதை பதிவு செய்து வைத்தார்கள். அவர்களுக்கு முகமது நபி அவர்கள் ஒரு கதாநாயகன். நபி அவர்கள் எதை மறுத்தார்களோ அதையே அவர்கள் செய்தனர். They tried to Glorify The Prophet...They tried to romanticize his life. They tried to project him as a superman.. They tried that prophet won over the satan by identifying and removing the verses...

இந்த ஹீரோ வழிபாட்டில் முன் நின்றவர் - இப்னு இஷாக். முதன் முதலாக வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தவர் - சீரத் ரசூல் அல்லாஹ் என்ற பெயரில் தொகுத்தவர் மூளையைப் பயன்படுத்தியதை விட, தன் ஹீரோ மீது கொண்டிருந்த அபரிமிதமான அன்பினால், தன் இதயம் விரும்பிய பராக்கிரமான செயல்களை எல்லாம் நபிகள் மீது சூடி பெருமிதம் கொண்டவர் - அவர் அறிந்திருக்கவில்லை - இது எத்தனை தவறாக புரிந்து கொள்ளப்படும் என்று. இவரது இந்த செயலை - செயல்பாடுகளை அவரது சமகாலத்து அறிஞர்களே கண்டித்திருக்கின்றனர் - விமர்சித்திருக்கின்றனர்.

இமாம் மாலிக் - மாலிக் மத்ஹபு என்ற தத்துவ இயல் வழியாக பாதை ஒன்றை அமைத்தவர் - இப்னு இஷாக் காலத்தவர். இஷாக் பற்றி இவர் சொல்வதை கேளுங்கள்: 'DEVIL' ஹா! சாத்தானின் வேதத்தைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்த முதல் சாத்தான்?

ஹிஷாம் பின் உராமா, மற்றுமொரு சம காலத்திய மார்க்க அறிஞர் என்ன சொல்கிறார் தெரியுமா - 'The rascal lies'

இமாம் ஹன்பால், சிறப்புமிக்க மார்க்க ஆய்வாளர் இவரது வரலாற்றை முற்றிலுமாக நிராகரித்துப் பேசுகிறார். பல மார்க்க அறிஞர்களும் இவரது தொகுப்பை குப்பை என ஒதுக்கிவிட வேண்டும் என்ற கருத்தையே முன்வைக்கின்றனர்.

எதனால் இப்னு இஷாக் இவ்வாறு செய்தார்? சற்று கூட ஆராய்ந்திருக்க மாட்டாரா? அவர் எடுத்துக் கொண்ட தர்க்க முறை - Theory of deduction. இரண்டு சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பொழுது அது சம்பந்தப்பட்ட மூன்றாவது செய்தியும் உண்மையாக இருக்கும் என்ற அனுமானம். இது ஒரு assumption. இதில் புரிந்து கொள்ள தவறியது - when you are making an assumption - you are making an ass of yourself என்பது தான். ASS - U !!!

கொஞ்சம் விளக்கிச் சொல்வது என்றால், இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

சூர்யன் மேற்கே அடைகிறான்.

மேற்குத் தொடர்ச்சி மலை மேற்கே இருக்கிறது.

சூர்யன் மேற்குத் தொடர்ச்சி மலை பின்னால் அடைகிறான்.


இவ்வளவு தான் Theory of Deduction. முதல் இரண்டு செய்திகள் உண்மையாக இருக்கும் பொழுது, மூன்றாவது உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான். மூன்றாவது செய்தி உண்மைதான். மலைக்கு கிழக்கு பக்கம் வாழும் தமிழகத்தார்களுக்கு. ஆனால், இந்த கண்டுபிடிப்பை மலையாளிகளிடம் சொன்னால் சிரிப்பார்கள். அங்கு, மேற்குத் தொடர்ச்சி மலை மேற்கில் இல்லை. இரண்டாவது வாக்கியம் அவர்களைப் பொறுத்தவரை பொய். ஆக உண்மை எது பொய் எது என்பதற்கான ஆதாரமும் கொடுக்கப்பட வேண்டும்.

இங்கு அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் சரிவர செய்யப்படவில்லை. இது வரலாற்றை ஆராய்பவர்களுக்குப் புரியும். ஆனால், இஷாக் ஆராய்ந்த விதம் இவ்வளவு தான்.

நபிகள் பெருமானார் குரானை ஓதினார்.

எங்கும் உற்சாகக் குரல்களும், குலவை ஒலியும், கிளம்பியது.

நாடு கடந்து சென்ற முஸ்லிம்கள் மக்கா திரும்ப ஆரம்பித்தனர்.

ஆக, மேற்கண்ட அனைத்தும் உண்மையானால், இந்த செய்தியும் உண்மை தான் என்று நம்பி, தன் ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு பதிவு செய்து வைத்தார் - The Satanic Versus என்ற செய்தியையும்.

சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல - இப்னு ச'ஆத் அல்ல இந்த செய்தியைப் பதிவு செய்தவர். ஆங்கிலத்தில் சில புத்தகங்கள் வரும். அவற்றின் தலைப்பே 'How to bluff your way through.. .. .. .. ' எதைப்பற்றியதாக வேண்டுமானாலும் இது இருக்கலாம். அதன் காரண காரியம் - உங்களுக்கு சில சொற்றோடர்களை அது கற்பிக்கும். Some jargons, some connected phrases.. .. .. இதைத் தான் இப்பொழுது சில நண்பர்களும் செய்ய முனைந்திருக்கின்றனர். ச'ஆத்-திற்கு முன்பே இவை விவாதிக்கப்பட்டு திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

இஷாக்- எழுதியதை முழுவதும் வாசித்த இப்னு ஹிஷாம் அதை முற்றிலுமாகத் திருத்தி, romantic வாக்கியங்கள், செய்திகள், புனைவுகள் அனைத்தையும் நீக்கி, சுத்தமான ஒரு சீரத் நபி - நபி வரலாற்றை எழுதினார். இவரது காலம் - d.834. இவரது சமகாலத்தவரான வாஹிதி (757 - 822) மீண்டும் இஷாக் எழுதிய வரலாற்றை எடுத்துக் கொண்டார் - காரணம் சுவை. வாஹிதியின் மாணவர் தான் இப்னு ச'ஆத்.(764-845) பின்னர் வந்தவர் - தபரி. (839-923) இவர்கள் அனைவரும் வரலாற்றில் குறிக்கப்படுகின்றனர் - ' the earliest sources of the history of Islam'

இவர்களைத் தான் பிரதி எடுத்து ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுவது - ' quoting earliest sources of Islam' அவர்கள் மறந்து விட்ட விஷயம் - The earliest sources of Islam is Quran itself. குரானை வாசித்துப் புரிந்து கொள்ள சக்தியற்ற வரலாற்றாளார்கள், மேற்கண்ட 'அறிஞர்'களின் எழுத்துகளை அப்படியே மொழி பெயர்த்து, தாங்கள் எழுதிய வரலாறாக மாற்றிக்கொண்டு விட்டனர் ' ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல். அல்லது இந்த தவறுகளை தர்க்கித்து, விவாதித்து, ஆராய்ந்து, இவற்றை நீக்கி எழுதிய, இப்னு ஹிசாமையோ அல்லது பிற்காலத்தைய ஆராய்ச்சியாளர்களையோ அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களும் Theory of deduction என்ற 'தங்களைக் கழுதையாக்கிக் கொள்ளும்' தத்துவத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டனர்.


' இஸ்லாமியர்கள் முகமதுவின் மீது அதீத பற்று கொண்டவர்கள்'
' இஸ்லாமியர்களே எழுதி வைத்த செய்தி'
' அதனால், சாத்தானிக் வெர்ஸஸ் உண்மை'

ரொம்ப எளிது. ஒரு அவதூறைக் கூறுபவர்களுக்கு இது எளிது. ஆனால், அதை மறுத்து, உண்மையை நிருவுவது கடினம்.

ஆனாலும் இஸ்லாமியர்கள் - நிருவினார்கள். இந்த அவதூறு பொய் என்று.

எப்படி?

(அடுத்த பதிவைப் பாருங்கள்)

Friday, March 30, 2007

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (பதிவு 1)

சல்மான் ருஷ்டி என்றால், ஒரு சராசரி முஸ்லிம், யார் என்று தான் கேட்டிருப்பான் -அவர் The Satanic Verses என்ற புத்தகத்தை எழுதும் முன் வரைக்கும்.

அவர் ஏன் எதனால் அந்தப் புத்தகம் எழுதினார் என்பதற்கு யாராலும் விடை சொல்ல முடியாது. அவரே சொல்லி இருப்பது கூட, freedom of expression should never be curtailed. (Sick of it!) இந்தக் கருத்து சுதந்திரம் - ஒருவர் ஒரு கருத்தை எழுதி அதை வாசித்த பின் தான் அது சரியா, தவறா என்ற பிரச்னை விவாதிக்கப்பட்டு, எழுதியவர் சொல்லிய கருத்தை எல்லோரும் ஒரு பிடி பிடிக்கின்றனர். ஆனால், எழுதும் முன்னே, அந்தக் கருவானது, ஒருவர் மனதில், விதையாக முளைக்கும் பொழுது, யாரும், உன்னிடத்திலே ஒரு தவறான கருத்து முளைத்துக் கொண்டிருக்கிறது என்று சண்டை பிடிப்பதில்லை. தான் தவறான ஒரு கருத்தை வளர்க்கிறோமே என்ற சுயவிசாரணையெல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பெதல்லாம் சரி - ஆனால், சொல்ல வந்தது இன்னொருவனின் கருத்தை இம்சித்து, பரிகசித்து, அவமானப்படுத்த இருக்கிறது அதிலும், நேர்மைக்குப் புறம்பாக என்கையிலும் கூட, இவர்களது கருத்தை அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பது எத்தனை சிறுபிள்ளைத் தனம்.

சரி - சல்மான் ருஷ்டி அப்படி என்ன தான் செய்தார்?

அவர் செய்தது இஸ்லாமியர்களுக்கெதிரான பச்சைத் துரோகம். சாக்கடையில் விழுந்து புரண்ட ஒரு பன்றி, வீட்டிற்குள் நுழைந்து விட்ட அருவெறுப்பு. தன் இனத்தின் மீது சேறு வாரி அடித்து, அதற்கு அடுத்தவனிடத்தில் கூலிக்குக் கையேந்தும் இலக்கிய ரவுடித்தனம். எல்லாவற்றையும் இறுதியில் இது புனைவு தானே என்று கூறி தப்பித்துக் கொள்ள முயலும் கோழைத்தனம்.

தான் எழுதுவதைப் பற்றி, முழுதான, ஒரு விரிவான ஆராய்ச்சி செய்யாமல், இஸ்லாத்தின் மீது வெறுப்புமிழும் ஒரு தலைப்பட்சமான சில வரலாற்றாசிரியர்களின் தவறான வாதங்களை ஆதாரமாகக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு அவதூறு எழுதியவர். தன்னை ஒரு பெரும் எழுத்தாளானாகக் காட்டிக் கொள்ள முயன்று, இஸ்லாமியர்கள் அன்னை என்று ஏற்றுக்கொண்ட நபியவர்களின் மனைவியர் மீது அவதூறு கூறியவர். பெண் கருத்தியல் பேசும் பெருந்தலைகள் எவரும் காலத்தால் மறைந்து விட்ட பெண்களை இழிவு படுத்தும் இந்த ஈனனிடம் கேட்கவில்லை - எதை ஆதாரமாகக் கொண்டு நீ இதை செய்கிறாய் என்று? Hypocrites!

- முற்றிலுமாகத் தவறு என நிரூபிக்கப்பட்டு வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வரலாறுகளைத் திருத்தி எழுத ஆரம்பித்துள்ளனர் வரலாற்றாசிரியர்கள். ஆனால், இவரோ, அவற்றையெல்லாம் புறக்கணித்து, குப்பை என தூக்கி எறியப்பட்ட, ஆதாரமற்ற போலியான நிகழ்வுகளை சுவையாக இருக்கிறது என்று அவதூறை எழுதினால் பின்னர் அனைவராலும் வெறுக்கப்படுவது நியாயம் தானே?

அப்படி என்ன தான் செய்தார் இவர்?

இவர் ஒரு புனைவை எழுதினார். The Satanic Versus என்ற புனைவை.

வரலாற்றில் பெருமானார் அவர்கள் மீது அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, அவரது ஆளுமையை இழிவு செய்ய முயன்ற பகான் அரபிகள் இட்டுக் கட்டிய கதை தான் இது.

கொஞ்சம் வரலாற்றின் உள்நுழைந்து பார்ப்போம்.

நபிகள் வெளிப்படையாகப் பிரச்சாரம் தொடங்கி, பலரது கவனம் பெற்று, தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள சிறிது சிறிதாக மக்கள் முன் வந்து கொண்டிருந்த காலமது. முஸ்லிம்களுக்குப் பலவகையிலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர் - குரைஷி இன அரபிகள். அரபிகளிலே மிக வலுவான குலம் குரைஷி இனம். கஃபா எனப்படும் பழங்கால இறை வணக்க ஆலயம் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அதனுள் பல சிலைகளும் நிறுவப்பட்டு, அதன் வணக்க வழிபாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், அரபிகள் அனைவரையும் தங்கள் மேலாண்மையை, ஆளுமையை மறைமுகமாக ஏற்க வைத்திருந்தனர்.

ஆனால், இன்றோ, அந்த அரபிகளின் குலத்திலிருந்தே ஒருவர் தோன்றி - இந்த சிலைகள் வணக்கத்திற்குரியவை அல்ல - வணக்கத்திற்குரிய இறைவன் வேறு - அவனது பாதைக்கு வாருங்கள் என்று அறை கூவல் விட்டதும் மிரண்டு போய்விட்டனர். ஏனென்றால், விடுக்கப்பட்ட அறை கூவல் நேரிடையாக அவர்களது ஆளுமையை - அதிகாரத்தை - கேள்விக்குட்படுத்தியது. கேள்வி கேட்டவரோ -நம்பிக்கைக்குரியவர் என்று அனைவராலும் பாராட்டப் பெறும், அல் அமீன் என்று விளிக்கப்பட்ட நபிகள் பெருமானார். அவரது நேர்மையை எவரும் சந்தேகிக்கவில்லை. இப்படிப்பட்டவரின் பிரச்சாரத்தால், தினமும் அவர் பக்கம் கூட்டம் பெருகுவதையும், தங்கள் பக்கம் தேய்கிறதையும் கவனித்த அவர்கள் புரிந்து கொண்டனர் - வெகு சீக்கிரமே தாங்கள் தங்கள் அதிகாரமனைத்தையும் இழந்து விடுவோமென்று. அதை தடுக்க அவர்கள் பல வழிகளிலும் தொல்லைகள் கொடுக்க முனைந்தனர் - முஸ்லிம்களின் கூட்டம் பெருகுவதை கண்டிப்பாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமென்று.

நபிகள் மீது நேரிடையான தாக்குதல் தொடுக்க அவர்கள் தயங்கினர். அவரது குலம் வலுவானது. நபிகள் மீது கை வைக்கும் எவரும் தாங்கள் மட்டுமல்ல தங்கள் வம்சமும் பூண்டோடு அழிக்கப்பட்டு விடும் என்பதை அறிந்து வைத்திருந்தனர் - அதனால், அவர்கள் நேரிடையான மோதலைத் தவிர்த்து விட்டு, வழக்கம் போல் கோழைகள் செய்யும் உத்தியை மேற்கொண்டனர்.

- நபிகளை விடுத்து, வலுவற்ற ஏழ்மை நிலையில் இருக்கும் முஸ்லிம்களை மிகுந்த துயரத்திற்குள்ளாக்குவது. அதன் மூலம் மத மாற்றத்தைத் தவிர்ப்பது
- நபிகளின் நற்குணத்திற்குக் களங்கம் விளைவித்து அதன் மூலம் எங்கனமாகிலும், மக்களை நபிகளிடமிருந்து விலகச் செய்வது.

இந்த இரண்டு உத்திகளிலும் முதலாவதை செய்வது எல்லோருக்கும் மிக எளிதாக இருந்தது. அதற்கு பெரிய அளவில் மூளை தேவைப்படவில்லை. ஆனால், பிந்தைய செயலைச் செய்ய மிகுந்த கவனம் தேவைப்பட்டது. எதிரியின் பலம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நபிகளுக்குப் பொய் பேசாதவர் என்ற நற்பெயர் உண்டு. அந்த நற்பெயரை மட்டும் கெடுத்து விட்டால்...?

பொய்பேசாதவர் என்ற நற்பெயரை மட்டும் கெடுத்து விட்டால்.. .. !?

(அடுத்த பதிவைப் பாருங்கள்...)

Wednesday, March 28, 2007

சிறிலின் கேள்வியும், ரூமியின் கவிதையும்....

சிறில் அலெக்ஸ் கேட்டிருந்த கேள்விக்கு நண்பர்கள் பதில் சொல்லி விட்டார்கள் என்றாலும், (அல்லாஹ் என்ற பதிவில்) இந்த ரூமியின் கவிதை ஒன்றை ஒரு பின்னூட்டத்தில் போட்டுப் பூட்டி விட மனம் விரும்பவில்லை என்பதால், அதை ஒரு தனிப்பதிவாக ஆக்கி விட்டேன்.

ஒரு நல்ல கேள்விக்கு ஆக்க பூர்வமான பதிவு.

பொதுவாகவே, இறைவனை அவன் என்று குறிப்பிடும் பொழுது, அது மொழியின் பலவீனமே. ஆணையோ அல்லது பெண்ணையோ குறிக்காத ஒரு பொதுச்சொல் இல்லாமையால், அவன் என்று குறிப்பிட நேர்ந்தது.

இது தமிழில்.

இது போல மற்ற மொழிகளுக்கு வேறு விதமான பிரச்சினைகள் இருக்கலாம்.

முன்பு mankind என்று எழுதுவதில் கூட feministகள் எல்லோரும் பிரச்சினையைக் கிளப்பினார்கள். ஏன் womankind என்று குறிப்பிடுவதில்லை என்று. இறுதியாக humankind என்றானது. என்றாலும் human என்பது கூட ஆண் சார்பு எடுக்கும் ஒரு சொல் என்ற தர்க்கம் உண்டு.

மொழி என்பது நாம் உண்டாக்கிக் கொண்டதே தவிர, அதன் பலவீனத்திற்கு இறைவனை பொறுப்பாக்க முடியாது. இறைவன் - ஆண், பெண் நிலைகளை எல்லாம் கடந்தவன் என்பதால் தானோ என்னவோ, இஸ்லாத்தில், இறைவனை ஆணாகவோ, பெண்ணாகவோ பாவித்து பாடல்கள் எழுதுவதும், பக்தி கொள்வதும் தடை செய்யப்பட்டுள்ளது.

ஜலாலுத்தீன் ரூமி எழுதிய பாடல்கள் சிலவற்றில், இவற்றை மீறும் தன்மை தெரியும். அதனால், அவற்றைக் காதல் பாடல்கள் என்று மொழி பெயர்த்து புத்தகம் ஆக்கினார்கள். ஆனால், ஒரு ஆணாகவோ, பெண்ணாகவோ பாவித்து, காதல் மேலிட, பக்தி பாடல்கள் எழுதுவது தான் தடை செய்யப்பட்டதே தவிர, முன்னிலையில் - அதாவது - second person - you / yourself என்ற முன்னிலையில் இறைவன் மீது பாடல்கள் எழுதுவதோ, பாடுவதோ தடை செய்யப்படவில்லை.

இப்பொழுது மீண்டும் ஜலாலுத்தீன் ரூமி அவர்கள் எழுதிய காதல் பாடல்களை எடுத்துப் படித்து பாருங்கள் - கண்டிப்பாக அதில் he / she என்ற படர்க்கை நிலை பாடல்கள் இருக்காது. அவர் எழுதி காதல் பாடல்களாக அறியப் பட்டவை எல்லாம் - அவர் இறைவன் மீது கொண்ட பக்தியின் வெளிப்பாடுகளே.

அவன் / அவள் என்ற பாகுபாடு இல்லாமல், நீ என்ற பதத்தைக் கொண்டு, இறைவனிடம் நேரிடையாக பக்தியைக் காட்டியவர். இத்தகைய உறவு நிலையை பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லையென்றாலும், பலருக்கும் இந்த சூஃபிக்களைப் பிடித்திருப்பதற்குக் காரணம் - அவர்கள் காட்டித் தந்த, இசையும், கவிதையும் கலந்த ஒரு பக்தி வழி.

இதோ ஜலாலுத்தீன் ரூமியின் ஒரு கவிதை.:

ஆங்கிலத்தில்: (Andrew Harvey)

I unlock the Door from inside to myself
Step from room to room leading myself
Come to myself in myself in our Bed of fire
Hear, You astoundedly call yourself by my name.


தமிழாக்கம்: ( நண்பன் - நானே தான்)



என்னுள்ளே
அடக்கப்பட்டிருந்த
கதவைத் திறக்கின்றேன்
எனக்குள்ளிருந்து.

அறை அறையாக
என்னை
வழி நடத்திச் செல்கிறேன்.

நெருப்பிலமைந்த படுக்கையில்
என்னை நான் வந்தடையும் பொழுது
கேட்கிறேன்:

நீ வியப்புடன்
உன்னை அழைக்கிறாய்
என் பெயர் சொல்லி.


தன் அறியாமையினால், தன்னுள்ளே அடைத்துக் கிடக்கும் கதவுகளைத் திறந்து கொண்டு, உள்நோக்கிய ஒரு தேடுதல் பயணம். ஒவ்வொரு ரகசிய மூலையும் அலசி ஆராயப்படுகிறது - தேடப்படுகிறது. தேடுதல் அதிகப்பட, அதிகப்பட, மனம் தகிக்கிறது. நெருப்பாற்றில் விரிக்கப்பட்ட படுக்கை போல் கொதிக்கிறது. தன்னைத் தேடி அடைகிறான் கவிஞன் - தன்னை அடைந்ததும் அவன் கேட்பது - அங்கிருக்கும் இறைவன், தனனை அழைக்கிறான் - அவன் உதிக்கும் பெயர் - கவிஞருடையது. தன்னை உணராத மனிதன் இறைவனை என்றுமே அடைய முடியாது என்பதே கவிஞரின் வார்த்தை.

இறைவனுக்கும் தனக்கும் உள்ள உறவை - இறுதியில், தன்னை உணர்தலே இறைவனை அடைதல் என்ற தெளிவு - வெகு சிலருக்கே கைவரக்கூடியதாகும்.

இப்படி விரிவான பொருளை விரும்பாதவர்களுக்கு, இப்படி வாசித்து திருப்தி அடைந்து கொள்ளுங்கள்:

அன்பே,
உன் ஒவ்வொரு அடிக்கும்

என்னுள்ளே
அடக்கப்பட்டிருந்த
கதவைத் திறக்கின்றேன்
எனக்குள்ளிருந்து.

ஒவ்வொரு அறை அறையாக
(உ)ன்னை
வழி நடத்திச் செல்கிறேன்.

நெருப்பிலமைந்த படுக்கையில்
(உ)ன்னை நான் வந்தடையும் பொழுது
கேட்கிறேன்:

நீ வியப்புடன்
உன்னை அழைக்கிறாய்
என் பெயர் சொல்லி

No big deal, alright! A Simple, plain, love poem. Enjoy.

Sunday, March 25, 2007

அல்லாஹ்...

இப்னு பஷீரின் இந்தப் பதிவில் ஒரு அன்பர் கேட்டிருக்கிறார் - உருவமற்ற இறைவனுக்குப் பெயர் எதற்கு என்று. ஒருவர் இத்தனை அறியாமையுற்றவராக இருக்கக் கூடும் என்று அறியும் பொழுது, வியப்பாக இருக்கிறது. இந்தியாவின் கல்விதரம் உயர்கிறது என்று சொல்பவர்களை நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது.

பெயர்ச் சொல்களில் பலவகையுண்டு. அவற்றில் ஒன்று பண்புப் பெயர். அதாவது அன்பு என்கிறோம். எந்த வடிவமும் அற்றது தான். என்றாலும் அந்தப் பண்பைக் குறிப்பிட ஒரு சொல் வேண்டும் இல்லையா? அது போல, இறைவனைக் குறிக்க ஒவ்வொரு மொழியும் சொற்களை உருவாக்கிக் கொண்டது. தமிழில், இறைவன் என்றால் அது யாரை குறிக்கும்? அது போல தான். அரபு மொழியில், அல்லாஹ், ஆங்கிலத்தில் God, ஹீப்ரு மொழியில், அல்லாஹ், என்று...

இந்த மொழி அடிப்படை அறிவு நிறைய பேருக்கு இல்லை. இருந்தாலும், அகம்பாவமும், கொழுப்பும், கண்களை மறைக்கிறது.

கீழ்க்கண்டவற்றை வாசித்து தெளிவு பெறட்டும்.

The use of the word "Allah" to mean "God" frequently sounds rather strange, esoteric, and foreign to Western ears.

(The eastern ears should have been attuned to this word by now, thanks to Urdu and subsequently to Hindi Moveis - Only fools would pretend as if he didn't know the meaning - இந்த வரிகள் என்னுடையவை.)

"Allah" is an Arabic word derived from the contraction of "Al" and "Ilahi", meaning "the God" or by implication "the One God" . Linguistically, Hebrew and Arabic are related Semitic languages, and the Arabic "Allah" or "Al-Ilahi" is related to the Hebrew "EL", meaning "God", and "El-Elohim", meaning "God of Gods" or "the God". It is these Hebrew words that are translated in the Old Testament as "God" . Thus one can see that the use of the word "Allah" is consistent, not only with the Qura'an and with Islamic tradition, but with the oldest Biblical traditions as well.

This basic similarity between the Arabic "Al-Ilahi" , of which "Allah" is a contraction, and the Hebrew "El-Elohim" can be seen even more clearly when one considers the Arabic and Hebrew alphabets. Neither Arabic nor Hebrew have letters for vowels. Both languages have alphabets consisting only of consonants, and both rely on vowel markings, typically found only in formal writing, as a pronunciation guide, The English transliteration of the Arabic "AL-Ilahi" and of the Hebrew "EL-Elohim" have included these vowel markings. If one were to remove, the English transliteration of these vowel markings, the Arabic remains "Al-Ilh" while the Hebrew becomes "El-ELh". Finally, if one were to transliterate all Arabic "Alifs" as "a" , and all Hebrew "Alifs" as "a", the Arabic remains "Al-Alh" and the Hebrew becomes "Al-Alh". In other words, with the single exception that the Hebrew uses the plural of respect, "Al-Ilahi", for which "Allah" is a contraction, and "El-Elohim", the Hebrew translated as "God" in the English version of the Old Testament, are absolutely identical terms in two closely related languages.

(The Cross and the Crescent - Jerald F Dirks )


கவனியுங்கள் - அரபியில் கூட, இறைவனைக் குறிக்க, மரியாதைப் பன்மையை உபயோகிப்பதில்லை. காரணம் மொழி பெயர்க்கும் பொழுது, அது பன்மையாகி விட கூடும் - தவறாக அர்த்தம் கற்பிக்கப்படும். அதனால் தான் தமிழில் இறைவனைக் குறிப்பிடும் பொழுது அவன் என்ற ஒருமை விளியைப் பயன்படுத்துகிறார்கள்.

இதைப் புரிந்து கொள்ள அறிவில்லாதவர்கள், இஸ்லாத்தை விமர்சிப்பதை விட்டு விட வேண்டும். அதை விட்டு விட்டு, இறைவனையே அவன் என்று சொல்லும் பொழுது, நபிகளையும் அப்படித் தான் சொல்வேன் என்று அடம்பிடித்து மனித மாண்புகளை மதியாத மிருகங்களாய் ஆன பின்பு, விமர்சனத்தில் ஈடுபட எந்தத் தகுதியுமில்லை. இவர்கள் மன நோயாளிகள் கூட இல்லை - மிருகங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்.

Friday, March 23, 2007

எழுத்தறியாத் தலைவன் - உரையாடல் 2

எதை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும், எதற்கு பின்னர் விடையளிக்க வேண்டும் என்ற நிலைகள் இல்லாமல், பிடித்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்.

தருமி தான் அறிந்ததாகக் கூறி, முன் வைத்த கருத்துகளில் ஒன்று: இதை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நபிகள் பெருமானாரை விமர்சிப்பவர்கள் முன் வைத்த கருத்து தான்.

// இதிலேயே, முகமது ஒரு பெரிய வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் எப்படி எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்திருப்பார் என்ற கேள்வியும், இஸ்லாம் அறிஞர்களுக்குள்ளாகவே முகமது எழுதப்படிக்கத் தெரிந்தவர்தான் என்பதான கருத்தும் உண்டு. //

ஒருபுறம் நபிகள் பெருமானாரை, மிகவும் புத்திசாலி, நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று நிருவுவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். ஒரு மனிதனைப் பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என அனனவரும் வரலாற்றில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர் - அவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று. அவருடைய நண்பர்கள் என்றால் அவர்கள் எல்லாம் சாதாரண, சிந்திக்கத் தெரியாத மூடர்கள் இல்லை. மாறாக, ஆளுமை மிக்க, தங்கள் அளவில் தனித்தன்மை மிக்க தலைவராக உருவாகும் பெரும் பண்பு கொண்டவர்கள். அவர்களிடையே இருந்து தான் நான்கு பெரும் கலீபாக்கள் தோன்றினர். இது போலவே, அன்றைய தினத்தில் இஸ்லாமியர்களாகிய அனைவரும், நேரிடையாக முகமது நபியவர்களைச் சந்தித்து, உரயாடி, பின்னர் தான் அனைவரும் இஸ்லாமியராயினர்.

இன்றைய தினத்தைப் போல, கல்வி என்பது அந்தக் காலத்தில் அத்தனை எளிதானது அல்ல. மெனக்கெட்டால் தான் முடியும். அதே சமயம், கல்வி என்பது அந்தக் காலத்தில் ஒரு வாழ்க்கைத் தேவையாக இருந்திருக்கவில்லை. ஏன், ஒரு நூற்றாண்டிற்கு முன்பு, கல்வியை ஒரு அவசியமாகக் கொண்டிருக்கவில்லை - இந்தியர்களின் பலரது மூதாதையர். கோடி கோடியாய். மேலும் வாஞ்சையுடன் அரவணைத்து, கல்வி கற்க அனுப்பி வைக்க, அவருக்குத் தாயார் இல்லை. பிறந்து ஐந்து வய்து கழியும் சமயத்து இறந்து விடுகிறார். தந்தையோ பிறப்பதற்கு முன்பே இறந்து விடுகிறார்ல் அநாதையாகத் தான் வளர்ந்தார். வளர்த்த பாட்டானருக்கோ, அவருக்கு, நடைமுறை வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து, ஒரு வெற்றி பெற்ற மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதே அவசியத் தேவையாக இருந்தது. பின் எங்கிருந்து கல்வி கற்பது?

ஒரு வர்த்தகர் எழுதப் படிக்கத் தெரிந்தால் மட்டுமே, வெற்றி பெற்ற வர்த்தகராக இருக்க முடியும் என்பது தர்க்கத்திற்கு உதவாத விஷயம். கல்வியறிவு இல்லாத, அடிமட்டத்தில் இருந்து கிளம்பி, பெரும் வியாபார சாம்ராஜ்யங்களைப் படைத்தவர்கள் உண்டு. ஒரு வியாபார நிறுவனத் தலைவர் தன் கைப்பட அனைத்து வரவு செலவு கணக்குகளையும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியாயமற்ற வாதம். மேலும், ஹதீஜா பிராட்டியரின் வியாபாரத்திற்குப் பொறுப்பேற்று செல்லும் பொழுது, கூடவே, ஹதீஜாவின் பிரதிநிதியும் வருகிறார் - கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொள்ள. அவரது பெயர் - மைசாரா. (அ)

இத்தகைய வியாபாரத்திற்காக, அதற்கென கணக்கர்கள் இருக்கும் பொழுது, ஒரு தலைவராக இருப்பவர், செய்ய வேண்டியதெல்லாம் make certain strategical decisions அவ்வளவு தான். எந்த பொருளை வாங்க வேண்டும், எதை எந்த இடத்தில் விற்க வேண்டும் என்று செய்ய வேண்டிய இந்த முடிவுகளுக்கு, தேவை அனுபவம். எழுதப் படிக்கத் தெரிந்த மனம் அல்ல. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களை விட, இந்த முடிவு எடுக்கத் தெரியும் நபர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் செய்யும் முதல் காரியம் - எழுத்தை விற்றுக் கிடைக்கும் பணத்திலே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறார்களே தவிர, வியாபாரத்தில் திறமையெல்லாம் காட்டி, முன்னேறி விட தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை. இல்லை, எழுதப் படிக்கத் தெரிந்தால், இயல்பாகவே பெரும் வெற்றி பெற்று விடலாம் - அது தான் பொது நியதி என்றால், இன்று உலகம் முழுக்க வியாபாரிகள் தான் இருக்க முடியும்.

ஆக, எழுதப் படிக்கத் தெரிய வேண்டும் - ஒரு வியாபார நிறுவனத் தலைவராக இருப்பதற்கு என்பது எடுபடாத வாதம். இந்த "எழுதப்படிக்கத் தெரிந்த" தன்மையை முன் வைப்பவர்கள் - வரலாற்றை வசதியாக மறந்து விடுகிறார்கள் - வரலாற்றில் The Great என்று அடைமொழி கொடுத்து அக்பரை அழைத்து மகிழும் நமது இந்திய நண்பர்கள், அக்பர் - Akbar, The Great எவ்வாறு ஒரு பேரரசை - விந்திய மலை தொடங்கி, பர்மா முதல், ஆப்கானிஸ்தான் வரையிலுமான ஒரு வல்லரசை நிர்வகித்தார்? இதை யாரும் கேள்வியாகக் கூட கேட்பதில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் "ஒரு நல்ல தலைவனாக" இருப்பதற்குக் கல்வியறிவு தேவையில்லை என்று. அப்படியானால், நபிகள் பெருமானார் மட்டும் கல்வியறிவு இல்லாமல் எதையும் சாதித்திருக்க முடியாது என்ற வாதம்? Sheer hypocrisy... சந்தர்ப்ப வாதம் - வசதிப்பட்ட பொழுது, வசதிப்படும் முகமூடிகள்...!!!

நபி பெருமானாரின் எழுத்தறிவின்மையைக் குறித்து கேள்வி எழுப்புவது - அவரது தனிப்பட்ட தகுதியைக் குறித்த ஐயப்பாடு அல்ல. மாறாக, குரான் என்ற புனித நூல், இறைவனின் வார்த்தைகள் அல்ல, மாறாக நபிகள் அவர்களின் உருவாக்கமே என்று நிருவுவதற்காகத் தான் இத்தனை ஆர்ப்பாட்டமும். அதற்காக அவர்கள் மெனக்கெட்டு, நபிகள் அவர்களை மிகவும் கற்றறிந்தவராகக் காட்டுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஒருபுறம் - அவர் மிகுந்த தகுதியுடையவர் என்று சொல்லிக் கொண்டே, மறுபுறம் அவரை இழிவு செய்ய முயற்சிப்பதை hypocrisy என்று தான் சொல்ல முடியுமே அன்று, வேறு எவ்வாறு விளங்க வைக்க முடியும்?

(அ.) Page 20, The Life of Muhammad - his life based on the earliest sources - Tahia Al-Ismail.

தருமியுடன் ஒரு உரையாடல் தொடங்குகிறது...

எங்காவது ஒரு புள்ளியில் இருந்து தொடங்க வேண்டியது தானே?

தருமிக்கு பதில் சொல்வதாக நான் வாக்களித்திருந்தது குறித்து தான் இந்த சிந்தனகைள். வெறுமனே அவர் கேட்ட ஆயிஷாவின் வயது எத்தனை என்பதற்கான பதிலாக மட்டும் இல்லாமல், அவர் பொதுவில் வைத்த கேள்விகளுக்கும் சேர்த்து பதில் சொல்லலாமே என்று தான் யோசனை. ஆனால், அவருக்குப் பதில் சொல்லுமுன், அவர் எத்தகைய மனிதர் என்பதற்காக அவர் எழுதிய பல பதிவுகளையும் வாசிக்க வேண்டியதாயிற்று.

Is he a proclaimed atheist ?

அப்படித்தானோ?

மதவிமர்சனங்கள் நிறையச் செய்தார் என்பதால், இறை நம்பிக்கை அற்றவர் என்று எடுத்துக் கொள்ளலாமா? நான் அவரை ஒரு atheist என்று சொன்ன பொழுது அதை அவர் மறுக்கவில்லை. அதனால், அவரை ஒரு இறை மறுப்பாளர் என்று ஏற்றுக் கொண்டே உரையாடலாம்.

எதையும் விமர்சிக்கும் பொழுது, உள்ளிருந்து கொண்டே விமர்சனங்களை வைப்பது சற்று சிரமமானது - காரணம், தவறாகப் புரிந்து கொள்ளப்படுவது மட்டுமல்லை, துரோகி என பட்டமும் கொடுக்கப்படலாம். மௌனமாக இருந்தால் கூட அத்தகைய சாத்தியங்கள் உண்டு என புரிந்து கொண்டேன். சரி, இனி பேசியே பட்டம் வாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்ததும் தான், மீண்டும் எழுதவே ஒரு ஆர்வம் வந்தது.

ஆனால், பாருங்கள், இறை மறுப்பாளன் என்று சொல்லிக் கொண்டால், இந்தப் பிரச்னைகள் எதுவுமில்லை அல்லவா? மதங்களை எந்த மன உறுத்தலுமின்றி, எளிதாக விமர்சிக்கலாம். மதங்களுக்குரிய சில விநோத குணங்களை, நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த ஒரு பலவீனமான கொள்கையையும் தூக்கிப் பிடிக்க வேண்டிய அவசியமில்லை. எல்லாம் சரி தான்?

ஆனால், ஒவ்வொரு மனிதனும் மதத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறானோ, இல்லையோ, சில நற்பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது இல்லையா? அல்லது இறை மறுப்பாளர்களுக்கு, நற்பண்பு கொண்டவர்களாக இருப்பதினின்றும் விலக்கம் கோருகிறீர்களா? இல்லையென்று நினைக்கிறேன். அடிப்படை பண்புகளும், மனித மதிப்பீடுகளும், மதம் சார்ந்தவை அல்ல, அவை அடிப்படை மனித பண்பின் கூறுகள் என்பதை இருவரும் ஏற்றுக் கொண்டதாக வைத்துக் கொள்ளலாம்.

சரி, இப்பொழுது சொல்லுங்கள் - நீங்கள் ஒரு புதிய மதத்தை நிருவ முயற்சிக்கவில்லையா? இறைவன் இருக்கிறான் என்று ஒரு சாரார் சொல்லும் பொழுது, நீங்கள் இறைவன் இல்லை என்று கூறி, அதையே ஒரு வழிமுறையாக, வாழ்க்கைப்பயணத்திற்கான வழியாக முன் வைக்கும் பொழுது, எந்த மதங்களின் பயணப் பாதைகள் தவறானது என்று விமர்சிக்கிறீர்களோ, அந்த மதங்களுக்கு மாற்றாக நீங்கள் வைக்கும் நாத்திகமும், ஒரு நடைமுறை மதமாக உருமாறி விடும் என்பதை நீங்கள் மறுக்க முடியாது, இல்லையா?.

இறைவன் இருக்கிறான் என்ற பாதையில் - மதங்களின் பாதையில் - கிடக்கும் கழிவுகளை மட்டும் காட்டுகிறீர்கள். மனிதன் புழங்கும் எந்த ஒரு இடத்திலும், கழிவுகளும், தானாகவே வந்து சேர்ந்துவிடும் என்பது நடைமுறை. அவற்றைத் தவிர்த்து விட்டு, இலக்கை நோக்கிப் பாருங்கள் - நீங்கள், நான், மற்ற மனிதர்கள் - உயிர்கள் என அனைவரும் நன்றி தெரிவிக்க வேண்டிய ஒருவன் இருப்பான் - இறைவனாக. ஆனால், அவனே இல்லை என்று கூறிவிட்ட பின்பு, உங்கள் பாதை எங்கே போகிறது, யாருக்காக பயணம், என்பதையெல்லாம் இறை மறுப்பாளர்கள் தான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு புதிதாக நீங்கள் செல்லவிருக்கும் பாதையில், பரிசுத்தங்கள் மட்டுமே நிறைந்திருக்கும் என்று சொல்ல முயற்சிக்க வேண்டாம். முதலில் அங்கே கிடக்கும் நாற்றமடிக்கும் கழிவு - சுயநலம். தான் தன் வாழ்க்கை என்று தன்னைச் சுற்றி மட்டுமே பார்வைகளை நிறுத்திக் கொள்வது தான் முதலில் நிகழும். சமூக மதிப்பீடுகள் அனைத்தும் இரண்டாம் இடம் தான். சரி, விவாதம் இதை நோக்கிப் போக வேண்டாம். இதைக் குறிப்பிடக் காரணம் - மதங்கள் என்பது, முறைப்படியாக வடிவமைக்கப்பட்ட பயணப்பாதை. அதை மறுக்கும் பொழுது, அதை மறுப்பவர்கள், புதிதாக ஒரு பாதையை வடிவமைத்துத் தருகிறார்கள் - இலக்கற்ற, சுயதேவைகளே வழி நடத்திச் செல்லும் ஒரு பாதை. அதுவும் ஒரு பாதை என்ற வகையில், நிறுவனப்படுத்தப்பட்டு, ஒரு மதமாக மாறி விடுகிறதே தவிர, வேறெதுவும் சாதித்து விடுவதில்லை.

இதற்கு மிகச் சிறந்த உதாரணம் -

கம்யூனிஸ்ட்டுகள்.

தமிழக கழகங்கள் (செல்லும் பாதை.)

ஆனால், நீங்கள் முன் வைக்கும் பாதை இவை எல்லாவற்றையும் விட உன்னதமாயிருக்கும். மேற்கொண்டு சொல்லுங்கள் - உங்கள் பாதை எது, எவ்வாறு இருக்கும் என்று!!!

இந்த இறைவன் உண்டா, இல்லையா, என்ற கேள்விகள் எப்பொழுதுமே, நியாயமாக சிந்திக்கக் கூடிய மனித மனதில் எழாமல் இருக்காது. அந்த விதத்தில், உங்கள் மனதில் எழும், எழுந்த சிந்தனைகள் என் மனதிலும் எழுந்திருந்திருக்கின்றன. இதைப் பற்றிய தர்க்கங்கள் என்னுள்ளும் நிகழ்ந்திருக்கின்றன. அதை நான் ஒரு கவிதையாகக் கூட எழுதி இருந்தேன் -2003ஆம் வருடத்தில், திசைகள் இதழில் வெளிவந்திருக்கிறது. பின்னர் மற்ற தளங்களிலும் அதை எழுதி இருக்கிறேன் - இறுதியாக, வலைப்பூவிலும் எழுதி வைத்தேன் - ஜூன் 10, 2005ல். நீங்கள் மதங்கள் குறித்து எழுப்பிய கேள்விகள் அனைத்தும், தனி மனிதன், தான் அதை அனுஷ்டிக்கும் முறையில் எழக்கூடிய தவறுகளையும், தர்க்க ரீதியாக, சில குறைபாடுகளும் தான்

ஆனால், அதற்கு மாற்றாக நீங்கள் வைக்கும் பாதை, மிக மிக ஆபத்தானது, இல்லையா? இறைவனை மறந்து விட்டு, மனிதனாகிய என்னைத் துதி, என்று கோரிக்கை வைக்கும் ஆபத்துகள் நிறைந்த பாதையில் அல்லவா, எங்களைப் பயணம் செய்ய அழைக்கிறீர்கள், இல்லையா?

கொஞ்சம் விளக்குங்கள்.

அதற்குள், நான் 4 வருடங்களுக்கு முன்பு எழுதிய கவிதை இதோ:


கடவுளைக் காட்டு......


கடவுளைக் காட்டு
என்று ஒரு போர் -
நண்பர்களுக்குள்...


நம்பிக்கையின்
எல்லையில் நிற்கிறார்
கடவுள்.


நம்பிக்கைகள்
உண்டாவது
முயற்சியால்!


முயற்சிக்க வேண்டுமே
ஓர் மனதின்
சிந்தனை -
அங்கே
கடவுளின் வாசம்....


சிந்தனை எழுவது
என் தலையில் -
மூளையின்
மெல்லிய திசுக்களில்....


திசுக்கள்
துடித்தால் தான்
சிந்தனை.


ஓர் துடிப்பை
தூண்டியவர்
கடவுள்...

துடிப்பது
உண்டானது
பிறப்பின்
நியதி.


பிறப்பிற்கு
நியதி
வைத்தவன் யார்?
அவர் தானே -
கடவுள்?


கடவுளைக் காட்டு
என்ற போரின் விவாதம்
சூடாக தொடர்ந்தது
நண்பர்களுக்குள்.


பக்கத்து பள்ளியில்
இறைவணக்கப் பிரார்த்தனை -
'என் மதம் எனக்கு....
உன் மதம் உனக்கு...'


இது உரையாடலின் துவக்கம் தான்... நீளும்.

பின்னூட்டங்கள் தெளிவாக எழுதிய பொருளைப் பற்றி மட்டும் இருக்கட்டும். தனி மனிதர்களைத் தாக்கும் ஊடகமாக என் வலைத் தளம் அமையாது என்பதை மீண்டும் ஒரு முறை நண்பர்களுக்கு நினைவூட்டுகிறேன்.

பண்புடன் எழுதுங்கள்.

அன்புடன்
நண்பன்.

Friday, March 16, 2007

வில்லங்கத்தில் விக்கிபீடியா......

மிக சமீபத்தில் படித்த செய்தி - பல பல்கலைக் கழகங்கள், விக்கிபீடியா தரும் தகவல்களை ஆதாரப் பூர்வமானது என ஏற்க மறுத்து விட்டன. அவற்றை தகவல் அறிந்து கொள்ள வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் அவை மட்டுமே ஆதாரபூர்வமானவையாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்கின்றன.

ஒரு சுதந்திரமான தகவல் மையம் - யார் வேண்டுமானாலும் தகவல் தரலாம் - மாற்றலாம் - மறுபரீசீலனைக்கு உட்படுத்தலாம் என்றெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட விக்கிபீடியாவின் தகவல் மையத்தைக் கண்காணித்து திருத்தப் பணியில் ஈடுபட்டவர்களில் பலர் - amateurs.

12,999 நபர்கள், நீங்கள் தரும் தகவலை உடனுக்குடன் கேள்விக்குட்படுத்துகிறார்கள், விவாதிக்கிறார்கள், சீர்திருத்துகிறார்கள் என்று சொல்லப்படும் இந்த சீர்திருத்துநர்களின் பின்னணி என்ன?

வேலை வெட்டி அற்றவர்கள் தான். இணையத்தில் பலமணி நேரம் செலவழிக்கும் தகுதியுடையவர்கள் மட்டுமே இந்த வெட்டுதல் ஒட்டுதல் தொழிலில் இறங்க முடிகிறது. இந்த வெட்டி, ஒட்டும் பணி செய்யும் நபர்களின் கல்வித் தகுதி என்ன? யாருக்கும் தெரியாது!!!

இந்த வெட்டி ஒட்டும் வேலையைச் செய்தவர்களில் முக்கியமான ஒருவராகக் கருதப்பட்ட. ஒருவர் மோசடியாளர் என சமீபத்தில் நிரூபிக்கப்பட்டது. ESSJay என்று தன்னை சொல்லிக்
கொண்டவர், ஒரு தனியார் பலகலைக்கழகத்தில் தான் ஒரு பேராசிரியர் என்றும், கிறித்துவ மதத்தின் சட்ட திட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் என்றும் சொல்லிக்கொண்டார். ஆனால், அவருடைய உண்மையான தகுதி - அவர் பள்ளியைத் தாண்டதவர். உண்மையான பெயர் ரியான் ஜோர்டான். இவர் மிகுந்த தகுதி வாய்ந்தவர் என கருதி, ஜிம்மி வேல்ஸ் 'விக்கிபீடியா நிறுவனர்' இவருக்கு தன் மற்றைய நிறுவனத்தில் முழுநேர பணி கொடுத்திருக்கிறார்.

முதலில், ஜிம்மி வேல்ஸ் இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை என்றாலும், பின்னர் தொடர்ந்து வந்த புகார்களினால், அவரை நீக்கிவிட்டார். தெரிந்த ஒருவரே இப்படி என்றால், இன்னும் தெரியாதவர்களின் தகுதி என்ன என்பதை யாராலும் சொல்ல முடியாது.

மேலும் யார் வேண்டுமானாலும் திருத்தலாம் என்று கொடுத்த சுதந்திரத்தை மக்கள் என்ன செய்தார்கள் - தங்கள் இஷ்டம் போல், விருப்பம் போல், தங்களுக்குப் பிடிக்காதவர்களைத் திட்டித் தீர்த்தார்கள். ஒரு கட்டத்தில், ப்ளேர், புஷ், மற்றும் சில முக்கியஸ்தர்களை மிகக் கேவலமாகத் திட்டித் தீர்க்க, இறுதியாக விக்கிபீடியா நிறுவனமே தலையிட்டு இவர்களைப் பாதுகாக்க வேண்டியதாயிற்று.

இந்த விக்கிபீடியாவைப் பற்றி. கல்வி நிலையங்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களிடையே நிலவும் கருத்து - Wikipedia lacks accountability, authority, scholarly credentials, accuracy and scrupulousness. இவை தான் விக்கிபீடியாவின் பின்னணி.


சரி, இப்போ இதெல்லாம் எதற்காக?

தருமி அவர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்குப் பதில் தருகிறேன் என்று வாக்குக் கொடுத்திருந்தேன் - அவர் நிறைய விஷயங்களை விக்கிபீடியாவிலிருந்து எடுத்திருந்ததாகக் கூறினார். விக்கிபீடியாவின் தகுதி என்ன என்று தேடிய பொழுது கிடைத்த சங்கதிகள் தான் இவை. 'இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் பரிபூர்ணமானவை' என்பதற்கு எந்தவித உத்தரவாதமும் கிடையாது என்று பலமுறை சொல்லி இருக்கிறேன். ஆனால், விக்கி பீடியா இவற்றிலிருந்து முற்றிலும் மாறானவை என்று மிகத் தீவிரமாக நம்புகிறார்கள். அவற்றை ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. ஆராய்ச்சிகள் மூலம் நிருவப்பட்ட அறிவியலை வேண்டுமானால் இத்தளத்தில் வாசிக்கலாம்.

ஆனால், மத ஆராய்ச்சிகளை இத்தகைய கத்துக்குட்டிகளிடமிருந்து ஆரம்பிக்கக் கூடாது. விக்கிபீடியா மத, தத்துவ ஆராய்ச்சி நூல்களுக்குத் தகுந்த நூல் அல்ல.

விரிவான செய்திகளுக்கு இங்கே படியுங்கள்;

மேலும் ஒன்று

(இந்த ஆதாரங்களையெல்லாம் புறக்கணித்தாலும், தருமி எழுப்பும் கேள்விகளை ஏற்றுப் பதில் சொல்ல முனைகிறேன் - வரும் பதிவுகளில்)

Thursday, March 08, 2007

விடாது கருப்புவிற்கான பதில்: நண்பன்

விடாது கருப்புவிற்கான பதில்:

விடாது கருப்பு எனக்கு ஒரு பின்னூட்டமிட்டு அதில் நான் அவருடைய பின்னூட்டங்களைப் பதிந்து நீக்கியது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

அவருடைய எழுத்துகள் எதையும் நான் வாசித்ததில்லை. நேரமின்மை ஒரு முக்கிய காரணம் என்று கூறி தப்பித்துக் கொள்ள முயல்வதை விட, வாசிக்க விருப்பமில்லை என்ற உண்மையை போட்டு உடைத்து சொல்லி விடுவது தான் உத்தமம்.

விடாது கருப்பு என்னை விடாது போல் தோன்றுவதால், சில விளக்கங்களைக் கொடுத்து விடலாம் என்பதே எனது உத்தேசம். அதன்படி, அவருடைய பதிவை அப்படியே கொடுத்து அதற்கான விளக்கத்தை எழுதுவது தான் சரியாக இருக்கும்.

விடாது கருப்புவின் மொழி நடை எனக்கு உகந்ததாயில்லை. எனது பதிவுகளை எனது மனைவி வாசிக்கிறார். எனது நண்பர்கள் - வலைப்பூவில் இல்லாத நண்பர்கள் வாசிக்கிறார்கள். நான் பொறுப்பற்று, பொழுது போக்க எழுதவில்லை. எழுதுவதற்கு முழுப்பொறுப்பேற்று தான் எழுதுகிறேன். அது மட்டுமல்ல, பின்னூட்டங்களுக்கான பொறுப்பும் என் தலை மீதே என்ற புரிதல் இருப்பதால், அதையும் நான் கவனமாக செய்ய வேண்டியதிருக்கிறது..

என் பதிவுகளை என்னை ஆதரிப்பவர்களைப் போல, என் கருத்தியலுக்கு முற்றிலும் எதிர்நிலையில் இருப்பவர்களும் வாசிக்கிறார்கள். எல்லோரும் வந்து வாசித்து ஒரு ஆரோக்கியமான கருத்தாடல் செய்ய முடியும் என்ற நிலைமையை என் வலைப்பதிவில் கொண்டு வர முயற்சிக்கிறேன். அதனால், அவர்களை எதிர்க்கப் போவதில்லை என்ற அர்த்தமில்லை. எதிர்ப்பது என்பது கருத்தியல் ரீதியாக, வன்முறை இல்லாத உரையாடலாக இருக்க வேண்டும் என்பதே என் நிலை.

இந்தப் பின்னணியில், உங்கள் பின்னூட்டத்திற்கு வருவோம். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் - உங்களுக்கு நான் எந்த அறிவுரையும் கூறப்போவதில்லை. உங்கள் பின்னூட்டத்தின் மீதான எனது கருத்துகள் மட்டுமே. அதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறீர்கள் என்பது உங்களைப் பொறுத்ததே. நீங்கள் உங்கள் எழுத்து நடையை மாற்றிக் கொள்ள வேண்டுமென்றோ, அல்லது, கருத்துகளையே மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதோ எனது நோக்கமல்ல. எதைச் செய்வதாக இருந்தாலும் - அதை உங்கள் தளத்தில் இருந்து செய்து கொள்ளுங்கள். எனக்கு ஆட்சேபணையில்லை.

எனது பதிவில், கருத்தை ஒட்டி வெளியிடப்படும், ஆதரவு / எதிர்ப்பு கருத்தும் விவாதங்களும் மட்டும் தான் இடம் பெறுமே தவிர, எனது பதிவைப் பயன்படுத்தி, அதன் அடியோட்டமான உணர்வுகளுக்கு மாறாக, தனிப்பட்ட தங்கள் காழ்ப்புணர்ச்சிகளை அடுத்தவர் மீது திணிக்கும் ஊடகமாக பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.. உங்கள் எதிர்ப்பாளர்களை உங்கள் தளத்திற்கு வரச் செய்து வாசிக்க வைக்க வேண்டியது உங்களுடைய கடமையாகும். உங்கள் தளத்திற்கு வராதவர்களை சந்திக்க அடுத்தவரின் தளத்திற்கு வரும் பொழுது, அந்த இடத்தில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளை அனுசரிக்க வேண்டியது உங்களுடைய கடமை தானே?


// விடாதுகருப்பு said...

அன்புள்ள நண்பன்,

நானும் பெரிய எழுத்தாளன் என்பதும் எனது வார்த்தைகளில் பறக்கும் அனலும் தங்களுக்குத் தெரியாதது அல்ல. உங்களைப் போல் அல்ல நான். வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு கேஸ் நான். நான் எதற்காகவும் பூனூல் போட்ட பார்ப்பன நா*களிடம் பயந்து போனதே இல்லை. எம் முன்னோர்கள் இந்த பார்ப்பன நா*களிடம் பட்ட அடியானது இன்னும் என் நெஞ்சில் ரணமாய் இருந்து வலித்துக் கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட நான் தங்கள் பதிவில் அப்படி என்ன ஆபாசமாக எழுதிவிட்டேன் என்று தெரியவில்லை. தங்களின் "தே*** மகன்கள்" என்ற தலைப்பினைவிடவா ஆபாசமாக எழுதினேன்? அப்படி நான் என்னதான் எழுதினேன் என அறிந்துகொள்ள எனக்கும் ஆவலாக உள்ளது. நண்பர், பேராசிரியர் நாகூர் இஸ்மாயில் அவர்களும் எனக்கு மெயில் அனுப்பி நண்பனை அப்படி என்னதான் சொன்னீர்கள் என்று கேட்கிறார். எனவே தயவுசெய்து நான் தங்களுக்கு இட்ட பின்னூட்டத்தினை எனக்கு மடல்வழியாக அனுப்பினால் நான் அதனை இஸ்மாயில் அவர்களுக்கு அனுப்பி அவரின் சந்தேகத்தினை நிவர்த்தி செய்வேன்.//



மேலே உள்ள விடாது கருப்புவின் எழுத்துகளில் சில எழுத்துகளை நீக்கி விட்டு, சில நட்சத்திரங்களைப் போட்டது நான் தான். சரி அவருக்கான எனது பதில்:

// நானும் பெரிய எழுத்தாளன் //

நம்பிக்கைகள் தான் ஒரு மனிதனுக்கு மிக முக்கியம், சார். வாழ்த்துகள்.

// உங்களைப் போல் அல்ல நான்.//

ரொம்ப நன்றி, கருப்பு. நம் இருவருக்குமிடையே உள்ள வித்தியாசங்களை எல்லோருக்கும் உங்கள் வாயால் உணர்த்தியதற்கு.

// தங்களின் "தே*** மகன்கள்" என்ற தலைப்பினைவிடவா ஆபாசமாக எழுதினேன் //

இந்த வார்த்தையை K.பாலசந்தர், முதன்முதலில் வெகுஜன ஊடகத்தில் அறிமுகப்படுத்தினார். அபூர்வ ராகங்கள் படத்தில். நாயகனாக நடித்த, கமல், is an anti-establishment hero. தந்தையுடன் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு, கால் போன போக்கில் போய்க் கொண்டிருந்த அவர் மீது, காரில் செல்லும் சிலர் சாக்கடையை - வீதி ஓரத்தில் கிடந்த சாக்கடையை, வேண்டுமென்றே, அவர் மீது சிதறுமாறு அடித்து விட்டுச் செல்ல, அவர், தன் கோபத்தை உரக்கக் கத்துவார் 'தே*** பசங்களா' என்று. அது ஒரு கோபத்தின் வெளிப்பாடு. அந்தக் வாகனத்தில் இருப்பவர்களை அவருக்குத் தெரியாது. தனிப்பட்ட முறையில் அவர்கள் மீது அவருக்கு வெறுப்பு இருந்திருக்க வாய்ப்பில்லை. வெறுமனே அது, கோபத்தையும், ஆத்திரத்தையும், எதிராளிக்கு வலிக்கச் செய்ய மட்டுமேவென பயன்படுத்தப்பட்ட சொல் அது. மேலும், நாயகனின் இயலாமையையும் அது வெளிப்படுத்தும். ஆக அந்த சொல், கோபம், ஆத்திரம், இயலாமை இவற்றிற்கான ஒரு குறியீடு தான். It didn't have any intended meaning other than expressing disgust. இதை ஆபாசம் என்று குறிப்பிடுவதற்கு காரணம்? சொல்லாத அர்த்தங்களைத் தேடிக் கொண்டிருந்தால், ஒவ்வொரு வார்த்தைக்கும் அகராதியில் அதற்குண்டான பொருட்களையெல்லாம் போட்டுக் குழம்பிக் கொண்டிருக்க வேண்டியது தான்.

இந்த வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தைக்கான அர்த்தத்தைப் பாருங்கள்:
1. a man born of unmarried parents. (as a noun)
2. an unpleasant person (informal)

as an adjective it is no longer used in its pure or original form.

அதனுடைய உண்மையான பொருள் மறக்கப்பட்டு, இன்று அதை விரும்பத் தகாத மனிதர்கள் என்ற அளவில் மாத்திரமே உபயோகப்படுத்துகின்றனர். அதன் தமிழாக்கமும் கிட்டத்தட்ட அதே அளவில் தான் இன்று பயன்படுத்தப்படுகிறது. பொது ஊடகத்தில் புழக்கத்திற்கு வந்து விட்ட, இந்த வார்த்தையைப் பயன்படுத்த தடை விதித்தால், இன்று பல எழுத்தாளர்கள் சிரமம் அடைவார்கள். ஒரு கதாபாத்திரத்தை வடிவமைக்கும் பொழுது, ஒரு மோசமான பாத்திரத்தை இந்த ஒற்றைச் சொல்லால் வடிவமைத்து விடலாம். So, this word is no more a taboo. இதில் ஆபாசத்தைக் கண்டெடுக்க, உங்களைப் போன்ற பெரிய எழுத்தாளர்களாலும், அறிவுஜீவிகளாலும் மட்டும் தான் முடியும் என்ற உண்மையை இப்பொழுது தெரிந்து கொள்கிறேன்.

எனக்கு அறிவுறுத்திய நண்பர்கள், இதை ஒரு மோசமான வார்த்தை என்ற அளவில் தான் கேட்டுக் கொண்டார்கள் - மாற்றுங்கள் என்று. அவர்கள் இதை ஆபாசம் என்று குறிப்பிடவில்லை. மாறாக தரமற்றது என்று தான் நினைத்தார்கள். அவர்களின் வார்த்தைகளில் என் மீதான உண்மையான அக்கறை இருப்பதாக உணர்ந்ததால், ஏன் என்ற கேள்வியைக் கூட நான் கேட்க வில்லை. மேலும், அபூமுஹை அவர்கள் சொன்னதும், சிந்திக்க வைத்தது. ஒருவனைத் திட்ட வேண்டுமென்றால், அவனின் தாயின் மீதான வசவு சொல்லை ஏன் பயன்படுத்துகிறீர்கள் என்ற அவரது தர்க்கத்தில் இருந்த நியாயம் உறைத்ததால், உடன் மாற்றினேன். இந்த வார்த்தை ஒரு ஆணாதிக்க வர்க்கத்தால் வடிவமைக்கப்பட்ட சொல் என்ற புரிதலும் வந்தது. இந்த சறுக்கலுக்காக வருத்தப்பட வேண்டியது தான்.

நியாயப் பூர்வமான தர்க்கங்களை, வாதங்களை, யார் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். நண்பர்களாயினும் சரி, எதிரணியினர் ஆனாலும் சரி. அகங்காரத்தைக் கொண்டு வாதாடுவது இல்லை. அதனால், தான் நண்பர்கள் சொன்ன பொழுது, அதை கேள்வியின்றி ஏற்றுக் கொண்டேன்.

// நண்பன் said...

விடாது கருப்பு,

உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

அதை நீக்குவதற்குக் காரணம் - அதன் மொழி நடையும், எழுத்தில் தெரிந்த வன்முறையும்.//


நீங்கள் ஆபாசமாக எழுதிகிறீர்கள் என்று நான் சொல்லவில்லை. வன்முறையும், மரியாதையற்ற மொழியும் தான் என்னைப் படுத்தி எடுக்கிறது. வன்முறைகளை என்றுமே நான் ஆதரிக்கப் போவதில்லை. என் வலைப்பதிவிலும் தான். அதனால், வன்முறைகளை நிச்சயம் விலக்கியே வைப்பேன். எனது இன்னுமொரு பதிவில், தீவிரவாதத்தை எதிர்த்து அத்தனை பேசிய ஒரு பதிவில், ஆருரன் வந்து எழுதுகிறார் - சுன்னி முஸ்லிம தீவிரவாதிகள் அனைவரையும் அமெரிக்கர்கள் அழித்து ஒழிக்க வேண்டும். அதையும் நீக்கி விடுவேன். அந்த குறிப்பிட்ட நண்பரின், மனோபாவம் எப்படிப்பட்டது என்பதை வலைப்பதிவினர் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, அதை ஒரு நாள் விட்டு வைத்தேன். அதன் ஆயுள் அத்தனை தான்.

என்னை நீங்கள் ஒரு ஜனநாயகப் பண்பில்லாதவன் என்று கடிந்து கொள்ள வேண்டுமானாலும் செய்யுங்கள். ஜனநாயகப் பண்பு சில விதிமுறைகளுக்குட்பட்டது. மனித மாண்புகளை மதிக்க வேண்டும் என்பதும் ஜனநாயகத்தின் ஒரு அடிப்படைத் தத்துவம். எல்லையற்றது எனது ஜனநாயக உரிமைகள் என்று கோருவதனால், மன்னிக்கவும், அத்தகைய ஜனநாயகம் எனக்குத் தேவையில்லை. அதையும் மீறிய உரிமைகள் உங்களுக்குத் தேவை என்றால், அதை உங்களுக்கு உரிய இடத்தில் செய்து கொள்ளுங்களேன். ஏன் என்னைத் தொந்தரவு செய்கிறீர்கள்?



// வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு கேஸ் நான் //


மிக்க மகிழ்ச்சி. அப்படியே இருங்கள். ஆனால், அந்த ஒரு வெட்டு, நேர்மையானதாக இருக்கட்டும். பண்புள்ளதாக இருக்கட்டும். இந்த அடிப்படைகளை வைத்துக் கொண்டு பார்த்தால், என்னுடைய எழுத்துகளும் பெரும்பாலும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று தான் இருக்கின்றது. சில சிறு சிறு தவறுகளை, சறுக்கல்களை, வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு, எதிரிகளை மடக்கிப் பிடித்து விட்டதாக, நான் ஒரு போதும் நினைத்துக் கொள்ள மாட்டேன். இந்த சறுக்கல்கள் அனைவருக்கும் வரக்கூடியது தான். பேசப்படும் கருத்தளவில் இருக்கும் குறைகளைத் தான் நான் விமர்சிக்கிறேன். இதில் வெட்டும் கிடையாது துண்டும் கிடையாது புரிதல்கள் மாத்திரமே சாத்தியம்.

வாதம் புரிந்து, எவரையும் அவர்கள் கருத்திலிருந்து வெளியேற்றி, என்னிடம் வந்து வேர வைக்க முடியும் என்ற முட்டாள்தனமான நம்பிக்கைகள் எல்லாம் கிடையாது. கொஞ்சமேனும் என்னுடைய நிலைபாட்டைக் குறித்து ஒரு புரிதல் மாற்று அணியினருக்குக் கிடைக்குமென்றால், அது தான் என் எழுத்துகளின் வெற்றி என பெருமிதம் கொள்வேன். மற்றபடி, வெட்டவும் துண்டாடவும் விருப்பமில்லாதவன்.

இருவருடைய பார்வைகளும், கோணமும் வேறுவேறாக இருக்கின்றது. அதில் ஒன்றும் தவறில்லை.


// எம் முன்னோர்கள் இந்த பார்ப்பன நா*களிடம் பட்ட அடியானது இன்னும் என் நெஞ்சில் ரணமாய் இருந்து வலித்துக் கொண்டிருக்கிறது. //


இருக்கலாம். அந்த வலியை நீங்கள் வெளிப்படுத்துவதை நான் தடை செய்யவில்லையே? உங்கள் தளத்தில் நின்று கொண்டு அதைச் செய்யுங்கள். உங்கள் அனுபவங்களிலிருந்து உங்களுடைய எழுத்துகள் வருகிறதென்றால், என்னுடைய அனுபவங்களிலிருந்து என்னுடைய எழுத்துகள் வருகின்றன. எனக்கு நிறைய பிராமின் நண்பர்கள் உண்டு. ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. அவர்கள் என்னிடத்தில் எந்த பேதத்தையும் காட்டியதில்லை. இன்னமும் எனக்கு அவர்கள் நண்பர்கள் தான். கல்லூரிக் காலம் என்ற பொழுது, இளமைத் துடிப்பில் அப்படி இருந்திருக்கலாம் என்றில்லை, இப்பொழுதும் கூட அவர்கள் அவ்வாறு தான் இருக்கின்றார்கள். நீங்கள் சொல்வது போலவும் மனிதர்கள் இருந்திருக்கக் கூடும். அதற்காக, உங்கள் அனுபவத்தை நான் உள்வாங்கிக் கொண்டு, உங்களைப் போன்று எழுத வேண்டும் என்றில்லையே? உங்கள் அனுபவத்தை நீங்கள் எழுதுங்கள். என் அனுபவத்தை நான் எழுதிக் கொள்கிறேன். சரிதானே?


// அப்படி நான் என்னதான் எழுதினேன் என அறிந்துகொள்ள எனக்கும் ஆவலாக உள்ளது. //


இதோ இருக்கிறது - கீழே.

நண்பர்களுக்குத் தகவல் சொல்லி வாசிக்கச் சொல்லுங்கள். நீங்கள் குறிப்பிடும், பேராசிரியர், நாகூர் இஸ்மாயில், என் தவறுகளைச் சுட்டிக் காட்டி, திருத்தச் சொன்னார். திருத்திக் கொண்டேன். உங்களுக்கும் அத்தகைய நல்ல வழிகளை அவர் சொல்லித் தரட்டும்.

// விடாது கருப்பு said

பல கேள்விகளை நானும் பலமுறை அந்த சொறிகரனிடம் கேட்டேன். அதன் கும்பலிடமும் கேட்டேன். தகுந்த பதில் இல்லை. அடிவருடும் கும்பலை வைத்தும் ஜால்ராக்களை வைத்தும் எனக்கெதிராகக் குறைப்பதைத் தவிர உருப்படியான எந்த பதிலும் வருவதில்லை!

நான் முன்பே சொன்னபடி பூணூலை மட்டுமே வெட்டி இருக்கக் கூடாது. ஒட்டுமொத்தமாக எல்லா அய்யனையும் போட்டுத் தள்ளி இருந்தால் இன்றைக்கு இந்த அளவுக்கு பேசிக் கொண்டிருக்க மாட்டார்கள் ஜாதிவெறி பிடித்த பார்ப்பனர்கள்.//



இதில் ஆட்சேபத்துக்குரிய பகுதியாக நான் கருதியது - 'எல்லா அய்யன்களையும் போட்டுத் தள்ளி இருந்தால்........' - என்பதைத் தான். உங்களுடைய இந்தக் கருத்து, this ethnic cleansing concept is totally unacceptable to me. அதனால் தான் வெளியிடவில்லை.

பூணூலை வெட்டி எறிய வேண்டுமென்பதை, பார்ப்பனீய சிந்தனைகள் அழிய வேண்டும் என்பதன் குறியீடாக பெரியார் கூறினார். அந்த அளவில் ஒரு கருத்தியலாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இந்த 'போட்டுத் தள்ளும் விவகாரம்' நம்ம கையில ஆகாது, ஐயா!!!

பெரியார் இதையும் சொன்னாரே என்று ஒரு தர்க்கத்திற்காக, நீங்கள் பெரியாரின் ஒரு கூற்றை முன் வைக்கலாம். 'பாம்பையும், பார்ப்பனனையும் பார்த்தால், முதலில் பார்ப்பனனை அடி' என்று. பெரியாரின் இந்தக் கூற்றோடு எனக்கு உடன்பாடு கிடையாது. ethnic cleansing என்ற கோட்பாட்டை, பெரியாரின் பெயரால் எல்லோரும் தவறாக பயன்படுத்துகின்றன்ரோ என்ற ஐயம் என்னிடத்தில் உண்டு. Periyar had merely set a priority as to what to fight as an evil. He considered parpanism as more dangerous and venomous than a snake. அவ்வளவு தான். பெரியார் போன்ற ஒரு சிந்தனையாளர், அழித்தொழிப்பதை கற்றுக் கொடுத்திருக்க மாட்டார் என்பது என் எண்ணம். என் புரிதல். பெரியாரை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் பொழுது இந்த கருத்து சிதைவுகளை களைய முயன்றிருக்க வேண்டும். ஆனால், பாவம். எல்லோருக்கும் அவரை திட்டுவதற்கும் தவறாகப் புரிந்து கொள்வதற்கும் தான் நேரமிருக்கிறது.

'நீ பெரியாரைத் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். அவர் சொன்னதன் பொருள் அழித்தொழிப்பு தான்' என்ற வாதத்தை நீங்கள் வைத்தால், அதை எதிர்த்து இப்பொழுதுக்கு நான் தர்க்கம் செய்யப் போவதில்லை. மாறாக, பெரியாரை முற்றிலுமாகப் படித்துப் புரிந்து கொள்ளும் வரை, கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்வேன். என்னை பார்ப்பனர்கள் இம்சிக்கவில்லை. மாறாக, அவர்களில் சிலர் முன் எடுத்துச் செல்ல விரும்பும் பார்ப்பனீயம் கோட்பாட்டை அடிநாதமாகக் கொண்ட இந்துத்வம் என்ற கருத்தியல் தான் படுத்துகிறது. அந்தக் கருத்தியலை, அதன் தளத்திலே நின்று தான் சந்திக்க வேண்டுமே தவிர, வீண் ஜம்பமாக, அழித்தொழிப்பு கொள்கையெல்லாம் ஆதரிக்கப் போவதில்லை.

இறுதியாக, நண்பனொருவன் அனுப்பிய என் வலைப்பதிவைப் பற்றிய விமர்சனம் கீழே தருகிறேன்.








இந்த மாதிரியான நண்பர்களால் தான் என்னை வழி நடத்திச் செல்ல முடியும். அத்தகையவர்களில் ஒருவராக உங்களால் முடிந்தால் மாறுங்கள். இல்லையென்றால், என் வழி தனி வழி தான்.

திட்ட விரும்பினால் தாராளமாகத் திட்டிக் கொள்ளுங்கள். சிறிது நாட்களுக்கு முன்னால், சில நண்பர்கள், பட்டம் கொடுத்து, புகைப்படம் போடுவோம் என்று மிரட்டினார்கள். (இப்பொழுது தங்கள் கருத்தை மாற்றிக் கொண்டிருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.) உங்களுக்கும் அந்த மாதிரி ஏதாவது எண்ணம் இருந்தால், அந்த சிரமத்தைத் தரவிருப்பமில்லை. படத்தை இணைத்திருக்கிறேன். எடுத்து போட்டு என்ன வேண்டுமானாலும் திட்டிக் கொள்ளுங்கள்.

நன்றி - இத்தனை நேரம் பொறுமையாக வாசித்தமைக்கு.

(அனைவருக்கும் தான்)

(நேர்மையாகக் கருத்து சொல்ல விரும்புபவர்கள் மட்டுமே எழுதுங்கள். இந்தப் பதிவை வைத்துக் கொண்டு, ஜல்லியடிக்க கிளம்பியவர்களுக்கு, கண்டிப்பாக No Entry)

அபூமுஹையின் பதிவிற்கான பின்னூட்டம்

குரான் வசனம் 2:187 - வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு இதோ:

(1)


இதில் வரக்கூடிய ரஃபத் என்ற சொல்லிற்கான விளக்கம்:

கவனியுங்கள் - ரஃபத் என்ற சொல்லிற்கான பொருளை. அது உடலுறவைக் குறிக்கும் நேரடியான சொல் அல்ல. அது, ஒரு கணவன் தன் விருப்பத்திற்கு தன் மனைவியை உடன்படச்செய்யும் பொருட்டு செய்யக்கூடிய, பேசக்கூடிய, குறிப்பால் உணர்த்தக் கூடிய செயல்கள் அனைத்தையும் குறிக்கும். மார்க்க அறிஞர்களே, ரஃபத் என்ற அந்த சொல்லை, இந்த இடத்தில் கணவன் விருப்பம் என்பது தாம்பத்ய உறவாகத் தான் இருக்க வேண்டும் என்று விளக்கமளித்துள்ளனர்.

இந்த மொழி பெயர்ப்பை எடுத்து உங்கள் முன் வைக்கக் காரணம் - இஸ்லாம் ஏற்படுத்திய வழிமுறைகளைப் பற்றிய தெளிவு எல்லோருக்கும் வேண்டுமென்பதற்காகத் தான். தன் விருப்பத்திற்கு தன்னிச்சையாக மனைவியை உடன்படச் செய்து தான், கணவன் உறவு கொள்ள வேண்டுமே தவிர, வற்புறுத்தியோ அல்லது பலாத்காரம் செய்தோ அல்ல. The husband is not allowed to rape his wife. இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத விசயம் அது.

இதை முக்கியமாகக் குறிப்பிடுவதன் நோக்கம் - இந்தப் பதிவை எழுதிய மாற்று மத அன்பர் தாம்பத்ய உறவை கொச்சைப்படுத்தும் விதத்தில் எழுதி உள்ளார். அறியாமை தான் காரணம். இஸ்லாம் எந்த ஒரு விஷயத்திலும் புனித பூச்சு வேலைகள் செய்வதில்லை. வாழ்க்கையை அதன் இயல்பை ஒட்டி, எவ்வாறு வாழ்வது என்பதைத் தான் இஸ்லாம் போதிக்கிறது.

இஸ்லாத்தில் துறவறம் என்பதே கிடையாது. பாலுணர்ச்சி என்பது மனிதனின் இயற்கைத் தேவை. அதை அடக்கி ஆளப் போகிறோம் என்பதெல்லாம் பிரம்மையை கிளப்பும் ஒரு விஷயமே தவிர, கடைப்பிடித்தலில் தவறுகள் நேரக்கூடிய அபாயம் நிறைந்த பாதை. துறவறம் பூண்டவர்களின் கதி என்ன என்பது, சாமியார்களைப் பற்றி தினம் தினம் வரக்கூடிய செய்திகளில் இருந்து அறிந்து கொள்ளலாம். உலகமறிந்த குருக்கள் முதல் கடுந்தவம் புரிந்த முனிவர்கள் வரை இறுதியில் இந்த இச்சைக்குப் பலியாகியே இருக்கின்றனர். ஒரு விதண்டாவாததிற்கு வேண்டுமானால், தர்க்கம் செய்யலாமே தவிர, நடைமுறை சாத்தியக் கூறுகள் நிறைந்த பாதை அல்ல, பிரம்மச்சாரியம்.

இஸ்லாம் இந்த மாதிரி பித்தலாட்டங்களைச் செய்யச் சொல்லவில்லை, போதிக்கவில்லை. மாறாக அனைவரும் திருமணம் செய்து, இல்லற வாழ்க்கையை மேற்கொள்வதையே வற்புறுத்துகிறது

(2)


ஆடைகளைப் பற்றிய வசனப் பகுதி இதோ:

(3)


குரான் வசனங்கள் ஒரே நாளில் இறக்கி அருளப்படவில்லை. பல வருடங்களாக, தேவைகளுக்கேற்ப சிறிது சிறிதாக இறக்கி அருளப்பட்டது. முதன் முதலில் நோன்பு வைத்தவர்கள் அது குறித்து பலவகையான தவறான கருத்துகளைக் கொண்டிருந்தனர். புனித ரமலான் என்பதால், மனைவியுடன் உறவு வைத்துக் கொள்வது தவறு என்ற எண்ணமும், எப்பொழுது உண்பது, எப்பொழுது நோன்பு வைப்பது போன்ற குழப்பங்களும் இருந்தது. இது சராசரி மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய குழப்பங்களே. அதன் தீர்வாக வந்தது தான் இந்தக் குரான் வசனம். மனைவியுடனான தாம்பத்ய உறவு எந்த வகையிலும் ரமலான் மாதத்தின் புனிதத்திற்கு கேடு விளவிப்பதில்லை. தாராளமாக நீங்கள் உங்கள் மனைவியுடன் இணைந்து கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறது குரான். அதாவது இறைவசனங்கள்.

Its a down-to-earth advice.

இது சிலருக்கு ஆபாசமாகத் தெரிகிறதா? இன்னமும் நம்மிடையே பலருக்கு, தாம்பத்ய உறவு என்றாலே ஆபாசம் தான் மனதில் தோன்றுகிறதே தவிர, அது ஒரு இயல்பான, இயற்கையான, மனித இன பாதுகாப்பிற்குத் தேவையான ஒரு விஷயமாகத் தோன்றவில்லை. காரணம் - தாம்பத்ய உறவென்றால் தவறென்றே புத்தி புகட்டப்பட்டு வளர்க்கப் பட்ட கட்டுப் பெட்டித்தனம். The Victorian Values!!! இது அவரின் தனிப்பட்ட மன வளர்ச்சியின்மையைக் காட்டுகிறதே தவிர, வேறில்லை. எத்தனை புதிரா, புனிதமா வந்தால் கூட, இந்த விஷயத்தில் இவர்களால் தெளிவு பெற முடியாது.

மற்ற குரான் வசன மொழி பெயர்ப்புகள் இதோ:

(4)




(5)


(6)

(7)



(8)






என்னிடமுள்ள ஆறு குரான்களிலிருந்து, மொழி பெயர்ப்பைக் கொடுத்து விட்டேன். (குரானின் விவரங்கள் கீழே வரும். வாசிக்க விருப்பமுள்ளவர்களுக்காக)

இணையத்திலிருந்து, கீழே உள்ள ஒரு மொழி பெயர்ப்பைக் காட்டியுள்ளார்.

002:187 Rashad
Permitted for you is sexual intercourse with your wives during the nights of fasting. They are the keepers of your secrets, and you are the keepers
of their secrets. GOD knew that you used to betray your souls, and He has redeemed you, and has pardoned you. Henceforth, you may have
intercourse with them, seeking what GOD has permitted for you. You may eat and drink until the white thread of light becomes distinguishable
from the dark thread of night at dawn. Then, you shall fast until sunset. Sexual intercourse is prohibited if you decide to retreat to the masjid
(during the last ten days of Ramadan). These are GOD's laws; you shall not transgress them. GOD thus clarifies His revelations for the people,
that they may attain salvation.

எல்லா மொழி பெயர்ப்பாளர்களும் ஒரே நடையைக் கையாள்வார்களா என்பது சந்தேகமே. ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி இருக்கும் ஒரு நடை இருக்கும். மூலப் பொருள் மாறாதிருக்கும் வரை - அவர்களின் சொந்தப் புலமையைக் காட்டிக் கொள்வதில் தவறில்லை.

இங்கே ஒரு அறிஞர் cover என்கிறார். மற்றொரு அறிஞர் raiment என்கிறார். இன்னும்மொரு அறிஞர், secret என்கிறார். ஆனால் சாராம்சம் எல்லாவற்றிலும் ஒன்றாக இருக்கக் காணலாம். ஒருவருக்கொருவர் ஆடையாக இருப்பதென்பது ஒருவரை மற்றவர் பாதுகாத்தல் என்ற பொருளில் தான் வருகிறது. தாம்பத்ய உறவென்பது, மிகவும் நெருங்கிய கணவன் மனைவிக்குள்ளே ரகசியமாகக் காக்கப்பட வேண்டிய உறவு. தன் துணையுடன், உடலாலும், உள்ளத்தாலும் இணைந்து இயங்கும் உறவை ஒரு மனிதன் மூன்றாவது ஆளுக்குச் சொல்வது என்பது கூடாது. இதைத் தான் ரகசியம் காத்தல் என்று சொல்கிறார். ஒருவர் மற்றவரின் ரகசியத்தைக் காத்தல்.

இவர் மட்டும் ரகசியம் என்று கூறி விட, மற்றவர்கள் ஏன், ஆடை என்று கூறுகிறார்கள் என்றால், அந்த அரபு வார்த்தையின் நேரிடையான மொழி பெயர்ப்பு அது. பொருள் விளக்கம் தனியாகக் கொடுக்கிறார்கள். இணையத்தில் காணப்படும் குரானில் காண்பவை எல்லாம் வெறும் மொழி பெயர்ப்பு மட்டுமே. அதற்கான விளக்க உரைகள், குறிப்புகள், வசனம் வெளியான இடம், காலம், அதன் பின்னணி என்ற பல விபரங்கள் புத்தகங்களில் தான் கிடைக்கும். குரானை வாசிப்பதற்கு இவை அனைத்தும் முக்கியம். இவை இல்லாமல், குரானை வாசித்து விட்டு உரையாடி புண்ணியமில்லை.

சரி, இப்பொழுது இந்த ஆடை என்ற குறியீட்டின் தாத்பார்யம் என்ன?

ஆடையின் பயன் மறைத்தல், பாதுகாத்தல் இரண்டுமே தான். உடைகள் மனிதனின் பாலியியல் உறுப்புகளை மட்டும் மறைத்தல் அல்ல. அது பாதுகாப்பும் தருகின்றது - இயற்கையிலிருந்து. குளிர், வெயில், மழை, காற்று போன்றவற்றிலுமிருந்து பாதுகாப்பது போல். மனிதனின் பாலியியல் உறுப்புகளையும் மறைத்துப் பாதுகாக்கிறது. மனிதனின் நிர்வாணத்தைப் பிறருக்குக் காட்டாது பாதுகாக்கிறது. இந்த ஆடைகளுக்குப் பின்னால், மனித உடலின் ரகசியங்கள் அடங்கிக் கிடக்கின்றன.

கணவன், மனைவி, இருவரும் ஒருவருக்கொருவர் ஆடையாக இருப்பதென்பது, அவர்கள் உரிமை பெற்ற நெருக்கத்தினால், தெரிந்து கொண்டதை வெளியில் சொல்லக் கூடாது. இது உடல் சார்ந்தது மட்டுமல்ல. மற்ற ரகசியங்களாகவும் கூட இருக்கலாம். எதுவானாலும், ஒருவர் மற்றவரை நம்பி தன்னை ஒப்படைத்துக் கொள்ளும் பொழுது, அவர்களின் அந்யோன்யத்தை பறைசாற்றாமல், எப்படி ஒரு ஆடை உங்கள் மானத்தைப் பிறரது பார்வையிலிருந்து தடுத்து வைக்கிறதோ, அந்த அளவிலான, பாதுகாப்பைத் தரும் உறவாக அமைய வேண்டும் என்ற பொருளில் அமையப் பெற்ற வசனம்.

'ஆடையாக உன்னை உடுத்துக் கொள்வேன்..' என்று எத்தனையோ திரை இசை பாடல்களில், புதுகவிதைகளில் கவிஞர்கள் எழுதித் தள்ளுகிறார்கள். அதையெல்லாம் அறியாதவர்களா இவர்கள்? இவர்களுக்கெப்படி தகுதி வந்தது - குரானை விமர்சிக்க?

மற்றொரு விதத்திலும் இந்த ஆடை என்ற சொல்லுக்குப் பொருள் கொள்ளலாம் 'அதாவது, ஒரு கணவன், மனைவி என்ற ஆடையை அணிந்து செல்லும் பொழுது, எங்கிருந்தாலும், மற்ற பெண்களை நாடாது, தவறு செய்யாது இருப்பான். அதே போல மனைவியும் கணவன் என்ற ஆடையினுள் பாதுகாப்பாக இருப்பாள். இந்த ஆடையை சற்றே கழற்றி வைக்க நேரிட்டால், துணையல்லாத ஒருவருடன் தொடர்பு கொள்ள நேர்ந்தால், அங்கு முதலில் கொட்டப்படுவது - இயலாமை நிறைந்த தன் வாழ்க்கைத் துணையின் பலவீனங்கள் தான். ரகசியங்கள் வெளிப்படும் பொழுது, அந்த ரகசியங்களைக் கொண்டு, பின்னர் மிரட்டப்பட்டு, நிரந்தரமாக அடிமையாகிவிடக்கூடும், துரோகம் இழைக்கும் அந்த துணை.

அதனால் தான் ரகசியங்களைக் காப்பீராக என்கின்றது குரான். ரகசியங்கள் எப்படி காக்கப்பட வேண்டும். ஆடையைப் போல், உடலை விட்டு எப்பொழுதும் விலகாது இருப்பதைப் போல்.

நெருக்கமான, பாதுகாப்பான ஆடைகளாக கணவன் மனைவி இருக்க வேண்டும் - வாழ்க்கை அமைய வேண்டும்.

கவித்துவமான வரிகள்.


குரான் விபரங்கள்:

1, 3 - The Holy Quran - Bait ul Quran, Urdu Bazar, Karachi, Pakistan. Ph: 2630744-2633342 Email: alquran@digicom.net.pk
2, 7 - Ma'ariful Quran, Maulana Mufti Muhammad Shafi, Maktaba-e-Darul-'Uloom, Karachi -14, Pakistan. Ph: 5042280, 311217, 5040923
4. - Towards Understanding the Quran (Tafhim Al-Quran) Sayyid Abul A'Laa Mawdudi, The Islamic Foundation, 225, London Road, Leicester LEZ IZE, UK.
5 - திருக் குர்ஆன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், IFT காம்ப்ளாக்ஸ்,
138/78 பெரம்பூர் சாலை, சென்னை 600 012.
6. திருக் குர் ஆன், Moon publications, 2nd floor, 3, Post Office Street, Mannady, Chennai - 600 001
8. The meaning of the Holy Quran - Mohammed Marmaduke Pickthall, Universal Book Stall, 5 Ansari Road, New Delhi 2

Wednesday, March 07, 2007

மாங்கா மடையர்கள்.....

எரியும் புத்தகக் கடைவீதி.

ஒரு இனத்தை அழிக்க, ஆதி காலம் தொட்டே இருந்து வரும் வழக்கம்- அறிவைத் தேடும் வழிமுறைகளை ஒழித்து விடுவது. அதைத் தான் இன்று ஈராக்கில் தீவிரவாதிகள் செய்திருக்கிறார்கள். இத்தனை காலமும், இன அழிப்பிற்காக போராடிக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது, ஒரு புத்தகங்களை விற்கும், நூலகங்கள் நிறைந்த ஒரு கடை வீதியை தகர்த்தெறிந்திருக்கிறார்கள்.

முத்தனபி தெரு என்று சொல்லப்படும் அந்தக் கடை வீதியின் வயது ஆயிரம் வருடங்களுக்கு மேல். 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞரின் ஞாபகமாக அந்தத் தெருவிற்கு முத்தனபி என்று பெயர் வைத்து, அந்தத் தெரு முழுவதும், புத்தகங்கள் விற்பனைக்கும், நூலக வாசிப்புக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

அறிவைக் கொண்டாடிய முத்தனபி தெரு

அந்தத் தெருவில், இலக்கியவாதிகளும், கருத்தாளர்களும் கூடுவார்கள் தினமும். பல்வேறு வாத பிரதிவாதங்கள் நிகழும். இவைகள் எல்லாம், அமைப்பு ரீதியாக அல்லாமல், நட்பு வட்டங்களாக குழுமம் குழுமாக கூடி விவாதத்திலும், தர்க்கத்திலும் ஈடுபடும் இடமாகவும், புத்தக வாசிப்பும், பகிர்ந்து கொள்ளுதலுமாக, இலக்கிய பூங்காவாக திகழ்ந்த இடம்.

அந்தக் காலத்தைய ப்ளாக்கர்கள் கூடும் இடம்?!!!

கொடுமையான, இனப் போராட்டத்தில் கூட, அந்தத் தெருவை எவரும் தொட்டதில்லை. ஈராக் மக்களின், post Saddam காலகட்டத்தின், நிம்மதியான பாதுகாப்பான இடமாக இந்த தெரு இருந்தது. ஆனால், அங்கு தான் - இனங்கள் தாண்டிய அறிவுசார் வட்டமாக இயங்கிய அங்கு தான், வெடிகுண்டு பயமின்றி, மக்கள் புழங்கிய சமயத்தில் குண்டு வெடித்திருக்கிறார்கள். 26 பேர் மரணம். அதைவிட கொடுமை, பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எரிந்து நாசமாகி விட்டன.

புத்தகங்கள் தேடுதல், வாங்குதல், படித்தல், பாதுகாத்தல், பகிர்தல், என பல உள்ளார்ந்த அனுபவங்களைத் தரும். அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். புத்தகங்களைத் தேடுவது, இறைவனைத் தேடித் திரியும் பயணம் போல இன்பமான அனுபவம் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். ஒரு மாதத்தில் ஒரு நாளேனும் ஒரு புத்தகக் கடையினுள் நுழைந்து, புத்தகங்களைத் தேடித்தேடி வாங்காவிடில், மனம் பரபரக்கத் தொடங்கி விடும். தான் தேடி செல்லும் புத்தகங்கள் கிடைக்காவிட்டால், மனம் சோர்ந்து விடுவதும், கிடைத்து விட்டால், மகிழ்ச்சி கொள்வதும் என எப்பொழுதுமே, புத்தகங்களுடன் ஒரு பரவச நிலையிலான உறவு என்னுடையது.

புத்தகங்களின் மீது காதல் கொண்ட அனைவருக்குமே அது ஒரு பரவச நிலையைக் கொடுக்கும். காதலிக்கும் புத்தகங்களை ஒரு போதும் கடன் கொடுக்காது, வைத்துப் பாதுகாப்பது, அப்படியே மீறி எவரேனும் வாசிக்க விரும்பினால், தங்கி இருந்து, வாசித்து போங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்வது - இப்படியான புத்தகக் காதலனுக்கு, ஒரு புத்தகக் கடைத்தெருவே எரிந்து போனது - சில தீவிரவாதிகள் யாரையோ எதிர்ப்பதற்காக, தங்கள் சொந்த நாட்டின் அறிவுதேடலை கொன்று புதைத்து விட்டார்கள் என்ற செய்தியைப் படித்ததும், அடைந்த வேதனையை சொல்லி முடியாது.

இது இப்படியென்றால், இந்தப் புத்தகங்களை வியாபாரம் செய்தவர்கள், கண்ணீர் மல்க கூறிய செய்தி -ஒரு மனிதனுக்கு மிஞ்சிப் போனால், ஒரு நூற்றாண்டு வாழ்வு. ஆனால், இந்தப் புத்தகங்கள் நிரந்தரமான வாழ்வுடையது அல்லவா? எதை கொல்கிறோம் என்று தெரியாமலே, இந்தப் பாவிகள் செய்தது ஈராக்கின் பல தலைமுறைக்கான அறிவு செல்வத்தை அல்லவா அழித்து விட்டார்கள்.

Murder the intellectual capability of the country.

ஆமாம் - தீவிரவாதம் இப்பொழுது புதிய தளத்தில் பயணிக்கிறது. Murder the intellectual capability of the country. சிந்திக்கும் சக்தியை அழித்தொழித்தால், பின்னர் எல்லாம் தங்கள் கைவசப்படும் என்ற திட்டத்துடன் செயல்படத் தொடங்கி விட்டனர். இந்த சித்தாந்தத்தில் செயல்பட்ட சில குழுக்களால், பாதிக்கப்பட்ட சமூகங்கள் எத்தனை. தலைமுறை தலைமுறையாக கல்வி பெற வசதியின்றி, வீழ்ந்து விட்டன. இன்று அதலபாதாளத்தில் விழுந்தவர்களைக் கை தூக்கி விட, எத்தனை முயற்சிக்க வேண்டியதிருக்கிறது.

தீவிரவாதிகளும் இப்பொழுது அதைத் தான் செய்ய முனைந்திருக்கிறார்கள். தங்களைக் குறித்து கேள்வி எழுப்ப சக்தியுள்ளவர்கள் - இந்த intellectuals மாத்திரமே. இவர்களைத் தேடித்தேடி கொன்று கொண்டிருக்க முடியாது. அதனால், அவர்களின் அறிவின் மூலமாகிய புத்தகங்களை அழித்து ஒழித்து விட்டால், இனி என்றுமே சிந்திக்கத் திராணியற்றவர்களாய், தாங்கள் சொல்லும் அடிப்படை வாதத்தை பிடித்துக் கொண்டு, தங்களோடு சேர்ந்து நிற்பார்கள் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது - ஒவ்வொருவரின் கடமையாகும். இது மதம் சார்ந்த விடயமென இன்று ஒதுங்குபவர்கள் - சிந்தனை செய்யும் மனமுடையவர்களுக்கு எதிராக மௌனம் காக்கிறார்கள் - மனித இனத்திற்கெதிராக துரோகமிழைக்கிறார்கள் என்று தான் சொல்வேன்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்