"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்
Showing posts with label வரலாறுகள். Show all posts
Showing posts with label வரலாறுகள். Show all posts

Wednesday, November 26, 2008

இலங்கைத் தமிழர்களும், இஸ்லாமியர்களும்

நேற்றிரவு வின் தொலைக்காட்சியில் தவ்ஹீத் ஜ்மாத்தாரின் 'இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்' நிகழ்ச்சியை கண்டேன். அதில் பல கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார் பி. ஜெய்னுல் ஆபிதீன். அதில் ஒரு கேள்வி ' நீங்கள் ஏன் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதில்லை ?

பதில்: விடுதலைப் புலிகள் தமிழர்களை மதரீதியில் பிரித்து பார்க்கிறார்கள். ஈழத்து இஸ்லாமியத் தமிழர்களை கொன்று குவித்தது விடுதலைப் புலிகள். சொந்த நாட்டிலேயே அகதிகளாக இருக்கிறார்கள் ஈழத் தமிழ் முஸ்லிம்கள்.

Any comments friends ?
*****

தனி மடலில், இப்படியொரு கேள்வி வந்தது -நான் என்ன நினைக்கிறேன் என்பதைப் பற்றி. நான் என்ன ஒரு சமூகத்தின் மீது அழுத்தம் கொடுக்கும் அளவிற்கு முக்கியமானவனா? என் கருத்தைக் கூட ஆவலாகக் கேட்க ஒருவர் முனைகிறார்? கேள்வியை அனுப்பியவர், நான் மிகவும் மதிக்கும் நண்பர்.

குழப்பமான கேள்வி தான். நான் சந்தித்த சில இலங்கை இஸ்லாமிய நண்பர்கள் மட்டுமே அவ்வாறு சொல்கிறார்கள் - புலிகளால் நாங்கள் தொல்லைக்காளானோம் என்று. ஆனால், மற்ற பெரும்பான்மையான முஸ்லிம் நண்பர்கள் பலரும் அவ்வாறு சொல்லவில்லை. யாரும் தாங்கள் துன்புறுத்தப்பட்டதாகச் சொல்லவில்லை. இலங்கையின் தமிழ் இலக்கிய உலகில் இயங்கும் சில நண்பர்கள் கூட அவ்வாறு குற்றச் சாட்டை வைக்கவில்லை. (நடந்துவிட்ட சில சம்பவங்கள், மனதை வருத்தினாலும், புலிகளைக் கைவிட தயாரில்லை என்றே சொல்கிறார்கள்)

இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் கிழக்குப் பகுதியில், கருணாவின் தலைமையில் நிகழ்ந்தது. ஆனால், அவர் விலகிய பின்பு அத்தகைய நிகழ்வுகள் இல்லையென்றும் சொல்கிறார்கள்.

மறுபுறம், இஸ்லாமியர்கள், சிங்களத்தினரிடம் புலிகளை அடையாளம் காட்டும் வேலையில் ஈடுபட்டதாகவும், அந்தத் துரோகத்திற்குப் பதிலாகத் தான் அவர்கள் மீது தொடக்கத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டது என்றும் சொல்கிறார்கள். அதாவது காட்டிக் கொடுத்தல் என்ற சம்பவத்தை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டோம் - அவர்களின் மதசார்பு நிலையைக் கணக்கில் கொள்ளவில்லையென்று.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பேட்டியளித்த பொழுதும், முஸ்லிம்களை நோக்கி நேசகரம் நீட்டுவோம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.

எப்படி இருந்தாலும், இஸ்லாமியர்கள் தங்களை தமிழர்களாகப் பார்க்காமல், வேறு வகையில் தனித்த இனமாகப் பிரித்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் தான் அதைத் தீர்மானிக்க வேண்டும் - தாங்கள் எந்தப் பக்கமென்று.

தமிழ் மொழியை ஒரு அடையாளமாக ஏற்க மறுத்தால், நாளை அதே வீச்சில், சிங்கள மொழியையும் ஏற்க மறுக்க வேண்டும். அந்த சமயத்தில், சிங்கள சமூகத்தில், அவர்களுக்கு எந்த அடையாளமும் இருக்காது. இல்லை, நாங்கள் சிங்கள அடையாளத்தை எந்தவித சிரமமுமின்றி ஏற்போம் என்று கூறினால், அது ஒரு இரட்டை நிலைபாட்டை எடுத்ததாகிவிடும்.

முஸ்லிம் அடையாளம் என்ற காரணத்தால், தமிழ் அடையாளத்தைத் துறக்கத் துடித்தவர்கள், நாளை சிங்கள அடையாளத்தை ஏற்க முனைந்தால், அதைப் போன்று ஒரு அபத்தம் இருக்க முடியாது. சிங்கள அடையாளத்தையும் மறுப்போம் என்றால், பேரினவாதத்தின் கொடுங்கரத்திலிருந்து, இஸ்லாமியர்களுக்கும் பாதுகாப்பு கிடைக்காது.

இப்பொழுது அவர்கள் எங்களை நன்றாக வைத்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறோம் என்று உணர்வது தற்காலிக பாதுகாப்பாக அமையக் கூடும். இது பிரித்தாளும் உத்தியை சிங்களவர்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள் என்பதற்கு மாத்திரமே அடையாளம். சிங்கள மேலாண்மையை ஏற்று பாதுகாப்பைத் தேடுவோம் என்பது இஸ்லாமியர்களின் இன்றைய நிலைபாடாக மட்டும் இருக்காது. வாழ்நாள் முழுவதற்கும் 'அண்டி வாழும்' நிலையை மேற்கொள்ள இன்றைய சூழல் இட்டுச் செல்லும். அதிலும், சிங்கள மொழியை தங்கள் அடையாளமாக ஏற்றுக் கொள்ளும் பொழுது மட்டுமே சாத்தியப்படும்.

பாதுகாப்பிற்காக, தமிழைக் கைவிடுவோம், சிங்களத்தை ஏற்போம் என்ற நிலைபாட்டை எடுத்தால் - it would be totally against the free spirit of the humankind and the intellectual capability of the human animals. தமிழை தாய் மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்கள், இலங்கையில் தங்களைத் தமிழர்களாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டும். அது ஒன்றே அவர்களுக்கு நன்மை தரும்.

இல்லையென்றால், the muslims will become the hypocrites in SriLanka.

தமிழகத்து இஸ்லாமியர்கள் இந்த விஷயத்தில், தமிழ் என்ற அடையாளம் சார்ந்து இயங்குவதே நல்லது. (இது எனது கருத்து மட்டுமே) PJயின் கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. (மேலும் பல விஷயங்களில் கூட)

அது சரி, இது ஏன் பொதுவில் வைக்கப்படக் கூடாது ஏன்கிறீர்கள்? இதுவும் விவாதிக்கப்பட வேண்டிய கேள்வியே.

இருசாராரும், தங்களிடையே விதைக்கப்பட்ட வேறுபாட்டைக் களைந்து, ஒன்றுபட இதுவே தருணம்.

Friday, April 13, 2007

மன்னிக்கலாமா ராமனை?

இந்த வார தமிழ் மணமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது - ராமன் போன்ற உத்தமன் தான் என்ற தோல் போர்த்திய ஒரு வலைப்பதிவர் செய்த அயோக்கியத்தனத்தால். He proved that the intellectual giants of the byegone era are fast turning into pygmies.

ஒரு பதிவில் மன்னிப்பு கேட்டு, குரு என வணங்கி விட்டு, பின்னர் தனிமையில் அமர்ந்து கொண்டு, அந்த குரு எழுதிய மாதிரி ஆபாசங்களை அரங்கேற்றிய அந்த வலைப்பதிவரின் வக்கிரத்தைத் தெரிந்து கொண்டும் அவருக்கு மேலும் ஒரு மன்னிப்பை வழங்கி இருக்கிறார்கள் அமுக அன்பர்கள்.

பெருந்தன்மையானவர்கள்.

ஆனால் இந்த வலைப்பதிவரின் மோசடித்தனத்தால் பாதிக்கப்பட்ட, மனம் வருத்தப்பட்ட மற்ற பல வலைத் தள அன்பர்கள் மன்னித்து விட்டார்களா? இல்லை அமுக அவர்களையெல்லாம் மறந்து விட்டார்களா?

இந்த நபர் தான் சல்மா அயூப் என உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதாவது ஒரு இஸ்லாமியப் பெண் தன்னை ஒரு சீர்திருத்தவாதியாகவும், இஸ்லாத்தைத் தட்டி கேட்பதாகவும் பொய்யாகவும், புனைவாகவும் ஒளிந்திருந்து விமர்சனங்களை எழுப்பி இஸ்லாமிய பதிவர்களின் மன உளைச்சலுக்குக் காரணமானவர். அப்பொழுதே இவ்வாறு எழுதுபவர் ஒரு உண்மையான இஸ்லாமிய பெண் அல்ல என்று உறுதியாகத் தெரிந்ததால், அந்த போலியின் வலைத்தளத்தில் எந்தப் பின்னூட்டங்களும் நான் இடவில்லை. ஆனால், அந்தப் போலிக்கும் மாய்ந்து மாய்ந்து விளக்கம் எழுதிக் கொண்டிருந்த அன்பர்களும் நண்பர்களும் உண்டு. மற்றும் அந்தப் போலியை உண்மை என நம்பி, இஸ்லாம் இப்படித்தான் என தங்கள் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொண்ட நண்பர்களால் இஸ்லாமியர்கள் அடைந்த வருத்தத்திற்கு யார் பொறுப்பேற்பது.?

இப்பொழுது அனைத்து நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் - இஸ்லாத்தைப் பற்றிய விமர்சனங்களை வைத்தவர்களின் யோக்கியதைப் பற்றி.

உண்மையான விமர்சனங்கள் வேறு - காழ்ப்புணர்ச்சியில் எழுப்பப்பெறும் விமர்சனங்கள் வேறு என்பது.

தங்கள் கொள்கையில் - நம்பிக்கையில் - எத்தனை ஏளனத்திற்கும், இடர்பாட்டிற்கும் ஆளானாலும் மாறாது உறுதியாக இருப்போம் என்று நிருவிக் காட்டிய இஸ்லாமிய வலைப்பதிவர்களைக் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள் - அடிப்படைவாதிகள் என்று.

இப்பொழுது அனைத்து வலைப்பதிவர்களின் மனசாட்சியின் முன் நான் வைக்கும் கேள்வி:::

சொல்லுங்கள்,

யார் அடிப்படைவாதி என்று?

தங்கள் மதத்தைப் பற்றிய செய்திகளை மட்டும் தங்களுக்குள்ளே பகிர்ந்து கொண்டு, நட்புடன் எழுதிக் கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்துவிட்டு, பின்னர் அவர்கள் பதில் எழுதத் தொடங்கியதும், அய்யோ, அம்மா இவன் அடிப்படைவாதி என புலம்புவது எந்த வகையில் நியாயம்?

இந்த நபர் குறித்து பல செய்திகளும் வெளி வருகின்றன.

இவர் எழுதிய போலி பெயர்களில் மேலும் சில

ஆரோக்கியம்

ஏமாறாதவன்

என்ற பெயர்களிலும் எழுதியவர் இவர் என சொல்லும் பொழுது -

இவரால் நான் தனிப்பட்ட முறையிலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

'எல்லா அய்யன்களையும் போட்டுத் தள்ள வேண்டும்...' என்ற அளவில் கூட வன்முறைகளையும் பிற இனத்தவரையும் தாக்குதல் கூடாது என்று எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டவன்.

'எந்த பிராமணனும் என்னை இம்சிக்கவில்லை ' என ஒரு இஸ்லாமியனாக இருந்து கொண்டும், என் மனசாட்சியைத் தொட்டு, தைர்யமாக என வலைப்பதிவில் எழுதியவன். அந்த வரிகளை எழுதி முடித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே, அந்த வரிகளை சோதனை செய்யும் முயற்சியாக இந்த நபர் மாட்டிக்கொண்டிருக்கிறார்.

ஏமாறதவன் என்ற பெயரில் எழுதிய இந்த நபர் - மரியாதை இனியும் அவசியமோ? - இவன் ஏமாறதவன் என்ற பெயரில் எனக்கு ஒரு பின்னூட்டம் அனுப்பி இருந்தான் - நான் அதை
பிரசுரிக்கவில்லை. அதிலே அவன் எழுதிய வரிகள் - 'நண்பன் ஷாஜி ஐயா - உங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப தூரம்' என்னுடைய ஆன்மீகத்தைப் பற்றி விமர்சிக்க இவனுக்கு என்ன அருகதை இருக்கிறது?


நான் பேச விரும்பும் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள இவனால் முடியுமா?

குரானில் ஆபாசம் நிறைந்திருக்கிறது என எழுதிய நாய் இவன் தானே? Secret, ஆடை என்று குழப்பிக் கொண்டு, இப்னு ஹம்துனை வம்புக்கு இழுத்தவன். பின்னர், அபூமுஹை விளக்கம் எழுதினார் - நான் ஆறு குரான் மொழி பெயர்ப்புகளைக் கொண்டு, அவற்றிற்கான விளக்கத்தைக் கொடுத்த பொழுது, புரிந்து கொண்டதற்காகவும், தவறாக எழுதியதற்காகவும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத இந்த நாய் - என் தளத்திற்கு பின்னூட்டம் அனுப்பி இருந்தான் - எனக்கு ஆன்மீக அறிவு கிடையாது என்று. உண்மையான விளக்கம் வேண்டி எழுதிய வலைப்பதிவராக இருந்திருந்தால், அந்த விளக்கங்களுக்காக நன்றி கூறி இருக்க வேண்டும். ஆனால், அறிவுகளில் ஒன்று குறைவாக இருக்கும் இவனிடத்தில் நாகரீகம் காட்ட வேண்டுமா?

இவ்வாறு தவறு செய்ததை ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டி விளக்கம் கொடுத்தும், அதைக் கண்டு கொள்ளாமல், மேலும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிக் கேவலமாக உண்மமக்குப் புறம்பாக பேசவும் எழுதவும் செய்த இவனுக்கு அமுக நண்பர்கள் மன்னிப்பு வழங்கியதை கொஞ்சம் கூட ஜீரணிக்க இயலவில்லை.

மன்னிப்பு என்ற வார்த்தையின் மகிமையை அறிந்தவனிடத்தில் தான் அதை வழங்க வேண்டுமே தவிர, அதன் மாண்புகளைப் பற்றித் தெரியாத இவனுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும்.

22ஆம் தேதிய வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கு போக வேண்டும் - அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருந்தது. ஆனால், இந்த நாயும் கலந்து கொள்ளும் என்று தெரியவந்த பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது என்பது என்னால் இயலாது என்றே நினைக்கிறேன்.

ஏனென்றால்,

- குரானில் ஆபாசம் மலிந்து இருக்கிறது என்ற பொய்யான செய்தியைப் பரப்பிய இவனது முகத்தில் குறைந்தபட்சம் காரி உமிழாமல் நான் திரும்பினால்,

- இஸ்லாமிய அடிப்படை வாதி என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் எட்டு மாதங்கள் வலைப்பதிவே எழுதுவதை விட்டு அஞ்ஞான வாதம் புரிந்த என் மன வேதனைகளுக்காக இவன் முகத்தில் காரி உமிழாமல் நான் திரும்பினால்

- இஸ்லாமிய வலைப்பதிவர்களை தொடர்ந்து அவமானப்படுத்த வேண்டுமென்று முனைந்து செயல்பட்டவனை இவன் என்று தெரிந்து கொண்டும் இவன் முகத்தில் காரி உமிழாமல் நான் திரும்பினால்

அது என்னுள்ளே ஏற்படுத்தும் குற்ற உணர்விற்கு யார் பெறுப்பேற்பது?

அமுக நண்பர்கள் மன்னித்திருக்கலாம்.

ஆனால், இஸ்லாமிய வலைப்பதிவர்களே நீங்கள் சொல்லுங்கள் -

இவன் மன்னிக்கப்படவேண்டுமா?

இந்த விடுமுறையில், சென்னைக்கு வரும்பொழுது கண்டிப்பாக இது குறித்து இஸ்லாமிய அமைப்புகளைச் சந்தித்து உரையாடுவேன். காவல்துறைக்கும், வழக்காடு மன்றங்களுக்கும் இவனை இழுத்துச் செல்வதன் சாத்தியதைப் பற்றிக் கண்டிப்பாக ஆய்வோம்.

மேலும்

உடனடியாக இஸ்லாமிய வலைப்பதிவர்கள் இவனது அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பி,

இவன் செய்த ஈனச்செய்கைகளைக் குறிப்பிட்டு, மத நல்லிணக்கத்திற்கு தெரிந்தே வேட்டு வைக்கும் இவன் போன்ற நபர்களுக்கு தொடர்ந்து உங்கள் நிறுவனத்தில் பணி கொடுத்து, சம்பளம் கொடுத்து ஆதரிக்க வேண்டுமா ?

என்ற கேள்வியுடன் மின்னஞ்சல் அனுப்பலாமா? இது குறித்தும் உங்கள் கருத்துகளை எழுதுங்கள். எல்லோருக்கும் சம்மதமென்றால், அதை செய்யலாம்.

இது குறித்து, சென்னை வரும் பொழுது சந்திக்க விரும்பும் வலைப்பதிவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் தனி மடல் மூலமாக.

Saturday, March 31, 2007

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (இறுதி பதிவு)

மௌலானா மௌதூதி மற்றும் சர் சையத் அஹமத் கான் அவர்களது முயற்சியால் உண்மைகளை உணரத்துவங்கினர் - ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள். அவர்களும் இதை பகுத்து ஆராயத் தலைப்பட்டனர்.

Professor Kenneth Cragg of Cambridge, a Christian scholar deeply involved in reckoning with his neighbour's scripture', asks, 'In a situation so charged, in any event, with ambiguity, will the theory of deliberate, almost negotiated, compromise, made and withdrawn, be the only or the likeliest hypothesis? Did the Quraish think Muhammad was still negotiable?

Cragg answers himself: 'It would not have been the first time that worship at once common and contrasted. Certainly in the sequel the struggle continued with Muhammed resolute and the paganism stubborn.'

ப்ரொபஸ்ஸர் கென்னத் உறுதிபடுத்துகிறார் ' குரைஷிகளுக்கும் முகமதுவிற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவரவர் நிலைபாட்டில் அவர்கள் உறுதியாகவே இருந்திருக்கின்றனர். '

இந்த சாத்தானிக் வெர்ஸஸை மறுத்து, இத்தாலிய அறிஞர் Caetani தனது Annali dell'Islam என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

When one considers the contempt and enmity which the Quraish tribe, who inhabitated Mecca, showed toward Mohammed on other occasions, it would seem highly improbable that they ever condescended to listen to the Prophet's reading of the Koran, to say nothing of acknowledging him as a prophet on occasion of an insignificant concession. Furthermore, such a sudden abandonment of a principle which he had previously championed so energetically would have utterly cancelled his previous success, and entirely undermined the prestige which he had gained among his followers. And one might add that a compromise with the Quraish tribe could not possibly have been reached by merely changing a few lines of the Koran at a time when a large portion of it was filled with bitter attacks upon the Meccan pagans and their gods.

(முகமதுவின் மீது குரைஷிகள் கொண்டிருந்த வெறுப்பையும், பகையையும் கணக்கிலெடுத்துக் கொண்டால், அந்த குரைஷிகள் முகமது பிரசங்கத்தைப் போய் அமர்ந்து காது கொடுத்து கேட்டிருப்பார்கள் என்ற சாத்தியப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை. காசு பெறாத ஒரு சலுகைக்கு (ஒரு வரியை மாற்றிச் சொல்லுதல்) அவரை நபியாக மறுசொல் இல்லாது ஒப்புக் கொண்டிருக்கவும் மாட்டார்கள். மேலும் இந்த திடீரென்ற கொள்கை கைவிடுதலால், அதுவரையிலும் தன்னைப் பின்பற்றும் மக்களிடையே தனக்கிருந்த செல்வாக்கை முகமது இழந்திருப்பார். இத்துடன் மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் ' குரானில் ஒரு வரியை மட்டும் மாற்றி விட்டு, அதைவிட மோசமாக குரைஷிகளைத் தாக்கும் வசனங்களையெல்லாம் விட்டுவைத்திருக்க ஒப்புக்கொண்டு, ஒரு சமதான உடன்படிக்கைக்கு குரைஷிகள் வந்திருப்பார்கள் என நம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. )

Caetani ஐக் மேற்கோள் காட்டி, Tor Andrae தனது Mohammad: The Man and his Faith என்ற புத்தகத்தில் எழுதுகிறார்:

It is very apparent that in this form the whole narrative is historically and psychologically contradictory.

இவர் குறிப்பிடும் narrative இப்னு ச'ஆத்-னுடையது.

அடுத்து இன்னுமொரு ஆய்வாளர் Hichem Djait - the well known, historian attached to the universities of McGill and Berkely writes:

Over the centuries Christian tradition came to look upon Islam as a disturbing upstart movement that awakened such bitter passion precisely because it laid claim to the same territory as Christianity.

தாங்கள் இயங்கும் அதே தளத்தில் அதே நிலப்பரப்பில் எழுச்சிமிகு மதமாக வளரத் தொடங்கிய இஸ்லாம் கிறித்துவ ஸ்தாபனங்களைக் கலவரப்படுத்தியது.

இது தான் உண்மை. மனம் தளர்ந்த கிறித்துவ துறவிகள் குரானின் மீதும் முகமதுவின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசினர். இந்த நிலைமை க்ருசேட் என்னும் சிலுவை யுத்தங்கள் தொடங்கிய காலத்தில் இன்னும் மோசமாகியது.

இவற்றைக் குறித்து, எழுதும் இத்தாலிய வரலாற்றியலாளர் Professor Francesco Francesco Gabrieli யின் வார்த்தைகள்:

We find it in various versions, inconsistent in their content, but entirely consistent in their spirit of vituperation and hatred, in the writing of chroniclers, apologists, hagiographers and encyclopaedists of the Latin Middle Ages; Guibert of Nogent and Hildebert of Tours in the eleventh century, Peter the venerable in the twelfth, Jacques de Vitry, Martinus Polonus, Vincent of Beauvais and Jacobus, a Varagine, in the thirteenth, up to Brunetto Latini and his imitators, an Dante and his commentators

ஆக, மொத்த ஐரோப்பியர்களும் கூட்டணி வைத்து எழுதி இருக்கிறார்கள் - தங்கள் வக்கிரத்தை இஸ்லாத்தின் மீது காட்டி இருக்கிறார்கள்.

அது மட்டுமா? இவர்களுடைய கூட்டணியின் லட்சணத்தைப் பாருங்கள் -

லூதர் என்பவர் முகமதுவையும், போப் ஆண்டவரையும் ஒரு அணியில் வைக்கிறார் - இருவரையும் கிறிஸ்துவின் எதிரி என்கிறார். கத்தோலிக்கர்கள் சொல்கிறார்கள் - முகமது பிராட்டஸ்டண்டுன் இணைந்து கிறிஸ்துவிற்கு எதிராக இருக்கிறார். என்ன சொல்வது!

இத்தனைக்கும் கிறிஸ்துவைத் தூக்கிப் பிடிப்பதிலும், அவரை ஏற்றுக் கொள்வதிலும் முன்னணியில் இருப்பது இஸ்லாம். ஈஸா நபிகளின் பெயர் சொல்லப்படும் பொழுதெல்லாம் - peace be upon him என்ற வாழ்த்தையும் சேர்த்தே கூறுமாறு இஸ்லாமியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இஸ்லாமியத்தை முழுதாக அறியாதவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள் ' முகமது நபிகளை anti-Christ' என்று!!!

இதற்கு நடுவே, இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள நேர்மையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. குரானின் சிறந்த மொழி பெயர்ப்புகளும் ஆங்கிலத்திலும் ப்ரெஞ்சு மொழியிலும் வெளிவந்தது ' குறிப்பாக Sale ஆங்கிலத்திலும் Savary ப்ரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்த்த குரான்கள் சிறப்பாக அமைந்தன. Boulainvilliers and Goethe முகமது நபிகள் மற்றும் அவரது பணியைப் பற்றியும் நேர்மையாக எழுதினார்கள்.

ஆனால், எல்லாம் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதை தான். 1742ல் Voltaire என்பவர் Mahomet என்ற நாடகத்தை எழுதினார் - காழ்ப்புணர்ச்சியின் உச்சம் அது. நேர்மையான மனதில் கூட நஞ்சைக் கலக்கும் நாடகம் அது.

அதை சரி செய்யும் பணி Thomas Carlyle என்பவரால் செய்யப்பட்டது. அவரது புத்தகம் - 'Hero's and Hero-worship' என்ற புத்தகத்தில், 1840ல், நபிகள் அனைவரிலும் ஹீரோவாக தேர்வு செய்து எழுதுகிறார்:

Our current hypothesis about Mahomet, that he was a scheming Imposter, a Falsehood incarnate, that his religion is a mere mass of quackery and fatuity, begins really to be now untenable to anyone. The lies, which well meaning zeal has heaped round this man, are disgraceful to ourselves only

அவர் இஸ்லாம் என்பதன் உண்மையான பொருளை தன் இனத்தவருக்குச் சொல்கிறார் - Islam means surrendering to God. If that's so, then we all live in Islam.

மேலை நாட்டினர் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மைக்கேல் எம் ஹார்ட் என்ற அமெரிக்கர் வெளியிட்ட புத்தகத்தில் - Top 100 - புத்தகத்தின் No 1 - முகமது நபிகள். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள், மற்றும் விபரங்களை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இவ்வாறு அனைவரும் தங்களது எண்ணங்களை மாற்றிக் கொண்டு, காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டவற்றைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்ட பின்பு - அந்த குப்பையைக் கிளறி, எச்சில் இலைகளிலிருந்து நக்கி எடுத்து வந்த கருவைத் தான் தனது கற்பனையாக வெளியிட்ட கேவலமான மனிதன் - சல்மான் ருஷ்டி. அயோதுல்லா கொமேனியின் அதிதீவிர தண்டனை தீர்ப்பால், எழுந்த அனுதாபம் தான் - இந்த மனிதருக்குக் கிடைத்த பரிதாபம் தான் - இன்று பலருக்கு இந்த மனிதனைப் பற்றி பரிந்து பேச தூண்டுகிறது. கொமெய்னி ஆணையிட்ட தண்டனை தேவையற்றது. முட்டாள்தனமானது. இந்தத் துரோகிக்கு அதுவே ஒரு பாதுகாப்புக் கேடயமாக மாறிவிட்டது. தன் ஈனத்தை freedom of expression என்ற சொற்றோடர்களுக்குப் பின் மறைத்து தான் தப்புவதற்கு வழி ஏற்படுத்திக் கொண்டார் இந்த மனிதன்.

ஆனால் வரலாறுகளின் உண்மையை அறிந்த எந்த ஒரு மனிதனும், மதமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, இந்த மனிதனை வர்ணிப்பார்கள் -

'இவன் ஒரு இனத்துரோகி என்று'


பொறுமையாக வாசித்தவர்களுக்கு நன்றி.

இன்று நபிகள் பிறந்த தினம். அவரது பிறந்த நாளில் அவர் மீது தூற்றப்பட்ட ஒரு குற்றச்சாட்டிற்கு தகுந்த பதில் எழுத முடிந்த நிறைவினால், கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது.

ஒருவர் சொன்னார் - அல்லாஹ்வைக் கூட தூற்றி விட்டு, இந்த இஸ்லாமியர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்; ஆனால், முகமது நபிகளைப் பற்றி தூற்றி விட்டு தப்பித்துக் கொள்ள முடியாது என்று.

உண்மை தான் - ஒரு உண்மையான இஸ்லாமியனின் உணர்வில், உடலின் உயிர் மூச்சில் கலந்து விட்ட பெருமித உணர்வு - முகமது நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம். உலகின் எந்த சிறப்பான பொருளுக்கும் பண்டமாற்று செய்ய இயலாத உணர்வு அது. அல்லாஹ் - ஏக இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் - எனக்கு, உங்களுக்கு, மனிதர்களுக்கு, இன்னும் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், உயிரற்றவைகளுக்கும் அவன் தான் இறைவன்.

ஆனால், முகமது நபிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவர். அவர் மீது இறைவனுக்கு அடுத்த படியாக பற்றும் பாசமும் வைப்பது இஸ்லாமியர்களின் இருப்பிற்கு ஆதாரம்.

HAPPY EID MILAD TO ONE AND ALL

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (பதிவு 3)

இதன் முதல் பகுதி மற்றும் இரண்டாம் பகுதி வாசித்து விட்டு தொடருங்கள், இங்கே:


ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் பலரும் இந்த சாத்தானிக் வெர்ஸஸ்-ஐ கையிலெடுத்டுக் கொண்டு, இஸ்லாத்தைப் பற்றிப் பக்கம் பக்கமாக தூற்றி எழுதினார்கள். Sir William Muir என்ற வரலாற்றியலாளர் தபரி, வாஹிதி எழுதியவற்றை முழுவதுமாக தன் விருப்பத்திற்கேற்றவாறு பயன் படுத்திக் கொண்டார்.

முய்ரின் வார்த்தைகளில்:

It is hardly possible to conceive how the tale, if not in some shape or other founded in truth, could ever have been invented. The stubborn fact remains, and is by all admitted, that the first refugees did return about this time from Abyssinia; and that they returned in consequence of a rumor that Mecca was converted. To this fact the narrative of Waqidi and Tabari affords the only intelligible clue. At the same time it is by no means necessary that we should literally adopt the exculpatory version of Mohammetan tradition, or seek in a supernatural interpolation, the explanation of actions to be equally accounted for by the natural workings of the Prophets mind. It is obvious that the lapse was no sudden event. It was not a concession won by surprise, or an error of the tongue committed unawares, and immediately withdrawn. The hostility of the people had long pressed upon the spirit of the Mahomet; and, in his inward musings, it is admitted even by othodox tradition that he had been mediating the very expression which, as is alleged, the devil prompted him to utter.

ஆக, முய்ர்ன் வாதம் 'நெருப்பில்லாமல் புகையாது' இது தான் மாண்புமிகு முய்ரின் சிந்தனையின் மாண்பு. இந்த வாதத்தை முன்னரே விளக்கி விட்டேன். To make an ass of yourself - Assume!

இந்த வாஹிதி மற்றும் தபரியை உபயோகித்துக் கொண்ட மற்ற அறிஞர்களுள் சிலர் -

German Scholar - Dr. A. Sprenger எழுதிய Leben des Muhammad புத்தகத்தில் முகமது நபிகளைத் தாக்கி எழுதுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார். எந்த ஒரு ஆராய்ச்சியும் மேற்கொள்ளாது எழுதிய இவர், கிறித்துவ பாதிரிகள் எழுதியவற்றிலுமிருந்த கற்பனைகளையும் தாராளமாக எடுத்துக் கையாண்டிருக்கிறார். மேலும் H.Grimme and H.Lammens, என்ற ஆசிரியர்கள் முகமதுவை நபிகள் அல்ல என தூற்றுவதில் முன்னணியில் இருந்தனர். என்றாலும் Grimme கூறுவது ' முகமது ஒரு இறைத்தூதர் அல்ல - என்றாலும் முகமது ஒரு சிறந்த சீர்திருத்தவாதி.' அதாவது, முகமது நபிகளை ஏற்றுக் கொள்வதில் தான் அவருக்கு சிரமமிருந்தது - கிறித்துவ மத சிந்தனைகளை ஒட்டி, முகமதுவை மறுத்தாக வேண்டிய கட்டாயத்தினால் எழுதியவர் அவர். லெம்மன்ஸ் ஒப்புக் கொள்கிறார் - இஸ்லாமிய வாய் வழியான மரபுகள் பலவும் ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல - ஒப்புக் கொள்கிறார். ஆனால் அதற்காக இந்தத் தகவலை புறக்கணிக்கவும் இல்லை. அவற்றை முழுதாகப் பயன்படுத்திக் கொள்கிறார். ஒருபுறம் - இந்த செய்திகள் தவறானவை என்ற அறிவு; மறுபுறம் அதை பயன்படுத்திக் கொள்ளும் மோசடித்தனம் - நப்பாசை.

Maxime Rodinson எழுதுகிறார் தனது Mohammed என்ற புத்தகத்தில் ' There was one incident, in fact, which may reasonably be accepted as true because the makers of Muslim tradition would never have invented a story with such damaging implications' இஸ்லாமிய எழுத்தாளர்கள் இவர்களுக்குப் பெருந்தெய்வம் ஆயினர். தங்கள் காலத்தில் கிடைக்கும் பல வேறு தகவல்களையும் இவர்கள் பொருட்படுத்துவது இல்லை.

Montgomery Watt நபிகளை மதிப்புடன் அணுகினாலும், இந்த சாத்தானிக் வெர்ஸஸ் பற்றி பல பக்கங்கள் எழுதி உள்ளார் - தனது Bell's Introduction to the Qur'an என்ற புத்தகத்தில். அவர் எழுதுகிறார் - 'In essentials, it would seem that the account is true since no Muslim could have invented such a story about Muhammad and, indeed, there is confirmation of it in the Quran.' இவர் ஒரு நிலை கடந்து, முஸ்லிம் எழுத்தாளர்கள் சிலரையும் கடந்து, குரானைப் பற்றியும் பேசியவர்.

இவர்கள் கிளப்பிய அவதூறுகள் இஸ்லாமியர்களை மிகவும் பாதித்தது. அப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் - சர். சையத் அஹமத் கான் (1817 - 1898) இந்திய முஸ்லிம்களின் தலைவர்களில் ஒருவரும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தவரும் ஆவார். அவர் தன் பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, லண்டன் பயணமானார். இரண்டு வருடங்கள் அங்கேயே தங்கியிருந்து, பல வரலாற்று ஆவணங்களையும் ஊன்றிப் படித்தார். நூல்களையும் படித்தார். பின்னர் இஸ்லாமியர்கள் எழுதிய பல புத்தகங்களையும் ஆவணங்களையும் முழுவதுமாகப் படித்து முடித்தார். பின்னர் அவற்றைத் தொகுத்து, உருது மொழியில், குதாபெட் - இ - அஹமதிய்யா என்ற புத்தகத்தை எழுதினார். பின்னர் அதை ஆங்கிலத்திலும் அவரே மொழி பெயர்த்தார். விரிவான ஆராய்ச்சிகள் மூலம், பல அறிஞர்களையும் ஆய்ந்து, மேற்கோள் காட்டி, இந்த சாத்தானிக் வெர்ஸஸ் என்ற செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதை நிருவினார்.

அவரது புத்தகத்தில் இருந்து -

ஹாபிஸ் இப்னு ஹாஜ்ர், மத ஆய்வாளர் எழுதுகிறார் - ' தபரி எடுத்துக் கொண்ட மரபுகள் யாவற்றிலும் துளியும் உண்மை இல்லை' என்று. மற்றுமொரு அறிஞரான மௌலானா ஷிப்லி நுமானி (சீரத்துன் நபி எழுதியவர்) சொல்கிறார் ' உண்மையை சற்றும் விரும்பாதவர் - புரணி மற்றும் ஊழல்களில் பெரிதும் விருப்பமுள்ளவர்' இப்னு ச'ஆத் இஷாக்கின் புத்தகத்தில் இருந்து பலவற்றையும் எடுத்துக் கொண்டாலும், தீர்மானமாக எதையும் கூறிவிடாமல், இவையெல்லாம் 'interpretive jugglery' என்றே கூறுகிறார். இவர்களை எல்லாம் இஸ்லாமியர்கள் ஒதுக்கி வைத்தாலும் இவர்களைத் தான் இஸ்லாமிய விமர்சகர்கள் விரும்பி ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால், மேற்கொண்ட ஆராய்ச்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு முஸ்லிமைக் கொண்டே அவர்களை விமர்சித்தால் போதுமே என்ற எண்ணம் தான்.

மேலே கூறிய 'வாட்'ஐத் தான் சல்மான் ருஷ்டி தனது ஆதாரமாகக் கொண்டார். சர் சையத் அஹமத் கான், மௌலான மௌதூதி போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் தந்த கருத்துகளை இவர் அறிந்திருக்கவே இல்லை. அல்லது மூடி மறைத்து விட்டு, இஸ்லாமியர்கள் இந்த குற்றச்சாட்டுக்கு, பதிலே சொல்லாத மாதிரி நினைத்துக் கொண்டு, அவர் தன் இனத்துக்கு எதிராக தன் அறியாமையால் வரலாறாகக் கூட அல்லாமல், புனைவாக முன் வைத்து தன் மீது நீக்க முடியாத இழிவை அள்ளிப் பூசிக் கொண்ட idiot - இந்த சல்மான் ருஷ்டி.

முஸ்லிம்கள் எழுதி வைத்த ஆதாரம் தானே என்றாலும், இது குறித்து ஒரு சிறு ஐயப்பாட்டைக் கூட எழுப்பாது, ஒரு சுட்டுவிரலைக் கூட அசைக்காது, தனது புரணி பேசும் நூலுக்கு - It would sell in millions என்ற வியாபார நோக்கில், தனது கற்பனைகளையும் கலந்து விற்பதற்குத் தயாரானார்.

மற்ற வரலாற்றாசிரியர்கள், தாங்கள் சார்ந்த நம்பிக்கைகளின்படி, மத-வரலாற்றுத் தளங்களில் மட்டுமே விவாதித்துக் கொண்டிருந்த இந்த விஷயத்தை, அது தீர்ந்து பல ஆண்டுகள் கழித்து - வரலாற்றியலாளர்களே தங்கள் தவறை உணர்ந்து, தொடர்ந்து வரும் நூல்களில் இந்த சம்பவத்தைக் குறிப்பிடுவதை தவிர்த்துக் கொண்ட பின்னரும், தனது புத்தக விற்பனையை மட்டுமே நோக்காகக் கொண்டு, ஒரு வரலாற்றுப் புரட்டை மீண்டும், fiction என்று புனைவாக, நஞ்சாக, விற்க முயன்ற கீழ்மையை, கிளம்பிய எதிர்ப்பைக் கண்டதும், அய்யோ, freedom of speech இல்லாமல் போயிற்றே என்று புலம்பிய கோழைத்தனம் ' இவை தான் இந்த நபர் மீது வெறுப்பு கொள்ள வைத்தது. வரலாற்றை சரியாக அறிந்த எந்த ஒரு மனிதனும் - இஸ்லாமியன் அல்ல என்றால் கூட, இந்த ஈனன் மீது காறி துப்புவான். மேலை நாட்டு ஆய்வாளர்கள், கிறித்துவ போதகர்கள் சிறிது சிறிதாக தங்களை மாற்றிக் கொள்ளும் நேரத்தில், இனத்தின் உள்ளிருந்து கிளம்பிய ஒரு நச்சுப் புழு, மீண்டும் இஸ்லாமியர்களின் காயத்தை ஆழ்ந்து கீறியது. உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து இஸ்லாமிய இதயங்களையும் கீறியது - இதயம் என்று ஒன்று உள்ள எந்த ஒரு இஸ்லாமியனும் இந்த ஈனனின் பெயர் கேட்டால் - இதயம் கொதிப்பான்.

வாட் குரானைப் பற்றி பேசினார் அல்லவா? ஆதையும் ஆராய்ந்து விடுவோமே! மௌலானா அபுல் ஆலா மௌதூதி (founder of Jamat-i-Islami) மிக ஆழ்ந்து இந்தப் பிரச்சினைக்குரிய குரான் வாசகங்களை ஆராய்ந்தார். வரலாற்றை எழுதியவர்கள் எத்தகைய ஆதாரங்களை வைக்கிறார்கள் என்று பரிசோதித்தார். மேலும், இந்த சாத்தானிக் வெர்ஸஸ் நிகழ்ந்ததாக நடந்த காலத்தைப் பரிசோதித்தார். இந்த நிகழ்வு, இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணானது என்பதால், இந்த வசனங்கள் என்ன ஆயிற்று என்று கேள்வி கேட்டார். நீக்கப்பட்டது என்றால், எவ்வாறு? எப்பொழுது இந்த re-proof by Allah had come? என்ற கேள்வியை எழுப்பினார்! Reproof பார்த்த பின் எப்பொழுது நீக்கும் உத்தரவிடப்பட்டது? When the order to expunge had come?

மௌதூதி தனது வாதங்களை வைக்கிறார் -


அல்நஜ்ம் என்ற அத்தியாயத்தில் இருந்து,

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)

53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

உச்சரிக்கப்பட்டதினாலே, ஏற்றுக் கொண்டதாகப் பேசப்பட்ட இந்த வசனங்களில், they are exalted birds, whose intercession is hoped for என்ற வரிகள் என்ன ஆயிற்று? இந்த வரிகள் நீக்கப்படவில்லை என்றால், இந்த வசனங்களின் பொருள் ஒன்றுக்கொன்று முரணாகப் போகின்றதே? தொடர்பில்லாத இந்த வரி, இந்த வசனங்களில் பொருந்த வில்லையே என்ற வாதத்திற்குப் பதில் இல்லை.

53:23 இவையெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை. நீங்களும் உங்கள் மூதாதையர்களும் வைத்துக் கொண்ட வெறும் பெயர்கள்! இதற்கு அல்லாஹ் எந்த அத்தாட்சியும் இறக்கவில்லை. நிச்சயமாக அவர்கள் வீணான எண்ணத்தையும், தம் மனங்கள் விரும்புபவற்றையுமே பின் பற்றுகிறார்கள். எனினும் நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடமிருந்து, அவர்களுக்கு நேரான வழி வந்தே இருக்கிறது.

53:24 அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா?

53:25 ஏனெனில், மறுமையும், இம்மையும் அல்லாஹ்வுக்கே சொந்தம்.

அதாவது முதல் வரிகளில், அவைகள் உய்விக்கப்பட்ட பறவைகள் - அவைகளின் குறுக்கீடுகள் விரும்பத்தக்கதே என்று சொல்லிவிட்டு அடுத்த வாக்கியத்தில், 53:23ல், இவைகளெல்லாம் வெறும் பெயர்களன்றி வேறில்லை என்று சொல்ல வேண்டிய அவசியம்? ( உண்மை, சாத்தானிக் வெர்ஸஸ் என்ற வாக்கியம் பேசப்படவே இல்லை.)

மேலும், குரைஷிகள் என்ன அத்தனை முட்டாள்களா? அடுத்த வாக்கியம் முற்றிலும் எதிரான ஒரு பொருளைத்தருவது குறித்து எந்த ஒரு கேள்வியும் எழுப்பாமல், அப்படியே விழுந்து வணங்கி விட அவர்கள் என்ன முட்டாள்களா? இது நியாயமாக சிந்திக்கக்கூடிய அறிவிற்குப் பொருத்தமாக இல்லையே?

சரி, அப்புறம் இந்த் re-proof எப்பொழுது எப்படி வந்தது? எந்த வசனத்தின் மூலமாக? அது பனுஇஸ்ரெய்ல் என்னும் அத்தியாயத்தில், வசனம் 73-5 மூலமாக இந்தத் திருத்தம் அனுப்பப்பட்டதாம். அதன் பின்னர் அல்-ஹஜ் என்னும் அத்தியாயம் மூலம் 22:52-3 வசனங்கள் மூலம் நீக்கம் செய்யப்பட்டதாம். வேடிக்கை தான்.

வசனம் 73-5 இறங்கிய காலம், சாத்தானிக் வெர்ஸஸ் ஓதப்பட்டதாக சொல்லப்பட்ட காலத்திலிருந்து - ஆறு வருடங்கள்!!! நீக்கம் செய்யப்பட்ட வசனம் வந்த காலம் மேலும் மூன்றாண்டுகள் கழித்து. அதாவது அந்த தவறான வசனம் - சாத்தானின் வேதம் - நீக்கப்பட 9 வருடங்கள் காலமாகியதாம்!!! இந்த 9 வருடங்களும் குரைஷிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே சமாதானம் நிலவியதா? இல்லையே! சமாதான உடன்படிக்கையின் படி தான், இந்த வசனத்தை நபிகள் முன்மொழிந்தார் என்றால், இந்த 9 வருடங்களும் சமாதானம் நிலவி இருக்க வேண்டுமே - ஏன் இல்லை? இந்தத் தவறை உணர்வதற்கு 9 வருடங்கள் ஆகியதா, இறைவனுக்கு?

ஒரு குருட்டு மனிதனை அவமானப்படுத்தியதற்காக, நபிகளை கடிந்து இறைவன் இறக்கித்தந்த வசனம், அந்த குருட்டு மனிதன் திரும்பி போகுமுன் வந்தது.


80:1 அவர் கடுகடுத்தார்; மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்.
80:2 அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,
80:3 (நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?
80:4 அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பயனளித்திருக்கலாம்.
80:5 (உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-
80:6 நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.
80:7 ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.
80:8 ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,
80:9 அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-
80:10 அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.

கணப்பொழுதில், கடிந்து கொள்ளும் வசனத்தை நபிகள் ஒளித்து வைக்கவில்லை. மாறாக அதையும் தன் சகாக்களிடம் கூறி, எழுதி வைக்குமாறு கூறினார். எப்படி தனக்கு வசனங்கள் கூறப்பட்டதோ, அப்படியே. கூடுதலும் கிடையாது, குறைவும் கிடையாது.

இவ்வாறிருக்கும் பொழுது, ஒரு தவறைக் கண்டுபிடிக்க ஆறு வருடங்கள் இறைவன் காத்திருந்தானா? ஏன்? ஆறு வருடங்களுக்குப் பின் அதை நீக்குவதற்கு மேலும் மூன்று வருடங்கள் காத்திருந்தானா? அறிவிற்குப் பொருந்தாத இந்த தர்க்கங்களை, தன்னைக் கழுதையாக்கிக் கொள்ளும் தத்துவக்காரர்களால் மட்டும் தான் ஏற்றுக் கொள்ள இயலும். எந்த நேர்மையான ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அடுத்த கட்டமாக, இந்த வசனங்கள் தான் திருத்துவதற்கும், நீக்குவதற்கும் அனுப்பப்பட்டது என்று கொண்டாலும், அந்த வாசகங்கள் அந்தப் பொருளைத் தான் தருகின்றனவா? கிடையாது.

கிடையவே கிடையாது. இந்த வசனங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. ஒட்ட இயலாதவை. சூழ்நிலை விட்டு விலகி நிற்பவை. பனுஇஸ்ரெய்ல் வசனம் (73-5):

17:73 (நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள், (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

17:74 மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.

17:75 (அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம், பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்

இதில் என்ன திருத்தம் அனுப்பப்பட்டது என்று இந்த வசனத்தை முன் வைத்தவர்களால் விளக்கிச் சொல்ல முடியவில்லை. 'அவர்கள் முனைந்தார்கள்' என்ற வார்த்தைகள் நபிகளுக்கு எதிராக சூழ்ச்சி செய்தவர்களையே அடையாளம் காட்டுகிறதே தவிர, நபிகள் தவறான வசனங்களை மொழிந்தார் என்று கூறவில்லை. அவ்வாறு செய்யவில்லை நீர் என்பதை உறுதிபடுத்துகிறது. மேலும், தவறான பாதையை நோக்கி சாய்ந்தால் கூட, அதற்கு எத்தனை கொடிய தண்டனையை வழங்குவோம் என்ற எச்சரிக்கையும் கலந்திருந்தது. இத்தகைய எச்சரிக்கைகள், ஆங்காங்கு இருக்கின்றது - நம்பிக்கையாளர்களுக்கு.

அத்தகைய வசனங்களில் ஒன்று தான் இது தவிர, இதில் எந்த reproofம் அனுப்பப்படவில்லை. அடுத்ததாக சொல்லப்பட்ட, expunging order அந்த வசனங்களைப் பார்ப்போம் -

22:52 (நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பி வைத்த ஒவ்வொரு தூதரும் நபியும் (ஓதவோ நன்மையையோ) நாடும்போது, அவர்களுடைய அந்த நாட்டத்தில் ஷைத்தான் குழப்பத்தை எறியாதிருந்ததில்லை, எனினும் ஷைத்தான் எறிந்த குழப்பத்தை அல்லாஹ் நீக்கியப் பின்னர் அவன் தன்னுடைய வசனங்களை உறுதிப்படுத்துகிறான் - மேலும், அல்லாஹ் யாவற்றையும் அறிந்தவனாகவும், ஞானம் மிக்கோனாகவும் இருக்கின்றான்.

22:53 ஷைத்தான் (மனங்களில்) எறியும் குழப்பத்தை, தங்களுடைய இருதயங்களில் நோய் இருக்கிறதே அவர்களுக்கும், தங்களுடைய இருதயங்கள் கடினமாக இருக்கின்றனவே அவர்களுக்கும் ஒரு சோதனையாக ஆக்குவதற்கே (அவ்வாறு செய்தான்) அன்றியும், நிச்சயமாக. அநியாயம் செய்பவர்கள், நீண்ட (எதிர்ப்பிலும்) பகையிலும் தான் திடனாக இருக்கிறார்கள்.

இது ஒரு பொதுவான, எந்த ஒரு நிகழ்வையும் குறித்து சொல்லப்படாமல், ஒவ்வொரு நபிமார்களின் வாழ்விலும் சாத்தான் ஏற்படுத்தும் குழப்பங்களை எவ்வாறு இறைவன் நீக்கி, எல்லா நபிமார்களின் சொற்களையும் உறுதிபடுத்தினான் என்பதைத் தான் பொதுப்படையாக பேசி இருக்கிறதே தவிர, நபியே நீர் கூறிய தவறான வசனத்தை மாற்றிக் கொள்ளும் என்ற உத்தரவெல்லாம் இல்லை.

எல்லா நபிமார்களும் சாத்தானால் குழப்பத்திற்குள்ளாக்கப்பட்டார்கள். அவற்றிலிருந்து அவர்களைக் காத்து, இறைவன் தன் சொன்னவற்றை நிரூபித்தான் என்ற வசனம் இவர்களால் தவறாக மேற்கோளிடப்பட்டது. அத்தனையே!!!

மேலும் இந்த வசனங்களுக்கு முன்னும் பின்னும் அமைந்த வசனங்கள், இவை சாத்தானிக் வெர்ஸஸ் என்ற வசனத்தை நீக்குவதற்காக ஏற்பட்டதாகச் சொல்லப்படும் வசனங்களுடன் இணைத்துப் பார்த்தால், தெரியும் - பொருத்தமின்மை.

இவ்வாறு அனைத்து வாதங்களுக்கும் மறுப்பு தெரிவித்த பின்னர், என்ன நடந்தது என்பதை மௌதூதி அவர்களே தொகுத்து வழங்கினார்கள்.
1. குரைஷிகள் தலை தாழ்த்தி வணங்கியது.
2. லாத், உஸ்ஸா, மனாத் என்ற அவர்களின் ப்ரிய தெய்வங்களின் பெயர் சொல்லப்பட்டதும் பரவசம் கொண்டது. (இவைகள் வெற்று பெயர்களே என்ற கண்டன வரிகள் பின்னர் வருவதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. கண்டுகொள்ளவுமில்லை.)
3. அபிசீனியாவில் இருந்து முஸ்லிம்கள் மக்கா திரும்பத் துவங்கினர்.


இவைகளெல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு, சாத்தானிச் வெர்ஸஸ் என்ற கதை உருவாக்கப்பட்டது. இந்தக் கட்டுக்கதையை ஆராயாது, கேட்டதை கேட்டவாறே எழுதி வைத்தனர் - உண்மையை விட, Romantic fables ஐ அதிகம் விரும்பிய சில இஸ்லாமிய அறிஞர்கள். தங்களுக்குக் கூறப்படும் வசனத் தொடர்கள் - strong / weak என ஆராய முற்படவில்லை. மேலும் இவர்கள் தாங்கள் கேட்டதை கேட்டவாறு எழுதி வைத்திருக்கிறோம் என்ற Disclaimerஐயும் எழுதி வைத்திருந்தார்கள். இவர்களை மேற்கோள் காட்டிய ஐரோப்பிய அறிவுஜீவிகள் இந்த டிஸ்க்ளெய்மர்களை சாதூர்யமாக மறைத்துக் கொண்டனர்.

இவர்கள் (இஸ்லாமிய / ஐரோப்பியர்கள் ) செய்த தவறையெல்லாம், மௌதூதியின் வாதங்கள் தவிடு பொடியாக்கியது. 'தன்னைக் கழுதையாக்கிக் கொள்ளும் தத்துவவாதிகள்' அத்துடன் தொலைந்து போயினர்.

புதிய வரலாற்றாசிரியர்கள் தோன்றினர். அவர்கள் எழுதியதைப் பற்றி...

அடுத்த - இறுதிப் பதிவில்... ... ...

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (பதிவு 2)

இதன் முதல் பகுதியைப் படித்த பின்னர் தொடருங்கள்.


நபிகள் பொய் பேசாதவர் என்ற நற்பெயரைக் கெடுக்க வேண்டும். இந்த உத்தியின் முதல் கட்டமாக அவர்கள் செய்தது - சமாதானம் என்ற நேசக்கரம். எப்படியாவது, அவரைத் தங்கள் மேலாண்மையை ஏற்கச் செய்து விட்டால், அதற்குப் பகரமாக, அவரது மதத்தையும் அங்கீகரிப்பது, பொருள் மற்றும் அதிகாரமுள்ள பதவி ஒன்றைத் தருவது. காலங்காலமாக மனிதனைப் போதை கொள்ளச் செய்வது அதிகாரம். அந்த அதிகாரத்தைத் தருவதற்கு அவர்கள் முன் வந்தனர். சராசரி மனிதனால் புறந்தள்ள முடியாத கவர்ச்சிகரமான - சலுகைகள்!!!

நபிகளுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. இத்தனைக்கும் நபிகள் தன்னை 'உங்களைப் போன்ற மனிதன் நான்' என்று சொல்லி அவ்வாறே வாழ்ந்து கொண்டிருப்பவர். என் ஒரு கையில் சூர்யனையும், மறு கையில் நிலவையும் கொடுத்தாலும் கூட, ஏக இறை வணக்கத்தை நான் கைவிடேன் என்று உறுதிபட கூறி மறுத்து விடுகிறார். இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் ஒரு புறமிருந்தாலும், மறுபுறத்தில், அவரைச் சுற்றி ஒரு கூட்டம் தூற்றுவதற்கென்று எப்பொழுதும் சூழ்ந்திருக்கும் அந்தச் சூழ்நிலையில் தான், அச்சம்பவம் நிகழ்கிறது.

இஸ்லாமியர்களின் இறைவணக்கத்தைக் கூர்ந்து கவனித்தவர்கள் - ஒன்றைப் புரிந்து கொண்டிருப்பார்கள் - குரானிலிருந்து சில வாக்கியங்களை சப்தமிட்டு ஓதி, தங்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள். நபிகளின் காலத்தில், கஃஃபா ஆலயத்தில், முஸ்லிம்களும் தங்கள் தொழுகையை நிறைவேற்றிக் கொள்வர் - பகான் அரபிகளும் தங்கள் சிலை வணக்கத்தை செய்து கொள்வர்.

அன்று நடந்ததும் இது போல் ஒரு சாதாரண நிகழ்வே. வரலாறு 1400 வருடங்கள் கழித்தும் இதை விவாதித்துக் கொண்டிருக்கும் என்று எவரும் நினைத்துக் கூடப் பார்த்திராத வக்கிரத்தை அன்றைய இஸ்லாமிய எதிரிகள் தோற்றுவித்தார்கள்.

அவர்கள் பரப்பிய செய்தி இது தான் - முகமது நமது தெய்வங்களை ஏற்றுக் கொண்டார் என்ற பொய்யைப் பரப்பினர்.


அன்று தொழுகையின் போது நபிகள் வாசித்த குரான் வாக்கியங்கள் இவை தாம்.

53:19 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா?

53:20 மற்றும் மூன்றாவதான 'மனாத்"தையும் (கண்டீர்களா?)

53:21 உங்களுக்கு ஆண் சந்ததியும், அவனுக்குப் பெண் சந்ததியுமா?

53:22 அப்படியானால், அது மிக்க அநீதமான பங்கீடாகும்.

நபிகளின் கம்பீரமான குரலில், லாத், உஸ்ஸா மற்றும் மனாத் என்ற சிலைகளின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டதும், அவர் தங்கள் தெய்வங்களின் இருப்பை ஏற்றுக் கொண்டதாக நினைத்துக் கொண்ட பகான் அரபிகள், அந்த வாக்கியங்களின் முழு பொருளையும் உணர்ந்திருக்கவில்லை. மாறாக, குலவை ஒலி எழுப்பி, தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்திக் கொண்டனர். தாங்களும் தலை தாழ்த்தி, தரையில் சிரம் புதைத்து, வணங்கிக் கொண்டனர்.

இவர்கள் கிளப்பிய பொய் செய்தி, மக்காவின் எல்லைகள் பல கடந்து, அபிசீனியா தேசம் வரைக்கும் சென்றது. அங்கிருந்த முஸ்லிமகள் உண்மை அறியாது, தங்களின் துயரங்களைக் கண்டு, சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார் நபிகள் என்று எண்ணி மக்கா திரும்பத் துவங்கினர். பின்னர் தான் இது தவறான செய்தி என உணர்ந்து, தங்கள் வருகையை தள்ளிப் போட்டனர்.

இந்தப் பொய், கிளம்பிய சில நாட்களிலே அடங்கி விட்டது. எல்லோரும் மறந்து போன செய்தியாகியது. ஆனால், வரலாறு அவ்வாறு நிறுத்திக் கொள்ளவில்லை. இஸ்லாத்தை எதிர்த்தவர்கள், இஸ்லாம் பரந்து விரிந்த பின்னும் இருக்கத் தான் செய்தனர். இந்தப் பொய் செய்திக்கு, கண் காது மூக்கு வைத்து ரகசியமாக வளர்த்துக் கொண்டிருந்தனர். சாதாரணமாக உச்சரிக்கப்பட்ட பெயர்கள் ஒன்றே தங்கள் தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக சொல்வதற்கு தகுந்தது அல்ல என்பதால், அவர்களே இல்லாத ஒரு வாக்கியத்தை உருவாக்கிக் கொண்டனர். அது - 'they are exalted birds whose intercession is hoped for'

'அவைகள் உய்விக்கப்பட்ட பறவைகள் - அவற்றின் குறுக்கீடுகள் விரும்பத்தக்கது..'

இவ்வாறு உருவாக்கப்பட்ட இந்தப் பொய் வாக்கியங்கள் பின் என்னவாயிற்று?

அவை நீக்கப்பட்டன. நபிகள் சொன்னாராம் 'இந்த வாக்கியங்களை நான் சொல்லவில்லை. அவைகளை சாத்தான் என் காதில் ஓதிற்று. அதை நானும் கூறினேன். பின்னர் நான் தவறை உணர்ந்தேன் - அதை நீக்கிவிட்டேன்.'

பின்னர் அனைத்தும் அமைதியாயிற்று. இந்த அண்டப் புளுகு முஸ்லிம்களிடையே எடுபடவில்லை. யாரும் இந்தப் பொய்யர்களை துளிகூட மதிக்கவில்லை. ஆனால், இஸ்லாம் தனக்குள் மட்டும் புழங்கிக் கொண்டிருந்த காலத்தில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட்ட இந்த வதந்தி, பின்னர், இஸ்லாம் தன் கதவுகளைத் திறந்து கொண்டு, மேற்கு நோக்கிய பயணத்தைப் புறப்பட்ட பொழுது, கிறித்துவ மதம் தனது நிலங்களையும் மேலாண்மையையும் முஸ்லிம்களிடம் இழக்கத் தொடங்கியது. கிறித்துவமும், இஸ்லாமும் நேருக்கு நேர் நின்ற பொழுது, இஸ்லாத்தை எதிர்கொள்ள அன்றைய கிறித்துவ தத்துவவியலாளர்கள் எடுத்துக் கொண்ட வழிமுறை - அவதூறுகளுக்கு உயிரூட்டுவது - கற்பனை கதைகளை அடுக்கி வைப்பது.

இந்த வரலாற்றாசிரியர்கள் தங்களுக்குத் தெரிந்த அரைகுறை ஞானத்துடன், மொழி அறியாது, இஸ்லாமிய வழிமுறைகளை வரலாற்றை தத்துவவியலை எல்லாம் ஆராயத் துவங்கினர். அவர்களுக்குக் கை கொடுத்தது - சில இஸ்லாமிய அறிஞர்கள் எழுதி வைத்த - உண்மையோ, பொய்யோ தாங்கள் கேள்விப்பட்ட அனைத்தையும் பதிவு செய்து வைக்க வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்ட சில அறிஞர்கள், இதையும் பதிவு செய்து வைத்தனர் - ஒரு செய்தி என்ற அளவில்.

புகாரி, முஸ்லிம் போன்ற அறிஞர்கள் ஒவ்வொரு செய்தியையும், அதை கூறியவர் தந்த சங்கிலித் தொடர் போன்ற நபர்களின் வரிசையைத் தொடர்ந்து, மூலநபரை அடைந்து, அவர் நபிகளுடன் எவ்வாறு தொடர்புடையவர் என்ற மூலத்தை ஆராய்ந்து, அதில் துளியும் சந்தேகமில்லாத பொழுது அதை ஏற்றுக் கொண்டனர். சிலருக்கு அத்தகைய பொறுமை இருந்ததில்லை. ஆனாலும் தங்கள் அறிவை பறைசாற்றிக் கொள்ள, அல்லது தாங்களும் வரலாற்றில் இடம் பெற்றுவிட வேண்டும் என்ற ஆவலுடன், செய்தி சொல்ல வரும் நபர்களை எல்லாம் ஏற்றுக் கொண்டு பதிவு செய்து வைத்தனர்.

அவர்களில் ஒருவர் - இப்னு இஷாக்.

இப்னு இஷாக் இஸ்லாத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது. போற்றப்பட வேண்டியது. அவர் தான் முதன்முதலாக நபிகளின் வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க முனைந்தவர். அவரது காலம் - d.768. அதாவது நபிகளின் காலத்திற்கு பின் முதல் நூற்றாண்டில் வாழ்ந்து மறித்தவர்.

நபிகள் தான் வாழ்ந்த காலத்தில் ஒரு கட்டுப்பாட்டை விதித்திருந்தார். தன்னைப் பற்றிய குறிப்புகளைத் தொகுப்பதற்கு தடை விதித்திருந்தார். தான் கூறும் வார்த்தைகளைக் கூட தொகுப்பதற்கு தடை விதித்திருந்தார். தான் கூறும் குரான் வாக்கியங்களைத் தவிர மற்ற அனைத்தும் பிரதி எடுக்கப்படுவது தடை விதிக்கப்பட்டிருந்தது. தன்னை இறைவன் அளவிற்கு பக்தியினால், பாசத்தினால் மனிதர்கள் உயர்த்தி விடுவார்கள் என்ற அச்சம் அவருக்கு இருந்தது. அதனால், தன்னை ஓவியமாக வரைவது, தன்னைப் பற்றிய குறிப்புகள் என்று எதையும் பதிவு பெறாமல் பார்த்துக் கொண்டார். தன் கல்லறையில், எந்த ஒரு கட்டிடமும், நினைவுக் குறிப்பும் செய்யக் கூடாது என்றும் தடை விதித்திருந்தார். இன்றுவரையிலும் அது அவ்வாறே காப்பாற்றப் பட்டிருக்கிறது.

ஒரு நூற்றாண்டு காலத்திற்குப் பின்னே, தான் இந்த வாழ்க்கை வரலாறும், மற்றும் நபி மொழிகளும் பதிவு பெற முயற்சிகள் தொடங்கப்பட்டன. அதன் காரணமும் கூட, நபிகளின் பெயரால், பலரும், பலவாறான கதைகளையும், புது மொழிகளையும் கூறிக்கொண்டிருந்தனர். அவற்றையெல்லாம் தடுத்து நிறுத்த வேண்டுமெனில், முறைப்படி தொகுக்கப்பட்ட, ஹதீது நூற்களும், வாழ்க்கை வரலாறும் அத்தியாவசியம் என்பதால், அவைகள் தொகுக்கப்பட ஆரம்பிக்கப்பட்டன.

ஒரு சாரார் - நபிகளின் மொழியை - அதன் தாக்கம் இந்த உலகம் இருக்கும் வரையிலும் வாழும் என்பதால், மிகவும் கவனத்துடன் ஆராய்ந்து ஆராய்ந்து, உண்மை என துல்லியமாக அறியப்பட்டவைகளை மட்டுமே பதிந்து வைத்தனர்.

ஆனால், வாழ்க்கை வரலாற்றைத் தொகுக்க முனைந்தவர்கள் இத்தகைய ஆராய்ச்சி மனப்பான்மையை மேற்கொள்ளவில்லை. வெறும் தர்க்க விதிகளை மட்டும் வைத்துக் கொண்டு, விளங்கிக்கொண்டதை பதிவு செய்து வைத்தார்கள். அவர்களுக்கு முகமது நபி அவர்கள் ஒரு கதாநாயகன். நபி அவர்கள் எதை மறுத்தார்களோ அதையே அவர்கள் செய்தனர். They tried to Glorify The Prophet...They tried to romanticize his life. They tried to project him as a superman.. They tried that prophet won over the satan by identifying and removing the verses...

இந்த ஹீரோ வழிபாட்டில் முன் நின்றவர் - இப்னு இஷாக். முதன் முதலாக வாழ்க்கை வரலாற்றைத் தொகுத்தவர் - சீரத் ரசூல் அல்லாஹ் என்ற பெயரில் தொகுத்தவர் மூளையைப் பயன்படுத்தியதை விட, தன் ஹீரோ மீது கொண்டிருந்த அபரிமிதமான அன்பினால், தன் இதயம் விரும்பிய பராக்கிரமான செயல்களை எல்லாம் நபிகள் மீது சூடி பெருமிதம் கொண்டவர் - அவர் அறிந்திருக்கவில்லை - இது எத்தனை தவறாக புரிந்து கொள்ளப்படும் என்று. இவரது இந்த செயலை - செயல்பாடுகளை அவரது சமகாலத்து அறிஞர்களே கண்டித்திருக்கின்றனர் - விமர்சித்திருக்கின்றனர்.

இமாம் மாலிக் - மாலிக் மத்ஹபு என்ற தத்துவ இயல் வழியாக பாதை ஒன்றை அமைத்தவர் - இப்னு இஷாக் காலத்தவர். இஷாக் பற்றி இவர் சொல்வதை கேளுங்கள்: 'DEVIL' ஹா! சாத்தானின் வேதத்தைப் பற்றிய குறிப்புகளை எழுதி வைத்த முதல் சாத்தான்?

ஹிஷாம் பின் உராமா, மற்றுமொரு சம காலத்திய மார்க்க அறிஞர் என்ன சொல்கிறார் தெரியுமா - 'The rascal lies'

இமாம் ஹன்பால், சிறப்புமிக்க மார்க்க ஆய்வாளர் இவரது வரலாற்றை முற்றிலுமாக நிராகரித்துப் பேசுகிறார். பல மார்க்க அறிஞர்களும் இவரது தொகுப்பை குப்பை என ஒதுக்கிவிட வேண்டும் என்ற கருத்தையே முன்வைக்கின்றனர்.

எதனால் இப்னு இஷாக் இவ்வாறு செய்தார்? சற்று கூட ஆராய்ந்திருக்க மாட்டாரா? அவர் எடுத்துக் கொண்ட தர்க்க முறை - Theory of deduction. இரண்டு சம்பவங்கள் உண்மையாக இருக்கும் பொழுது அது சம்பந்தப்பட்ட மூன்றாவது செய்தியும் உண்மையாக இருக்கும் என்ற அனுமானம். இது ஒரு assumption. இதில் புரிந்து கொள்ள தவறியது - when you are making an assumption - you are making an ass of yourself என்பது தான். ASS - U !!!

கொஞ்சம் விளக்கிச் சொல்வது என்றால், இந்த உதாரணத்தைப் பாருங்கள்.

சூர்யன் மேற்கே அடைகிறான்.

மேற்குத் தொடர்ச்சி மலை மேற்கே இருக்கிறது.

சூர்யன் மேற்குத் தொடர்ச்சி மலை பின்னால் அடைகிறான்.


இவ்வளவு தான் Theory of Deduction. முதல் இரண்டு செய்திகள் உண்மையாக இருக்கும் பொழுது, மூன்றாவது உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான். மூன்றாவது செய்தி உண்மைதான். மலைக்கு கிழக்கு பக்கம் வாழும் தமிழகத்தார்களுக்கு. ஆனால், இந்த கண்டுபிடிப்பை மலையாளிகளிடம் சொன்னால் சிரிப்பார்கள். அங்கு, மேற்குத் தொடர்ச்சி மலை மேற்கில் இல்லை. இரண்டாவது வாக்கியம் அவர்களைப் பொறுத்தவரை பொய். ஆக உண்மை எது பொய் எது என்பதற்கான ஆதாரமும் கொடுக்கப்பட வேண்டும்.

இங்கு அவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகள் சரிவர செய்யப்படவில்லை. இது வரலாற்றை ஆராய்பவர்களுக்குப் புரியும். ஆனால், இஷாக் ஆராய்ந்த விதம் இவ்வளவு தான்.

நபிகள் பெருமானார் குரானை ஓதினார்.

எங்கும் உற்சாகக் குரல்களும், குலவை ஒலியும், கிளம்பியது.

நாடு கடந்து சென்ற முஸ்லிம்கள் மக்கா திரும்ப ஆரம்பித்தனர்.

ஆக, மேற்கண்ட அனைத்தும் உண்மையானால், இந்த செய்தியும் உண்மை தான் என்று நம்பி, தன் ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு பதிவு செய்து வைத்தார் - The Satanic Versus என்ற செய்தியையும்.

சிலர் நினைத்துக் கொண்டிருப்பது போல - இப்னு ச'ஆத் அல்ல இந்த செய்தியைப் பதிவு செய்தவர். ஆங்கிலத்தில் சில புத்தகங்கள் வரும். அவற்றின் தலைப்பே 'How to bluff your way through.. .. .. .. ' எதைப்பற்றியதாக வேண்டுமானாலும் இது இருக்கலாம். அதன் காரண காரியம் - உங்களுக்கு சில சொற்றோடர்களை அது கற்பிக்கும். Some jargons, some connected phrases.. .. .. இதைத் தான் இப்பொழுது சில நண்பர்களும் செய்ய முனைந்திருக்கின்றனர். ச'ஆத்-திற்கு முன்பே இவை விவாதிக்கப்பட்டு திருத்தமும் செய்யப்பட்டுள்ளது.

இஷாக்- எழுதியதை முழுவதும் வாசித்த இப்னு ஹிஷாம் அதை முற்றிலுமாகத் திருத்தி, romantic வாக்கியங்கள், செய்திகள், புனைவுகள் அனைத்தையும் நீக்கி, சுத்தமான ஒரு சீரத் நபி - நபி வரலாற்றை எழுதினார். இவரது காலம் - d.834. இவரது சமகாலத்தவரான வாஹிதி (757 - 822) மீண்டும் இஷாக் எழுதிய வரலாற்றை எடுத்துக் கொண்டார் - காரணம் சுவை. வாஹிதியின் மாணவர் தான் இப்னு ச'ஆத்.(764-845) பின்னர் வந்தவர் - தபரி. (839-923) இவர்கள் அனைவரும் வரலாற்றில் குறிக்கப்படுகின்றனர் - ' the earliest sources of the history of Islam'

இவர்களைத் தான் பிரதி எடுத்து ஐரோப்பிய ஆய்வாளர்கள் கூறுவது - ' quoting earliest sources of Islam' அவர்கள் மறந்து விட்ட விஷயம் - The earliest sources of Islam is Quran itself. குரானை வாசித்துப் புரிந்து கொள்ள சக்தியற்ற வரலாற்றாளார்கள், மேற்கண்ட 'அறிஞர்'களின் எழுத்துகளை அப்படியே மொழி பெயர்த்து, தாங்கள் எழுதிய வரலாறாக மாற்றிக்கொண்டு விட்டனர் ' ஆராய்ச்சிக்கு உட்படுத்தாமல். அல்லது இந்த தவறுகளை தர்க்கித்து, விவாதித்து, ஆராய்ந்து, இவற்றை நீக்கி எழுதிய, இப்னு ஹிசாமையோ அல்லது பிற்காலத்தைய ஆராய்ச்சியாளர்களையோ அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களும் Theory of deduction என்ற 'தங்களைக் கழுதையாக்கிக் கொள்ளும்' தத்துவத்தைத் தான் பயன்படுத்திக் கொண்டனர்.


' இஸ்லாமியர்கள் முகமதுவின் மீது அதீத பற்று கொண்டவர்கள்'
' இஸ்லாமியர்களே எழுதி வைத்த செய்தி'
' அதனால், சாத்தானிக் வெர்ஸஸ் உண்மை'

ரொம்ப எளிது. ஒரு அவதூறைக் கூறுபவர்களுக்கு இது எளிது. ஆனால், அதை மறுத்து, உண்மையை நிருவுவது கடினம்.

ஆனாலும் இஸ்லாமியர்கள் - நிருவினார்கள். இந்த அவதூறு பொய் என்று.

எப்படி?

(அடுத்த பதிவைப் பாருங்கள்)

Friday, March 30, 2007

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (பதிவு 1)

சல்மான் ருஷ்டி என்றால், ஒரு சராசரி முஸ்லிம், யார் என்று தான் கேட்டிருப்பான் -அவர் The Satanic Verses என்ற புத்தகத்தை எழுதும் முன் வரைக்கும்.

அவர் ஏன் எதனால் அந்தப் புத்தகம் எழுதினார் என்பதற்கு யாராலும் விடை சொல்ல முடியாது. அவரே சொல்லி இருப்பது கூட, freedom of expression should never be curtailed. (Sick of it!) இந்தக் கருத்து சுதந்திரம் - ஒருவர் ஒரு கருத்தை எழுதி அதை வாசித்த பின் தான் அது சரியா, தவறா என்ற பிரச்னை விவாதிக்கப்பட்டு, எழுதியவர் சொல்லிய கருத்தை எல்லோரும் ஒரு பிடி பிடிக்கின்றனர். ஆனால், எழுதும் முன்னே, அந்தக் கருவானது, ஒருவர் மனதில், விதையாக முளைக்கும் பொழுது, யாரும், உன்னிடத்திலே ஒரு தவறான கருத்து முளைத்துக் கொண்டிருக்கிறது என்று சண்டை பிடிப்பதில்லை. தான் தவறான ஒரு கருத்தை வளர்க்கிறோமே என்ற சுயவிசாரணையெல்லாம் செய்து கொள்ள மாட்டேன் என்று அடம்பிடிப்பெதல்லாம் சரி - ஆனால், சொல்ல வந்தது இன்னொருவனின் கருத்தை இம்சித்து, பரிகசித்து, அவமானப்படுத்த இருக்கிறது அதிலும், நேர்மைக்குப் புறம்பாக என்கையிலும் கூட, இவர்களது கருத்தை அடுத்தவர் மதிக்க வேண்டும் என்பது எத்தனை சிறுபிள்ளைத் தனம்.

சரி - சல்மான் ருஷ்டி அப்படி என்ன தான் செய்தார்?

அவர் செய்தது இஸ்லாமியர்களுக்கெதிரான பச்சைத் துரோகம். சாக்கடையில் விழுந்து புரண்ட ஒரு பன்றி, வீட்டிற்குள் நுழைந்து விட்ட அருவெறுப்பு. தன் இனத்தின் மீது சேறு வாரி அடித்து, அதற்கு அடுத்தவனிடத்தில் கூலிக்குக் கையேந்தும் இலக்கிய ரவுடித்தனம். எல்லாவற்றையும் இறுதியில் இது புனைவு தானே என்று கூறி தப்பித்துக் கொள்ள முயலும் கோழைத்தனம்.

தான் எழுதுவதைப் பற்றி, முழுதான, ஒரு விரிவான ஆராய்ச்சி செய்யாமல், இஸ்லாத்தின் மீது வெறுப்புமிழும் ஒரு தலைப்பட்சமான சில வரலாற்றாசிரியர்களின் தவறான வாதங்களை ஆதாரமாகக் கொண்டு தன் கண்களை மூடிக் கொண்டு அவதூறு எழுதியவர். தன்னை ஒரு பெரும் எழுத்தாளானாகக் காட்டிக் கொள்ள முயன்று, இஸ்லாமியர்கள் அன்னை என்று ஏற்றுக்கொண்ட நபியவர்களின் மனைவியர் மீது அவதூறு கூறியவர். பெண் கருத்தியல் பேசும் பெருந்தலைகள் எவரும் காலத்தால் மறைந்து விட்ட பெண்களை இழிவு படுத்தும் இந்த ஈனனிடம் கேட்கவில்லை - எதை ஆதாரமாகக் கொண்டு நீ இதை செய்கிறாய் என்று? Hypocrites!

- முற்றிலுமாகத் தவறு என நிரூபிக்கப்பட்டு வரலாற்றாசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வரலாறுகளைத் திருத்தி எழுத ஆரம்பித்துள்ளனர் வரலாற்றாசிரியர்கள். ஆனால், இவரோ, அவற்றையெல்லாம் புறக்கணித்து, குப்பை என தூக்கி எறியப்பட்ட, ஆதாரமற்ற போலியான நிகழ்வுகளை சுவையாக இருக்கிறது என்று அவதூறை எழுதினால் பின்னர் அனைவராலும் வெறுக்கப்படுவது நியாயம் தானே?

அப்படி என்ன தான் செய்தார் இவர்?

இவர் ஒரு புனைவை எழுதினார். The Satanic Versus என்ற புனைவை.

வரலாற்றில் பெருமானார் அவர்கள் மீது அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே, அவரது ஆளுமையை இழிவு செய்ய முயன்ற பகான் அரபிகள் இட்டுக் கட்டிய கதை தான் இது.

கொஞ்சம் வரலாற்றின் உள்நுழைந்து பார்ப்போம்.

நபிகள் வெளிப்படையாகப் பிரச்சாரம் தொடங்கி, பலரது கவனம் பெற்று, தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்ள சிறிது சிறிதாக மக்கள் முன் வந்து கொண்டிருந்த காலமது. முஸ்லிம்களுக்குப் பலவகையிலும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர் - குரைஷி இன அரபிகள். அரபிகளிலே மிக வலுவான குலம் குரைஷி இனம். கஃபா எனப்படும் பழங்கால இறை வணக்க ஆலயம் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்தது. அதனுள் பல சிலைகளும் நிறுவப்பட்டு, அதன் வணக்க வழிபாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததன் மூலம், அரபிகள் அனைவரையும் தங்கள் மேலாண்மையை, ஆளுமையை மறைமுகமாக ஏற்க வைத்திருந்தனர்.

ஆனால், இன்றோ, அந்த அரபிகளின் குலத்திலிருந்தே ஒருவர் தோன்றி - இந்த சிலைகள் வணக்கத்திற்குரியவை அல்ல - வணக்கத்திற்குரிய இறைவன் வேறு - அவனது பாதைக்கு வாருங்கள் என்று அறை கூவல் விட்டதும் மிரண்டு போய்விட்டனர். ஏனென்றால், விடுக்கப்பட்ட அறை கூவல் நேரிடையாக அவர்களது ஆளுமையை - அதிகாரத்தை - கேள்விக்குட்படுத்தியது. கேள்வி கேட்டவரோ -நம்பிக்கைக்குரியவர் என்று அனைவராலும் பாராட்டப் பெறும், அல் அமீன் என்று விளிக்கப்பட்ட நபிகள் பெருமானார். அவரது நேர்மையை எவரும் சந்தேகிக்கவில்லை. இப்படிப்பட்டவரின் பிரச்சாரத்தால், தினமும் அவர் பக்கம் கூட்டம் பெருகுவதையும், தங்கள் பக்கம் தேய்கிறதையும் கவனித்த அவர்கள் புரிந்து கொண்டனர் - வெகு சீக்கிரமே தாங்கள் தங்கள் அதிகாரமனைத்தையும் இழந்து விடுவோமென்று. அதை தடுக்க அவர்கள் பல வழிகளிலும் தொல்லைகள் கொடுக்க முனைந்தனர் - முஸ்லிம்களின் கூட்டம் பெருகுவதை கண்டிப்பாகத் தடுத்து நிறுத்திட வேண்டுமென்று.

நபிகள் மீது நேரிடையான தாக்குதல் தொடுக்க அவர்கள் தயங்கினர். அவரது குலம் வலுவானது. நபிகள் மீது கை வைக்கும் எவரும் தாங்கள் மட்டுமல்ல தங்கள் வம்சமும் பூண்டோடு அழிக்கப்பட்டு விடும் என்பதை அறிந்து வைத்திருந்தனர் - அதனால், அவர்கள் நேரிடையான மோதலைத் தவிர்த்து விட்டு, வழக்கம் போல் கோழைகள் செய்யும் உத்தியை மேற்கொண்டனர்.

- நபிகளை விடுத்து, வலுவற்ற ஏழ்மை நிலையில் இருக்கும் முஸ்லிம்களை மிகுந்த துயரத்திற்குள்ளாக்குவது. அதன் மூலம் மத மாற்றத்தைத் தவிர்ப்பது
- நபிகளின் நற்குணத்திற்குக் களங்கம் விளைவித்து அதன் மூலம் எங்கனமாகிலும், மக்களை நபிகளிடமிருந்து விலகச் செய்வது.

இந்த இரண்டு உத்திகளிலும் முதலாவதை செய்வது எல்லோருக்கும் மிக எளிதாக இருந்தது. அதற்கு பெரிய அளவில் மூளை தேவைப்படவில்லை. ஆனால், பிந்தைய செயலைச் செய்ய மிகுந்த கவனம் தேவைப்பட்டது. எதிரியின் பலம் அவர்களுக்கு நன்றாகத் தெரியும். நபிகளுக்குப் பொய் பேசாதவர் என்ற நற்பெயர் உண்டு. அந்த நற்பெயரை மட்டும் கெடுத்து விட்டால்...?

பொய்பேசாதவர் என்ற நற்பெயரை மட்டும் கெடுத்து விட்டால்.. .. !?

(அடுத்த பதிவைப் பாருங்கள்...)

Sunday, March 25, 2007

அல்லாஹ்...

இப்னு பஷீரின் இந்தப் பதிவில் ஒரு அன்பர் கேட்டிருக்கிறார் - உருவமற்ற இறைவனுக்குப் பெயர் எதற்கு என்று. ஒருவர் இத்தனை அறியாமையுற்றவராக இருக்கக் கூடும் என்று அறியும் பொழுது, வியப்பாக இருக்கிறது. இந்தியாவின் கல்விதரம் உயர்கிறது என்று சொல்பவர்களை நம்புவதற்கு சிரமமாக இருக்கிறது.

பெயர்ச் சொல்களில் பலவகையுண்டு. அவற்றில் ஒன்று பண்புப் பெயர். அதாவது அன்பு என்கிறோம். எந்த வடிவமும் அற்றது தான். என்றாலும் அந்தப் பண்பைக் குறிப்பிட ஒரு சொல் வேண்டும் இல்லையா? அது போல, இறைவனைக் குறிக்க ஒவ்வொரு மொழியும் சொற்களை உருவாக்கிக் கொண்டது. தமிழில், இறைவன் என்றால் அது யாரை குறிக்கும்? அது போல தான். அரபு மொழியில், அல்லாஹ், ஆங்கிலத்தில் God, ஹீப்ரு மொழியில், அல்லாஹ், என்று...

இந்த மொழி அடிப்படை அறிவு நிறைய பேருக்கு இல்லை. இருந்தாலும், அகம்பாவமும், கொழுப்பும், கண்களை மறைக்கிறது.

கீழ்க்கண்டவற்றை வாசித்து தெளிவு பெறட்டும்.

The use of the word "Allah" to mean "God" frequently sounds rather strange, esoteric, and foreign to Western ears.

(The eastern ears should have been attuned to this word by now, thanks to Urdu and subsequently to Hindi Moveis - Only fools would pretend as if he didn't know the meaning - இந்த வரிகள் என்னுடையவை.)

"Allah" is an Arabic word derived from the contraction of "Al" and "Ilahi", meaning "the God" or by implication "the One God" . Linguistically, Hebrew and Arabic are related Semitic languages, and the Arabic "Allah" or "Al-Ilahi" is related to the Hebrew "EL", meaning "God", and "El-Elohim", meaning "God of Gods" or "the God". It is these Hebrew words that are translated in the Old Testament as "God" . Thus one can see that the use of the word "Allah" is consistent, not only with the Qura'an and with Islamic tradition, but with the oldest Biblical traditions as well.

This basic similarity between the Arabic "Al-Ilahi" , of which "Allah" is a contraction, and the Hebrew "El-Elohim" can be seen even more clearly when one considers the Arabic and Hebrew alphabets. Neither Arabic nor Hebrew have letters for vowels. Both languages have alphabets consisting only of consonants, and both rely on vowel markings, typically found only in formal writing, as a pronunciation guide, The English transliteration of the Arabic "AL-Ilahi" and of the Hebrew "EL-Elohim" have included these vowel markings. If one were to remove, the English transliteration of these vowel markings, the Arabic remains "Al-Ilh" while the Hebrew becomes "El-ELh". Finally, if one were to transliterate all Arabic "Alifs" as "a" , and all Hebrew "Alifs" as "a", the Arabic remains "Al-Alh" and the Hebrew becomes "Al-Alh". In other words, with the single exception that the Hebrew uses the plural of respect, "Al-Ilahi", for which "Allah" is a contraction, and "El-Elohim", the Hebrew translated as "God" in the English version of the Old Testament, are absolutely identical terms in two closely related languages.

(The Cross and the Crescent - Jerald F Dirks )


கவனியுங்கள் - அரபியில் கூட, இறைவனைக் குறிக்க, மரியாதைப் பன்மையை உபயோகிப்பதில்லை. காரணம் மொழி பெயர்க்கும் பொழுது, அது பன்மையாகி விட கூடும் - தவறாக அர்த்தம் கற்பிக்கப்படும். அதனால் தான் தமிழில் இறைவனைக் குறிப்பிடும் பொழுது அவன் என்ற ஒருமை விளியைப் பயன்படுத்துகிறார்கள்.

இதைப் புரிந்து கொள்ள அறிவில்லாதவர்கள், இஸ்லாத்தை விமர்சிப்பதை விட்டு விட வேண்டும். அதை விட்டு விட்டு, இறைவனையே அவன் என்று சொல்லும் பொழுது, நபிகளையும் அப்படித் தான் சொல்வேன் என்று அடம்பிடித்து மனித மாண்புகளை மதியாத மிருகங்களாய் ஆன பின்பு, விமர்சனத்தில் ஈடுபட எந்தத் தகுதியுமில்லை. இவர்கள் மன நோயாளிகள் கூட இல்லை - மிருகங்கள் என்றே அழைக்கப்பட வேண்டும்.

Friday, March 23, 2007

எழுத்தறியாத் தலைவன் - உரையாடல் 2

எதை முதலில் எடுத்துக் கொள்ள வேண்டும், எதற்கு பின்னர் விடையளிக்க வேண்டும் என்ற நிலைகள் இல்லாமல், பிடித்த இடத்திலிருந்து தொடங்குகிறேன்.

தருமி தான் அறிந்ததாகக் கூறி, முன் வைத்த கருத்துகளில் ஒன்று: இதை ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நபிகள் பெருமானாரை விமர்சிப்பவர்கள் முன் வைத்த கருத்து தான்.

// இதிலேயே, முகமது ஒரு பெரிய வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தவர் என்ற முறையில் எப்படி எழுதப்படிக்கத் தெரியாதவராக இருந்திருப்பார் என்ற கேள்வியும், இஸ்லாம் அறிஞர்களுக்குள்ளாகவே முகமது எழுதப்படிக்கத் தெரிந்தவர்தான் என்பதான கருத்தும் உண்டு. //

ஒருபுறம் நபிகள் பெருமானாரை, மிகவும் புத்திசாலி, நன்றாக எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று நிருவுவதில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகின்றனர். ஒரு மனிதனைப் பக்கத்தில் இருந்து பார்த்தவர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் என அனனவரும் வரலாற்றில் பதிவு செய்து வைத்திருக்கின்றனர் - அவர் எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று. அவருடைய நண்பர்கள் என்றால் அவர்கள் எல்லாம் சாதாரண, சிந்திக்கத் தெரியாத மூடர்கள் இல்லை. மாறாக, ஆளுமை மிக்க, தங்கள் அளவில் தனித்தன்மை மிக்க தலைவராக உருவாகும் பெரும் பண்பு கொண்டவர்கள். அவர்களிடையே இருந்து தான் நான்கு பெரும் கலீபாக்கள் தோன்றினர். இது போலவே, அன்றைய தினத்தில் இஸ்லாமியர்களாகிய அனைவரும், நேரிடையாக முகமது நபியவர்களைச் சந்தித்து, உரயாடி, பின்னர் தான் அனைவரும் இஸ்லாமியராயினர்.

இன்றைய தினத்தைப் போல, கல்வி என்பது அந்தக் காலத்தில் அத்தனை எளிதானது அல்ல. மெனக்கெட்டால் தான் முடியும். அதே சமயம், கல்வி என்பது அந்தக் காலத்தில் ஒரு வாழ்க்கைத் தேவையாக இருந்திருக்கவில்லை. ஏன், ஒரு நூற்றாண்டிற்கு முன்பு, கல்வியை ஒரு அவசியமாகக் கொண்டிருக்கவில்லை - இந்தியர்களின் பலரது மூதாதையர். கோடி கோடியாய். மேலும் வாஞ்சையுடன் அரவணைத்து, கல்வி கற்க அனுப்பி வைக்க, அவருக்குத் தாயார் இல்லை. பிறந்து ஐந்து வய்து கழியும் சமயத்து இறந்து விடுகிறார். தந்தையோ பிறப்பதற்கு முன்பே இறந்து விடுகிறார்ல் அநாதையாகத் தான் வளர்ந்தார். வளர்த்த பாட்டானருக்கோ, அவருக்கு, நடைமுறை வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்து, ஒரு வெற்றி பெற்ற மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதே அவசியத் தேவையாக இருந்தது. பின் எங்கிருந்து கல்வி கற்பது?

ஒரு வர்த்தகர் எழுதப் படிக்கத் தெரிந்தால் மட்டுமே, வெற்றி பெற்ற வர்த்தகராக இருக்க முடியும் என்பது தர்க்கத்திற்கு உதவாத விஷயம். கல்வியறிவு இல்லாத, அடிமட்டத்தில் இருந்து கிளம்பி, பெரும் வியாபார சாம்ராஜ்யங்களைப் படைத்தவர்கள் உண்டு. ஒரு வியாபார நிறுவனத் தலைவர் தன் கைப்பட அனைத்து வரவு செலவு கணக்குகளையும் எழுதி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது நியாயமற்ற வாதம். மேலும், ஹதீஜா பிராட்டியரின் வியாபாரத்திற்குப் பொறுப்பேற்று செல்லும் பொழுது, கூடவே, ஹதீஜாவின் பிரதிநிதியும் வருகிறார் - கணக்கு வழக்குகளைக் கவனித்துக் கொள்ள. அவரது பெயர் - மைசாரா. (அ)

இத்தகைய வியாபாரத்திற்காக, அதற்கென கணக்கர்கள் இருக்கும் பொழுது, ஒரு தலைவராக இருப்பவர், செய்ய வேண்டியதெல்லாம் make certain strategical decisions அவ்வளவு தான். எந்த பொருளை வாங்க வேண்டும், எதை எந்த இடத்தில் விற்க வேண்டும் என்று செய்ய வேண்டிய இந்த முடிவுகளுக்கு, தேவை அனுபவம். எழுதப் படிக்கத் தெரிந்த மனம் அல்ல. எழுதப் படிக்கத் தெரிந்தவர்களை விட, இந்த முடிவு எடுக்கத் தெரியும் நபர்கள் தான் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் செய்யும் முதல் காரியம் - எழுத்தை விற்றுக் கிடைக்கும் பணத்திலே தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புகிறார்களே தவிர, வியாபாரத்தில் திறமையெல்லாம் காட்டி, முன்னேறி விட தங்களைத் தயார் செய்து கொள்வதில்லை. இல்லை, எழுதப் படிக்கத் தெரிந்தால், இயல்பாகவே பெரும் வெற்றி பெற்று விடலாம் - அது தான் பொது நியதி என்றால், இன்று உலகம் முழுக்க வியாபாரிகள் தான் இருக்க முடியும்.

ஆக, எழுதப் படிக்கத் தெரிய வேண்டும் - ஒரு வியாபார நிறுவனத் தலைவராக இருப்பதற்கு என்பது எடுபடாத வாதம். இந்த "எழுதப்படிக்கத் தெரிந்த" தன்மையை முன் வைப்பவர்கள் - வரலாற்றை வசதியாக மறந்து விடுகிறார்கள் - வரலாற்றில் The Great என்று அடைமொழி கொடுத்து அக்பரை அழைத்து மகிழும் நமது இந்திய நண்பர்கள், அக்பர் - Akbar, The Great எவ்வாறு ஒரு பேரரசை - விந்திய மலை தொடங்கி, பர்மா முதல், ஆப்கானிஸ்தான் வரையிலுமான ஒரு வல்லரசை நிர்வகித்தார்? இதை யாரும் கேள்வியாகக் கூட கேட்பதில்லை. ஏனென்றால் எல்லோருக்கும் தெரியும் "ஒரு நல்ல தலைவனாக" இருப்பதற்குக் கல்வியறிவு தேவையில்லை என்று. அப்படியானால், நபிகள் பெருமானார் மட்டும் கல்வியறிவு இல்லாமல் எதையும் சாதித்திருக்க முடியாது என்ற வாதம்? Sheer hypocrisy... சந்தர்ப்ப வாதம் - வசதிப்பட்ட பொழுது, வசதிப்படும் முகமூடிகள்...!!!

நபி பெருமானாரின் எழுத்தறிவின்மையைக் குறித்து கேள்வி எழுப்புவது - அவரது தனிப்பட்ட தகுதியைக் குறித்த ஐயப்பாடு அல்ல. மாறாக, குரான் என்ற புனித நூல், இறைவனின் வார்த்தைகள் அல்ல, மாறாக நபிகள் அவர்களின் உருவாக்கமே என்று நிருவுவதற்காகத் தான் இத்தனை ஆர்ப்பாட்டமும். அதற்காக அவர்கள் மெனக்கெட்டு, நபிகள் அவர்களை மிகவும் கற்றறிந்தவராகக் காட்டுவதில் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஒருபுறம் - அவர் மிகுந்த தகுதியுடையவர் என்று சொல்லிக் கொண்டே, மறுபுறம் அவரை இழிவு செய்ய முயற்சிப்பதை hypocrisy என்று தான் சொல்ல முடியுமே அன்று, வேறு எவ்வாறு விளங்க வைக்க முடியும்?

(அ.) Page 20, The Life of Muhammad - his life based on the earliest sources - Tahia Al-Ismail.

Wednesday, March 07, 2007

மாங்கா மடையர்கள்.....

எரியும் புத்தகக் கடைவீதி.

ஒரு இனத்தை அழிக்க, ஆதி காலம் தொட்டே இருந்து வரும் வழக்கம்- அறிவைத் தேடும் வழிமுறைகளை ஒழித்து விடுவது. அதைத் தான் இன்று ஈராக்கில் தீவிரவாதிகள் செய்திருக்கிறார்கள். இத்தனை காலமும், இன அழிப்பிற்காக போராடிக் கொண்டிருந்தவர்கள், இப்பொழுது, ஒரு புத்தகங்களை விற்கும், நூலகங்கள் நிறைந்த ஒரு கடை வீதியை தகர்த்தெறிந்திருக்கிறார்கள்.

முத்தனபி தெரு என்று சொல்லப்படும் அந்தக் கடை வீதியின் வயது ஆயிரம் வருடங்களுக்கு மேல். 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கவிஞரின் ஞாபகமாக அந்தத் தெருவிற்கு முத்தனபி என்று பெயர் வைத்து, அந்தத் தெரு முழுவதும், புத்தகங்கள் விற்பனைக்கும், நூலக வாசிப்புக்கும் பயன்படுத்திக் கொண்டிருந்தனர்.

அறிவைக் கொண்டாடிய முத்தனபி தெரு

அந்தத் தெருவில், இலக்கியவாதிகளும், கருத்தாளர்களும் கூடுவார்கள் தினமும். பல்வேறு வாத பிரதிவாதங்கள் நிகழும். இவைகள் எல்லாம், அமைப்பு ரீதியாக அல்லாமல், நட்பு வட்டங்களாக குழுமம் குழுமாக கூடி விவாதத்திலும், தர்க்கத்திலும் ஈடுபடும் இடமாகவும், புத்தக வாசிப்பும், பகிர்ந்து கொள்ளுதலுமாக, இலக்கிய பூங்காவாக திகழ்ந்த இடம்.

அந்தக் காலத்தைய ப்ளாக்கர்கள் கூடும் இடம்?!!!

கொடுமையான, இனப் போராட்டத்தில் கூட, அந்தத் தெருவை எவரும் தொட்டதில்லை. ஈராக் மக்களின், post Saddam காலகட்டத்தின், நிம்மதியான பாதுகாப்பான இடமாக இந்த தெரு இருந்தது. ஆனால், அங்கு தான் - இனங்கள் தாண்டிய அறிவுசார் வட்டமாக இயங்கிய அங்கு தான், வெடிகுண்டு பயமின்றி, மக்கள் புழங்கிய சமயத்தில் குண்டு வெடித்திருக்கிறார்கள். 26 பேர் மரணம். அதைவிட கொடுமை, பல ஆயிரக்கணக்கான புத்தகங்கள் எரிந்து நாசமாகி விட்டன.

புத்தகங்கள் தேடுதல், வாங்குதல், படித்தல், பாதுகாத்தல், பகிர்தல், என பல உள்ளார்ந்த அனுபவங்களைத் தரும். அதை அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். புத்தகங்களைத் தேடுவது, இறைவனைத் தேடித் திரியும் பயணம் போல இன்பமான அனுபவம் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் தெரியும். ஒரு மாதத்தில் ஒரு நாளேனும் ஒரு புத்தகக் கடையினுள் நுழைந்து, புத்தகங்களைத் தேடித்தேடி வாங்காவிடில், மனம் பரபரக்கத் தொடங்கி விடும். தான் தேடி செல்லும் புத்தகங்கள் கிடைக்காவிட்டால், மனம் சோர்ந்து விடுவதும், கிடைத்து விட்டால், மகிழ்ச்சி கொள்வதும் என எப்பொழுதுமே, புத்தகங்களுடன் ஒரு பரவச நிலையிலான உறவு என்னுடையது.

புத்தகங்களின் மீது காதல் கொண்ட அனைவருக்குமே அது ஒரு பரவச நிலையைக் கொடுக்கும். காதலிக்கும் புத்தகங்களை ஒரு போதும் கடன் கொடுக்காது, வைத்துப் பாதுகாப்பது, அப்படியே மீறி எவரேனும் வாசிக்க விரும்பினால், தங்கி இருந்து, வாசித்து போங்கள் என்று கெஞ்சி கேட்டுக் கொள்வது - இப்படியான புத்தகக் காதலனுக்கு, ஒரு புத்தகக் கடைத்தெருவே எரிந்து போனது - சில தீவிரவாதிகள் யாரையோ எதிர்ப்பதற்காக, தங்கள் சொந்த நாட்டின் அறிவுதேடலை கொன்று புதைத்து விட்டார்கள் என்ற செய்தியைப் படித்ததும், அடைந்த வேதனையை சொல்லி முடியாது.

இது இப்படியென்றால், இந்தப் புத்தகங்களை வியாபாரம் செய்தவர்கள், கண்ணீர் மல்க கூறிய செய்தி -ஒரு மனிதனுக்கு மிஞ்சிப் போனால், ஒரு நூற்றாண்டு வாழ்வு. ஆனால், இந்தப் புத்தகங்கள் நிரந்தரமான வாழ்வுடையது அல்லவா? எதை கொல்கிறோம் என்று தெரியாமலே, இந்தப் பாவிகள் செய்தது ஈராக்கின் பல தலைமுறைக்கான அறிவு செல்வத்தை அல்லவா அழித்து விட்டார்கள்.

Murder the intellectual capability of the country.

ஆமாம் - தீவிரவாதம் இப்பொழுது புதிய தளத்தில் பயணிக்கிறது. Murder the intellectual capability of the country. சிந்திக்கும் சக்தியை அழித்தொழித்தால், பின்னர் எல்லாம் தங்கள் கைவசப்படும் என்ற திட்டத்துடன் செயல்படத் தொடங்கி விட்டனர். இந்த சித்தாந்தத்தில் செயல்பட்ட சில குழுக்களால், பாதிக்கப்பட்ட சமூகங்கள் எத்தனை. தலைமுறை தலைமுறையாக கல்வி பெற வசதியின்றி, வீழ்ந்து விட்டன. இன்று அதலபாதாளத்தில் விழுந்தவர்களைக் கை தூக்கி விட, எத்தனை முயற்சிக்க வேண்டியதிருக்கிறது.

தீவிரவாதிகளும் இப்பொழுது அதைத் தான் செய்ய முனைந்திருக்கிறார்கள். தங்களைக் குறித்து கேள்வி எழுப்ப சக்தியுள்ளவர்கள் - இந்த intellectuals மாத்திரமே. இவர்களைத் தேடித்தேடி கொன்று கொண்டிருக்க முடியாது. அதனால், அவர்களின் அறிவின் மூலமாகிய புத்தகங்களை அழித்து ஒழித்து விட்டால், இனி என்றுமே சிந்திக்கத் திராணியற்றவர்களாய், தாங்கள் சொல்லும் அடிப்படை வாதத்தை பிடித்துக் கொண்டு, தங்களோடு சேர்ந்து நிற்பார்கள் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

இதை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது - ஒவ்வொருவரின் கடமையாகும். இது மதம் சார்ந்த விடயமென இன்று ஒதுங்குபவர்கள் - சிந்தனை செய்யும் மனமுடையவர்களுக்கு எதிராக மௌனம் காக்கிறார்கள் - மனித இனத்திற்கெதிராக துரோகமிழைக்கிறார்கள் என்று தான் சொல்வேன்.

Sunday, December 18, 2005

ஆயிஷா என்ற அற்புதம்

ஆரோக்கியம் என்ற அறியாமை நிறைந்த மனிதர் -

ஒரு கண்டுபிடிப்பு செய்திருக்கிறார் - //நண்பன் என்ற ஷாஜஹான்//

பாவம். அவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம்.

தமிழ் மணத்தில் போய் பீர் என்று பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும் - நான் என் வலைப்பூவை பீர் முகமது ஷாஜஹான் என்ற பெயரில் தான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

என்றாலும் ஒரு நண்பர் எழுதிய தளத்தில் பின்னூட்டமிட்டிருக்கிறார் - இஸ்லாத்தைத் தோற்றுவித்த நபிகளைப் பற்றி.

இந்த மனிதர் - ஆரோக்கியம் - நாகரீகம் என்பதை துளியும் அறியாதவர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனால் அவருடைய பதிவுகள் எதையும் வாசிப்பதில்லை. ஆனால், இஸ்லாமியப் பெயர் தாங்கிய எவரையும் எப்படியும் சீண்ட்டுவது, வம்புக்கு இழுப்பது என்ற வகையில் செயல்பட்டு, அவர்களையும் (எங்களையும்) ஆராய்ச்சிப் பார்வையோடு இஸ்லாமிய நூல்களைக் கற்க வைத்து - ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ள வைக்காமல் விடக்கூடாது என்ற முனைப்பில் இயங்குகிறார் போலிருக்கிறது.

பாருங்களேன் - இதுவரையிலும் நான் எந்த ஒரு ஆன்மீகப் பதிப்பையும் எழுதியதில்லை. ஏனென்றால் நமக்கு அத்தனை பெரிய ஞானம்.!!!

அதனால் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் - நல்லடியார், இறைநேசன், அபு முஹை ஆகியவர்கள் செய்யட்டும் என்று ஒதுங்கிக் கொண்டு - வெறுமனே அரசியல், சமூகத தளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துகளுக்குப் பதில் சொல்லும் வகையில், வரும் செய்திகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.

அதில்லாமல், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் - கொஞ்சம் தமிழ் உணர்வாளர்கள் மீது ஒரு வாஞ்சை என்று ஒரு கலக்கலான ஆளாக இருந்தேன்.

ஆனால், ஆரோக்கியமற்ற நமது நண்பரின் தூண்டுதலால் - இப்பொழுது இஸ்லாமியப் புத்தககங்களையும் தீவிரமாக வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் - ஆரோக்கியத்திற்குப் பதில் சொல்ல அல்ல. சுய அறிவுக்காக மட்டும் தான்.

ஆனால், படித்த பிறகு தான் பிரமிப்பு எழுகிறது - இத்தகைய வரலாறுகளை ஏன் முன்னரே படிக்கவில்லை என்று. வெறுமனே சிகரெட் பிடிப்பதை விட்டதை கட்டுரையாக எழுதி காலத்தை வீணடித்து விட்டோமே என்று.

இவ்வாறு வாசித்த பொழுது தான் தோன்றியது. இதை எழுதியே ஆக வேண்டும் என்று.

இது யாருக்குமான பதிலும் இல்லை. என் வாசிப்பும் வாசித்ததைப் பகிர்ந்துகொள்ளுவதும் மட்டும்.
****
Hadhrat Ayesha Siddiqa - Her life and works என்றொரு புத்தகம் இருக்கிறது. எழுதியவர் அல்லாமா சையத் சுலைமான் நத்வி.
****
ஆயிஷாவுக்கு திருமணமாகும் பொழுது வயது - 9.

சிறிய வயது தானென்றாலும் - அப்பொழுதே அவர் மனதாலும் உடலாலும் வளர்ச்சியில் முழுமையடைந்திருந்தார். குரான் வாசகங்களை ஒருமுறை கேட்டாலே அதை மனனம் செய்வதும், குரான் வாசகங்கள் இறங்கிய சந்தர்ப்பங்களை நினைவில் வைத்திருப்பதும், பெரியவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதும் என பல நல்ல குணங்கள் நிறைந்தவராக விளங்கினார். தந்தையார் - அபூபக்ர் சொல்லித்தரக்கூடிய கவிதை வரிகளையும், பழ மொழிகளையும் மனதில் ஆக்கிக் கொண்டிருந்தார்.என்றாலும், திருமணம் முடிந்ததும் உடனே நபிகள் அவர்களுடன் சென்று விடவில்லை. வயதின் காரணமாக தந்தையார் வீட்டிலே தங்க வைக்கப்பட்டிருந்தார். பருவ வயதிற்கு வந்த பின்னே தான் அவர் வாழ்வதற்காக நபிகள் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்.

வலைப்பூக்களிலே பலர் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதி வருவதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. இவர்கள் ஆதாரமாக கொடுப்பதெல்லாம் - சில இணையதள முகவரிகள் மாத்திரமே. இந்த இணைய தள முகவரிகள் எத்தனை தூரம் உண்மையானவை என்று இணையத்தில் இயங்கும் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். ஒரு இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், ஒரு வருடத்தை இணையத்தில் ஓட்டலாம். இவையெல்லாம் குரோத மனப்பான்மையுடன் துவங்கப்பட்டவையே.



கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளாக சொல்லியும் மக்கள் மத்தியில் எடுபடாமலேபோன குற்றச்சாட்டுகள் தான் இவை.

என்றாலும் புதிதாக குற்றச்சாட்டு சொல்கிறார்கள் -

காம இச்சைக்காக நபிகள் பலதார திருமணத்தைச் செய்து கொண்டார்கள் என்று.

தவறு.

இஸ்லாத்தில் - வாழும் முறையை விளக்க மூன்று வகையான வழிமுறைகள் உள்ளன.

1. குரான், 2. ஹதீதுகள் 3. நபிகளின் வாழ்க்கை முறை.

சிலவற்றை சொன்னால் புரியும். சிலவற்றிற்கு முன்னுதாரணங்கள் இருந்தால் மட்டுமே புரியும். ஒரு வாழ்க்கை முறைக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் அந்த முன்னுதாரணத்தை நபிகள் வாழ்வில் வாழ்ந்து காட்டினால் மட்டுமே ஏற்கப்படும் என்பது அனைவருக்கும் எளிதில் விளங்கக் கூடிய காரணம் தான். அதனாலே பலதரப்பட்ட வாழ்க்கை முறையையும் நபிகள் ஒருவர் மூலமே உதாரண வாழ்க்கையாக காட்ட வேண்டி இருக்கிறது. அதனால் நபிகள் வாழ்ந்த முறைகள் அனைத்தையும் ஒருவன் தன் வாழ்விலே செய்து விட வேண்டுமென்பதில்லை. தனக்குப் பொருந்தியவற்றை எடுத்துக் கொள்வது என்பது சரியானது. நேர்மையான மனதுடன் இருப்பவர்கள் இதை உணர்வார்கள் - மாற்று மதத்தினர் என்றாலும்.

ஆக, நபிகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு செய்தி இருக்கின்றது.

முதலாவது காம இச்சை தீர்க்க திருமணங்களா?

இல்லை.

அது தான் குறிக்கோள் என்றால் நபிகள் தனது இருபத்தைந்தாவது வயதில், தன்னை விட பதினைந்து வயது மூத்த விதவையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அந்த பந்தத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கால வழக்கப்படி, மேலும் இளம்பெண்களை திருமணம் செய்தோ - அல்லது அழகிய அடிமைகளை வாங்கியோ தனது இச்சைகளைத் திருப்தி படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், நபிகளின் தேவை அதுவாக இருக்கவில்லை. நீண்ட நேரம் தனிமையில் தங்கி இருப்பதும், மனதிற்குள் இனம் புரியாது உறுத்திக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு இறைஅச்சத்தில் மௌனமாக இருப்பதுவுமாகவே இருந்தார். போதாக்குறைக்கு மலையில் குகை வாசம் வேறு. தன் கணவரின் இயல்பறிந்த கதீஜா அவர்களும் மறுப்பேதும் சொல்லாது - கணவருக்கு உணவை அனுப்பிக் கொண்டிருந்தார்.

இந்த இயல்பினராய நபிகளுக்கு, காமத்திற்காக செலவிட எங்கு நேரம் இருந்திருக்கும்?

விதவை மறுமணம் என்பது இன்னும் ஒரு விவாதப் பொருளாகவும் - அது மனைவியை இழந்த கணவன்மார்களுக்கோ அல்லது ஆண் வயோதிகரான பின்னர் வேறுவழியில்லை என்பதினால் பரீசீலிக்கப்படும் ஒரு காரியமாகத் தான் இருக்கிறது இங்கு.

ஆனால், இதை அந்தக் காலத்தில் நபிகள் வாழ்ந்து காட்டினார் -

விதவை மறுமணமே தனது முதல் choice என்று.

21ஆம் நூற்றாண்டைப் பற்றி பேசுபவர்கள் இன்னமும் ஜீரணிக்க இயலாமல் தவிக்கிறார்கள் -முதல் திருமணமாக ஒரு விதவையை ஏற்றுக் கொள்வதைப் பற்றி.

இத்தனை தான் நமது சிந்தனைத் தளம்.

ஆனால் முழுமுதல் முன் உதாரணம் நபிகளாரின் வாழ்க்கை - அதில் முதலாவதாக அவர் திருமணத்தை செய்கிறார் - ஒரு விதவையை. அப்பொழுது அவர் நபிகள் கூட இல்லை. ஒரு சாதாரண இளைஞன்.
இந்த திருமணம் 25 வருடங்கள் நீடிக்கிறது. தனது 50 ஆவது வயதில் இழக்கிறார் தனது துணையை. இடைப்பட்ட காலத்தில், நபித்துவம் பெற்று, அதை முதன்முதலில் தனது மனைவிக்கு அறிவிக்கிறார். எந்தக் கேள்வியுமின்றி தன்னை ஒரு முஸ்லிமாக மாற்றிக் கொள்கிறார். அவர்களது அன்பும் பாசமும் மேலும் உறுதியடைகிறது. தன் செல்வமனைத்தையும் இஸ்லாத்தின் வழியில் செலவழிக்கிறார். பிறகு இறந்து போகிறார். தன் மனைவியின் மீது அளவற்ற பாசம் கொண்ட நபிகள் அந்த நினைவிலேயே வாழ்கிறார். 3 வருடங்கள் வரையிலும் வேறெந்த துணையுமின்றி.

அந்தக் காலத்து அரபு வழக்கம் - குலம் கோத்திரம் பார்த்து ஒவ்வொன்றிலும் ஒன்றாக பெண்களைத் திருமணம் செய்து கொள்வது.

ஏன்?

ஒரு பாதுகாப்புக் கருதி.

வியாபாரத்திற்கு பணம் புரட்ட, அல்லது யுத்தம் புரியும் பொழுது தேவைப்படும் படைபலத்திற்காக. பெண் வீட்டார்களும் தங்கள் நலனைக் கருதி, சக்தி வாய்ந்த மணமகனைத் தேடிக் கொள்வர். நபிகளின் வம்சமும் மிகவும் சக்தி வாய்ந்த குலம் தான். என்றாலும் மன உறுதிமிக்க நபிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை. ஒரே பெண்ணுடன் அமைதியான, ஆனந்தமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்தார்கள் - தனது வாழ்வின் பெரும்பகுதி வரை. தனது இளமை முழுவதையும். வயது மூத்த தன் மனைவியுடன் தான் செலவிட்டார்கள்.

மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

இந்த மாதிரி வாழ்க்கை வாழ்ந்த ஒரு மனிதரை - இச்சை பிடித்தவர் என்று சொல்பவன் - அவதூறு பேசுபவன் - தான் இன்னது செய்கிறோம் என்று அறியாத மனநிலை பிறழ்ந்த மனிதர்கள் அல்லாமல் வேறு எவராக இருக்க முடியும். அத்தகைய மனிதர்களில் சிலர் எல்லாவிடத்தும் இருக்கத் தான் செய்தனர் - செய்கின்றனர்.

மனைவி இழந்து இறைப்பணியில் மூழ்கிக் கிடந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில், இஸ்லாமில் இணைந்தவர்கள் எண்ணிக்கையும் கூடுகிறது. அவர்களை தொலைத்துக் கட்டுவோம் என்ற கங்கணத்துடன் அலையும் கூட்டமும் கூடுகிறது. மக்கா விட்டு மதினா நீங்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிடப்படுகிறது. உற்ற தோழர் அபுபக்ர் அவர்களின் வீட்டில் தான் தினமும் ஆலோசனை செய்யப் படுகிறது.

நபிகளுக்கு தனக்கும் ஒரு வீடு இருக்கிறது - அங்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற நினைப்பெல்லாம் பின் தங்கி விட, அதைக் கண்டித்து காவ்லா என்ற பெண்மணி - நபிகளிடத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். ஆயிஷா என்ற பெயரை முன்மொழிகிறார். ஆயிஷாவை ஏற்கனவே அறிந்திருந்த நபிகள் 'அவர் சிறுமியாயிற்றே' என்று மறுக்க அதற்கு காவ்லா ஒரு விடை சொல்கிறார் - சௌதா - விதவையையும் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதே சமயம் - ஆயிஷாவை மணம் செய்து தந்தை வீட்டிலே இருக்கட்டும். தக்க வயது வந்ததும் அழைத்துக் கொள்ளலாம் என்றும் கூற, நபிகள் பின்னர் ஒத்துக் கொண்டனர்.

இந்த திருமணத்திலும் செய்திகள் உள்ளன.

ஆம்.

நபிகள் திருமணம் செய்து கொள்ளும் முன் - ஆயிஷா - சிறுமி - மற்றொருவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்தார். மத்ஆம் மகன் ஜாபீர் என்பவருக்காக. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, செல்வம் எல்லாம் கரைந்து கொண்டிருக்கும் தருணத்தில், தன் மகளைத் திருமணம் செய்து அனுப்பி விட்டால், நலமாக இருக்குமே என்று எண்ணி, மணமகன் வீட்டை அணுகி, ஆயேஷாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் பொழுது, அவர்கள் மறுத்து விடுகிறார்கள். ஏன்? ஆயிஷா தங்கள் வீட்டிற்கு வந்தால், தனது மகன் மனதை மாற்றி, மயக்கி, இஸ்லாமியனாக்கி விடுவாள் - அதனால் அவள் தேவையில்லை என்று கூறி விடுகிறார்கள். திருமணம் தடைபட்டு விடுகிறது.

இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபட்டால், அப்புறம் அந்தப் பெண்ணின் கதி என்ன இந்த நாட்டில் என்று இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் விளக்க வேண்டிய அவசியமில்லை.

அவளுக்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைப்பானா? அவள் ஜாதகத்தைக் குறை கூறி, மட்டம் தட்டி, அந்த குடும்பத்தையே சின்னா பின்னமாக்கி விடுவீர்கள் தானே.? இல்லையென்று மறுக்க வேண்டாம் - இப்படி சின்னபின்னமான குடும்பங்களை நான் அறிவேன்.

நாளை ஒரு இஸ்லாமிய இளைஞன் இத்தகைய மூட பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடக்கூடாது என்ற நெறிமுறையும் இங்கு ஏற்படுத்தப் படுகிறது. ஆம் - நிச்சயித்த திருமணம் நின்று போய்விட்டதென்பதால் அந்தப் பெண் தீண்டத்தகாதவள் ஆகி விட மாட்டாள் - மாறாக அவளும் ஒரு நல்ல மனைவியாக பரிணமிக்கக் கூடும் என்ற முன் உதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்த முற்போக்குச் சிந்தனைகளை எல்லாம் மட்டம் தட்ட வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள் தான் - இதை இச்சையாகப் பார்க்கிறார்கள். முதலில், இந்தத் திருமணத்தைப் பற்றிப் பேச மனதில் ஒரு நேர்மை வேண்டும். கண்ணை மூடிக்கொண்டால் போதுமென்பவர்களிடத்தில் எந்த நியாயம் இருக்கப் போகிறது.? (இவர்களுடைய நியாயம் தேவையில்லை என்பது வேறு)

திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் கழிந்த பின்பு, மக்கா விட்டு நீங்கி மதினா சென்ற பின்னர் - மசூதியையும் சில குடியிருப்புகளையும் தோற்றுவித்த பின்னர் -சாவகாசமாக தன் மணமகளை அழைத்துக் கொள்கிறார் - 12 ஆவது வயதில் - பருவமடைந்த வயதில். இதுவரையிலும் எழுதியவற்றைக் கொண்டு, இப்பதிவை முடித்திடலாம் தான்.

ஆனால், ஆயிஷா என்ற அற்புதப் பெண்மணியின் வாழ்க்கையைப் படித்த பின்னர், மீதியையும் கொஞ்சம் சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.

ஒன்பதாவது வயதில் திருமணம் நடந்தது. மக்காவில். நபிகள் மறைந்து மறைந்து தான் நடமாடவே முடிகின்ற காலம் அது. அங்கு தாம்பத்ய வாழ்க்கை வாழ நேரமேது? சிறுமியும் வளர்கிறாள். அறிவை வளர்த்துக் கொள்கிறார். நற்பண்புகளை வளர்த்துக் கொள்கிறார். அவருக்குத் தெரிந்திருக்கிறது - தான் எத்தகையவரின் மனைவியாக இருக்கிறோம் - அவருக்குத் தக்கபடி இருக்க வேண்டுமே என்ற கவனம் கொண்டு - தன்னை வளர்த்துக் கொள்கிறார். தன் தந்தையாருடன் நபிகள் உரையாடும் பொழுது கவனத்துடன் கேட்டுக் கொள்கிறார் - குரான் வசனங்களை. அதன் உட்பொருட்களை.

புத்திசாலித்தனமும் மதிக்கூர்மையும் கொண்டு வளர்ந்து வருகையில் - எல்லோரும் மதினாவிற்கு செல்கின்றனர். பள்ளிவாசல், எல்லோரும் தங்குவதற்கு சிறிய குடில்கள் கட்டுவது என்று ஒன்பது மாதங்கள் கழிந்த பின்பு - தன் மணமகளை அழைத்துக் கொள்கிறார். இனிய வாழ்க்கை. இடையே பழிச்சொற்கள். அதைத் துடைக்க, புறம் பேசுபவர்களைக் கண்டித்து குரான் வசனங்கள் இறங்குகிறது.

ஆயிஷாவின் தாய், மகளுக்கு அறிவுரை கூறுகிறார் " கணவரின் கால்களைத் தொட்டு வணங்கு "

என்ன நினைக்கிறீர்கள்? ஆயிஷா செய்தாரா? இல்லை. ''என்னைப் படைத்த இறைவனை அன்றி பிறரை வணங்குவதில்லை ''

ஆம்.

இதுதான் இஸ்லாம்.

இது தான் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம்.

கணவனின் காலில் வீழ்வது கூட அவசியமில்லை.

இத்தகைய ஆளுமை மிக்க பெண்மணி ஆயிஷா. அவரைக் கண்டால் மன்னர்கள் கூட அஞ்சினார்கள். இல்லையென்றால், ஒரு பெண்மணியான அவர் - படை திரட்டி -கலிபாவை எதிர்த்து போர் புரிந்திருக்க முடியுமா?

ஆம்.

கலிபா அலி அவர்களை எதிர்த்துத் தான் ஆயிஷா அவர்கள் போர் புரிந்தார்கள். முதல் வெற்றி - பாஷ்ரா நகரில். அங்கேயே தங்கி இருக்கிறார். கலிஃபாவாக முடி சூடிய அலி அவர்கள் - இழந்த நகரத்தை மீட்க பாஷ்ரா நோக்கி வருகிறார்கள். சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன.

பலரும் நடுநிலை வகிக்கிறார்கள். பாஷ்ரா நகரின் எல்லையில் யுத்தம் நடக்கிறது. சகோதரர்கள் சகோதரர்களுடன் மோதுகிறார்கள்.

எதன் பொருட்டு?

முந்தைய கலிஃபா உதுமான் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப் படுகிறார்கள். அது பற்றி சரியான விசாரணை நடத்தப்படவில்லை என்பது ஆயேஷாவின் குற்றச் சாட்டு. மேலும் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட - ஜுபைர், தல்ஹா - இவர்கள் இருவரும் வற்புறுத்தப்பட்டனர் -அடுத்த கலிஃபாவாக அலி அவர்களைத் தேர்ந்தெடுக்க என்ற குற்றச்சாட்டும் உண்டு.

எல்லாமாக சேர்ந்து யுத்த களம் வரைக்கும் வந்தாகி விட்டது.

யுத்தம் நடக்கிறது முடிவிற்கு வந்த பாடில்லை. யுத்த களத்தில் நடுநாயகமாக - ஆயேஷா அவர்களின் ஒட்டகம். அந்த ஒட்டகத்தை வீழ்த்தினால் மட்டும் தான் யுத்தம் நிற்கும் என்ற நிலையில் அந்த ஒரு ஒட்டகத்தை சுற்றியே போர் நடக்கிறது. அம்புகள் எய்யப்படுகின்றன. ஒட்டகத்தின் மீதுள்ள அம்பாரியின் கனத்த துணி கிழியத் தொடங்குகிறது.

ஆயேஷாவின் படைகள் ஒட்டகத்தைச் சுற்றி வளையம் வளையமாக நின்று கொண்டு போரிடுகின்றனர் - யுத்த பாடலைப் பாடிக் கொண்டே

நாங்கள்
ஜாப்பாவின் மக்கள்
எங்கும் ஓட மாட்டோம்
எதிரிகளின் தலைகள் வீழும் வரை
குருதி வடிந்து முடியும் வரை.

ஓ எங்கள் அன்னை ஆயிஷாவே
அஞ்சாதீர்கள்
உங்கள் பிள்ளைகள் நாங்கள்
சக்தி மிக்கவர்கள்
வீரம் மிக்கவர்கள்
எம் நபியின் மனைவியே

ஆசிர்வதிக்கப்பட்ட
கணவனைக் கொண்டவளே
நாங்கள் எல்லாம்
ஜாப்பாவின் மக்கள்
இந்த ஒட்டகத்தின் பாதுகாவலர்கள்

தேனை விட இனிப்பானது
மரணம் எங்களுக்கு
மரணத்தின் மடியில்
பாலூட்டப்பட்டவர்கள்

நாங்கள் அறிவித்தோம்
உதுமான் பின் அஃபானின்
மரணத்தை திருப்பிக் கொடு
தலைவனை திருப்பிக் கொடு
தகராறு ஏதுமில்லை பின்னர்.

நாடி நரம்புகள் புடைக்க உற்சாகமாகப் பாட்டெழுப்பிப் பாடிக் கொண்டே யுத்தம் புரிகின்றனர். உயிரிழக்கின்றனர்.

எழுபது பேர் அவ்வாறு உயிர் இழந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளி கிடைக்கிறது. அதனூடாக உள்ளே செல்லும் ஒருவன் - ஒட்டகத்தின் ஒரு காலை வெட்டி விட - ஒட்டகம் வீழ்கிறது.

ஒரு விநாடியில் யுத்தம் நின்று போய்விடுகிறது.

எல்லோரும் திடுக்கிட்டுப் போய் ஓடி வருகின்றனர் - ஒட்டகத்தை நோக்கி. முதலில் ஓடி வந்தவர் - அலி. அன்னை ஆயிஷா காயமுற்றாரோ என்ற பதைபதைப்புடன். அலியைப் பார்த்ததும் அவர் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை என்கிறார். வேறு ஒரு ஒட்டகம் வரவழைக்கப்படுகிறது. பாஷ்ராவில் தன் ஆதரவாளர் ஒருவர் வீட்டிற்குச் சென்று ஓய்வடுத்தபின் தன் சகோதரனுடனும், கண்ணியமிக்க நாற்பது பெணகளுடனும் ஹிஸஸ் நோக்கி புறப்படுகிறார். அலி அவர்கள் பின்னால் சிறிது தூரம் பயணம் செய்கிறார்.

ஆம் - கலிஃபா - மாமன்னர் - அராபிய தீபகற்பம், சிரியா, எகிப்து, இராக் என்ற நாடுகள் அனைத்தும் அன்று அவர் கட்டுப்பாட்டில்! ஒரு பேரரசர். ஆனால், அவர் - அன்னை ஆயிஷாவின் பயணக் கூட்டத்தாருடன் பின்னால் நடந்து செல்கிறார் - சற்று தூரம் வரை.

பின்னர் தன் மகனை அனுப்பி வைக்கிறார் - இறுதி வரையிலும் பயணம் செய்து பத்திரமாக பயணத்தை முடித்து விட்டு வருமாறு அனுப்பி வைக்கிறார்.

இந்த யுத்தம் தான் வரலாற்றில் குறிக்கப்படுகிறது - The war of camel என்று.

இத்தகைய ஆளுமை மிக்க பெண்மணி - பாலியியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தால் - அந்த மனதில் - ஒரு துளி கூட வீரமோ தைரியமோ இருந்திருக்குமா? சுத்தமாக அற்றுப் போயிருக்கும். அஞ்சி அஞ்சி நடப்பர். ஆளுமையும், வீரமும் கண்ணியத்துடனும் தன்மானத்துடனும் வளர்க்கப்பட்ட விதத்தில் தான் வருமே அன்றி, கொடுமைக்கு ஆளான சிதைந்த உள்ளத்திலிருந்து அல்ல.

மேலும் ஆயிஷா வாழ்ந்த கால கட்டத்தில் அவர் தாம் மிகுந்த அறிவு பெற்றவர். ஒரு முறை அமீர் மூவய்யா தன் அவையினரைப் பார்த்துக் கேட்டார் - நம் தேசத்தில் மிகுந்த அறிவுடையவர் யாரென்று. அவருக்குக் கிடைத்த பதில் - அன்னை ஆயிஷா. அதன் பின் அமீர் ஆலோசனை ஒன்று கேட்டு கடிதம் எழுதுகிறார் - தன் மகனை தனக்குப் பின்னர் மன்னராக்க வேண்டும் என்று. ஆயிஷா மறுத்து அறிவுரை சொல்கிறார்.

இது தான் ஆயிஷா

இது தான் இஸ்லாம் பெண்களுக்குக் கொடுத்த உரிமை.

மரியாதை.

இன்று இப்படி இல்லையே என்று சொல்பவர்களுக்கு - இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமிய உலகம் அடிமைப்பட்டு சிதறிப் போயிற்று. வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்து போயின. கிடைத்த வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது - அதில் முதலிடம் இயல்பாகவே ஆண்களுக்கு என்றாகியது.

ஆனால், இன்று செல்வமும் செழிப்பும் திரும்ப வந்தடைந்த பொழுது - மீண்டும் கதவுகள் திறக்கின்றன. தன்னை ஏமாற்றிய கணவனைக் கோர்ட் படியேற்றி, தண்டனை வாங்கிக் கொடுத்த கதையை நானே என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.

இஸ்லாமியப் பெணகள் கூட்டம் கூட்டமாக சென்று கல்வி கற்கின்றனர். ஆதாரம் வேண்டுமென்றால் அமீரகத்திற்கு வாருங்கள். பல ஆண்களும் இயங்கும் அரசில் பெண் மந்திரி இருக்கிறார். உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்திற்கு தன் நாட்டின் சார்பாக சென்று பேசியிருக்கிறார். அனைவரும் அவர் பேசியதை ஆவலுடனும் உற்சாகத்துடனும் கேட்டிருக்கின்றனர். உள்ளூர் அமைப்புகளுக்கு தேர்தல் நடந்திருக்கிறது.

'என்று பெண்கள் நள்ளிரவில் கூட தனி மனுஷியாக சுதந்திரமாக உலாவ முடிகிறது அன்று தான் எந்த ஒரு நாடும் சுதந்திரம் பெற்றதாகக் கருதுவேன்.'என்றார் காந்தி.

இன்று அந்த சுதந்திரத்தைப் பெண்களுக்கு வழங்கி இருப்பது அராபியத் தீபகற்பம் தான். ஓமன் நாட்டிற்கு சென்று வந்த சுஜாதா எழுதுகிறார் - கற்றதும் பெற்றதுமில் - ஓமன் நாட்டு மன்னர் போல் ஒருவர் கிடைத்து விட்டால் - பின்னர் யாருக்கு வேண்டும் ஜனநாயகம்? என்று.

இது ஓமன் நாட்டிற்கு மட்டுமல்ல - அமீரகம் உட்பட பல நாடுகளுக்கும் பொருந்தும்.

இன்று இஸ்லாமிய மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு இவற்றில் சரி சம பங்கு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. அரபு நாட்டு அரசுகளுக்கு மட்டுமல்ல. இந்தியாவில் வாழும் ஏழை முஸ்லிமுக்குக் கூட. ஒரு கட்டத்தில், வசதி வாய்ப்புகள் இல்லை - யாராவது ஒருவர் படிப்பதை விட்டுக் கொடுத்தால் மட்டுமே மற்றவருக்கு வாய்ப்பு என்று வந்து விடுகிறது. அந்த சமயத்தில் - அது இயற்கையாக ஆண்களுக்குப் போய்விடுகிறது. சில சமயங்களில் - அது இரண்டு ஆண்களுக்கிடையேயான போட்டியாக கூட மாறி விடுகிறது. ஒரு சகோதரனைப் படிக்க வைக்க குடும்பத்திலுள்ள பிற அங்கத்தினர் அனைவரும் உழைத்தால் தான் ஆயிற்று என்ற நிலைமையில் பெண்களை எங்கே படிக்க வைப்பது?

இன்று நிலைமை மாறி இருக்கிறது.

மற்றபடி - பெணகளுக்கெதிராக வைக்கப் படும் மற்றொரு குற்றச் சாட்டு - உடை.

Dress Appropriate.

இது தான் தாரக மந்திரம். இயல்பாய் உணர, பிற ஆடவரின் பார்வைகளைத் தவிர்க்க, please do dress appropriately. அவ்வளவு தான். இன்று சேலையையே - மிக மிக கண்ணியமாக உடுத்த முடியும். அதையே மிக மிக ஆபாசமாக உடுத்த முடியும். அப்படியானால் எது தகுந்த முறை.? இது ஒரு பெரிய தர்க்கமாகலாம்.

அதனால் தான் இதற்கு எளிய ஒரு விடை. உடல் முழுவதையும் மறைக்கும் ஒரு அங்கி. தலைக் கவசமெல்லாம் அவரவர் சேர்த்துக் கொண்டது. தலையை மறைத்துக்கொள்ளுதல் என்பதை முகத்தை என்று எடுத்துக் கொண்டார்கள் போலும். மேலும் இந்த பர்தா என்பது பொது இடங்களிலும், பிற ஆண்கள் புழங்கும் இடங்களிலும் மட்டும் தான் அணிய வேண்டியதே தவிர - பெண்கள் மட்டுமே இருக்கும் இடத்திலோ, அல்லது குடும்ப அங்கத்தினர்கள் மட்டும் இருக்கும் இடத்திலோ அணியத் தேவையில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் - ஒரு பெண் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் - இந்த உடையை அணிய வேண்டுமென்று? அப்படி இருந்தும் இன்று இது முஸ்லிம் பெண்களிடையே a preference of individuals என்று தான் சொல்ல வேண்டும். பல முஸ்லிம் பெண்கள் முகமூடி அணிவதைப் போன்று அணிவதை விட்டு விட்டு நாசுக்காக ஆனால் அதே சமயம் கண்ணியமாக உடை உடுத்துகின்றனர். மீண்டும் பொருளாதாராம் விளையாடுகிறது. வகைவகையான உடைகள் இல்லாத பொழுது - இந்த பர்தா உடை அந்த ஏழ்மையை மூடி மறைக்கிறது. ஒரு சமத்துவத்தைத் தருகிறது.

பர்தா அணிவதால் பெண்கள் அடிமைப்பட்டு விட்டார்கள் என்பதெல்லாம் சுத்தப் பொய். பொருளாதார வசதியற்ற நிலைமை தான் சில குறைகளுக்குக் காரணமாக விளங்குகிறது.

அவற்றைக் களையும் பொழுது - ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை சட்டம் போட்டுத் தான் உரிமை முழக்கம் செய்யவேண்டும் என்ற நிலை அல்லாமல், பிறப்பினாலேயே தங்கள் உரிமைகளை இந்த பெண்கள் அடைவார்கள்.

அது வரையிலும், ஆடு நனைகிறேதே என்று அழும் ஓநாய்களாக யாரும் மாறாமல் இருந்தால் சரிதான்.





Friday, December 16, 2005

Holocaust என்ற மாயை - அமெரிக்காவின் பொய்யுரை.

Holocaust என்ற மாயை - அமெரிக்காவின் பொய்யுரை.

வெற்றி பெற்றவர்களே வரலாறு எழுதுவார்கள் என்பது வரலாற்று நியதி. அந்த வகையில் இன்று உலகம் முழுவதிற்குமான வரலாறை அமெரிக்கா தனக்கு விருப்பம் போல எழுதிக் கொண்டிருக்கிறது.

தப்பும் தவறுமாக.

அது சரி - இந்த ஹோலோகாஸ்ட் என்பது என்ன?

சாரி சாரியான யூதர்களை வாயுக் குழிக்குள் தள்ளி, விஷவாயு பீய்ச்சிக் கொன்றது ஹிட்லரின் நாஜி படை என்ற நிகழ்வைத் தான் ஹோலோகாஸ்ட் என்று வரலாறு குறிப்பிடுகிறது.

உலகையே உலுக்கிய குற்றச்சாட்டு அது.

ஜெர்மனி தலை குனிந்து நின்ற தருணம்.

தோற்றுப் போன நாடு.

அவமானங்களையெல்லாம் தாங்கித் தான் ஆக வேண்டும். குற்றச் சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு நாஜிக்கள் வேட்டையாடப்பட்டனர். உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனாக ஹிட்லர் சித்தரிக்கப்பட, அமெரிக்க அல்லது ரஷ்யர்களின் கையில் சிக்கி, அவமானப்பட விரும்பாத ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.

யூதர்களுக்கு மிகப் பெரிய ஆதரவு திரண்டது. மக்கள் அனைவரும் பரிவுடன் பார்த்தனர். உலகம் முழுக்க நாடற்று அநாதவராக நிற்பதினால் தானே இத்தகைய துயரம் - அதனால், அவர்களுக்கென்று ஒரு நாடு உண்டாக்க வேண்டும் என்று உரத்து எழுந்தன குரல்கள். அப்பாவி பாலஸ்தீனியர்களின் நாடு நிலமெல்லாம் பிடுங்கப்பட்டு, யூதர்களுக்கு நாடு உண்டாக்கப்பட்டது.

வல்லான் வகுத்த வாழ்க்கை என்ற மொழிக்கேற்ப, வெற்றியின் உச்சத்தில் மமதையில் நின்ற அமெரிக்கா, மத்தியக் கிழக்கில் தனக்கென ஏவல் செய்ய ஒரு நாடு வேண்டும் என்ற நோக்கோடு, பாலஸ்தீனியர்களைப் புறந்தள்ளி - ஒரு இனத்தை அடிமைப்படுத்தி, மற்றதோர் இனத்திற்கு விடுதலை பெற்ற நாட்டைக் கொடுத்து, இன்றைய மத்திய கிழக்குப் பிரச்சினையை ஆரம்பித்து வைத்தது.

இந்த உலகம் நாசம் அடையும் என்பதை தெளிவாக உணர்ந்திருந்தும், அமெரிக்கா அதைப் பொருட்படுத்தாமல், பாலஸ்தீனியர்களுக்கு துரோகமிழைத்தது.

அதற்கான நியாயம் தான் இந்த ஹோலோகாஸ்ட்.

யாருமே இந்த அநியாயத்தைக் கேள்வி கேட்கவில்லையா? கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு முன்பு வரை ஹோலோகாஸ்ட் என்பதைப் பற்றி யாரும் எதுவும் கேட்கக்கூடாது என்ற கோட்பாடைத் தான் அனைவரும் கடைபிடித்தனர். கேள்வி கேட்பவர்கள் நாஜிக்கள் என்று முத்திரை குத்தப்படுவார்கள். இந்த படுகொலை என்பது விசாராணக்கு அப்பாற்பட்டது - இதுவரையிலும் விசாரணைக்கு அப்பாற்பட்டதாக இருந்தவை மூன்று விஷயங்கள் தான் - உலகம் முழுவதிற்கும்.

அவை இறைவன், மதம், நபிமார்கள்.

இப்பொழுது அவற்றுடன் ஹோலோகாஸ்ட் - விசாரணைக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாக. கேள்வி கேட்கும் கொஞ்சநஞ்ச சரித்திர ஆய்வாளர்களும் தங்களை "மறுப்பாளர்கள்" என்று சொல்லிக் கொள்வதில்லை. மாறாக "மீள் பார்வையாளர்கள்" என்று தான் தங்களைச் சொல்லிக் கொள்கிறார்கள். ஏனென்றால் பல நாடுகளிலும் மறுப்பாளார்கள் என்று சொன்னால் தண்டனை உண்டு.

ஹோலோகாஸ்ட் நடக்கவில்லை என்பதில் இன்றும் பல குழுக்கள் உறுதியாக இருக்கின்றன - உலகம் முழுவதிலும்.

அமெரிக்கா, ஐரோப்பா, மற்றும் சில வலது சாரி குழுக்கள் இவற்றை முழுமையாக நம்புகின்றன. யூத இனப் படுகொலை ஒரு பித்தலாட்டம்; வரலாற்றுப் புரட்டு என்று.

மத்திய கிழக்கில் சிரியா மற்றும் ஈரானைச் சேர்ந்த பல தனி நபர்களும், பாலஸ்தீனத்தில் ஹமாஸ் குழுக்களும் இந்த இனப்படுகொலை போலியானது என்று ஆதாரங்களுடன் எழுதியுள்ளனர்.

2000 ஆவது ஆண்டில், ஹமாஸ் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கையில் இந்த போலி படுகொலையைக் கண்டித்து பல விவாதங்களை முன் வைத்தது.

'விஷவாயு அறைகள் கிடையாது. சில அறைகள், பிணத்தை பதப்படுத்துவதற்காக உண்டாக்கப்பட்டன. Zyklon B, என்ற வாயுவை பயன்படுத்தினர். பிணங்களை அரிக்கும் கரையான்களை ஒழிப்பதற்காக வாயுக்களை பயன்படுத்தினர். அந்த அறைகளில் மூன்று அல்லது நான்கு பேருக்கு மேல் நிற்க முடியாது. அந்த அறையினுள் - எப்படி 60 லட்சம் மனிதர்களை அடைத்து, விஷவாயு செலுத்திக் கொல்ல முடியும்.?'

அந்த அறைகள் யூதர்களை கொல்வதற்காகப் பயன்படுத்தப் படவில்லை. நாஜிக்கள் எரியூட்டும் அடுப்புகளைப் பயன்படுத்தவில்லை. இந்த அடுப்புகள் எல்லாமே மக்கள் புழக்கம் உள்ள இடங்கள்,தொழிலாளர் முகாம்கள் போன்றவற்றில் ஒரு அங்கமாகவே இருக்கும். ஆனால், அவ்வாறான அடுப்புகளுக்குப் பதிலாக, பிணங்களை வாயு அறைகளில் பதப்படுத்தி புதைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதற்காக வாயு அறைகளை உபயோகப்படுத்தினர். இதைத்தான் வாயு அறை என்று பெயரிட்டு, தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டனர் நேச நாட்டு படைகள்.

மேலும், 60 லட்சம் யூதர்கள்?

அந்த அளவிற்கு மக்கள் தொகை ஜெர்மனியில் இருந்தார்களா யுத்தத்தின் போது? ஹிட்லரின் அடக்கு முறைகளுக்குப் பயந்து இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, பாலஸ்தீனம் போன்ற இடங்களுக்கு ஓடிப்போன மக்கள் தொகையையும் சேர்த்துக் கொண்டனர்.

இரண்டாம் உலகப் போர் இறுதியில் இந்த அழித்தொழித்தல் வேலைக்கு ஆதாரமாகக் காட்டப்பட்ட பல புகைப்படங்கள் - நேச நாடுகள் கூட்டாகத் தயாரித்தவை - யுத்தத்தில் நாஜிக்கள் மீது வெறுப்பு உண்டாவதற்கும், தங்கள் யுத்த முயற்சியில், மக்களைத் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருவதற்காக பரிதாபத்தைத் தோற்றுவிப்பதற்காகவும், இவர்கள் இந்தப் படத்தை உண்டாக்கினர்.

நாஜிக்களுக்கு எதிரான பிரச்சாரத்திற்காக.

நாஜிக்களைப் பலவீனப்படுத்த.

யுத்தத்தில் நாஜிக்கள் மீது வெறுப்பு உண்டாக்குவதற்காகவும், தங்கள் யுத்த முயற்சியில், மக்களைத் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவு தருவதற்காக பரிதாபத்தைத் தோற்றுவிப்பதற்காகவும், இவர்கள் இந்தப் படத்தை தயாரித்தனர்.
(The allied forces fabricated the pictures in their propaganda against the Nazis and to win the public sympathy for their continuing the war.)

அவற்றில் ஒரு புகைப்படம் நேச நாட்டுப் படைகள் குண்டு வீசி தாக்கியதில் இறந்து போன ஜெர்மானியர்களின் புகைப்படம். டிரெஸ்டன் என்ற நகரின் மீது வீசப்பட்ட குண்டில் நிகழ்ந்த மரணம் அது.

மேலும் இந்த புகைப்படங்களில் காணப்படும் பலரும் பசியால் வாடியும், காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்களாகவும் தான் காணப்பட்டனரே தவிர, வாயுத் தாக்கத்தால் இறந்து விட்டவர்களாக அறிய முடிவதில்லை என்று'' மீள் பார்வையாளர்கள்'' கருதுகிறார்கள்.

யுத்த நோக்கம் முடிந்ததும், அவர்கள் செய்த போலி பிரச்சாரங்களை நியாயப் படுத்தவும், ஓட்டாமான் பேரரசை சிதைத்து உண்டாக்கப்பட்ட, அரபு நாடுகளை கண்காணிக்கவும் இவர்கள் உள்நோக்கத்துடன் இந்த ஹோலோகாஸ்ட் என்ற பித்தலாட்டத்தைத்ட் தொடர்ந்து அரங்கேறச் செய்தனர். யூத நாடு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற மெனக்கெடுதலினால் திட்டமிட்டு செய்யப்பட்ட போலி பிரச்சாரம்.

அமெரிக்க, பிரிட்டிஷ், யூத சதிகளே இவை.

பலியாடாக யூதர்களையும், சாத்தானாக ஜெர்மனியையும் சித்தரிக்கும் முயற்சியில் நடத்தப்பட்ட நாடகம். மேலும், தான் கையகப்படுத்திய நாடுகளை அச்சுறுத்தி தன் மேலாண்மையை நிலைநாட்டுவதற்காக சோவியத் ரஷ்யாவும் இந்தப் போலி பிரச்சாரத்தில் பங்கு கொண்டது.

யூதப் படுகொலைகளை ஆதரித்து அலை அலையாக பொய்ப்பிரச்சாரங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்ட பொழுது, அதை வரலாற்றியலாளர்களால், துணிவுடன் முனைந்து எதிர்க்க முடியவில்லை - பயத்தினாலும், வசதியான வாழ்க்கைகளைத் துறக்கும் சக்தியற்றதினாலும்.

ஆனால், இதே யூதர்கள் ரஷ்ய அரசுடன் இனைந்து கொன்று குவித்த அரசியல் எதிர்ப்பாளர்களையும், கிறித்துவர்களையும் கணக்கிலெடுத்தால், யூதப் படுகொலைகள் ஒன்றுமேயில்லை என்றாகிவிடும் என்கிறார்கள் வரலாற்றை மறு ஆய்வு செய்பவர்கள்.

இந்த யூதர்களுக்கு எதிராக ஜெர்மனியில் அரசு இயந்திரங்கள் மூலமாக நிறுவனமயமாக்கப்பட்டு குற்றங்கள் நடத்தப்படவில்லை. அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளெல்லாம் தனிப்பட்ட நாஜி அதிகாரிகளால் தான் நடத்தப்பட்டது. நாஜி தலைமை இதில் சம்பந்தப்படவேயில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்த படுகொலை மறுப்பாளர்களின் ஆரம்பகால நூலாசிரியர் பிரான்சிஸ் பார்க்கர் யாக்கி என்ற அமெரிக்கர் தான். 1962ல் அவர் எழுதிய இம்பீரியம் என்ற நூல் தான் முதல் பதிவாக வந்த மறுப்பு. அதற்கு முன் இருந்த மறுப்பாளர்கள் எல்லாமே தங்களைக் காத்துக் கொள்வதற்காக நாஜிக்கள் நடத்திய பிரச்சாரங்கள் மட்டுமே.

யாக்கியுடன் இணைந்து கொண்டவர் ஹேரி எல்மர் பார்னஸ். அவர் குறிப்பிடுவது - ஜெர்மனிக்கும், ஜப்பானியர்களுக்கும் எதிராக யுத்தத்தில் பங்கு பெற்ற தன் நிலையை நியாயப்படுத்த அமெரிக்கா கிளப்பிய போலி கோஷம் தான் - ஹோலோகாஸ்ட்.

1964ல் பிரெஞ்சு வரலாற்றியலாளர் ஆன, பால் ரெஸ்ஸினியர் - தி டிராமா ஆஃப் தெ யூரோப்பியன் ஜ்யூஸ் என்ற நூலை எழுதி வெளியிட்டார். இவரே படுகொலையிலிருந்து தப்பித்தவர் தான். பின்னர் இவர் கைது செய்யப்பட்டார்.

நவீன மீள்பார்வையாளர்கள் இவரது புத்தகத்தை ஒரு ஆதாரமாக கொள்கின்றனர். சிறப்பான ஆராய்ச்சி என்று சொல்கின்றனர். 1943 ஆம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டு, பின் போலந்து நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார் - அப்பொழுது தான் யூதர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் உச்சத்தில் இருந்தன.

இவ்வாறு சிறுக சிறுக ஆரம்பித்த ஹோலோகாஸ்ட் எதிர்ப்பாளர்களின் இயக்கம் 70களில் வலுக்க ஆரம்பித்தது. 1976ஆம் வருடத்தில் ஆர்தர் பஸ் என்பவர் எழுதிய தி ஹோக்ஸ் ஆஃப் தி ட்வண்டியத் செஞ்சுரி : தி கேஸ் அகய்ன்ஸ்ட் தி ப்ரிஸ்யும்ட் எக்ஸ்டெர்மினேஷன் ஆஃப் யூரோப்பியன் ஜ்யூரி மற்றும் 1977ஆம் ஆண்டு, டேவிட் இர்விங்க் எழுதிய ஹிட்லர்ஸ் வார் போன்ற நூல்களின் வரவு இந்த இயக்கத்தை வலுப்படுத்தியது.

1979 ஆம் ஆண்டு, வரலாற்று மறு ஆய்வு மையம் (Institute of Historical Review - IHR) தொடங்கப்பட்டது வில்லிஸ் கார்ட்டோ என்பவரால். இந்த மையத்தின் நோக்கமே ஹோலோகாஸ்ட் என்ற புரளியை வெளிப்படையாக எதிர்ப்பது. இந்த அமைப்பினர் தான் பர்னஸ் எழுதிய புத்தகத்தை மீண்டும் வெளிக் கொண்டு வந்ததனர்.

இந்த அமைப்பினர் கூறுவதாவது - மிகப் பெரிய தொகையில் யூதர்கள் தொழிலாளர் முகாமிற்கு அனுப்பப் பட்டதில் சந்தேகமேயில்லை. இவர்களில் பலர் இயற்கையான மரணமோ அல்லது கொலையோ செய்யப்பட்டனர். மற்றும் பலர் யுத்தத்தில் இறந்தனர். ஆனால், ஹோலோகாஸ்ட் என்ற விஷவாயு அறைகளில் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டனர் என்பது ஒரு பித்தலாட்டம். இதை உலகில் உள்ள அனைத்து கிறித்துவர்களும், நேர்மையும், உண்மையும் கொண்ட தகவலறிந்த மனிதர்கள் அனைவரும் இதை உணர வேண்டும்.

ஜனநாயகத்தின் மீது பெருமதிப்பு வைத்திருக்கும் பல நாடுகளில் இந்த போலி பிரச்சாரத்தை எதிர்ப்பது குற்றமாகும். ஆஸ்திரியா, பெல்ஜியம்,செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், லித்துவேனியா, போலண்ட், ருமேனியா, ஸ்லோவாக்கியா, சுசிட்சர்லாண்ட் ஆகிய நாடுகளில் இந்த வரலாற்றுப் புரட்டைப் பேசினால் அபராதம் விதிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படுவர்.

வாழ்க ஜனநாயகம்.

ஆய்வாளர்கள் அளவில் இயங்கிக் கொண்டிருந்த இந்த மறுபார்வையாளர்களின் விமர்சனங்கள் எப்படி உங்களுக்கும், எனக்கும் அறிமுகம் ஆயிற்று என்று கேட்கிறீர்களா?

போலிகளை எதிர்த்து போர்க்குரல் எழுப்பிய மஹ்மூத் அஹ்மத் இனேஜாத் என்பவரால்.

ஈரானிய அதிபரால்.

நன்றி இனேஜாத்.

இல்லையென்றால் இந்த வரலாற்றுப் புரட்டை நாமும் நம்பிக் கொண்டிருப்போம் இன்றும், இனியும் வரும் காலத்திலும்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்