"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Tuesday, November 06, 2007

ஒரு புல்லாங்குழலின் மரணம் - தமிழ்ச்செல்வனுக்கொரு கவிதை



கூராயுத வீச்சில் முறிக்கப்பட்ட

மூங்கில் துளைகள் வழியூதப்பட்டு

காற்றில் மிதக்கிறது

பிரிவாற்றாமையின் துயரம்





ஒரு குச்சியின்

துளையாகக் கண்களும்

உயிர் சுண்டும்

ஒலியாக காதுகளும்

புலன் சுவைக்கின்றன

மூங்கிலை





காட்டு வாழ்விடங்களில்

திமிறியொலித்து முட்டி மோதி

வெடித்துச் சிதறிப் பற்றியெழும்

தீயுள் காத்திருக்கும் மரணத்தை

தேடித்திரியும் சிற்றுயிரென்பர்

இருளின் வெளிச்சமறியாதவர்கள்.




புல்லாங்குழல்

முறையீடுகளின் கூச்சலோடு

இணைந்தரற்றுகின்றனர்

உடைந்து சிதறிய உள்ளத்தினர்



புலப்பெயர்ச்சியில் மறக்கடிக்கப்பட்ட

வேர்களைத் தேடியலையும் ஏக்கத்துடிப்பில்

உயிர் அரற்றிக் கொண்டிருக்கிறது



தூரிலிருந்து

முளைத்துக் கொண்டிருக்கும் புதுப்புல்

காற்று வாங்கி ஒலியெழுப்பி

காடெங்கும் தேடித் திரிகிறது

வெட்டி முறித்தெறியப்பட்ட

ஒரு சகோதரனின் குரலை.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்