"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, February 03, 2008

முதல்வன்


முதல்வன்



கற்பிப்பவர் எழுதத் தொடங்கினார்
' 1, 2, 3......'
கரும்பலகை நிறைந்து
மரக்கால்களின் வழி கீழிறங்கி வழிகிறது -
'...51, 52, 53.....' என

விரிந்த அறை தாளாது
பெருகித் தாழ்வாரம் நிறைத்து
பசுந்தாவரங்களின் வேர்களில் பாய்கிறது
எண்ணும் வாய்ப்பாட்டும்

எண் ஓதும் ஒலியிலெழும் பெருந்தொகையெல்லாம்
தன்னைத் தொடர்கின்றதாய்
ஒன்றாமிடமென குறிக்கப்பட்ட முதல் எண்
முதலாக நிறபதன் பெருமையைப் பேசித்திரிந்தது
எண் இரண்டிடம்

எண் குறித்த பரிச்சியம் மேலும் பெருக
அருகிலிருந்து வானுயர கட்டிடத்தின்
தளங்களுக்கு எண் குறித்து
எண்ணிப் பழகச் சொன்னார் கற்பிப்பவர்.

புதுமகிழ்வுடன் ஒரு புது அனுபவமாய்
மேகங்களுக்கு முதுகு சொறியக் கிளம்பிய
கட்டிடத்தளங்களுக்கு எண்ணிட்டு
கூச்சலிடத் தொடங்கினர் குழந்தைகள்

' 1,2,3..'என

தொடங்கிய தளங்களின் எண்ணிக்கையில்
தரையைத் தொட்டு நசுங்கிக் கிடந்தது
ஒன்று தன் முதலிடத்தில்

வானை முட்டியெழும் சாதனைத் தளங்களில்
முதலிடங்கள் என்றும்
முதலில் நிற்பதில் மட்டுமே இருப்பதில்லை

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்