"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, June 08, 2008

இல்லாது போனவற்றின் வலி

இல்லாது போனவற்றின் வலி.





ஊர்ந்து உரசும் மூச்சொலி
மெல்லக் கீறுகிறது செவிப்பறையின் சவ்வுகளை

அசைவுறும் மௌனத்தின் அடிக்கால்களனைத்தும்
நீந்திப் பாய்கிறது தேடுபுலன்கள்
மையப்புள்ளியின் ஆதாரத்தில் சுழலும் விசைபோல

ஒவ்வொரு நிழலின் முதுகுப்புறத்தினின்றும்
செவியில் விழுமொரு நிசப்தம் நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது

செவியின் தவிப்பில் விழியிலேறிப் பயணிக்கிறது
உடலெங்குமொரு பிடிபடாதவொரு அசௌகரியம்

ஒன்றாகிக் கிடந்த புறவெளியின் கோலமொன்றிலிருந்து
ஒரு கணம் விலகியெழுந்து விரைத்துயர்ந்து
இமையா விழி வீசிய அரவத்தின் பிரம்மாண்டம் கண்டதன்
அநிச்சையான விலகலின் போது
வதையுண்டு அடங்கிக் கொண்டிருந்தது ஒரு உயிர்

ஒரு கணசெலவில் காலத்தினுள் தேய்ந்து போன
உயிர் வதையறிந்த படபடப்படங்கி
பொத்தென்று விழுந்து நிமிர்ந்த அந்த அற்பப் பறவை
அணைத்துக் கிடந்தது மீதமிருந்த வாழ்க்கையை
இல்லாது போனதையெண்ணி வலியுறும் வகையறியாது

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்