"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, January 26, 2007

நீ........

நீ மரித்த பின்
நான் வாசிக்கின்றேன்.
எதை வாசித்தேன்
எதை விட்டேனென்பது
இங்கு பிரச்சினையல்ல.

மையம் விலக்கி
விளிம்பில் வெளிச்சம் தேடும்
எல்லாவற்றையும் எடுத்துக் கவிழ்த்து
எங்கோ தொலைந்து போன
தொலைக்கப்பட்டவைகளைத் தேடித் திரியும்
மனதிற்கு
பாதை எது வேலி எது பிரச்சினையல்ல.

இப்படித்தானென்ற முன்முடிவுகள்
முன்னேயே சொன்னேனேவென்ற கருத்துக் கணிப்புகள்
எத்தனை பேருக்குப் பிடிக்கும் கணக்குகள்
எல்லாவற்றிலும் எப்பொழுதும்
தோல்வியில் தேடிக் கொண்டேயிருக்கும் இருத்தல்
விளிம்பிலோ மையத்திலோ
உள்ளேயோ வெளியேயோ
எப்படியிருந்தாலும்
தேடும் தவிப்பைக் கொண்டாட
தானிருப்பதை அறிவித்து சிரமிக்காத
தன்னையொத்த தேடுதலை தவிப்பாகக் கொண்ட
ஒரு நீ வேண்டும் -
பெயர்களற்ற உறவுடன் அருகே
கருவிழிகளால் தொட்டுக் கொள்ளும் அருகே...
உண்மையாய் உயிர்ப்பாய் உறவாய்..

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்