"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, January 28, 2007

சாமியா(ஆ)டிகள்...

எல்லாவற்றையும் தன் விருப்பம் போல்
காட்டிக் கொள்ளும் கண்ணாடிகள் மீது கோபம்.
ஒரு நாள் பின்னிரவில் நடத்திய தாக்குதலில்
கண்ணாடிகள் அழிந்து போயின.

உண்மைகளைத் தான் உரைத்தன
உன்னிடத்திலிருப்பதைத் தானே காட்டின
பேசிக்கொண்டவர்களுக்கு தெரியவில்லை
கண்ணாடிகள் தந்த பிம்பங்களிலே தன்னையறிந்தவர்கள்
அந்த பிம்பங்களிடமே தங்களைத் தொலைத்து
அவற்றின் நிழல்களில் கரைந்து போனதை

எங்காவது தங்களை அடகு வைத்துவிட்டு,
இடைத்தரகனை மீட்பவன் எனக்கொண்டாட
காலகாலமாய் காத்திருக்கும் இவர்களுக்கு
கண்ணாடிகள் தரும் பிம்பங்களற்று
எந்தத் தேடுதலையும் சாதிக்க சாத்தியப்பட்டதில்லை.

தன் தேடுதல்களுடன் அந்தரங்க உறவேற்காதவன்
கண்ணாடிகள் நிறைத்த அறையில் -
எல்லோரும் காணும் சாத்தியதையுண்டாய அறையில்
தன் பிம்பங்களுடன் கொண்டாடுகிறான்
தன் அந்தரங்கங்களை.

தன்னையும் தன் தேடுதலையும்
தனிமனித அனுபவமாயறியாமலே
புதியதாய் மீண்டும் பிம்பங்கள்
படைத்துத் தரும் கண்ணாடி தேடியலைகிறார்கள்.
அழிந்து போன கண்ணாடித் துண்டுகளில்
சிதறிக்கிடந்த உடைந்த சித்திரங்களை
வாரியள்ளி குப்பைத் தொட்டியில் போட்டுக் கொண்டே..

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்