"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, October 07, 2007

நரியின் ஞாநம்

நிலமெங்கும் படர்ந்த சிறகொடுக்கி
மரயுச்சியில் கண்மூடியமர்ந்தது
அறிவின் மேலோடுடைத்து வேர் முடுக்கி
புதிய வானம் திறந்து வைத்த பறவை

வாய்ப்பமைகையில் வஞ்சக ஞாநம் பாடும் நரி
எட்டாக் கனி கண்டு ஏங்கிய நரி
எட்டப்பன் காக்கையை ஏமாற்றிய கதையை
இன்னமும் வெற்றியாக விழாவெடுக்கும் நரி
ஞாநம் பெருக்க்க்க்க்க்க்க்கெடுக்க ஊளையூட்டியது
தன் இறப்பு வரையிலும் பயப்படுத்தும் பறவை
விடியல் தொட்டு அந்தி வரை
தன்னை வேட்டையாடித் திரியும் பறவை
இரையாக வீழும் தருணம் வந்ததாக

நளின அசைவுகளுடன் சிவப்புத் துணி வீசாது
நஞ்சு தோய்த்தலங்கரிக்கப்பட்ட
கத்தியொன்றை மறைத்துக் கொண்டு
காளையடக்கும் வீரன் போல துள்ளிப்பாடியழைக்கிறது
எச்சில் வடிக்கும் சக ஞாநமடைந்த நரிகளை

மரத்தின் அருகே தன்னைத் தூக்கிப் போக
நடுங்கும் தொடையின் தசையிறுக்கிப் பிடிக்க
மந்தையாக மந்திரமொலித்து அச்சம் போக்க
முரசறைந்து போர் அறிவிக்க

ஒருமித்த குரலில் ஓங்கியிட்ட ஊளைகள்
உளறலாகித் தொலைக்கிறது
அக்கறையுடன் ஓய்வெடுக்கச் சொல்வதாக

சிறகு விரித்து தலை நிமிர்ந்தெழுந்து
காற்றில் மிதக்கையில்
சிதறியோடுகின்றது ஞாநக்கூட்டம்
ஒவ்வொரு சிறகிலும் ஒரு சிறகின் பிரதியாக
ஆயிரமாயிரம் கழுகுகள் கண் சிவப்பேறி
தன்னை வேட்டையாடும் தகிப்புடன்
பெரும்பறவையை தூக்கி மிதக்கும்
வேட்கைப் பெருக்கத்தில் சிதறியோடுகின்றன
மொத்த நரிகளும்
கத்தியொன்று தங்களிடமிருப்பதையும் மறந்து

இனியுமொரு எட்டாக் கனி கதையும்
எழுதப்படலாம் இங்கே…

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்