"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Monday, October 06, 2008

தொலைந்து போன சிந்துபாத்...

தொலைந்து போன சிந்துபாத்...







முழுகியதை மீட்டுவிடலாமென்றும்
தொலைத்த கடலைத் தொட்டுவிடலாமென்றும்
தேடியலையும் நம்பிக்கைகளிலும் பதற்றத்திலும்
சிந்துபாத்களின் தோளில் எப்பவும் ஒரு முடக்கிழவன்

அருகிலேயே கடல் கிடப்பதாக
பொய் சொன்ன கிழவன்
கடலோடு கப்பலொன்றும் கட்டித் தருவதாக
நம்பிக்கைகளைப் படரவிடுகிறான்
உச்சித்தலையிலிருந்து

பொய்யென்றோ மெய்யன்றோ பகுத்தறிய
கடல்புறத்து பழங்கிழவனின்
உடல் மொழிகள் கீழிறங்கி வருவதில்லை

முடுக்கிட இடுப்பிலுதைத்த கால்கள்
சிந்துபாத்தின் உடலொட்டியொன்றாகி அபகரித்தது
சிந்துபாத்தையும் அவனது கடலையும்

எல்லா திக்கும் சொல்லித் திரிகிறான்
பொய்க்கிழவன் தானே சிந்துபாத்தாக
மறந்துபோவதிலே இருத்தலடைபவர்களினிடையே
இப்பொழுது கடலுமில்லை சிந்துபாத்துமில்லை
அவனது லைலா அடைக்கப்பட்ட பெட்டியுமில்லை

எல்லோரும் இப்பொழுதும்
கன்னித்தீவு வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்
சிந்துபாத்தின் மீதான தீராத வெறுப்புடன்.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்