"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, October 22, 2005

கணவன் !

மாலை சாயும் வேளையானால்

முகம் கழுவி

பவுடர் பூச வேண்டும்.

காடான கூந்தலை

பிடித்துக் கட்டி

ஒரு கொத்துபூக்களை

அணிய வேண்டும்.

புருவம் திருத்திய

நெற்றியில் குங்குமம்

துலங்க வேண்டும்.

பட்டாம்பூச்சியாக

வெட்டும் இமைகளின் அடியில்

மை தீட்ட வேண்டும்.

உதடுகளில் மட்டுமல்ல -

வெட்டிய கூர் நகங்களில் கூட

சாயம் தீட்ட வேண்டும்.

வியர்த்துப் போன அக்குளில்

கமகம நறுமண திவலைகள்

அடிக்க வேண்டும்.

எல்லாம் செய்து

மகாலட்சுமியாக போக வேண்டும்

படுக்கை அறைக்கு.

ஆங்கே காத்திருப்பான் -

வளையம் வளையமாக

ரசித்து விடும் புகைமண்டலத்தினுள்

நாற்றமெடுக்கும் வாயுடன் -

கணவன்.. .. .

2 comments:

நளாயினி said...

iyoooo.

நண்பன் said...

நன்றி நளாயினி....

பாராட்ட வார்த்தைகள் வரவில்லையா?

வரும்போது பாராட்டுகள் - காத்திருக்கிறேன்..

அன்புடன்

நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்