"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, September 16, 2007

பூனைக்குட்டி



மிதக்கும் இருளினுள்

கொட்டப்படுகிறது
கொஞ்சம் வெளிச்சம்
ஒரு பூனையைத் தேடி

தட்டுப்பட்ட வெளிச்சத்தில்
சரேலென விடுபட்டுப் பாய்கிறது
இரை தேடும் பூனை

மென்பஞ்சுப் பாதங்களுள்
நார்நாராகக்கும் கூர்நகங்கள்
பாந்தமான பதவிசான
நடையலங்காரத்தினுள்
கொலைவெறியேறிய மூர்க்கம்
சிறு நாக்கு நீட்டி
மீசை நக்கி மடங்கும் நேர்த்தியில்
இரையொன்றின் மரண சம்பவம்

விடுபட்டு விட்டேத்தியாய்
வேட்டையாடித் திரியும்
இந்தப் பூனையை
இன்றாவது பிடித்துவிட வேண்டும்

இருள் நக்கும் வெளிச்சத்தில்
அதன் தீட்சண்ய முனகல்களைத்
தேடித்திரியும் காதுகளுடன்
அலைகின்றன கண்களும் கால்களும்
பூனையின் அரவமேதும் காணாது
திகைத்து நிற்கையில்
புலன்களற்ற வடிவத்தில் நிற்கிறேன்
பாதமடி ஒட்டி பின்பிரிந்து
நீளும் நிழலுடன்

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்