"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, November 04, 2007

பெண் பார்த்தல்


உன் மீதான ஈர்ப்பு
என்னிடத்தில் தோன்றிய காலத்தை
ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவில்லை
அக்காலத்தை நினைவு கொள்வதும்
அவசியமற்றதாகவேத் தோன்றுகிறதெனக்கு
உன்னைக் கண்டுவிடனுமென்ற அவா மட்டும்
என்றுமே குறைவதில்லை என்னிடத்தில்

எப்படியுனைக் காண்பதென்பது குறித்தும்
குழப்பங்கள் எதுவுமில்லை என்னிடத்தில்
உன் பெயரில் ஏற்படுத்தப்பட்ட
ஓவியங்களும் சிலைகளும் அல்ல நீ
அழகிய பட்டுகளும் நவீன ஜீன்களுமல்ல நீ

மலரின் அருகே மிதக்கும்
வண்ணத்துப் பூச்சியைப் போல்
நீ நீயாகவிருப்பதைத் தேடுகிறேன்
நீயறியாவண்ணம்
இயல்பைத் தேடுகிறேன் உன்னிடத்தில்
ஒரு சிறு துளை வழி பார்வைப் புகுத்தி

வெளிகளற்ற வெளிகளினின்றும்
சுவர்களற்ற அடைப்புகளினின்றும்
வாயில் திறந்து ஒளி பாய்கிறது
தசைகள் கிழித்து கர்ப்பப்பையினுள்
அடைக்கப்பட்ட ஆப்பிள் காட்டி

எப்பொழுதும் போல் உயிர்ச்சக்தி வடிக்கும்
உன் மார்புச் சுனைகள் மறைக்கப்பட்டன
பாலையில் நீரூற்றுகளை
எவருக்கும் அறிவிக்காது பாதுகாக்கும்
பழங்குடிகளின் பெரும் ரகசியம் போன்று

உன் நிர்வாணம் காணும்
எவருக்கும் கவனமிருப்பதில்லை
மூடவிரும்பாத திறந்திருக்கும்
உன் வாயெழுப்பும் ஓலங்களின்
அலைவரிசைகளையும்,
அவற்றின் மொழிகளையும்.

2 comments:

நளாயினி said...

உன் நிர்வாணம் காணும்
எவருக்கும் கவனமிருப்பதில்லை
மூடவிரும்பாத திறந்திருக்கும்
உன் வாயெழுப்பும் ஓலங்களின்
அலைவரிசைகளையும்,
அவற்றின் மொழிகளையும்.

nanru.

வித்தியாசமான கவிதை

நண்பன் said...

நன்றி, நளாயினி.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்