"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, September 18, 2005

மௌனம் துற.....

மௌனம் துற....

உன் மௌனம் காண்பதற்கு
விலைமதிப்பற்றது தான்
என்னருகே நீயிருக்கையிலேயென்று
என்றோ ஒரு நாள் உன்னிடம்
சொன்னேனென்பதற்காக
இன்று கண்டங்கள் இடைவெளியில்
மீண்டொருமுறை தொலைபேசியில்
மௌனம் காட்டும் உன் முயற்சியை
விலைமதிப்பற்றதென்று
சொல்ல இயலவில்லை அன்பே!

மின்னல் வேகத்தில்
கம்பிகளுக்கிடையே நகர்ந்திடும்
துடிப்புகளில்
விலை நிர்ணயிக்கப்படுகிறது
உன் மௌனத்திற்கு.

ஆதலால் அன்பானவளே
மௌனம் துற
கண்டங்கள் இணையட்டும்.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்