"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, June 10, 2005

பயங்கள்....

பயங்கள். . . . . . .

வெளிச்சமற்ற இரவில்
சில நிழல்கள்
தொடர்கின்றன

இருக்காது என்றே
அமைதிப் படுத்தி
நடக்கிறேன்

நிழல்கள்
நடந்து நடந்து
சப்தமெழுப்புகின்றன -
திரும்பிப் பார்க்கச் சொல்லி.

நின்று
திரும்பிப் பார்த்து
நிழல்களை
கண்டிக்க ஆசைதான்.

எத்தனை
கோணத்தில் திரும்பினாலும்
நிழல்களை மட்டும்
காணமுடியவில்லை.

நிழல்களின்
சப்தம் மட்டும்
கேட்டுக் கொண்டே தான்
இருக்கின்றது -
மனதினுள்.

2 comments:

Karthik Kumar said...

aiiyyoo ninatchalae bayamma irukku

நண்பன் said...

நன்றி திரு கார்த்திக் குமார் அவர்களே,

ஆனால்,பயப்படுத்தும் கவிதை இல்லை, அது.

மனதில் எழும் இச்சைகளும், அதைத் தொடர்ந்து நிகழும், மனப்போராட்டங்களும் தான் அந்தக் கவிதை.

மீண்டும் படித்துப் பாருங்கள், புரியும்...

நட்புடன்
நண்பன்

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்