"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, June 25, 2005

நேர்துருவ காதல்.....

இல்லாத உறவை
நமக்குள் நட்டு
காதலுக்கும்
நட்புக்குமான
எல்லைகளை
ஆக்ரமித்தான்
மிகை கண்டிப்புகளால்

பூதாகரமாய்
பூத்து சொறியும்
மலர்களின் கீழே
நட்பு கிடக்கிறது -
காதலின் மணத்துடன்.

பகிர்வதற்கியலா
நேர் துருவமாய்
பிறந்து தொலைத்தோம் -
வெந்து வெந்து
மடிந்து கொண்டிருக்கும்
ஊனை
உண்டு கொண்டிருக்கிறான்
அவன்....

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்