"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, June 11, 2005

குழு இயக்கத்தில் சுயம் இழந்தவனே....

நான் கர்வப்படவில்லையென்றால்
நான் நாமாக இருப்பதில்
நான் என்ன பயன் பெறும்.......?

நான் நாமுடன் இணைகையில்
நான் நமக்கு அடக்கம்......!
நான் நாமில் அடங்கியதால்
நான் இல்லையென்று
நாம் கூறினால்,
நாமினால்
நான் என்ன பயன் பெறும்?

நான் நானை மறந்து
நான் நீயை
நான் ஆக நினைப்பதுவா
நான் நாமில் அடங்கிய பயன்?

நான் நீயாக இருக்கும் நாம்
நான் நானை இழந்து
நான் நாமாகும்.

நான் நானாக இல்லையென்றால்
நான் நாமாகவும் இல்லை.
நான் நானாக இருக்கையில்
நான் தான் நாம்.

மீண்டும் -

நான் கர்வப்படவில்லையென்றால்
நான் நாமாக இருப்பதில்
நான் என்ன பயன் பெறும்.......?

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்