"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, April 13, 2007

மன்னிக்கலாமா ராமனை?

இந்த வார தமிழ் மணமே அல்லோலகல்லோலப்பட்டுக் கொண்டிருக்கிறது - ராமன் போன்ற உத்தமன் தான் என்ற தோல் போர்த்திய ஒரு வலைப்பதிவர் செய்த அயோக்கியத்தனத்தால். He proved that the intellectual giants of the byegone era are fast turning into pygmies.

ஒரு பதிவில் மன்னிப்பு கேட்டு, குரு என வணங்கி விட்டு, பின்னர் தனிமையில் அமர்ந்து கொண்டு, அந்த குரு எழுதிய மாதிரி ஆபாசங்களை அரங்கேற்றிய அந்த வலைப்பதிவரின் வக்கிரத்தைத் தெரிந்து கொண்டும் அவருக்கு மேலும் ஒரு மன்னிப்பை வழங்கி இருக்கிறார்கள் அமுக அன்பர்கள்.

பெருந்தன்மையானவர்கள்.

ஆனால் இந்த வலைப்பதிவரின் மோசடித்தனத்தால் பாதிக்கப்பட்ட, மனம் வருத்தப்பட்ட மற்ற பல வலைத் தள அன்பர்கள் மன்னித்து விட்டார்களா? இல்லை அமுக அவர்களையெல்லாம் மறந்து விட்டார்களா?

இந்த நபர் தான் சல்மா அயூப் என உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

அதாவது ஒரு இஸ்லாமியப் பெண் தன்னை ஒரு சீர்திருத்தவாதியாகவும், இஸ்லாத்தைத் தட்டி கேட்பதாகவும் பொய்யாகவும், புனைவாகவும் ஒளிந்திருந்து விமர்சனங்களை எழுப்பி இஸ்லாமிய பதிவர்களின் மன உளைச்சலுக்குக் காரணமானவர். அப்பொழுதே இவ்வாறு எழுதுபவர் ஒரு உண்மையான இஸ்லாமிய பெண் அல்ல என்று உறுதியாகத் தெரிந்ததால், அந்த போலியின் வலைத்தளத்தில் எந்தப் பின்னூட்டங்களும் நான் இடவில்லை. ஆனால், அந்தப் போலிக்கும் மாய்ந்து மாய்ந்து விளக்கம் எழுதிக் கொண்டிருந்த அன்பர்களும் நண்பர்களும் உண்டு. மற்றும் அந்தப் போலியை உண்மை என நம்பி, இஸ்லாம் இப்படித்தான் என தங்கள் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொண்ட நண்பர்களால் இஸ்லாமியர்கள் அடைந்த வருத்தத்திற்கு யார் பொறுப்பேற்பது.?

இப்பொழுது அனைத்து நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் - இஸ்லாத்தைப் பற்றிய விமர்சனங்களை வைத்தவர்களின் யோக்கியதைப் பற்றி.

உண்மையான விமர்சனங்கள் வேறு - காழ்ப்புணர்ச்சியில் எழுப்பப்பெறும் விமர்சனங்கள் வேறு என்பது.

தங்கள் கொள்கையில் - நம்பிக்கையில் - எத்தனை ஏளனத்திற்கும், இடர்பாட்டிற்கும் ஆளானாலும் மாறாது உறுதியாக இருப்போம் என்று நிருவிக் காட்டிய இஸ்லாமிய வலைப்பதிவர்களைக் குறித்து மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள் - அடிப்படைவாதிகள் என்று.

இப்பொழுது அனைத்து வலைப்பதிவர்களின் மனசாட்சியின் முன் நான் வைக்கும் கேள்வி:::

சொல்லுங்கள்,

யார் அடிப்படைவாதி என்று?

தங்கள் மதத்தைப் பற்றிய செய்திகளை மட்டும் தங்களுக்குள்ளே பகிர்ந்து கொண்டு, நட்புடன் எழுதிக் கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக வம்புக்கு இழுத்துவிட்டு, பின்னர் அவர்கள் பதில் எழுதத் தொடங்கியதும், அய்யோ, அம்மா இவன் அடிப்படைவாதி என புலம்புவது எந்த வகையில் நியாயம்?

இந்த நபர் குறித்து பல செய்திகளும் வெளி வருகின்றன.

இவர் எழுதிய போலி பெயர்களில் மேலும் சில

ஆரோக்கியம்

ஏமாறாதவன்

என்ற பெயர்களிலும் எழுதியவர் இவர் என சொல்லும் பொழுது -

இவரால் நான் தனிப்பட்ட முறையிலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன்.

'எல்லா அய்யன்களையும் போட்டுத் தள்ள வேண்டும்...' என்ற அளவில் கூட வன்முறைகளையும் பிற இனத்தவரையும் தாக்குதல் கூடாது என்று எழுதி வாங்கிக் கட்டிக் கொண்டவன்.

'எந்த பிராமணனும் என்னை இம்சிக்கவில்லை ' என ஒரு இஸ்லாமியனாக இருந்து கொண்டும், என் மனசாட்சியைத் தொட்டு, தைர்யமாக என வலைப்பதிவில் எழுதியவன். அந்த வரிகளை எழுதி முடித்து ஒரு மாதத்திற்குள்ளாகவே, அந்த வரிகளை சோதனை செய்யும் முயற்சியாக இந்த நபர் மாட்டிக்கொண்டிருக்கிறார்.

ஏமாறதவன் என்ற பெயரில் எழுதிய இந்த நபர் - மரியாதை இனியும் அவசியமோ? - இவன் ஏமாறதவன் என்ற பெயரில் எனக்கு ஒரு பின்னூட்டம் அனுப்பி இருந்தான் - நான் அதை
பிரசுரிக்கவில்லை. அதிலே அவன் எழுதிய வரிகள் - 'நண்பன் ஷாஜி ஐயா - உங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் ரொம்ப தூரம்' என்னுடைய ஆன்மீகத்தைப் பற்றி விமர்சிக்க இவனுக்கு என்ன அருகதை இருக்கிறது?


நான் பேச விரும்பும் ஆன்மீகத்தைப் புரிந்து கொள்ள இவனால் முடியுமா?

குரானில் ஆபாசம் நிறைந்திருக்கிறது என எழுதிய நாய் இவன் தானே? Secret, ஆடை என்று குழப்பிக் கொண்டு, இப்னு ஹம்துனை வம்புக்கு இழுத்தவன். பின்னர், அபூமுஹை விளக்கம் எழுதினார் - நான் ஆறு குரான் மொழி பெயர்ப்புகளைக் கொண்டு, அவற்றிற்கான விளக்கத்தைக் கொடுத்த பொழுது, புரிந்து கொண்டதற்காகவும், தவறாக எழுதியதற்காகவும், ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத இந்த நாய் - என் தளத்திற்கு பின்னூட்டம் அனுப்பி இருந்தான் - எனக்கு ஆன்மீக அறிவு கிடையாது என்று. உண்மையான விளக்கம் வேண்டி எழுதிய வலைப்பதிவராக இருந்திருந்தால், அந்த விளக்கங்களுக்காக நன்றி கூறி இருக்க வேண்டும். ஆனால், அறிவுகளில் ஒன்று குறைவாக இருக்கும் இவனிடத்தில் நாகரீகம் காட்ட வேண்டுமா?

இவ்வாறு தவறு செய்ததை ஆதாரபூர்வமாக சுட்டிக் காட்டி விளக்கம் கொடுத்தும், அதைக் கண்டு கொள்ளாமல், மேலும் மேலும் இஸ்லாத்தைப் பற்றிக் கேவலமாக உண்மமக்குப் புறம்பாக பேசவும் எழுதவும் செய்த இவனுக்கு அமுக நண்பர்கள் மன்னிப்பு வழங்கியதை கொஞ்சம் கூட ஜீரணிக்க இயலவில்லை.

மன்னிப்பு என்ற வார்த்தையின் மகிமையை அறிந்தவனிடத்தில் தான் அதை வழங்க வேண்டுமே தவிர, அதன் மாண்புகளைப் பற்றித் தெரியாத இவனுக்கு மன்னிப்பு வழங்குவது என்பது தன்னைத் தானே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும்.

22ஆம் தேதிய வலைப்பதிவர்கள் சந்திப்பிற்கு போக வேண்டும் - அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருந்தது. ஆனால், இந்த நாயும் கலந்து கொள்ளும் என்று தெரியவந்த பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வது என்பது என்னால் இயலாது என்றே நினைக்கிறேன்.

ஏனென்றால்,

- குரானில் ஆபாசம் மலிந்து இருக்கிறது என்ற பொய்யான செய்தியைப் பரப்பிய இவனது முகத்தில் குறைந்தபட்சம் காரி உமிழாமல் நான் திரும்பினால்,

- இஸ்லாமிய அடிப்படை வாதி என்ற முத்திரை குத்தப்பட்டுவிடுவோமோ என்ற அச்சத்தால் எட்டு மாதங்கள் வலைப்பதிவே எழுதுவதை விட்டு அஞ்ஞான வாதம் புரிந்த என் மன வேதனைகளுக்காக இவன் முகத்தில் காரி உமிழாமல் நான் திரும்பினால்

- இஸ்லாமிய வலைப்பதிவர்களை தொடர்ந்து அவமானப்படுத்த வேண்டுமென்று முனைந்து செயல்பட்டவனை இவன் என்று தெரிந்து கொண்டும் இவன் முகத்தில் காரி உமிழாமல் நான் திரும்பினால்

அது என்னுள்ளே ஏற்படுத்தும் குற்ற உணர்விற்கு யார் பெறுப்பேற்பது?

அமுக நண்பர்கள் மன்னித்திருக்கலாம்.

ஆனால், இஸ்லாமிய வலைப்பதிவர்களே நீங்கள் சொல்லுங்கள் -

இவன் மன்னிக்கப்படவேண்டுமா?

இந்த விடுமுறையில், சென்னைக்கு வரும்பொழுது கண்டிப்பாக இது குறித்து இஸ்லாமிய அமைப்புகளைச் சந்தித்து உரையாடுவேன். காவல்துறைக்கும், வழக்காடு மன்றங்களுக்கும் இவனை இழுத்துச் செல்வதன் சாத்தியதைப் பற்றிக் கண்டிப்பாக ஆய்வோம்.

மேலும்

உடனடியாக இஸ்லாமிய வலைப்பதிவர்கள் இவனது அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் செய்தி அனுப்பி,

இவன் செய்த ஈனச்செய்கைகளைக் குறிப்பிட்டு, மத நல்லிணக்கத்திற்கு தெரிந்தே வேட்டு வைக்கும் இவன் போன்ற நபர்களுக்கு தொடர்ந்து உங்கள் நிறுவனத்தில் பணி கொடுத்து, சம்பளம் கொடுத்து ஆதரிக்க வேண்டுமா ?

என்ற கேள்வியுடன் மின்னஞ்சல் அனுப்பலாமா? இது குறித்தும் உங்கள் கருத்துகளை எழுதுங்கள். எல்லோருக்கும் சம்மதமென்றால், அதை செய்யலாம்.

இது குறித்து, சென்னை வரும் பொழுது சந்திக்க விரும்பும் வலைப்பதிவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் தனி மடல் மூலமாக.

12 comments:

ILA (a) இளா said...

நான், எனது, எமது என்ற கர்வம் கொள்ளல் கூடாது.

Anonymous said...

அப்பாடா... இப்போதாவது.. ஒரு சகோதரனாவது எதிர்த்து பதிவு போட்டானே மனம் மகிழ்கிறது.

அப்படியே அவனின் இந்த இழி செயலுக்கு துணை போன மற்ற மூலவர்களையும் தேடி பிடித்து.. உதைக்க வேண்டும்.

இவர்கள் தான் அடிப்படை பார்ப்பனர்கள்.

நண்பன் said...

ILA(a)இளா.

//
நான், எனது, எமது என்ற கர்வம் கொள்ளல் கூடாது.
//

நான் அகந்தை பிடித்தவன் என்றா சொல்கிறீர்கள்.

நீங்கள் என் பதிவுகளை வாசிக்க வில்லை என்று தான் தோன்றுகிறது. ஆன்மீகத்துக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம் என்று சொல்லிக் கொண்ட தன்னடக்கம் தான் உங்களுக்கு அகந்தையாகத் தெரிகிறதா?

சில இடங்களில், சில தேவைகளின் போது, ஒருவன் தன் தகுதியைத் தன்னம்பிக்கையோடு பேசிக் கொள்வது அத்தியாவசியம்.

ஒரு மனிதனின் தனித்துவம் - அகந்தை அல்ல. தன்னம்பிக்கையில் தவறு காணாதீர்கள்.

மரைக்காயர் said...

//இப்பொழுது அனைத்து நண்பர்களுக்கும் தெரிந்திருக்கும் - இஸ்லாத்தைப் பற்றிய விமர்சனங்களை வைத்தவர்களின் யோக்கியதைப் பற்றி. //

இதுதான் இவங்களோட யோக்கியதை! குறைந்த பட்சமாக, ஏமாறதவன் என்ற பெயரில் எழுதிய இந்த அயோக்கிய ராஸ்கல் முகத்தில் காரி உமிழவாவது வேண்டும்.

அபூ முஹை said...

//மன்னிக்கலாமா ராமனை?//

கூடாது!

இஸ்லாத்தைத் தூற்றியதற்காக அல்ல!

எதற்கும் துணிந்த இவன் தண்டிக்கப்பட வேண்டும்!

மனித இனத் துரோகியை தண்டிப்பது இன்னொரு துரோகி திருந்துவதற்கு படிப்பினையாக இருக்கும்!

பதிவுக்கு நன்றி

அன்புடன்,
அபூ முஹை

Anonymous said...

//
இதுதான் இவங்களோட யோக்கியதை! குறைந்த பட்சமாக, ஏமாறதவன் என்ற பெயரில் எழுதிய இந்த அயோக்கிய ராஸ்கல் முகத்தில் காரி உமிழவாவது வேண்டும்.//

வழக்கு தொடுங்கள் , ஏதாவ்து ஒரு ஆரம்பம் வேண்டாமா ? முன்னால் ஏமாறாதவன் போனால் பின்னாலேயே இந்த மரைக்காயரும் வருவார் , அந்த ஆள் இந்து மதத்தை பற்றி எழுதாத இழிவா ?

தயவு செய்து தொடங்கி வைக்க வேண்டுகிறேன்.

நண்பன் said...
This comment has been removed by the author.
நண்பன் said...

// முன்னால் ஏமாறாதவன் போனால் பின்னாலேயே இந்த மரைக்காயரும் வருவார் //

கரு.மூர்த்தி,

இதற்கு முன்னர், புத்தகமாக அடித்து விற்பனை செய்து இந்து மதத்தைப் பற்றி அனைவருக்கும் அறிவூட்டிய அத்தனை பேர் மீதும் நீங்கள் வழக்குத் தொடர்ந்து முடித்து விட்டீர்களா?

(மேற்கண்ட இந்த வாக்கியத்தை எழுதியதனால், மரைக்காயர் எழுதியதை நான் ஆதரிக்கவில்லை. அது தேவையற்றது. ஆனால், போலியான பெயரில் வந்து அனைவரையும் ஏமாற்றவோ, முட்டாளாக்கவோ முனையவில்லை.)

// தயவு செய்து தொடங்கி வைக்க வேண்டுகிறேன்.//

நன்றி.

ஆனால், நான் கருத்து கேட்டது, இஸ்லாமிய வலைப்பதிவர்களிடம் மட்டுமே.

தயவு செய்து, இஸ்லாமிய சகோதரர்கள் பேசட்டுமே!!!

நன்றி,

Unknown said...

மன்னிப்பதே நற்பண்பு.

இறைவன் மிகுந்த மன்னிப்பாளன் அதனால் அவன் மனிதர்கள் மன்னிப்பதையும் விரும்புகிறான். இறை பண்புகளில் ஒன்றில் குறைந்த அளவையாவது நாமும் பெறுவோம்.

அவன் மனந்திருந்தட்டும் என துஆ செய்வோம்.

நண்பன் said...

மரைக்காயர், அபூமுஹை, சுல்தான் - நன்றி.

வியப்பாக இருக்கிறது.

இழிவாகப் பேசியவர்களை எதிர்த்து காவல்துறை, நீதிமன்றம் வழியாக முறையான நடவடிக்கை எடுக்க எத்தனை பேர் தயார் என்றதும் - வந்த பதில்கள் - மூன்றே மூன்று.

மரைக்காயர் - எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. எழுதியவரின் யோக்கியதையைத் தவிர.

அபூமுஹை - தண்டிக்க வேண்டும் ஆனால் இஸ்லாத்தின் பேரால் அல்ல.

சுல்தான் - மன்னித்து விட்டு விடலாம். இந்த நபருக்காக பிரார்த்தனை செய்வோம்.

இந்த மூவரும் என் மீது உள்ள தனிப்பட்ட அன்பினால் எப்பொழுதுமே எழுதி வருபவர்கள்.

ஆனால், அன்று என்னையும் மற்றும் சிலரையும் நேசகுமாருடன் தொடர்பு படுத்தி இஸ்லாமிய இனத்துரோகி பட்டம் கொடுத்த மகிழ்ந்த நண்பர்கள் எங்கே?

அல்லது, how to follow the lead of this eccentric என்று விலகிவிட்டனரா?

அல்லது போலி, ஆப்பு, வி.க. போன்ற அநாமதேய நண்பர்கள் அழைத்திருந்தால் வரிசையில் வந்து நின்று குழுமி இருப்பார்களோ?

இந்நிலையில், இஸ்லாமியர் அல்லாத கரு.மூர்த்தி என்ற நண்பரின் ஆதங்கத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். யாராவது தொடங்கி வையுங்கள் - கலகம் விளைந்தால் தான் நன்மை பிறக்கும் என்ற ரீதியில், இந்த அநாகரீகங்கள் ஒரு முடிவுக்கு வந்து விட்டால், நன்றாக இருக்குமே என்ற அந்த ஆதங்கம் - பொதுவான நண்பர்களும் இருக்கத் தான் செய்கின்றனர் என்பதைக் காட்டுகிறது.

எத்தகைய இழிவுக்குட்படுத்தப்பட்டாலும், இறுதியில் இஸ்லாமியர்கள் தாங்கள் பண்பால் உயர்ந்தவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

மரைக்காயருக்கு, இவர்களின் யோக்கியதை அம்பலப்பட்டுப் போனதே நிம்மதியைத் தருவதாக இருக்கிறது.

அபூமுஹைக்கு, இஸ்லாத்தின் பெயரால், இவர் தண்டிக்கப்படக்கூடாது.

சுல்தான் அவர்களுக்கு மன்னித்து விடுவதோடு மட்டுமல்லாது, அவரின் நலத்திற்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும்.!!!

இந்த இஸ்லாமியர்கள் எங்கே?

சந்துபொந்துக்குள் ஒளிந்து கொண்டு, சுவர்க்கோழி போல் இரைந்து கொண்டு, விமர்சனம் என்ற பெயரில், தங்களை இழிவு செய்து கொள்ளும் பிறவிகள் எங்கே?

மரைக்காயர், அபூமுஹை, சுல்தான் - Hats off to you, friends.

இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

சுல்தான் சொன்னது போல், இறைவன் அந்த மனிதருக்கு எல்லா நன்மைகளையும், வளத்தையும் கொடுக்கட்டும்.

ஆமீன்.

அன்புடன்
நண்பன்

Anonymous said...

//இந்த விவாதத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.//

அன்பு சகோதரரே,

வேண்டும். இந்த விவாதம் "இங்கு" இத்தோடு முடிவுக்கு வர வேண்டும்.

சரியான நேரம் கிடைக்காமையினால் பதிவுகளில் தொடர முடியவில்லை. எனினும் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவங்களை தொடர்ந்து கவனித்தே வருகின்றேன்.

தங்களின் பதிவை கண்டவுடன் பதில் எழுத கைகள் பரபரத்தாலும் பதில் எழுதாமைக்கான காரணம் என்ன என்பதை உங்கள் பதிவுக்கு எதிர்வினையாக வந்தது போல் வந்த "நேச" பதிவுகளை கண்டதும் புரிந்திருப்பீர்கள்.

இஸ்லாமிய சமூகத்தின் மீது எந்த நாதாரி வேண்டுமெனினும் எப்படி வேண்டுமெனினும் புழுதி வாரி அவதூறுகளை வீசலாம். இஸ்லாத்தை கேவலப்படுத்த நினைத்து "சல்மா" கில்மா என முஸ்லிம் பெயர்களிலேயே வந்தும் என்ன மாதிரி வேண்டுமெனினும் காம வியாபாரத்தை கடை விரிக்கலாம்.

ஆனால் இதற்கெல்லாம் என்ன காரணம் கொண்டும் ஒரு முஸ்லிமும் ஹூம் என்று கூட முனகி விடக் கூடாது.

உடனே பட்டம், "அடிப்படைவாதி, தீவிரவாதி"

இது தான் இன்றைய இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை.

அதற்கு தமிழ்வலையுலகமும் விதிவிலக்கல்ல என்பதை வலையுலகுக்கு வந்த நள் முதலே கண்டு வருகின்றேன்.

தங்களின் இந்த பதிவுக்கு என்ன பதில்கள் வருகின்றன என்பதை தங்களைப் போலவே நானும் கவனித்தே வந்தேன்.

எதிர்பார்த்தது வீண்போகவில்லை.

முஸ்லிம் வலைப்பதிவர்களின் பதிலும், வெட்கமின்றி பொது இடத்தில் மலம் கழிப்பவர்களின் எதிர்வினையும் நான் எதிர்பார்த்ததில் கொஞ்சமும் மாறவில்லை.

இப்பொழுது உங்கள் பதிவிற்காக நான் போட நினைத்திருந்த பதில்:

சகோதரரே விரைவில் முஸ்லிம் தீவிரவாதிகளிடமிருந்து "கொலை மிரட்டல்" என பதிவுகள் பறப்பதையும் அதில் ஜிங்கிகள் அநானிகளாக அடிதாங்குவதையும் காண்பீர்கள்.

அதன்மூலம் விஷயத்தின் தீவிரம் குறைக்கப்பட்டு அனைத்தும் சக வலைப்பதிவர்களால் மறக்கப்படும். நாய்கள் மீண்டும் பலப் பெயர்களில் பொது இடத்தில் மலம் கழிக்கப் புறப்படும்.

உங்களுக்கு இந்த வேலை ஒத்துவராது. தேவையா உங்களுக்கு இது?

விஷயம் அறியாமல் தவறு செய்பவனை மன்னித்து திருத்த முயலலாம்.

அனைத்தையும் அறிந்து கொண்டு, வேண்டுமென்றே திட்டமிட்டு செயலாற்றும் கேவலப்பிறவிகளை மன்னிப்பதால் மாற்றம் விளையும் என்றா கருதுகின்றீர்கள்?

கேவல ஜென்மங்களை கேவலப்படுத்தியே ஒதுக்க வேண்டும்.

அநியாயம் இழைப்பவன் அநியாயம் இழைத்துக் கொண்டே இருக்கும் வேளையில் மன்னித்து விட்டால், மன்னிப்பவனின் தலையில் திரும்பவும் மன்னிக்க தலை இருக்காது.

மனம் திருந்தி மன்னிப்பு கோரினால் இன்முகத்தோடு மன்னிப்பின் வாசலை முழுமையாக திறந்து கொடுக்க வழிகாட்டும் அதே இஸ்லாம் தான், தான் செய்த தவறை சிறிது கூட உணரத்தலைபடாமல் தொடர்ந்து அநியாயம் இழைப்பவனை அவன் வழியிலேயே பதில் சொல்லவும் சொல்கிறது.

எனவே அந்த கேவலப்பிறவிகளுக்கு கேவலமான மொழியிலேயே பதில் சொல்லப்பட வேண்டும்.

சொல்வோம் இன்ஷா அல்லாஹ்.

அன்புடன்
இறை நேசன்.

நல்லடியார் said...

நண்பன் ஷாஜகான்,

தாமததமான கருத்துக்கு மன்னிக்கவும்.

ஜெயராமன் என்ற ஆசாமிதான் ஆரோக்கியம் என்ற பெயரில் அநாகரிகமாக எழுதும் நப்ர் என்பதை சில மாதங்களுக்கு முன்பே யூகித்திருந்தேன். ஆரோக்கியம், சல்மா என்ற இந்து அல்லாத பெயர்களை புணைப்பெயராக இட்டதன் நோக்கம் எதிர்வினைகள் சம்பந்தப்பட்ட கிறிஸ்தவம் அல்லது இஸ்லாத்திற்கு எதிராகத் திரும்ப வேண்டும் என்ற நண்ணோக்கிலேயே என்பதையும் முன்பே யூகித்திருந்ததால்தான் அவர் எதிர்பார்த்தபடி எதிர்வினைகள் திசை திரும்பாமல் அவர் நினைப்பில் மண் விழுந்தது.

அப்புறம், இஸ்லாம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட மார்க்கமல்ல. தங்களின் மதம்/நம்பிக்கைகளுடன் சுயஒப்பீடு செய்ததாலேயே இஸ்லாம் தனித்து நின்று கோலோச்சுகிறது.

முஹம்மது நபி இஸ்லாத்தை பாகன் அரபிகளிடம் சொன்னபோது இருந்ததைவிடவா இஸ்லாத்தைச் சொல்பவர்களுக்கு எதிரான மன உளைச்சல்கள் வந்துவிடப் போகிறது? தனக்காக உயிரையும் விடத் தயாராக இருந்தவர்களை, இஸ்லாத்தை ஏற்றதற்காக ஈவு இரகமின்றி கொன்றொழித்த படுபாதகர்களையும் மன்னித்த மாமனிதரின் உம்மத்துக்களாகிய நம்மிடம் மட்டும் மன்னிப்பு இல்லாமல் போய்விடுமா?

ஜெயராமனோ நேசகுமாரோ யாரக இருந்தாலும் அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவது நம் கையில் இல்லை. உலகத் தண்டனைகளால் திருந்தியவர்களைவிட இறைத்தண்டனைகளே நிரந்தரமாகத் திருத்தும். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே எனினும் அவர்களின் நேர்வழிக்காகவும் துஆச் செய்வோம். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருப்பதால் பொறுமை காப்போம்!

இதுபற்றிய எனது கருத்தை, தனிப்பதிவாகவும் இருகிறேன்,

அன்புடன்,

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்