"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, April 27, 2007

காதலைத் தேடி.........

நேற்றிரவு
அகராதியில் தேடியலைந்தேன்
காதலென்ற சொல்லை.

எங்கோ
தொலைந்து போய்விட்டிருந்தது.

இன்றோ
அது மீண்டும் வந்தது
எவ்வுடையும் அணியாது
எந்தப் பம்மாத்துமில்லாது
ஏகாந்த வெளிகளில்
புலரும் ஒளிபோல்

மீண்டும் பிடித்து
அடைத்து வைத்தேன்
அகராதியினுள்.

இப்பொழுது,
அங்கே சொல் இருக்கிறது.
பொருள் தானில்லை.

வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பில்
உதிரா வண்ணம் போல்
அது மட்டும் உன்னிடத்திலே
ஒட்டிக் கொண்டுத் திரிகிறது
அகராதிகளை அர்த்தமற்றதாக்கி.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்