"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Friday, December 16, 2005

கர்மா

தன் நிழலை
ஒட்டி வைத்தான்
தான் உண்டாக்கியதன் மேல்.

தன் தவற்றிற்கு
தன் நிழல்
தண்டனை அடைவது
அவனுக்குத் தெரியவில்லை.

இறந்த காலத்தின்
தவறுகள் படிந்த
நிகழ்காலத்தை
வாழ்வது
நிஜம்மான அவனின்
நிழல் மட்டுமே

செத்தவன்
கர்மம் தொலைக்க
சமயம் வாய்க்குமுன்னே
வந்திறங்கும் தண்டனை
காலத்தின் கைப்பிடியில்
குழந்தையாக அவன்

திடீர் தாக்குதல்
வலியில் திகைத்து
வலி வந்த
வகையைத் தேடுவானா?
வலித்த வேதனையை
அழுது தீர்ப்பானா?

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்