"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, December 22, 2005

புதிய தேவாலயம்....

புதிய தேவாலயத்தின் கட்டுமானப் பணிகள் 10மில்லியன் திர்ஹம் செலவில் ஜெபல் அலியில் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த தேவாலயம் தான் கிரீக் ஆர்த்தோடாக்ஸ் பிரிவினரின் முதல் தேவாலாயம் ஆக இருக்கும் - அமீரகத்தில்.

பாரம்பரியமிக்க பைசாண்டைன் மரபு வழக்கப்படி அமையும் இந்த தேவாலயத்திற்கு செய்ண்ட் மேரி கிரீக் ஆர்த்தோடாக்ஸ் தேவாலயம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தேவாலயம் கட்டப்படுவதற்குத் தேவையான நிலத்தை துபாயின் இளவரசரும், அமீரகத்தின் பாதுகாப்பு மந்திரியுமான ஷேக் முகமது அவர்களால் நன்கொடையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பத்து மில்லியன் திர்ஹம் செலவை ஈடுகட்ட வசூல் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த தேவாலயத்திற்கு துபாயில் இருந்து 400 பேரும், ஷார்ஜாவில் இருந்து 200 பேரும் வருவர். விழாக்காலங்களில் இது இருமடங்காக ஆகலாம்.

இது வரையிலும் இவர்கள் மற்ற தேவாலயங்களில் - குறிப்பாக ஹோலி டிரினிடி தேவாலயத்தில் பிரார்த்தித்து வந்தனர். அந்த தேவாலயத்துக்கு, மற்ற கிறித்துவ மத குழுக்களும் அதிகம் வரத் துவங்கியதால், இட நெருக்கடியுடன், நேர நெருக்கடியும் ஏற்படுவதால், புது ஆலயம் கட்டுவதான திட்டம் செய்து, இப்பொழுது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தி கிறித்துவர்களை - ரஷ்யா, சிரியா, கிரீஸ், உக்ரைன், மற்றும் சைப்ரஸ் நாட்டு மக்களால் ஆன இந்த கிறித்துவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேவாலய நடவடிக்கைகள் - அரபு மற்றும் கிரேக்க மொழியில் நடைபெறும்.

அமீரகத்தின் மத நல்லிணக்கத்திற்கும், சகிப்புத் தன்மைக்கும் இது மேலும் ஒரு நல் உதாரணமாகும்.

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்