"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Sunday, December 18, 2005

ஆயிஷா என்ற அற்புதம்

ஆரோக்கியம் என்ற அறியாமை நிறைந்த மனிதர் -

ஒரு கண்டுபிடிப்பு செய்திருக்கிறார் - //நண்பன் என்ற ஷாஜஹான்//

பாவம். அவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டாம்.

தமிழ் மணத்தில் போய் பீர் என்று பார்த்திருந்தாலே தெரிந்திருக்கும் - நான் என் வலைப்பூவை பீர் முகமது ஷாஜஹான் என்ற பெயரில் தான் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

என்றாலும் ஒரு நண்பர் எழுதிய தளத்தில் பின்னூட்டமிட்டிருக்கிறார் - இஸ்லாத்தைத் தோற்றுவித்த நபிகளைப் பற்றி.

இந்த மனிதர் - ஆரோக்கியம் - நாகரீகம் என்பதை துளியும் அறியாதவர் என்பது அனைவரும் அறிந்தது தான். இதனால் அவருடைய பதிவுகள் எதையும் வாசிப்பதில்லை. ஆனால், இஸ்லாமியப் பெயர் தாங்கிய எவரையும் எப்படியும் சீண்ட்டுவது, வம்புக்கு இழுப்பது என்ற வகையில் செயல்பட்டு, அவர்களையும் (எங்களையும்) ஆராய்ச்சிப் பார்வையோடு இஸ்லாமிய நூல்களைக் கற்க வைத்து - ஆன்மீகத்தில் நாட்டம் கொள்ள வைக்காமல் விடக்கூடாது என்ற முனைப்பில் இயங்குகிறார் போலிருக்கிறது.

பாருங்களேன் - இதுவரையிலும் நான் எந்த ஒரு ஆன்மீகப் பதிப்பையும் எழுதியதில்லை. ஏனென்றால் நமக்கு அத்தனை பெரிய ஞானம்.!!!

அதனால் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் - நல்லடியார், இறைநேசன், அபு முஹை ஆகியவர்கள் செய்யட்டும் என்று ஒதுங்கிக் கொண்டு - வெறுமனே அரசியல், சமூகத தளங்களில் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துகளுக்குப் பதில் சொல்லும் வகையில், வரும் செய்திகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன்.

அதில்லாமல், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் - கொஞ்சம் தமிழ் உணர்வாளர்கள் மீது ஒரு வாஞ்சை என்று ஒரு கலக்கலான ஆளாக இருந்தேன்.

ஆனால், ஆரோக்கியமற்ற நமது நண்பரின் தூண்டுதலால் - இப்பொழுது இஸ்லாமியப் புத்தககங்களையும் தீவிரமாக வாசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறேன் - ஆரோக்கியத்திற்குப் பதில் சொல்ல அல்ல. சுய அறிவுக்காக மட்டும் தான்.

ஆனால், படித்த பிறகு தான் பிரமிப்பு எழுகிறது - இத்தகைய வரலாறுகளை ஏன் முன்னரே படிக்கவில்லை என்று. வெறுமனே சிகரெட் பிடிப்பதை விட்டதை கட்டுரையாக எழுதி காலத்தை வீணடித்து விட்டோமே என்று.

இவ்வாறு வாசித்த பொழுது தான் தோன்றியது. இதை எழுதியே ஆக வேண்டும் என்று.

இது யாருக்குமான பதிலும் இல்லை. என் வாசிப்பும் வாசித்ததைப் பகிர்ந்துகொள்ளுவதும் மட்டும்.
****
Hadhrat Ayesha Siddiqa - Her life and works என்றொரு புத்தகம் இருக்கிறது. எழுதியவர் அல்லாமா சையத் சுலைமான் நத்வி.
****
ஆயிஷாவுக்கு திருமணமாகும் பொழுது வயது - 9.

சிறிய வயது தானென்றாலும் - அப்பொழுதே அவர் மனதாலும் உடலாலும் வளர்ச்சியில் முழுமையடைந்திருந்தார். குரான் வாசகங்களை ஒருமுறை கேட்டாலே அதை மனனம் செய்வதும், குரான் வாசகங்கள் இறங்கிய சந்தர்ப்பங்களை நினைவில் வைத்திருப்பதும், பெரியவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதும் என பல நல்ல குணங்கள் நிறைந்தவராக விளங்கினார். தந்தையார் - அபூபக்ர் சொல்லித்தரக்கூடிய கவிதை வரிகளையும், பழ மொழிகளையும் மனதில் ஆக்கிக் கொண்டிருந்தார்.என்றாலும், திருமணம் முடிந்ததும் உடனே நபிகள் அவர்களுடன் சென்று விடவில்லை. வயதின் காரணமாக தந்தையார் வீட்டிலே தங்க வைக்கப்பட்டிருந்தார். பருவ வயதிற்கு வந்த பின்னே தான் அவர் வாழ்வதற்காக நபிகள் அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்.

வலைப்பூக்களிலே பலர் காழ்ப்புணர்ச்சியுடன் எழுதி வருவதற்கு எந்த வித ஆதாரமும் கிடையாது. இவர்கள் ஆதாரமாக கொடுப்பதெல்லாம் - சில இணையதள முகவரிகள் மாத்திரமே. இந்த இணைய தள முகவரிகள் எத்தனை தூரம் உண்மையானவை என்று இணையத்தில் இயங்கும் எல்லோருக்கும் எளிதாகப் புரியும். ஒரு இரண்டாயிரம் ரூபாய் இருந்தால், ஒரு வருடத்தை இணையத்தில் ஓட்டலாம். இவையெல்லாம் குரோத மனப்பான்மையுடன் துவங்கப்பட்டவையே.



கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டுகளாக சொல்லியும் மக்கள் மத்தியில் எடுபடாமலேபோன குற்றச்சாட்டுகள் தான் இவை.

என்றாலும் புதிதாக குற்றச்சாட்டு சொல்கிறார்கள் -

காம இச்சைக்காக நபிகள் பலதார திருமணத்தைச் செய்து கொண்டார்கள் என்று.

தவறு.

இஸ்லாத்தில் - வாழும் முறையை விளக்க மூன்று வகையான வழிமுறைகள் உள்ளன.

1. குரான், 2. ஹதீதுகள் 3. நபிகளின் வாழ்க்கை முறை.

சிலவற்றை சொன்னால் புரியும். சிலவற்றிற்கு முன்னுதாரணங்கள் இருந்தால் மட்டுமே புரியும். ஒரு வாழ்க்கை முறைக்கு முன்னுதாரணம் வேண்டுமென்றால் அந்த முன்னுதாரணத்தை நபிகள் வாழ்வில் வாழ்ந்து காட்டினால் மட்டுமே ஏற்கப்படும் என்பது அனைவருக்கும் எளிதில் விளங்கக் கூடிய காரணம் தான். அதனாலே பலதரப்பட்ட வாழ்க்கை முறையையும் நபிகள் ஒருவர் மூலமே உதாரண வாழ்க்கையாக காட்ட வேண்டி இருக்கிறது. அதனால் நபிகள் வாழ்ந்த முறைகள் அனைத்தையும் ஒருவன் தன் வாழ்விலே செய்து விட வேண்டுமென்பதில்லை. தனக்குப் பொருந்தியவற்றை எடுத்துக் கொள்வது என்பது சரியானது. நேர்மையான மனதுடன் இருப்பவர்கள் இதை உணர்வார்கள் - மாற்று மதத்தினர் என்றாலும்.

ஆக, நபிகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு செய்தி இருக்கின்றது.

முதலாவது காம இச்சை தீர்க்க திருமணங்களா?

இல்லை.

அது தான் குறிக்கோள் என்றால் நபிகள் தனது இருபத்தைந்தாவது வயதில், தன்னை விட பதினைந்து வயது மூத்த விதவையைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியதில்லை. அப்படியே திருமணம் செய்து கொண்டிருந்தாலும் அந்த பந்தத்திற்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டிய அவசியமில்லை. அந்தக் கால வழக்கப்படி, மேலும் இளம்பெண்களை திருமணம் செய்தோ - அல்லது அழகிய அடிமைகளை வாங்கியோ தனது இச்சைகளைத் திருப்தி படுத்திக் கொண்டிருக்க முடியும். ஆனால், நபிகளின் தேவை அதுவாக இருக்கவில்லை. நீண்ட நேரம் தனிமையில் தங்கி இருப்பதும், மனதிற்குள் இனம் புரியாது உறுத்திக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு இறைஅச்சத்தில் மௌனமாக இருப்பதுவுமாகவே இருந்தார். போதாக்குறைக்கு மலையில் குகை வாசம் வேறு. தன் கணவரின் இயல்பறிந்த கதீஜா அவர்களும் மறுப்பேதும் சொல்லாது - கணவருக்கு உணவை அனுப்பிக் கொண்டிருந்தார்.

இந்த இயல்பினராய நபிகளுக்கு, காமத்திற்காக செலவிட எங்கு நேரம் இருந்திருக்கும்?

விதவை மறுமணம் என்பது இன்னும் ஒரு விவாதப் பொருளாகவும் - அது மனைவியை இழந்த கணவன்மார்களுக்கோ அல்லது ஆண் வயோதிகரான பின்னர் வேறுவழியில்லை என்பதினால் பரீசீலிக்கப்படும் ஒரு காரியமாகத் தான் இருக்கிறது இங்கு.

ஆனால், இதை அந்தக் காலத்தில் நபிகள் வாழ்ந்து காட்டினார் -

விதவை மறுமணமே தனது முதல் choice என்று.

21ஆம் நூற்றாண்டைப் பற்றி பேசுபவர்கள் இன்னமும் ஜீரணிக்க இயலாமல் தவிக்கிறார்கள் -முதல் திருமணமாக ஒரு விதவையை ஏற்றுக் கொள்வதைப் பற்றி.

இத்தனை தான் நமது சிந்தனைத் தளம்.

ஆனால் முழுமுதல் முன் உதாரணம் நபிகளாரின் வாழ்க்கை - அதில் முதலாவதாக அவர் திருமணத்தை செய்கிறார் - ஒரு விதவையை. அப்பொழுது அவர் நபிகள் கூட இல்லை. ஒரு சாதாரண இளைஞன்.
இந்த திருமணம் 25 வருடங்கள் நீடிக்கிறது. தனது 50 ஆவது வயதில் இழக்கிறார் தனது துணையை. இடைப்பட்ட காலத்தில், நபித்துவம் பெற்று, அதை முதன்முதலில் தனது மனைவிக்கு அறிவிக்கிறார். எந்தக் கேள்வியுமின்றி தன்னை ஒரு முஸ்லிமாக மாற்றிக் கொள்கிறார். அவர்களது அன்பும் பாசமும் மேலும் உறுதியடைகிறது. தன் செல்வமனைத்தையும் இஸ்லாத்தின் வழியில் செலவழிக்கிறார். பிறகு இறந்து போகிறார். தன் மனைவியின் மீது அளவற்ற பாசம் கொண்ட நபிகள் அந்த நினைவிலேயே வாழ்கிறார். 3 வருடங்கள் வரையிலும் வேறெந்த துணையுமின்றி.

அந்தக் காலத்து அரபு வழக்கம் - குலம் கோத்திரம் பார்த்து ஒவ்வொன்றிலும் ஒன்றாக பெண்களைத் திருமணம் செய்து கொள்வது.

ஏன்?

ஒரு பாதுகாப்புக் கருதி.

வியாபாரத்திற்கு பணம் புரட்ட, அல்லது யுத்தம் புரியும் பொழுது தேவைப்படும் படைபலத்திற்காக. பெண் வீட்டார்களும் தங்கள் நலனைக் கருதி, சக்தி வாய்ந்த மணமகனைத் தேடிக் கொள்வர். நபிகளின் வம்சமும் மிகவும் சக்தி வாய்ந்த குலம் தான். என்றாலும் மன உறுதிமிக்க நபிகள் அதனைப் பொருட்படுத்தவில்லை. ஒரே பெண்ணுடன் அமைதியான, ஆனந்தமான வாழ்க்கையைத் தான் வாழ்ந்தார்கள் - தனது வாழ்வின் பெரும்பகுதி வரை. தனது இளமை முழுவதையும். வயது மூத்த தன் மனைவியுடன் தான் செலவிட்டார்கள்.

மகிழ்வான வாழ்க்கையை வாழ்ந்தார்கள்.

இந்த மாதிரி வாழ்க்கை வாழ்ந்த ஒரு மனிதரை - இச்சை பிடித்தவர் என்று சொல்பவன் - அவதூறு பேசுபவன் - தான் இன்னது செய்கிறோம் என்று அறியாத மனநிலை பிறழ்ந்த மனிதர்கள் அல்லாமல் வேறு எவராக இருக்க முடியும். அத்தகைய மனிதர்களில் சிலர் எல்லாவிடத்தும் இருக்கத் தான் செய்தனர் - செய்கின்றனர்.

மனைவி இழந்து இறைப்பணியில் மூழ்கிக் கிடந்து மூன்று வருடங்கள் ஓடி விட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில், இஸ்லாமில் இணைந்தவர்கள் எண்ணிக்கையும் கூடுகிறது. அவர்களை தொலைத்துக் கட்டுவோம் என்ற கங்கணத்துடன் அலையும் கூட்டமும் கூடுகிறது. மக்கா விட்டு மதினா நீங்க வேண்டும் என்றெல்லாம் திட்டமிடப்படுகிறது. உற்ற தோழர் அபுபக்ர் அவர்களின் வீட்டில் தான் தினமும் ஆலோசனை செய்யப் படுகிறது.

நபிகளுக்கு தனக்கும் ஒரு வீடு இருக்கிறது - அங்கும் பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் என்ற நினைப்பெல்லாம் பின் தங்கி விட, அதைக் கண்டித்து காவ்லா என்ற பெண்மணி - நபிகளிடத்தில் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார். ஆயிஷா என்ற பெயரை முன்மொழிகிறார். ஆயிஷாவை ஏற்கனவே அறிந்திருந்த நபிகள் 'அவர் சிறுமியாயிற்றே' என்று மறுக்க அதற்கு காவ்லா ஒரு விடை சொல்கிறார் - சௌதா - விதவையையும் திருமணம் செய்து கொள்ளுங்கள். அதே சமயம் - ஆயிஷாவை மணம் செய்து தந்தை வீட்டிலே இருக்கட்டும். தக்க வயது வந்ததும் அழைத்துக் கொள்ளலாம் என்றும் கூற, நபிகள் பின்னர் ஒத்துக் கொண்டனர்.

இந்த திருமணத்திலும் செய்திகள் உள்ளன.

ஆம்.

நபிகள் திருமணம் செய்து கொள்ளும் முன் - ஆயிஷா - சிறுமி - மற்றொருவருக்காக நிச்சயிக்கப்பட்டிருந்தார். மத்ஆம் மகன் ஜாபீர் என்பவருக்காக. இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, செல்வம் எல்லாம் கரைந்து கொண்டிருக்கும் தருணத்தில், தன் மகளைத் திருமணம் செய்து அனுப்பி விட்டால், நலமாக இருக்குமே என்று எண்ணி, மணமகன் வீட்டை அணுகி, ஆயேஷாவை ஏற்றுக் கொள்ள வேண்டும் பொழுது, அவர்கள் மறுத்து விடுகிறார்கள். ஏன்? ஆயிஷா தங்கள் வீட்டிற்கு வந்தால், தனது மகன் மனதை மாற்றி, மயக்கி, இஸ்லாமியனாக்கி விடுவாள் - அதனால் அவள் தேவையில்லை என்று கூறி விடுகிறார்கள். திருமணம் தடைபட்டு விடுகிறது.

இப்படி நிச்சயிக்கப்பட்ட திருமணம் தடைபட்டால், அப்புறம் அந்தப் பெண்ணின் கதி என்ன இந்த நாட்டில் என்று இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் விளக்க வேண்டிய அவசியமில்லை.

அவளுக்குத் தகுந்த மாப்பிள்ளை கிடைப்பானா? அவள் ஜாதகத்தைக் குறை கூறி, மட்டம் தட்டி, அந்த குடும்பத்தையே சின்னா பின்னமாக்கி விடுவீர்கள் தானே.? இல்லையென்று மறுக்க வேண்டாம் - இப்படி சின்னபின்னமான குடும்பங்களை நான் அறிவேன்.

நாளை ஒரு இஸ்லாமிய இளைஞன் இத்தகைய மூட பழக்க வழக்கங்களுக்கு அடிமை ஆகிவிடக்கூடாது என்ற நெறிமுறையும் இங்கு ஏற்படுத்தப் படுகிறது. ஆம் - நிச்சயித்த திருமணம் நின்று போய்விட்டதென்பதால் அந்தப் பெண் தீண்டத்தகாதவள் ஆகி விட மாட்டாள் - மாறாக அவளும் ஒரு நல்ல மனைவியாக பரிணமிக்கக் கூடும் என்ற முன் உதாரணத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

இந்த முற்போக்குச் சிந்தனைகளை எல்லாம் மட்டம் தட்ட வேண்டும் என்ற மனநிலை கொண்டவர்கள் தான் - இதை இச்சையாகப் பார்க்கிறார்கள். முதலில், இந்தத் திருமணத்தைப் பற்றிப் பேச மனதில் ஒரு நேர்மை வேண்டும். கண்ணை மூடிக்கொண்டால் போதுமென்பவர்களிடத்தில் எந்த நியாயம் இருக்கப் போகிறது.? (இவர்களுடைய நியாயம் தேவையில்லை என்பது வேறு)

திருமணம் முடிந்து மூன்றாண்டுகள் கழிந்த பின்பு, மக்கா விட்டு நீங்கி மதினா சென்ற பின்னர் - மசூதியையும் சில குடியிருப்புகளையும் தோற்றுவித்த பின்னர் -சாவகாசமாக தன் மணமகளை அழைத்துக் கொள்கிறார் - 12 ஆவது வயதில் - பருவமடைந்த வயதில். இதுவரையிலும் எழுதியவற்றைக் கொண்டு, இப்பதிவை முடித்திடலாம் தான்.

ஆனால், ஆயிஷா என்ற அற்புதப் பெண்மணியின் வாழ்க்கையைப் படித்த பின்னர், மீதியையும் கொஞ்சம் சுருக்கமாகவே சொல்லி விடுகிறேன்.

ஒன்பதாவது வயதில் திருமணம் நடந்தது. மக்காவில். நபிகள் மறைந்து மறைந்து தான் நடமாடவே முடிகின்ற காலம் அது. அங்கு தாம்பத்ய வாழ்க்கை வாழ நேரமேது? சிறுமியும் வளர்கிறாள். அறிவை வளர்த்துக் கொள்கிறார். நற்பண்புகளை வளர்த்துக் கொள்கிறார். அவருக்குத் தெரிந்திருக்கிறது - தான் எத்தகையவரின் மனைவியாக இருக்கிறோம் - அவருக்குத் தக்கபடி இருக்க வேண்டுமே என்ற கவனம் கொண்டு - தன்னை வளர்த்துக் கொள்கிறார். தன் தந்தையாருடன் நபிகள் உரையாடும் பொழுது கவனத்துடன் கேட்டுக் கொள்கிறார் - குரான் வசனங்களை. அதன் உட்பொருட்களை.

புத்திசாலித்தனமும் மதிக்கூர்மையும் கொண்டு வளர்ந்து வருகையில் - எல்லோரும் மதினாவிற்கு செல்கின்றனர். பள்ளிவாசல், எல்லோரும் தங்குவதற்கு சிறிய குடில்கள் கட்டுவது என்று ஒன்பது மாதங்கள் கழிந்த பின்பு - தன் மணமகளை அழைத்துக் கொள்கிறார். இனிய வாழ்க்கை. இடையே பழிச்சொற்கள். அதைத் துடைக்க, புறம் பேசுபவர்களைக் கண்டித்து குரான் வசனங்கள் இறங்குகிறது.

ஆயிஷாவின் தாய், மகளுக்கு அறிவுரை கூறுகிறார் " கணவரின் கால்களைத் தொட்டு வணங்கு "

என்ன நினைக்கிறீர்கள்? ஆயிஷா செய்தாரா? இல்லை. ''என்னைப் படைத்த இறைவனை அன்றி பிறரை வணங்குவதில்லை ''

ஆம்.

இதுதான் இஸ்லாம்.

இது தான் பெண்களுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரம்.

கணவனின் காலில் வீழ்வது கூட அவசியமில்லை.

இத்தகைய ஆளுமை மிக்க பெண்மணி ஆயிஷா. அவரைக் கண்டால் மன்னர்கள் கூட அஞ்சினார்கள். இல்லையென்றால், ஒரு பெண்மணியான அவர் - படை திரட்டி -கலிபாவை எதிர்த்து போர் புரிந்திருக்க முடியுமா?

ஆம்.

கலிபா அலி அவர்களை எதிர்த்துத் தான் ஆயிஷா அவர்கள் போர் புரிந்தார்கள். முதல் வெற்றி - பாஷ்ரா நகரில். அங்கேயே தங்கி இருக்கிறார். கலிஃபாவாக முடி சூடிய அலி அவர்கள் - இழந்த நகரத்தை மீட்க பாஷ்ரா நோக்கி வருகிறார்கள். சமரச பேச்சு வார்த்தைகள் நடக்கின்றன.

பலரும் நடுநிலை வகிக்கிறார்கள். பாஷ்ரா நகரின் எல்லையில் யுத்தம் நடக்கிறது. சகோதரர்கள் சகோதரர்களுடன் மோதுகிறார்கள்.

எதன் பொருட்டு?

முந்தைய கலிஃபா உதுமான் அவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப் படுகிறார்கள். அது பற்றி சரியான விசாரணை நடத்தப்படவில்லை என்பது ஆயேஷாவின் குற்றச் சாட்டு. மேலும் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்ட - ஜுபைர், தல்ஹா - இவர்கள் இருவரும் வற்புறுத்தப்பட்டனர் -அடுத்த கலிஃபாவாக அலி அவர்களைத் தேர்ந்தெடுக்க என்ற குற்றச்சாட்டும் உண்டு.

எல்லாமாக சேர்ந்து யுத்த களம் வரைக்கும் வந்தாகி விட்டது.

யுத்தம் நடக்கிறது முடிவிற்கு வந்த பாடில்லை. யுத்த களத்தில் நடுநாயகமாக - ஆயேஷா அவர்களின் ஒட்டகம். அந்த ஒட்டகத்தை வீழ்த்தினால் மட்டும் தான் யுத்தம் நிற்கும் என்ற நிலையில் அந்த ஒரு ஒட்டகத்தை சுற்றியே போர் நடக்கிறது. அம்புகள் எய்யப்படுகின்றன. ஒட்டகத்தின் மீதுள்ள அம்பாரியின் கனத்த துணி கிழியத் தொடங்குகிறது.

ஆயேஷாவின் படைகள் ஒட்டகத்தைச் சுற்றி வளையம் வளையமாக நின்று கொண்டு போரிடுகின்றனர் - யுத்த பாடலைப் பாடிக் கொண்டே

நாங்கள்
ஜாப்பாவின் மக்கள்
எங்கும் ஓட மாட்டோம்
எதிரிகளின் தலைகள் வீழும் வரை
குருதி வடிந்து முடியும் வரை.

ஓ எங்கள் அன்னை ஆயிஷாவே
அஞ்சாதீர்கள்
உங்கள் பிள்ளைகள் நாங்கள்
சக்தி மிக்கவர்கள்
வீரம் மிக்கவர்கள்
எம் நபியின் மனைவியே

ஆசிர்வதிக்கப்பட்ட
கணவனைக் கொண்டவளே
நாங்கள் எல்லாம்
ஜாப்பாவின் மக்கள்
இந்த ஒட்டகத்தின் பாதுகாவலர்கள்

தேனை விட இனிப்பானது
மரணம் எங்களுக்கு
மரணத்தின் மடியில்
பாலூட்டப்பட்டவர்கள்

நாங்கள் அறிவித்தோம்
உதுமான் பின் அஃபானின்
மரணத்தை திருப்பிக் கொடு
தலைவனை திருப்பிக் கொடு
தகராறு ஏதுமில்லை பின்னர்.

நாடி நரம்புகள் புடைக்க உற்சாகமாகப் பாட்டெழுப்பிப் பாடிக் கொண்டே யுத்தம் புரிகின்றனர். உயிரிழக்கின்றனர்.

எழுபது பேர் அவ்வாறு உயிர் இழந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளி கிடைக்கிறது. அதனூடாக உள்ளே செல்லும் ஒருவன் - ஒட்டகத்தின் ஒரு காலை வெட்டி விட - ஒட்டகம் வீழ்கிறது.

ஒரு விநாடியில் யுத்தம் நின்று போய்விடுகிறது.

எல்லோரும் திடுக்கிட்டுப் போய் ஓடி வருகின்றனர் - ஒட்டகத்தை நோக்கி. முதலில் ஓடி வந்தவர் - அலி. அன்னை ஆயிஷா காயமுற்றாரோ என்ற பதைபதைப்புடன். அலியைப் பார்த்ததும் அவர் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் எதுவுமில்லை என்கிறார். வேறு ஒரு ஒட்டகம் வரவழைக்கப்படுகிறது. பாஷ்ராவில் தன் ஆதரவாளர் ஒருவர் வீட்டிற்குச் சென்று ஓய்வடுத்தபின் தன் சகோதரனுடனும், கண்ணியமிக்க நாற்பது பெணகளுடனும் ஹிஸஸ் நோக்கி புறப்படுகிறார். அலி அவர்கள் பின்னால் சிறிது தூரம் பயணம் செய்கிறார்.

ஆம் - கலிஃபா - மாமன்னர் - அராபிய தீபகற்பம், சிரியா, எகிப்து, இராக் என்ற நாடுகள் அனைத்தும் அன்று அவர் கட்டுப்பாட்டில்! ஒரு பேரரசர். ஆனால், அவர் - அன்னை ஆயிஷாவின் பயணக் கூட்டத்தாருடன் பின்னால் நடந்து செல்கிறார் - சற்று தூரம் வரை.

பின்னர் தன் மகனை அனுப்பி வைக்கிறார் - இறுதி வரையிலும் பயணம் செய்து பத்திரமாக பயணத்தை முடித்து விட்டு வருமாறு அனுப்பி வைக்கிறார்.

இந்த யுத்தம் தான் வரலாற்றில் குறிக்கப்படுகிறது - The war of camel என்று.

இத்தகைய ஆளுமை மிக்க பெண்மணி - பாலியியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருந்தால் - அந்த மனதில் - ஒரு துளி கூட வீரமோ தைரியமோ இருந்திருக்குமா? சுத்தமாக அற்றுப் போயிருக்கும். அஞ்சி அஞ்சி நடப்பர். ஆளுமையும், வீரமும் கண்ணியத்துடனும் தன்மானத்துடனும் வளர்க்கப்பட்ட விதத்தில் தான் வருமே அன்றி, கொடுமைக்கு ஆளான சிதைந்த உள்ளத்திலிருந்து அல்ல.

மேலும் ஆயிஷா வாழ்ந்த கால கட்டத்தில் அவர் தாம் மிகுந்த அறிவு பெற்றவர். ஒரு முறை அமீர் மூவய்யா தன் அவையினரைப் பார்த்துக் கேட்டார் - நம் தேசத்தில் மிகுந்த அறிவுடையவர் யாரென்று. அவருக்குக் கிடைத்த பதில் - அன்னை ஆயிஷா. அதன் பின் அமீர் ஆலோசனை ஒன்று கேட்டு கடிதம் எழுதுகிறார் - தன் மகனை தனக்குப் பின்னர் மன்னராக்க வேண்டும் என்று. ஆயிஷா மறுத்து அறிவுரை சொல்கிறார்.

இது தான் ஆயிஷா

இது தான் இஸ்லாம் பெண்களுக்குக் கொடுத்த உரிமை.

மரியாதை.

இன்று இப்படி இல்லையே என்று சொல்பவர்களுக்கு - இடைப்பட்ட காலத்தில் இஸ்லாமிய உலகம் அடிமைப்பட்டு சிதறிப் போயிற்று. வசதிகளும் வாய்ப்புகளும் குறைந்து போயின. கிடைத்த வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது - அதில் முதலிடம் இயல்பாகவே ஆண்களுக்கு என்றாகியது.

ஆனால், இன்று செல்வமும் செழிப்பும் திரும்ப வந்தடைந்த பொழுது - மீண்டும் கதவுகள் திறக்கின்றன. தன்னை ஏமாற்றிய கணவனைக் கோர்ட் படியேற்றி, தண்டனை வாங்கிக் கொடுத்த கதையை நானே என் வலைப்பூவில் எழுதியிருக்கிறேன்.

இஸ்லாமியப் பெணகள் கூட்டம் கூட்டமாக சென்று கல்வி கற்கின்றனர். ஆதாரம் வேண்டுமென்றால் அமீரகத்திற்கு வாருங்கள். பல ஆண்களும் இயங்கும் அரசில் பெண் மந்திரி இருக்கிறார். உலக வர்த்தக அமைப்பின் கூட்டத்திற்கு தன் நாட்டின் சார்பாக சென்று பேசியிருக்கிறார். அனைவரும் அவர் பேசியதை ஆவலுடனும் உற்சாகத்துடனும் கேட்டிருக்கின்றனர். உள்ளூர் அமைப்புகளுக்கு தேர்தல் நடந்திருக்கிறது.

'என்று பெண்கள் நள்ளிரவில் கூட தனி மனுஷியாக சுதந்திரமாக உலாவ முடிகிறது அன்று தான் எந்த ஒரு நாடும் சுதந்திரம் பெற்றதாகக் கருதுவேன்.'என்றார் காந்தி.

இன்று அந்த சுதந்திரத்தைப் பெண்களுக்கு வழங்கி இருப்பது அராபியத் தீபகற்பம் தான். ஓமன் நாட்டிற்கு சென்று வந்த சுஜாதா எழுதுகிறார் - கற்றதும் பெற்றதுமில் - ஓமன் நாட்டு மன்னர் போல் ஒருவர் கிடைத்து விட்டால் - பின்னர் யாருக்கு வேண்டும் ஜனநாயகம்? என்று.

இது ஓமன் நாட்டிற்கு மட்டுமல்ல - அமீரகம் உட்பட பல நாடுகளுக்கும் பொருந்தும்.

இன்று இஸ்லாமிய மக்கள் தொகையில் சரிபாதி பெண்கள் என்பதை எல்லோரும் உணர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு இவற்றில் சரி சம பங்கு கொடுக்க வேண்டும் என்பதில் எல்லோருக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. அரபு நாட்டு அரசுகளுக்கு மட்டுமல்ல. இந்தியாவில் வாழும் ஏழை முஸ்லிமுக்குக் கூட. ஒரு கட்டத்தில், வசதி வாய்ப்புகள் இல்லை - யாராவது ஒருவர் படிப்பதை விட்டுக் கொடுத்தால் மட்டுமே மற்றவருக்கு வாய்ப்பு என்று வந்து விடுகிறது. அந்த சமயத்தில் - அது இயற்கையாக ஆண்களுக்குப் போய்விடுகிறது. சில சமயங்களில் - அது இரண்டு ஆண்களுக்கிடையேயான போட்டியாக கூட மாறி விடுகிறது. ஒரு சகோதரனைப் படிக்க வைக்க குடும்பத்திலுள்ள பிற அங்கத்தினர் அனைவரும் உழைத்தால் தான் ஆயிற்று என்ற நிலைமையில் பெண்களை எங்கே படிக்க வைப்பது?

இன்று நிலைமை மாறி இருக்கிறது.

மற்றபடி - பெணகளுக்கெதிராக வைக்கப் படும் மற்றொரு குற்றச் சாட்டு - உடை.

Dress Appropriate.

இது தான் தாரக மந்திரம். இயல்பாய் உணர, பிற ஆடவரின் பார்வைகளைத் தவிர்க்க, please do dress appropriately. அவ்வளவு தான். இன்று சேலையையே - மிக மிக கண்ணியமாக உடுத்த முடியும். அதையே மிக மிக ஆபாசமாக உடுத்த முடியும். அப்படியானால் எது தகுந்த முறை.? இது ஒரு பெரிய தர்க்கமாகலாம்.

அதனால் தான் இதற்கு எளிய ஒரு விடை. உடல் முழுவதையும் மறைக்கும் ஒரு அங்கி. தலைக் கவசமெல்லாம் அவரவர் சேர்த்துக் கொண்டது. தலையை மறைத்துக்கொள்ளுதல் என்பதை முகத்தை என்று எடுத்துக் கொண்டார்கள் போலும். மேலும் இந்த பர்தா என்பது பொது இடங்களிலும், பிற ஆண்கள் புழங்கும் இடங்களிலும் மட்டும் தான் அணிய வேண்டியதே தவிர - பெண்கள் மட்டுமே இருக்கும் இடத்திலோ, அல்லது குடும்ப அங்கத்தினர்கள் மட்டும் இருக்கும் இடத்திலோ அணியத் தேவையில்லை.

இப்பொழுது சொல்லுங்கள் - ஒரு பெண் ஒரு நாளில் எத்தனை மணி நேரம் - இந்த உடையை அணிய வேண்டுமென்று? அப்படி இருந்தும் இன்று இது முஸ்லிம் பெண்களிடையே a preference of individuals என்று தான் சொல்ல வேண்டும். பல முஸ்லிம் பெண்கள் முகமூடி அணிவதைப் போன்று அணிவதை விட்டு விட்டு நாசுக்காக ஆனால் அதே சமயம் கண்ணியமாக உடை உடுத்துகின்றனர். மீண்டும் பொருளாதாராம் விளையாடுகிறது. வகைவகையான உடைகள் இல்லாத பொழுது - இந்த பர்தா உடை அந்த ஏழ்மையை மூடி மறைக்கிறது. ஒரு சமத்துவத்தைத் தருகிறது.

பர்தா அணிவதால் பெண்கள் அடிமைப்பட்டு விட்டார்கள் என்பதெல்லாம் சுத்தப் பொய். பொருளாதார வசதியற்ற நிலைமை தான் சில குறைகளுக்குக் காரணமாக விளங்குகிறது.

அவற்றைக் களையும் பொழுது - ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை சட்டம் போட்டுத் தான் உரிமை முழக்கம் செய்யவேண்டும் என்ற நிலை அல்லாமல், பிறப்பினாலேயே தங்கள் உரிமைகளை இந்த பெண்கள் அடைவார்கள்.

அது வரையிலும், ஆடு நனைகிறேதே என்று அழும் ஓநாய்களாக யாரும் மாறாமல் இருந்தால் சரிதான்.





22 comments:

அபூ முஹை said...

நண்பரே!

நல்ல பதிவு தொடர்ந்து எழுதுங்கள் பிறருக்கேனும் பலனளிக்கும்.

அன்படன்,
அபூ முஹை

நல்லடியார் said...

ஆயேஷா என்பதை ஆயிஷா என்று சொன்னால் உங்கள் கட்டுரையின் விளக்கம் அன்னை ஆயிஷாவை பற்றிய குற்றச்சாட்டுகளுக்கான பதில் என்பதை மாற்று மதச்சகோதரர்களும் புரிந்துகொள்ள ஏதுவாகும்.

இஸ்லாத்தை தூற்றுவதற்கு காரணம் தேடி அலுத்துப்போன புழுத்த சிந்தனையாளர்களின் வழக்கமான ஒப்பாரிதான் பர்தாவை கழற்றி எறிந்து விட்டு முஸ்லிம் பெண்ணுக்கு வழங்க விரும்பும் பெண்ணுரிமை!

ஆடு நனைவதைக் கண்டு அழும் நரி என்பதை விட ஓநாய் என்பதே மெத்தப் பொருத்தமாகும்.

உங்கள் கட்டுரையின் கருத்தாக்கம் அருமை. அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.

அப்துல் குத்தூஸ் said...

உள்ளம் கணத்து, கண்கள் கலங்கிவிட்டது ஐயா!. இதுபோன்ற உங்களின் பணி இன்னும் தொடருட்டுமாக.

இப்னு ஹம்துன் said...

நண்பன்,
நிதானமான நடை
வாய்மையான பதிவு.
களங்கத்தை தொழிலாகச் செய்வோரும் சிந்தித்துப் பார்ப்பர்-துளியேனும் நேர்மை இருக்குமானால்.
நன்றி.

Anonymous said...

உங்கள் பாதையை நீங்கள் அடைவதற்கு ஒரு மனநோயாளி காரணமானார்.

அவருக்கு நமது நன்றி!

Anonymous said...

மிகவும் 'புத்திசாலித்தனமான' பதிவு. அரபிய நாடுகள் எண்ணெய் வளத்தில் கொழித்தாலும் அங்கு பெண்களுக்கு சம உரிமை இல்லை. குவைத்,சவூதி அரேபியாவில் சம உரிமை இருக்கிறதா.
இந்தியாவில் முஸ்லீம்களில் பெண்களிடம் கல்வி பெற்றோர் விகிதம் குறைவு, ஆனால் பல்வேறு
பாரபட்சங்களை எதிர்கொள்ளும் தலித்களிடம் அதைவிட அதிகம்.காரணம் வறுமை அல்ல,
மதம் சார்ந்த நம்பிக்கை. பெண் கல்வி குறித்து சமரசத்தில் வரும் கட்டுரைகளைப் படியுங்கள்,
தெரியும் இன்னும் கூட பெண் கல்வியின் தேவையைக் குறித்து எழுத வேண்டிய நிலையில்
இருக்கிறது உங்கள் சமூகம் என்பது. ஆணும்,பெண்ணும் சேர்ந்து படிப்பதை, வேலை செய்வதை
இன்னும் ஏற்க இயலாத பிற்போக்கான மனநிலையில்தான் இஸ்லாமிய வலைப்பதிவாளர்கள் பலர்
இருக்கிறார்கள்.இவர்களே இப்படி என்றால் மார்க்கம் என்ற பெயரில் சம உரிமையை எதிர்க்கும்
'அறிஞர்'கள் எப்படி இருப்பார்கள். அவர்களால் பெண்கள் தலைமை பொறுப்பினை ஏற்பது கூட
ஏற்க இயலாத ஒன்றுதான்.

pleasingpath.blogspot.com

இதற்கெல்லாம் அடிப்படைப் காரணம் பகுத்தறிவற்று மத நம்பிக்கை
என்ற பெயரில் எதை வேண்டுமானாலும், கல்லால அடித்துக் கொல்லுவது முதல், பெண்கள் வேலைக்கு
செல்வது வரை ஏற்க தயாராக இருக்கும் இஸ்லாமியர்கள்தான். இறை நேசன், நல்லடியார், அபூ மூகை போன்றவர்கள் இஸ்லாத்திற்கு ஆதரவு என்ற பெயரில் பிற்போக்காளர்களாக இருக்கிறார்கள்.
நண்பன தமிழ் தேசியவாதம் (உபயம் சுப.வீ,அறிவுமதி), இஸ்லாமிய அடிப்படைவாதம் இரண்டையும்
ஆதரிக்கிறார்.அதுதான் வித்தியாசம்.

நண்பன் said...

அன்பிற்கினிய நண்பரே,

பார்த்தீர்களா -

உங்களால், நாலு பேர் வந்து போகுமிடத்தில் உங்களை யார் என்று அடையாளம் காட்ட முடியவில்லை. நேர்மை இல்லை.

நீங்கள் எப்படி அடுத்தவரைப் பற்றி விமர்சிக்கும் தகுதி பெற்றீர்கள்? என்று உங்களிடத்தில், முகம் காட்டி நேர்மையுடன் பேச
இயல்கிறதோ - அன்று விமர்சியுங்கள்.

இருந்தாலும், மற்ற விஷயங்களுக்கு வருவோம் -

நீங்கள் உங்கள் மனதில் தோன்றிய அனைத்தையும் சொல்லி விட்டீர்கள். மிக்க நன்றி. நானும் இதைத்தான் எதிர்பார்த்தேன்.

நீங்கள் இஸ்லாமியர் அல்ல.

நான் இஸ்லாமியர்கள் அல்லாதவர்க்காக கொடுத்த - அன்னை ஆயிஷா அவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு எந்த வித
சந்தேகமும் இல்லை. கேள்வியும் இல்லை. விளங்கிக் கொண்டீர்கள். நன்றி.

மற்ற விஷயங்கள் -

தலித்களிடம் இருக்கும் அளவிற்கு முன்னேற்றம் இஸ்லாமியர்களிடத்தில் இல்லை - உண்மை தான். நான் மறுக்கவில்லையே.?

ஆனால் எதனால் அப்படி? கொஞ்சமாவது சிந்தித்தீர்களா?

(இங்கு உங்களின் உள்நோக்கம் புரிகிறது. தலித்களுக்கு கிடைத்திருக்கும் இடஒதுக்கீட்டைப் பற்றி ஏதாவது எசகு பிசகாக சொல்வான்
என்ற எதிர்ப்பார்ப்பா? தமிழில் எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் விளங்கிக் கொள்வதற்குமே சிரமப்படும் உன்னால், என்னை இடற வைக்க
முடியாது நண்பரே!!!)

எத்தனை வருடங்களாக தலித்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது? எத்தனை வருடங்களாக முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது?

சுதந்திரம் பெற்ற நாள் முதல் - தலித்கள் இடஒதுக்கீடு பெற்றிருக்கிறார்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான அளவிற்கு
இல்லாவிடினும் கொஞ்சமாவது இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. ஆனால் அதன் மூலம் கல்வி கற்று வருபவர்களுக்கு நியாயமான அளவில்
அரசு உத்தியோகம் கிடைக்கவில்லை என்பதும் உண்மை. அவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை எல்லாம் நீங்கள் கவனத்தில்
வைக்க மாட்டீர்கள். விதண்டவாதம் பேசுவதற்காக சொல்கிறீர்கள். ஆடு நனைகிறதே என அழும் ஓநாய் என்பதை மீண்டும் நினைவில்
வையுங்கள்.

ஆனால் இஸ்லாமியர்கள் - நேற்று வரையிலும் கேட்கவே துவங்கவில்லை இடஒதுக்கீட்டை. இப்பொழுது தான் மெல்லமாக முனகிக்
கொண்டிருக்கிறார்கள்.

பெண் கல்வி பற்றி சமரசத்தில் எழுதுகிறார்கள் - பார்த்தீர்களா? என்கிறீர்கள். நானும் அதைத்தானே சொன்னேன் - பெண்கள்
மக்கள் தொகையில் ஆண்களுக்குச் சமமாக இருக்கிறார்கள். சமூகத்தின் 50 சதவிகித பெண்களை - சமூகத்தின் பாதியை -
கல்விஅறிவின்றி வைத்திருத்தல் கூடாது என்று உணர்ந்திருக்கிறார்கள் - அதனால் அவர்களுக்கு கல்வி கொடுப்பதில் அனைவருக்கும்
ஆர்வம் வந்திருக்கிறது. நீங்களும் இந்தக் கூற்றைத் தானே ஊர்ஜிதப்படுத்தி எழுதுகிறீர்கள்?
(வேலை வாய்ப்பு என்பது கல்வி வந்ததும் தானாக வரும்.)

மற்றபடி நான் கூறும் - வறுமை - மிக முக்கிய காரணம் கல்வியறிவு பெறாமல் போவதற்கு. இதை நீங்கள் மறுப்பதன் மூலம் உங்கள்
அறியாமையைப் பறை சாற்றிக் கொள்கிறீர்களே தவிர வேறில்லை. காமராஜர் மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்ததே - வறுமையின்
காரணமாக பள்ளி வராத குழந்தைகளை - இந்த ஒருவேளை சோற்றைக் காட்டியாவது கொண்டு வந்து விட மாட்டோமா என்ற நப்பாசை தான்.
எம்ஜிஆர் அதையே நீட்டித்து அழகு படுத்தினார். இதெல்லாம் எதற்காக?

தலைமை பொறுப்பை ஏற்க இயலாதவர்கள் என்று நீங்கள் யாரை சொல்கிறீர்கள்? 33% சதவிகித இடஒதுக்கீட்டிற்காக இன்னும் பேசிக் கொண்டே
இருக்கிறார்களே அவர்களையா? அல்லது பே நசீர் புட்டோவை பிரதமாராக்கினார்களே அந்த மக்களை சொல்கிறீர்களா? ஷேக் ஹஸீனா, பேகம்
கலிதா ஜியா இவர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களை சொல்கிறீர்களா? அல்லது உலகிலே அதிக இஸ்லாமிய மக்கள் தொகை கொண்ட இந்தோனேஷியாவில்
பெண்கள் கொடி கட்டிப் பறப்பதைப் பார்க்க இயலாமல் எது மறைக்கிறது உங்கள் கண்களை.? சோனியா காந்தி பிரதமரானல் விதவைக் கோலம்
பூணுவேன் என்று போர் முழக்கமிட்ட சுஷ்மா சுவராஜும் அவரது பரிவாரங்களுமா?

நண்பரே -

தனக்கு விருப்பப் பட்டதை மட்டும் தான் பார்ப்பேன் - என்று அடம் பிடிக்கும் நீங்கள் அடிப்படைவாதியா? அல்லது நியாயம் என்று மனதில்
பட்டதை கண்ணியத்துடன் எடுத்துச் சொல்லும் நானா?

நான் துபாயைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஓமன் பற்றி எழுதி இருந்தேன். துபாய் பற்றி இனி உலகின் எந்த ஒரு மனிதனும் பேசமாட்டான்.
ஓமனை சாதுர்யமாக தவிர்த்து விட்டீர்கள். இல்லையென்றால் பத்திரிக்கைகளில் ஜல்லியடித்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் உங்கள் தலைவன்
சுஜாதாவை கேள்வி கேட்ட மாதிரி ஆகி விடும்.

அதனால் - சவுதி, குவைத் என்கிறீர்கள். ஒரு அறுபது வருடங்களுக்கு முன் இந்த நாடுகள் கிடையாது. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னால்
தான் இந்த நாடுகள் உண்டாக்கப்பட்டன. அதுவரையிலும் அதன் மக்கள் நாடோடிகள். ஒரிடத்தில் இருந்தது கிடையாது. நாடாக உண்டாக்கப் பட்ட
பின்னரும் அவர்களுக்கென்று வசதிகள் இல்லை. வாய்ப்புகள் இல்லை. எண்ணெய் வளத்தின் மூலமாக பணவரத்து தொடங்கியது - 1970களில் தான்.
கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தான் ஒரு நாடாக இயங்க ஆரம்பித்தார்கள். இந்த முப்பது வருட காலத்தில் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

என்றாலும் சவுதி அரேபியாவின் மன்னர் - GCC நாடுகளின் அவையில் இன்று அறிவித்திருக்கிறார் - பெண்கள் கொஞ்சம் பொறுமை காக்க
வேண்டும். அவர்களுக்குத் தேவையான உரிமைகள் வழங்கப்படும். அங்கும் Chamber of Commerce- க்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
குவைத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெண்களும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த மாதிரி செய்திகள் வெளியே பெரும்பாலும் வருவதில்லை.
உலக பத்திரிக்கைகளுக்கு அவை தேவையில்லை. ஏனென்றால் இந்தப் பெண்களின் முன்னேற்றம் என்பது இஸ்லாத்தை குறை சொல்பவர்களின்
உண்மையான அவா கிடையாது - அவர்களுக்கு தீவிரவாதிகளாக இஸ்லாமிய இளைஞர்களை சித்தரிப்பதிலும், இஸ்லாத்தின் பேரைக் கெடுக்கும்
வகையில் செய்திகளைத் திரித்து எழுதுவதும் தான் நோக்கமே தவிர - வேறல்ல. இத்தகைய பத்திரிக்கைகளைப் படிக்கும் நீங்களும் மூளைச் சலவை
செய்யப்பட்ட நிலையில் தான் பேசுகிறீர்களே தவிர அறிந்து பேச வில்லை. அறிவதற்கும் முனையவில்லை.

நல்லடியார் - அபு முஹை - இறைநேசன் இவர்களைப் பற்றி குறிப்பிடுகிறீர்கள்.

ஒருவன் மனிதனாகப் பிறந்தால் அவனுக்கென கொள்கை இருக்க வேண்டும். அந்த கொள்கையின் மீது உறுதியாக இருக்க வேண்டும். உணர்வு
இருக்க வேண்டும். அவர்கள் மனிதர்கள். அப்படி கொள்கை உடையவர்களை நீங்கள் அடிப்படை வாதி என்பீர்கள். எந்தக் கொள்கையும்,
எந்த வாழ்க்கை முறையையும் எப்படி வேண்டுமானாலும் வாழ்வேன் நாய்களைப் போல நடுத்தெருவில் புணர்ந்து மகிழ்வேன் என கூக்குரலிடும்
கூட்டத்தினருக்கு என்ன சொல்வது? அடிப்படை வாதம் எனபதன் பொருளே அறியாமல் பேச வந்துவிட்டீர்கள். பாவம்!!!

இல்லையென்றால் // இறை நேசன், நல்லடியார், அபூ மூகை போன்றவர்கள் இஸ்லாத்திற்கு ஆதரவு என்ற பெயரில்
பிற்போக்காளர்களாக இருக்கிறார்கள். // என்று எழுதுவீர்களா?

உங்களுக்கு தமிழ் அறிவும் இல்லை. சிந்திக்கும் திறனும் இல்லை. இல்லையென்றால் இஸ்லாமிய ஆதரவையே பிற்போக்குத் தனம்
என்று எழுதிவீர்களா? ஒன்றை ஆதரித்தால் அது பிற்போக்குத் தனமென்றால் - நீ யார் ? பிற்போக்குவாதி தானே!!! இஸ்லாமிய எதிர்ப்பை
ஆதரிக்கும் நீ ஒரு பிற்போக்குவாதி தானே?

சுபவீயின் படத்தைப் போட்டிருக்கிறோம் - அண்ணன் அறிவுமதி படத்தை வைத்திருக்கிறோம் என்பதால் தமிழ்தேசியவாதிகளா? அப்படியானால்
நீங்கள் தமிழ் இன எதிரியா?

சுபவீ ஒரு பேராசிரியர். நிறைய புத்தகங்களை எழுதியுள்ளார். கருத்துக் களஞ்சியம். சந்தேகம் வரும்பொழுது, அவருக்குத் தொலைபேசி,
சந்தேகங்களை நீக்கிக் கொள்கிறோம் - ஆசிரியர் பணியை எங்களுக்குச் செய்கிறார். அண்ணன் அறிவுமதி அவர்கள் -
கவிதை தளத்தில் வழிகாட்டியாக விளங்குகிறார். நாங்கள் எழுதும் கவிதைகளை விமர்சிக்கிறார். தவறுகளைச் சுட்டிக் காட்டுகிறார். புத்தகமாக
வருவதற்கு ஏற்பாடுகளை எங்களுக்காக தன் வேலையை ஒதுக்கி வைத்து விட்டு மெனக்கெட்டுச் செய்கிறார். இதெல்லாம் தவறா?

நீங்களாக ஒரு அனுமானம் வைத்திருக்கிறீர்கள் -

அரபு சொல் கொண்ட மனிதன் என்றால் - இஸ்லாமிய அடிப்படை வாதி.!!!
தமிழ் பற்றி சிந்திப்பவன் தமிழ் தேசியவாதி!!!

தன் மொழிக்காக வாதாடுவது உங்கள் பார்வையில் தவறு. நான் தமிழன் - தமிழ் மொழியைப் பற்றி நான் தான் சிந்திக்க வேண்டும். அல்லாமல்
சமஸ்கிருத மொழியைப் பற்றி நான் சிந்தித்துக் கொண்டிருப்பேன்?

தமிழ் - தமிழன் - தமிழ் இன வளர்ச்சி பற்றி ஒருவன் சிந்தித்தால் - அதில் என்ன தவறு இருக்கப் போகிறது? ஏன் உங்களுக்கு உறுத்துகிறது? உறுத்துவதன்
பின்னணி என்ன?

நீங்கள் கொடுக்கும் அடைமொழிகளுக்காக யாரும் வாழப் போவதில்லை அன்பரே!!!

நான் தமிழன் என்று சொல்வதிலோ, இஸ்லாமியன் என்று கூறிக் கொள்வதிலோ எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

முகம் காட்ட இயலாத உங்களின் பரிதாப நிலையை எண்ணி வருந்துகிறேன்.

முன்கூட்டியே ஒருவரைப் பற்றிய தீர்மானத்திற்கு வந்துவிட்டு, பின்னர் அதை நியாயப்படுத்த சிரமப்படுவதை விட, இயல்பாக சிந்தித்துப் பாருங்கள் -
நீங்கள் கூறியவற்றில் நியாயம் இருக்கிறதா என்று!!!

சிந்திக்கும் சக்தி இருந்தால் -


(அநாமதேய பின்னூட்டங்களை அனுமதிப்பதில்லை என்று முடிவு செய்து வைத்திருந்தேன். ஆனால் - அதை வெளியில் சொல்லவில்லை.
ஆகையால் - நண்பர்களே இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் - Anony பதிவுகளை பதிப்பதில்லை. உங்களை அடையாளம் காட்ட தயங்க வேண்டாம்.
ஒரு வார்த்தை கூட கண்ணியக் குறைவாக எழுத மாட்டேன் - காட்டமாக இருக்கலாம். அது வேறு. மேலும், நீங்கள் ஒரு விஷயத்தைப் பற்றி
எழுதுவதனால் - உங்களைப் பற்றிய எந்த ஒரு அபிப்பிராயத்தையும் வைத்துக் கொண்டு, இவர் இப்படி தான் என்று நினைத்துக் கொண்டிருக்க மாட்டேன்.
ஆனால் - அநாமதேயமாக மட்டும் யாரையும் சந்திக்க விரும்ப வில்லை. அதனால் தைரியமாக கருத்து எழுதுங்கள். உங்கள் பிம்பங்கள்
உடைந்து விடும் என்று பயந்தால் - பின் உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது கருத்து சொல்ல?

அநாமதேயங்களுக்குப் பதிப்பதும் பதில் சொல்வதும் இது தான் கடைசி -

நன்றி)

அப்துல் குத்தூஸ் said...

This is for your ref.

Women to Contest EPCCI Polls
Maha Akeel, Arab News


JEDDAH, 14 December 2005 — Encouraged by the victory of two women candidates in the recent elections to the board of directors of the Jeddah Chamber of Commerce and Industry and the appointment by the Ministry of Commerce of two others, businesswomen in the Eastern Province and Madinah have either filed their names as candidates or expressed interest in running in the upcoming chamber elections in the two regions.

The Eastern Province Chamber of Commerce and Industry (EPCCI) will hold elections for its board of directors in two months and already applications from 33 candidates, including four businesswomen, have been received.

Meanwhile, Madinah businesswomen have expressed their desire to run in the elections — as yet unscheduled — for the chamber’s board of directors. Two businesswomen have already expressed their intention to run.

Salahuddin said...

அன்பிற்கினிய நன்பரே!

அன்னை ஆயிஷா அவர்களைப் பற்றிய விளக்கமான உங்கள் கட்டுரைக்கு நன்றி.

அநாமதேயங்களுக்கு அருமையாக சூடு கொடுத்திருக்கிறீர்கள்.

//உங்களால், நாலு பேர் வந்து போகுமிடத்தில் உங்களை யார் என்று அடையாளம் காட்ட முடியவில்லை. நேர்மை இல்லை.// இதுதான் அவர்களின் நிலைமை.

தொடர்ந்து எழுதுங்கள் நண்பரே!

Anonymous said...

Hi accidentally came here. anyways,..great blog that you have.


உங்கள் வாதஙளில் இருந்த நேர்மையை மிகவும் ரசித்தேன்.

அன்பன்
ராஜ்

நண்பன் said...

ஆதரவும், வாழ்த்துகளும் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.

இன்னும் தொடர்ந்து எழுதுவேன் - மீண்டும் முன்பே சொன்னது போல - பிறருக்காக அல்ல - என்னுடைய திருப்திக்காக.

நன்றி.....

நண்பன் said...

ராஜ்

உங்க்கள் வருகைக்கு மிக்க நன்றி.

சிறிது காலத்திற்கு முன்பு - நண்பர் கல்வெட்டு அவர்கள் பொங்கல் கொண்டாடுவதைப் பற்றி ஒரு பதிவு இட்டிருந்தார். அதில் மிகவும் விசனப்பட்டிருந்தார் - இஸ்லாமிய வலைப்பதிவாளர்கள் ஏன் பின்னூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று.

அப்பொழுது அவருக்குப்பதில் சொல்லியிரூந்தேன் - ஏக இறைவனை வணங்குவதைத் தவிர, வேறு வகையான வணக்கத்தில் ஈடுபடுவதில்லை ஏன்று.

இஸ்லாமியர்கள் கலந்து கொள்வதனாலேயே விவாதங்கள் திசை திருப்பப் படக்கூடிய சந்த்தர்ப்பங்கள் உண்டு. அதனால் எல்லோரும் விலகியே இருக்கின்றனர்.

இன்று, இந்தப் பதிவில் ஆன்மீகத்தை விட, வரலாறும், இன்றைய சமூகப் பிரச்சினைகளும் தான் அதிகம் விவாதிக்கப்பட்டவை -

அதனால் நான் முன் வைக்கும் கேள்வி - ஏன் பிற மத அன்பர்கள் கருத்துச் சொல்லத் தயங்குகிறீர்கள்?

இங்கே கருத்து சொல்வதனால் நீங்கள் பிறரால் - மத துவேஷகர்களால் தாக்கப் படுவீர்கள் என்று அச்சப்படுகிறீர்களா?

அச்சம் என்று வந்து விட்ட பொழுதிலே - அங்கு நேர்மை இல்லை என்றாகி விடுகிறது!

ஒதுங்கி நிற்பதனால் யாரும் உங்களை விட்டு வைக்கப் போவதில்லை.

உங்களையும் வர்கள் வம்புக்கு இழுப்பார்கள் -

இன்று அல்லது நாளை.

அதற்கு அன்று மதம் காரணம் இல்லாமல் இருக்கலாம்.

அதற்குப் பதிலாக -

மொழியைக் காட்டுவார்கள்

சாதியைக் காட்டுவார்கள்

எதை வேண்டுமானாலும்.

இணக்கமான சூழலை மட்டும் அவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

சிந்தியுங்கள்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
நண்பன் said...

The above comment had been removed as requested by the person who forwarded the comment.

Thanks

தருமி said...

நீண்ட விளக்கம்; ஆனாலும் கேள்வியின் மூலாதாரத்தை விட்டு விலகிப் போனதாக உணர்கிறேன். என் பதிவில் இந்த விஷயம் தொட்டுள்ளேன். முடிந்தால் படித்துப் பார்த்து, பதிலெழுத நினைத்தால் இங்கோ அங்கோ சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்.

Raveendran Chinnasamy said...

Thanks for your insight . Nice explanation . I think you can write a separate blogabout whatever yuo read about islam so i can learn too .

Learning never ends .

நண்பன் said...

Dharumi,

Surprising.

Yesterday I was searching for your post. I tried many alternatives - but I couldn't get it.

Many questions are thought provoking. But at the same time, since you have adopted the path of atheism, a pattern of prejudice also set in - knowingly or unknowingly.

Any way, I will try to answer to the best of my knowledge to your questions. Though I would try to defend most of those points, I assure you I am not a preconditioned man.

From the number of comments you had deleted, I could understand, the kind of slander you had been subjected to. I am really sorry for that.

Reply will take some time - basically because, I am very sick now - with cold and fever. And there is a change in work place - now, I am directly sitting opposite to the Directors of the company - which means I could not sit very late in the night as in the past three months.

Any way I will keep in touch with you.

Take Care

Anonymous said...

Nanban,

Before trying to answer Dharumi, kindly have a look at the answers given to his queries by Abumuhai.

Dharumi starts innocent...

நண்பன் said...

நன்றி, சக வலைப்பதிவரே,


நிச்சயமாக அபூமுஹைப் பதிவைப் படித்து விட்டுத தான் பதில் எழுதுவேன்

தருமி said...

thank you

நண்பன் said...

அதி.அழகு அனுப்பி வைத்த குறிப்பு - அன்னை ஆயிஷாவின் வயது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்கின்றன என்பதிலிருந்து....


Reports Suggest Ayesha Was About 20 When Prophet Married Her
Edited by Adil Salahi

Q.

You have recently stated that Lady Ayesha was about 20 years of age when she married the Prophet (peace be upon him). This is contrary to what we have learned and the common notion that she was only 9 at the time of her marriage. Could you please tell me why is it that the other view is so widespread? How come that it is held by the vast majority of Muslims, and that scholars and writers try to justify it in a variety of ways?
M. Karim

A.

This is a very valid point. The question of Ayesha's age at the time of her marriage to the Prophet (peace be upon him) troubles many Muslims, particularly in our present time when the onslaught against Islam stops at nothing. Many are those who try to attack Islam through attacking the Prophet. Yet they cannot find any justification for such attack, so they look at seemingly weak points, like his marriage to Ayesha. What we need to know is that the Prophet's personality was without blemish. If it was true that Ayesha was 9 at the time of her marriage, we accept that and we look for a reason to explain it. However, there is much evidence to suggest that she was not. Indeed the evidence congregates towards the view that she was at least 18, and perhaps 20 or over at the time of her marriage. In my answer, I cited the authentic reports that tell us that she was engaged to someone else before the Prophet sent his proposal, and the way she was suggested to the Prophet as a possible wife, and the fact that she is mentioned among the people who accepted Islam in its very early days, certainly before year 5 of the Prophet's message, i.e. 9 years before her marriage. I said there was further evidence, which could not be cited because of limitation of space. In fact a full treatment of this question requires several articles, which I hope to write in future.
However, the question presented today by Mr. Karim is valid. Why is the wrong view so widely held? This is not difficult to explain. What we have to look at first of all is the Arabian social environment at the time when the message of Islam was revealed to Prophet Muhammad (peace be upon him) and his efforts in advocating it. At the time, the Arabs were largely an illiterate community. Only a few of them could read and write. Yet they were highly articulate. Poetry was a highly appreciated talent among them. It recorded their events, expressed their attitudes and explained their traditions. The Arabs at the time did not have a calendar by which to date their events. They dated them by some major events, always changing the reference date when a new major event took place. Thus, we know that the Prophet was born in the Year of the Elephant, which refers to Abrahah's attempt to destroy the Kaaba, marching to Makkah at the head of an army and riding a huge elephant. Needless to say, in such a community, there was no special record of people's births and deaths, let alone their marriages.

We have indeed a general problem with people's ages at the time, which tend to make them either very young or very old at a particular juncture of their lives. In the case of Usamah ibn Zayd, who commanded the army raised by the Prophet to march to Palestine, confronting the Byzantine Empire. The army did not start its march immediately because of the Prophet's illness. It only set out after Abu Bakr had been chosen as Caliph. The reports suggest that Usamah was very young, putting his age at 17 or 18. Yet a simple process of research about him and his mother will conclusively lead us to believe that he was in his middle or upper twenties, i.e. 8-10 years older. What is the reason for this discrepancy? I believe it is due to the objections voiced by some of the Prophet's companions when Abu Bakr gave him his instructions to march. They feared that his young age was against him. Yet the same objections could be raised if the commander was 17 or 27. He is still very young for such a command. Abu Bakr refused to appoint someone else as commander, because it was the Prophet's choice for this task.

By contrast, when certain people are said to have lived to an old age, the figures quoted seem to be greatly exaggerated. They are often said to have lived 120 years. Thus, Abd Al-Muttalib, the Prophet's grandfather, Hassan ibn Thabit and Al-Nabighah Al-Ju'adi and several others are all said to have lived 120 years. Hassan is said to have lived 60 years before Islam and 60 years after he became a Muslim, giving him such a symmetrical life. We do not find reports of people having lived 95 years, or 103, or 87, etc. although should this have been the case they would still be thought of as having had a long life. Yet the figure 120 seems to attract better attention, although even today it is very rare. How come we have such a number of people attaining it within the relatively small population of Arabia at a time when those who reached 60 or 70 were considered elderly?

Take the other example from the Prophet's own life. He is said to have married Lady Khadeejah when he was 25 and she was 40. Yet neither figure is totally reliable. We have reports suggesting that the Prophet was younger, aged 21, or older, aged 30 or 28. The same is true of Khadeejah who is said to have been 45, or 35, or 30, or 25 at the time of her marriage to the Prophet. All these figures are mentioned in the same book and the same paragraph. So, what was Khadeejah's age? There is no reliable record to serve us. Therefore, we look at other facts. We know that she gave the Prophet six children over a period of 10 years, which confirms that she was at the prime of her reproductive age. Yet she was most probably older than the Prophet. This means that she was between 28 and 32 when their marriage took place. Still, wherever you go in the Muslim world people will tell you that she was 40 when she married the Prophet and he was 25. To what do we attribute the confusion? There is the common tendency that, in the absence of reliable information, people give round figures. Thus, the gap between their ages leads to stretching their respective ages downward in the Prophet's case and upward in Khadeejah's case to give us this long figure of 15 years, when she could have been only four or five years older than him, which is far more likely.

Another reason for a notion of this type to be so widely held is the fact that writers tend to copy each other. What is written in one book is treated as a reliable source and then produced in another. Over the 14 centuries of Islamic history, this report of Ayesha's age has been quoted hundreds of times, in all Islamic languages. Yet a simple error could have been the cause of the confusion. Suppose that the first report which attributes to Ayesha a statement that she was six when the Prophet sent his proposal dropped one word, giving the figure six instead of sixteen, you have a possible explanation. This could have been dropped by the reporter, or the writer, or the copier, or by someone else at a later stage. Consider the possibility that a major scholar in the early period of Islam was speaking about the Prophet's marriage to Ayesha when he said that she was 16, but one of the students who was taking notes wrote it 6, then this student became a scholar. Relying on what he wrote, he later taught in his circle mentioning the lower figure. That would have served to spread the mistake. Add to this the fact that books were always written by hand, and such errors were not uncommon. We cannot say that this is what happened, but we say it could have happened. Hence, the need for a thorough research to establish the fact. This is what I have done and concluded on the basis of available evidence that Ayesha was at least twice the age of nine when she married the Prophet.

Source: http://www.arabnews.com/?page=5§ion=0&article=99257&d=3&m=8&y=2007



--
அன்புடன்,
அதி. அழகு


*******

மிக்க நன்றி, அதி.அழகு...

MEERAN MYDEEN said...

அன்னை ஆயிஷா பற்றிய உங்களின் பதிவை மிகவும் நன்றாய் படித்து ரசித்தேன், சில செய்திகளையும் அறிந்தேன்.

மேலும் உங்களது பணி தொடர, சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக

இஸ்லாத்தை பொருத்த வரையில் பெண் என்பவள் தலைமை பொறுப்பை வகிக்ககூடாது என்று உள்ளதே, அன்னை ஆயிஷா அவர்களின் தலைமையில் போர் நடத்தி இருக்கிறார்களே, அது பற்றி யாருக்கேனும் தெரிந்தால் விளக்கம் தாருங்கள்.

பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் பிரதமராக, அதிபராக இருக்கிறார்கள்.
இன்னும் அரபு நாடுகளில்கூட பெண் மந்திரியாக இருப்பதாகவும் உங்கள் கட்டூரையில் படித்தேன்.

இஸ்லாமிய பெண்கள் வேலை, பதவி, தலைமையில் இருப்பதற்கு ஏதும் தடை இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள ஆசை. சகோதரர்கள் யாராவது இதை விளக்கினால் நான் மகிழ்வேன்.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்