"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Thursday, February 15, 2007

ஹோலோகாஸ்ட் - குப்பைத் தொட்டியில்..

வஜ்ரா, டோண்டு, ரவி இவர்கள் தங்களுக்குள்ளாகவே சிலாகித்து பேசிக் கொண்ட, ஹோலோகாஸ்ட் என்ற அறிமுகத்தை ஏற்கனவே படித்தாகி விட்டது. ஆனால், அவர்களால், அதை விளங்கிக் கொள்ளத் தான் முடியவில்லை. என்றாலும் அவர்களது உரையாடலில் உருப்படியாக வெளிப்பட்ட ஒரு விஷயம் - ஹிட்லர் ஒரு அயோக்கியன், கொடுங்கோலன், கொலைகாரன்.

மிக்க நன்றி.

இதைத் தானே நானும் எதிர்பார்த்தேன். குஜராத்தில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இதே ஹிட்லருக்குத் தான் கூட்டமாகக் கூடி பஜன் பாடினர் என்பது பத்திரிக்கைகளில் வந்த செய்தி. ஒரு இஸ்லாமியனை எதிர்க்க வேண்டும் என்பதற்காக, தங்களது அபிமான அமைப்பு பஜன் பாடி வாழ்த்திய ஹிட்லரை எதிர்த்து இத்தனை வெளிப்படையாக கருத்து வெளியிட்டிருப்பது மிகவும் சிறந்த பண்பாடல்லவா?

அதை பாராட்டத் தான் வேண்டும்.

இவர்கள் தங்கள் பதிவின் ஒரு நகலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதை குஜராத் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு அனுப்பி வைத்து அத்துடன் அவர்கள் செயலுக்கும் ஒரு கண்டன அறிக்கையும் கூடவே அனுப்பி வைத்தால் இன்னமும் அவர்களைப் பாராட்டுவேன். அத்துடன் நாஜிக்களின் சின்னமான ஸ்வதிக்காவை தடை செய்ய ஜெர்மன் எடுத்த முயற்சிகளுக்கு எதிராக கூக்குரலிடும் - இந்த neo-nazi அமைப்புகளுக்கும் ஒரு நகல் அனுப்பி வையுங்கள்.

மேலும் வஜரா கூறுகிறார் - // சில ஐரோப்பா நாடுகளிலும் பெரும்பான்மை இஸ்லாமிய நாடுகளிலும் படு தீவிரப் பிரச்சாரம் செய்யப் பட்டு கடைபிடிக்கப் படுகின்றது. ஐரோப்பிய கூட்டு நாடுகளில் சட்டப்படி தடை செய்யப் பட்டது இந்த புதிய நாஜிக் கொள்கையும் (neo-nazism) மற்றும் அதன் வளர்ப்பு மகனான ஹோலோகாஸ்ட் மறுப்பும்.//

ஒரு திருத்தம் வஜ்ராவின் செய்தியில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் முழுவதிலும் இது தடை செய்யப்படவில்லை. இதற்காக இன்னமும் ஜெர்மானிய நாடு போராடிக் கொண்டு இருக்கின்றது என்பது தான் உண்மை. இத்தாலி இத்தகைய தடை ஏற்படுத்துவதற்கு மறுத்து விட்டது. வன்முறை அல்லது கலவரத்தை தூண்டும் விதத்தில்லோ அல்லது பிற இனத்தவரின் மீது வெறுப்பு ஏற்படுத்தும் வகையில் எழுதினாலோ, பேசினாலோ தண்டனை வழங்கப்படும். அதாவது, ஹோலோகாஸ்ட் பற்றி பேசுவது விவாதிப்பது இதெல்லாம் தண்டனைக்குரியது அல்ல. ஆராய்ச்சியாளர்களுக்குத் தடை இல்லை. பொறுப்பற்ற தன்மையில் எழுதுவதற்கு மட்டுமே தடை. ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய தண்டனை. ஆனால் ஒரு வரலாற்று நிகழ்வை ஏன் முற்றிலுமாக மூடி மறைக்க வேண்டும்? எதன் காரணமாக? இந்த கேள்விக்கு வஜ்ராவால் மட்டுமல்ல, யாராலும் பதில் சொல்ல முடியாது.

இந்த உலகத்தை இன்று இயக்கிக் கொண்டிருப்பது - post modernism - இந்த உலகில் எதுவுமே புனிதப் பிம்பம் அல்ல, எல்லாமே ஒரு மறுபார்வைக்குட்பட வேண்டியதிருக்கிறது. என்ற தத்துவத்தை முன்வைத்ததோடு மட்டுமல்ல, பல மரபுகளை உடைத்தெறிந்து ஒரு மறுபார்வையில் அவைகளைப் புறந்தள்ளியிருக்கிறது.

இந்த மரபுடைப்புக்கு மதங்கள் அதன் நபிமார்கள், புனித வேதங்கள் என்று அனைத்தும் உட்படுத்தப்பட்டிருக்கின்றது. மனித மகான்களின் வாழ்க்கையை மறுபரிசீலனைக்குட்படுத்தி இருக்கிறது.

மகாத்மா என்று புகழப்பட்ட காந்தியை அவர் பேரனே மறுபரிசீலனைக்குட்படுத்தி, அவருள்ளிருந்த மனித ஆசாபாசங்களை வெளிப்படுத்தி இருக்கிறார். ராஜ்மோஹன் காந்தி கொடுத்த ஒரு பேட்டியில், என் தாத்தா ஒரு மாகாத்மா என்பதை விட, அவர் ஒரு மனிதர் என்பதை நிறுவவே முயற்சித்திருக்கிறேன் என்கிறார்.

இந்தியாவின் துயரமான 1947 பிரிவினையைப் பற்றி பேசவோ அல்லது எழுதவோ ஏதேனும் தடை உண்டா? இல்லை! இன்னமும் அதைப்பற்றிய நினைவுகள், கவிதைகள், கதைகள் எழுதப்படுகின்றன. பேசப்படுகின்றன. அன்றைய உணர்ச்சிவசப்படுதலின்றி, இன்று பெரும்பாலான மனக்காயங்கள் ஆறிவிட்ட பின்பு, அவை புதிய ஒளியில் பார்க்கப்படுகின்றன.

இந்த உலகின் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவத்தின் மீதுமான புரிதலும், கருத்தாக்கங்களும், காலகாலத்திற்கும் மறுபரிசீலனை செய்யப்படுகின்றன. இந்த உலகின் ஒவ்வொரு புனிதங்களும் தன்னை சோதனைக்குள்ளாக்கி வெற்றி பெற்ற பின்னரே நிலைத்திருக்கிறது. ஆனால், இந்த ஹோலோகாஸ்ட் என்பது மாத்திரம் அப்படியென்ன புனிதத்திற்கும் அப்பாற்பட்ட புனிதம். விவாதத்திலிருந்தும் விலக்கப்பட்டும், தடை செய்யப்பட்டும் பாதுகாக்கப்பட்டு போற்றப்பட வேண்டிய அவசியம்?

இந்த கேள்வியைக் கேட்டுத் தான் அந்தப் பதிவும். சரியாக வாசித்தவர்களுக்குப் புரிந்திருக்கும். எப்பொழுதுமே காக்காப் பார்வையுடன் காரியங்களைப் பார்த்து பேசுபவர்களுக்கு அது புரிந்திராது. இதே கேள்வியை ரவி ஸ்ரீனிவாஸ் மற்றொரு பதிவில் என்னிடம் வைத்த பொழுது அவருக்கு சொன்ன பதில் இதோ கீழே:

ரவியின் வார்த்தைகள் //you deny the genocide of Jews and you talk of history. If you have some respect for history and truth, you would not have denied the holocaust. //

எனது பதில்:

// Ravi Srinivasji,

Thanks for affording your time to read and make a comment.

You know, any human would always have a tendency to divert the topic of the discussion, when they find the subject matter too hot to handle.

And your comment was one such.

But alas, see, I do not have any intention to let you hijack this post from its intended course of discussion.

You talk about history.

Before that, why not let me raise a question to you - whether you do really have the required comprehensive capability to understand and assimilate the subject matter written under Holocaust?

Historians of American and European origins wrote the subject matter and I had provided the names of all those books by them.

The article clearly stated that the Holocaust to be debated and should not be construed as a matter of patriotism by those countries, which had imposed a ban on discussion.

The ban is an oppression and violation of the fundamental rights of a human being and such a law exists in the most civilised world of Europe and America - not in any other third world countries.

I closed that article with a statement that if not publicized by the Iranian President, I too would have considered that it’s true - without even questioning the veracity of the claim by the democrats in so many countries. Now it is the responsibilty of those countries and their historians to prove that the Holocaust had really happened. Proove again. Or consider the evidences and re-open the debate.

Secondly, since you opened the issue - I say this for your information and knowledge since you seemed to have short supply of those things - I do not need to exonerate Hitler.

There is no purpose to that as far as I am concerned.

Hitler had claimed that he was the purest of all the Aryans and had more rights to live than any other human in the world. He was as good any of the present day Parpanism thinkers / intellectuals / supporters and I am fully aware of this when I was writing that the Holocaust to be reviewed - to give Hitler the justice, if he was innocent.

I do not know, whats your stand with respect to Hitler - but, I know, the RSS and Associates sang hymns in favour of Hitler in Gujarat. (ஹிட்லருக்கு தரவாக குஜராத்தில் பஜனை பாடியவர்கள் தான்ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர். )

It is not in my agenda to protect Hitler. (May be RSS)

If injustice had been imposed on Hitler, because he lost the war, then every just human had the right to get the historic facts corrected and Hitler be given the justice. Europeans and Americans wrote most of the letters to 7 Days Newspaper, expressing wonder and shock on the ban on the discussion.

I am a human being!!! You?

Any further discussion and clarification on this subject would be entertained only under the article and not elsewhere.

My Sincere Thanks to :

பாக்கிஸ்தானை நோக்கிய ஒரு பயணம் - சமுத்ராக்களுடன். //


குறுகிய நோக்கத்துடன் வாசிப்பவர்கள் - ஒரு விவாதத்தின் முழுவீச்சையும் அறியாமலே, பேசிவிடுகின்றனர். பாவம்.

ஹோலோகாஸ்ட் நடந்தது, நடக்கவில்லை என்பதைப் பற்றிய கவலை எனக்கில்லை. ஆனால், அதை காரணம் காட்டி, ஹிட்லரின் பாவகாரியத்தின் புண்ணியத்தை பாலஸ்தீன மக்களின் தலையில் கட்டி, இல்லாத ஒரு தேசத்தை, தாங்கள் வெற்றி பெற்று விட்ட ஒரே காரணத்திற்காக, உருவாக்கி, நிரந்தரமாக இந்த உலகை தீராத தலைவலிக்குட்பட்த்தினார்களே, அவர்களைத் தான் இன்று கேட்க வேண்டும் - எந்த வகையில் இது நியாயம் என்று.?

குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறார் வஜ்ரா. தானே எல்லாம் என்ற தொனியில். ஆனால், அவருக்கு நன்றாகத் தெரியும், குப்பை மேட்டில் வரலாற்றைப் புதைத்து விட்டு, தாங்களே ஆதிகுடிகள் என்று சொல்லிக் கொண்டவர்களின் வழித்தோன்றல்கள் தாம் என்பது. அத்தகைய மனிதர்களிடத்திலிருந்து எந்த நியாயத்தை விவாதிக்க முடியும்? - இயல்பாகவே குப்பைத் தொட்டியில் தான் அவர்கள் வரலாற்றை மறைத்து வைக்க முயற்சிப்பார்கள்!!!

21 comments:

Anonymous said...

Wow!!

Good reply!

Thanks for the post!!


- Common Man.

உடைப்பு.Sri Rangan said...

இந்தியப் பார்ப்பனியம் மக்களைச் சாதி ரீதியாகப் பிரித்து ஒடுக்கி வருகிறது.இத்தகைய பாப்பனியப் பாசிஸ்டுக்கள் கிட்லரை பாவமே செய்தாவன் என்று சொல்வது ஆச்சரியப்படத்தக்கதா என்ன? இது பார்பனியத்தோடு கூடப் பிறந்த மனோபாவம்.கிட்லா செய்த கொடுமைகளை இன்றும் ஆவணங்களோடு அவனது நாட்டினரே தமது இளைய தலைமுறைக்குப் படிப்பித்து வரும்போது இந்தியப் பார்ப்பனர்கள் கூசாமல் குலைப்பது அந்த"ஆரிய"பொய்மைக்காக.அழிவார்!வரலாற்றையே கொச்சைப்படுத்தும் நய வஞ்சகர்களாக இருக்கிறார்கள்.பார்பனியத்தின் கயமைத் தனம் இன்று வரை இந்திய மக்களை தீண்டத் தகாதவர்களாக ஒடுக்கும்போது அவர்களிடம் மனிதாபிமானத்தை-நேர்மையை,அறிவு நாணயத்தை எதிர்பார்ப்பது மடமை!


நண்பன்,உங்கள் கட்டுரை அறிவு நாணயத்தோடு எழுதப்பட்டிருக்கு.நன்றி.

அரவிந்தன் நீலகண்டன் said...

குஜராத்தில் எங்கே எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஹிட்லரை புகழ்ந்திருக்கிறது என்பதனை தெரிந்துகொள்ளலாமா நண்பரே?

மரைக்காயர் said...

//..ஹிட்லரின் பாவகாரியத்தின் புண்ணியத்தை பாலஸ்தீன மக்களின் தலையில் கட்டி, இல்லாத ஒரு தேசத்தை, தாங்கள் வெற்றி பெற்று விட்ட ஒரே காரணத்திற்காக, உருவாக்கி, நிரந்தரமாக இந்த உலகை தீராத தலைவலிக்குட்பட்த்தினார்களே, அவர்களைத் தான் இன்று கேட்க வேண்டும் - எந்த வகையில் இது நியாயம் என்று.?//

நியாயமான கேள்வி நண்பன் அவர்களே, ஒட்டுமொத்த உலகமும் யூதர்களை ஓட ஓட விரட்டிக் கொண்டிருந்தபோது அவர்களுக்கு தஞ்சம் கொடுத்த நாடு பாலஸ்தீன் மட்டும்தான் என்பது வரலாறு சொல்லும் உண்மை. அந்த பாலஸ்தீனையே சுடுகாடாக்கி சூழ்ச்சிகளால் அங்கு தங்கள் ராஜ்ஜியத்தை அமைத்தவர்கள் இந்த யூதர்கள்.

நண்பன் said...

அர்விந்த்,

Gulf Newsன் இந்திய செய்திப் பக்கத்தில், 2005 ஆம் ஆண்டு படித்தது. (நவம்பர் / டிசம்பர் மாதம்). பின்னர் இந்தியாவில் இருந்து வெளியாகும் ஒரு இஸ்லாமிய இதழிலும் இது குறித்து செய்தி வெளியாகி இருந்தது. நீண்ட நாட்களாகி விட்டதால், இது குறித்து தேடுவதற்கும் நேரம் தேவைப் படுகிறது.

ஆனால், அதைவிட, படுசுவராஸ்யமான, 'போற்றிப் புகழ்பாடுதலை' விட மோசமான குற்றச்சாட்டுகள் - குஜராத் பாட புத்தகங்களில் ஹிட்லரின் புகழ் எவ்வாறு பாடப்படுகிறது; காந்தியின் மரணம் குறித்து அந்தப் பாடபுத்தகங்கள் எவ்வாறு மௌனம் சாதிக்கின்றன என்பதைப் பற்றிய விரிவான வாதங்கள் இருக்கின்றன.

அதை மறுத்தும் வாதங்கள் இருக்கின்றன என்பதும் உண்மை. ஆனால், மிகப் பலவீனமான, இப்படி இல்லை, அப்படி, ஏன் எங்களை மட்டும் கடிந்து கொள்கிறீர்கள் - ஸ்டாலின், மா, இவர்களின் புகழ் பாடும் சோஷலிஸ வாதிகளான, நேரு, கம்யூனிஸ்ட்கள் இவர்களையெல்லாம் ஏன் கேள்வி கேட்கவில்லை என்றெல்லாம் வாதம் போகிறது.

தற்சமயத்திற்கு இவற்றைப் படித்துப் பாருங்கள். நான் வாசித்த செய்தியை (Gulf Newsn பழைய செய்தித் தாள் / அந்த இஸ்லாமிய இதழ் கிடைக்குமா என முயற்சிக்கிறேன்.)


http://www.dialognow.org/node/view/1148

Anonymous said...

நண்பன் உலகெல்லாம் நாசியச் சின்னங்களும்,கிட்லாரின் பெயரும் தடைசெய்யப்பட்ட நிலையில் புது டெல்லியில் ஒரு உணவகத்தின் பெயர்"கிட்லர் கோர்னர்"நாசியச் சின்னந் தாங்கிய பெயர்ப் பலகையின் படம் என்னிட முள்ளது.அதை எனத்து தளத்தில் போடுகிறேன் பின்பாக.

நல்லடியார் said...

//குஜராத்தில் எங்கே எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஹிட்லரை புகழ்ந்திருக்கிறது என்பதனை தெரிந்துகொள்ளலாமா நண்பரே?//

2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் மோடி அரசிற்குட்பட்ட குஜராத் கல்வித் துறையால் வெளியிடப்பட்ட பாடபுத்தகங்களில் ஹிட்லரைப் புகழ்ந்து எழுதப்பட்ட பாடங்களை நீக்கச் சொல்லியதற்கு முரளி மனோஹர் ஜோஷி (டோண்டு அல்ல!:-) அவற்றில் தவறேதுமில்லை என்று பாராளுமன்றத்தில் கூறினார்.


http://www.indowindow.net/akhbar/article.php?article=107&category=7&issue=17

http://humanrightsindia.blogspot.com/2005/11/government-acts-but-just-not-enough.html

சங்பரிவார கல்வியாளர்களின் ஹிட்லர் ஆதவுக்கும் அவற்றை பள்ளிப்பாடங்களில் புகழ்ந்து எழுதியதற்கும் இந்திய இஸ்ரேல் தூதரகம் எதிர்ப்புகளைத் தெரிவித்தையும் நீல்கண்டன் அறியாதிருக்க வாய்ப்பில்லை.

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஹிடலர் அபிமானம் பற்றி நீலகண்டன் உண்மையில் தெரியாமல்தான் கேட்கிறாரா?

Anonymous said...

http://news.bbc.co.uk/2/hi/south_asia/4711475.stm

ஆமாமா, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் பிஜேபிக்கும் சம்பந்தம் இல்லை அப்படிம்பாரு நீலகண்டன், நம்பிக்கோங்க!!

அரவிந்தன் நீலகண்டன் said...

நண்பன் நல்லடியார் நன்றி,

ஆக, குஜராத் பாடப்புத்தகங்களில் ஹிட்லர் புகழப்பட்டிருந்தான் என்பதுதான் உங்களிடமிருக்கும் ஆக வலுவான தரவு அல்லவா? நண்பன் உண்மையில் உங்களிடமிருந்து இன்னமும் வலுவான வாதங்களை எதிர்பார்த்தேன். ம்ம்ம்...இதற்கான விரிவான பதில்கள் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்றன நண்பன். அதுவும் நீங்கள் சுட்டிக்காட்டிய வலுவில்லாத ஆதாரங்கள் அல்ல. வலுவான ஆதாரங்களுடன் (அந்த பாடநூல் வாசகங்களிலிருந்தே) அவை மறுதலிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாருங்கள் கட்டுடைப்பு மட்டுமல்ல தங்களின் பின்நவீனத்துவம் இத்தகைய 'தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு வடித்தெடுப்பு' மூலம் ஒரு பிம்பத்தை உருவாக்குவதிலும் தடையில்லாமல் இயங்குகிறது என்று நினைக்கிறேன். உடனடி தேவை ஒரு ஆலன் சோகால்?

Anonymous said...

there is no ban on discussing holocaust in any country. There is a ban on neo-nazism which wants to falsify holocaust.

I want to make one thing clear, do you agree that holocaust happened and 6 million people were killed brutally or not ?

If not, there is nothing to talk.

The belief that by applying post-modernism you can falsify holocaust is what is nauseating.

நண்பன் said...

// Anonymous said...
Wow!!
Good reply!
Thanks for the post!!
- Common Man.
//

பொது ஜனத்திற்கு நன்றி. நீதி, அநீதி இவற்றைத் தீர்மானிக்கும் உரிமை தங்களுக்கே இருக்கிறது என்ற எண்ணம் இன்னமும் அவர்களிடத்திலிருந்து நீங்கவில்லை. மற்றவர்களுக்கும் தங்கள் கருத்தைச் சொல்லும் உரிமை இருக்கும் பொழுது, அவற்றைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டும் என்ற அதிகப்பிரசங்கித்தனமான கருத்தை முன் வைப்பதில் அவர்களுக்குக் கொஞ்சமேனும் தயக்கமிருக்கிறதா என்று கவனித்தீர்களா?

கருத்தாடலிலாவது மற்றவர்களைத் தங்களுக்குச் சமமாக எண்ணும் மனப்பான்மை வந்த பின்னர் தான், இவர்களால், அன்றாட வாழ்க்கையிலும் சமத்துவத்தைப் பின்பற்ற இயலும்.

அதுவரையிலும், தொடர்ந்து அவர்களுடன் உரையாடிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.

நண்பன் said...

// இந்தியப் பார்ப்பனியம் மக்களைச் சாதி ரீதியாகப் பிரித்து ஒடுக்கி வருகிறது.இத்தகைய பாப்பனியப் பாசிஸ்டுக்கள் கிட்லரை பாவமே செய்தாவன் என்று சொல்வது ஆச்சரியப்படத்தக்கதா என்ன? இது பார்பனியத்தோடு கூடப் பிறந்த மனோபாவம்.கிட்லா செய்த கொடுமைகளை இன்றும் ஆவணங்களோடு அவனது நாட்டினரே தமது இளைய தலைமுறைக்குப் படிப்பித்து வரும்போது இந்தியப் பார்ப்பனர்கள் கூசாமல் குலைப்பது அந்த"ஆரிய"பொய்மைக்காக.அழிவார்!வரலாற்றையே கொச்சைப்படுத்தும் நய வஞ்சகர்களாக இருக்கிறார்கள்.பார்பனியத்தின் கயமைத் தனம் இன்று வரை இந்திய மக்களை தீண்டத் தகாதவர்களாக ஒடுக்கும்போது அவர்களிடம் மனிதாபிமானத்தை-நேர்மையை,அறிவு நாணயத்தை எதிர்பார்ப்பது மடமை!

நண்பன்,உங்கள் கட்டுரை அறிவு நாணயத்தோடு எழுதப்பட்டிருக்கு.நன்றி.
//

ஒரு கட்டுரையை எழுதி, அதை உடன் அப்படியே பிரசுரித்து விடுவதில்லை. மீண்டும், மீண்டும் வாசித்து, தனிநபர் தாக்குதலாக அமைந்துவிடாமல், கருத்தியல் மோதலாக மட்டுமே, கட்டுரை அமைந்திருக்கிறதா என உறுதி செய்து பின்னர் தான் வெளியிடுவது தான் எனது வழக்கம்.

பிறரிடமிருந்து, நாகரீகமான உரையாடல்களை எதிர்பார்க்கும் பொழுது, நாமும் அதை பின்பற்றத் தான் வேண்டும்.

அதனால் தான், எனது எழுத்துகள் அறிவு நாணயத்துடன் இருக்கிறது.

நன்றி, உடைப்பு.

உடைப்பு.Sri Rangan said...

//நண்பன் நல்லடியார் நன்றி,

ஆக, குஜராத் பாடப்புத்தகங்களில் ஹிட்லர் புகழப்பட்டிருந்தான் என்பதுதான் உங்களிடமிருக்கும் ஆக வலுவான தரவு அல்லவா? நண்பன் உண்மையில் உங்களிடமிருந்து இன்னமும் வலுவான வாதங்களை எதிர்பார்த்தேன். ம்ம்ம்...இதற்கான விரிவான பதில்கள் ஏற்கனவே கூறப்பட்டிருக்கின்றன நண்பன். அதுவும் நீங்கள் சுட்டிக்காட்டிய வலுவில்லாத ஆதாரங்கள் அல்ல. வலுவான ஆதாரங்களுடன் (அந்த பாடநூல் வாசகங்களிலிருந்தே) அவை மறுதலிக்கப்பட்டுள்ளன. ஆனால் பாருங்கள் கட்டுடைப்பு மட்டுமல்ல தங்களின் பின்நவீனத்துவம் இத்தகைய 'தேர்ந்தெடுக்கப்பட்ட தரவு வடித்தெடுப்பு' மூலம் ஒரு பிம்பத்தை உருவாக்குவதிலும் தடையில்லாமல் இயங்குகிறது என்று நினைக்கிறேன். உடனடி தேவை ஒரு ஆலன் சோகால்?//

நீலகண்டன் இதுதான் சோவின் பாணியிலான குதர்க்கம்.

உங்கள் பதிலிருக்கே சாட்சாத் அந்த கிருஷ்ண பரமாத்தாவால்கூட புரிந்து கொள்ள முடியாத பித்தலாட்டம்.

பார்பனியத்தினது கிட்லர்மீதான அபிமானத்தை உங்களால் ஏற்க முடியாதிருப்பின் அதுபற்றியொரு கட்டுரையை உங்கள் தளத்தில் எழுதுங்கள்.நாங்கள் உங்களோடு விவாதிகத் தயாராக இருக்கிறோம்.


இது உங்கள் அறிவுக்கான சவால்.


முடிந்தால் எந்தத் துறை சார்ந்தும்...

உங்களால் அதை நியாய்படுத்தும் வலுவிருந்தால் தயவு செய்து வாருங்கள் விவாதிப்போம்.


சும்மா கேனைத்தனமாக விவாதிப்பதை விடவும்.


இத்தகைய குதர்க்கத்தைக் கழிசடை சோவிடம் பார்த்தாகி விட்டது.
நீங்களும் உங்கள் மூதாதையர் வழியில் பிராண்டுவது கொஞ்சமும் "அறிவு"நாணயமாகத் தெரியவில்லை.


உங்கள் விவாதத்தைத் தொடரவும்.


இதுதான் சரியான வழி.


உங்கள் தளத்தில் சந்திப்போம்!-அன்பரே.

நண்பன் said...

உடைப்பு,

உங்கள் கருத்திற்கு மிக்க நன்றி.

என்றாலும், என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், அமைதியையும், நிதானத்தையும் என்றுமே கைவிடக் கூடாது என்பது என் எண்ணம்.

"கழிசடை, கேனைத் தனம்" போன்ற வார்த்தைகள் என்னை சற்றே சங்கடப்படுத்துகிறது.

கொஞ்சம் கவனித்தீர்கள் என்றால் மிக்க நலமாக இருக்கும் என்பது என் எண்ணம் - குறைந்த பட்சம் என் பதிவிலாவது.

மிக்க நன்றி. தொடர்ந்து வாசித்து வாருங்கள், மனவருத்தமின்றி.

நட்புடன்
நண்பன்

நண்பன் said...

மரைக்காயர்,

இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்றதும், ஆங்கில அமெரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டது. நாஜி கொடுமைகளால் துயரம் அடைந்து, வெளியேற நினைத்த யூதர்களை எங்கு கொண்டு செல்வது என்று கண்டறிவதற்காக. அவர்கள் அறிந்து சொன்னது, உலகின் எந்தவொரு நாடும் இந்த யூதர்களை ஏற்றுக் கொள்ளத் தயாரக இல்லை - பாலஸ்தீனத்தைத் தவிர.

அமெரிக்க அதிபர் ட்ரூமென் பிரிட்டனை வற்புறுத்திக் கொண்டிருந்தார் - யூத அகதிகளின் 50 சதவீதத்தினரை உடனடியாக பாலஸ்தீனத்தில் கொண்டு விடுமாறு. அப்போதைய பிரிட்டீஷ் வெளியுறவு செயலாளரான எர்னஸ்ட் பேவின், அவருக்கு நக்கலான சொன்ன பதில் - ஆமாமாம், யூதர்கள் நியூயார்க்கிற்கு வருவதை நீங்கள் விரும்பவில்லை தான் என்று.

இது தான் அவர்களது யூத பாசம்.

நண்பன் said...

நல்லடியார் தவல்களுக்கு நன்றி.

அர்விந்த்,

நான் வாசித்த செய்தி, ஆர். எஸ். எஸ் அமைப்பினர் ஒரு கூட்டத்தில் ஹிட்லரை வானளாவப் புகழ்ந்தனர் என்ற செய்தி - they sang hymns to Hitler என்ற கிண்டல் தலைப்புடன். அதைத் தான் குறிப்பிட்டேன்.

ஆர்.எஸ்.எஸ். ன் ஹிட்லர் பாசம் புதிதல்ல என்றாலும், கூட்டம் போட்டு வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு வந்துவிட்டார்களா என்ற வியப்பு தான் அந்த செய்தி. ஆர்.எஸ்.எஸ் என்பது அரசு சார்பற்ற ஒரு அமைப்பு. அவர்களுக்குரிய சுதந்திரத்தின் படி, தாங்கள் விரும்பிய தலைவர்களைப் புகழ்ந்து தள்ளட்டும்.

ஆனால், குஜராத் அரசு என்பது, இந்திய இறையாண்மையில் விசுவாசம் வைத்து, எல்லா மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, செயல்பட வேண்டிய அரசு. தங்கள் தனிப்பட்ட சித்தாந்தங்களை, தங்கள் கருத்தியல்களை குழந்தைகளின் மனதில் திணிக்க எடுத்துக் கொண்ட கருத்தியல் வன்முறை - ஹிட்லர் போற்றி போற்றி என்று கொண்டாடும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளை விட கொடுமையல்லவா?

எதுவுமே புரியாத மழலையர் அல்லாமல், தெளிவாக சிந்திக்கும் திறன் பெற்ற தருணமும் அல்லாமல், தங்கள் கருத்தியல் அடிப்படைகளை எவ்வாறு உருவாக்குவது என தங்களைச் சுற்றி இருக்கும் சூழலை நோக்கி கற்றுக் கொள்ள நினைக்கும் டீன் ஏஜ் பருவத்தினரை குறிவைத்து, அவர்களிடம் தயக்கத்துடனும் குழப்பத்துடனும் உருவாகிக் கொண்டிருக்கும் கருத்தியல் அடிப்படைகளை சிதைத்து தங்கள் கொள்கைகளை கருத்தியலாக, மதிப்பீட்டுச் சிந்தனைகளாக திணிக்க முற்படுவது தான் மிகப் பெரிய துரோகம்.

இதை ஒன்றுமே இல்லை என்று கூறுவது ஏற்பானதல்ல. இது தான் வாத முறை என்றால், எல்லோருமே எந்த ஒரு விவாதத்தையும், ப்ஃபூ, இதைத் தான் சொன்னாயா, இது ஒன்றுமே இல்லை. என்று ஒதுக்கி விட்டுப் போய்விடலாம் தானே? பின் வாதம் என்ன வேண்டிக்கிடக்கிறது?

உங்களுக்கு ஒன்றுமே இல்லாத இந்த விஷயம் இந்த உலகையே உலுக்கிவிட்டது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். மோடிக்கு அமெரிக்கா, விசா வழங்க மறுத்தது, பிரச்சினையின் வீரியத்தைச் சொல்லும். அது மட்டுமல்ல, அது மோடிக்கு ஒரு செய்தியாகவும் அமைந்தது. யூதர்களைப் பகைத்து கொள்வது நல்லதல்ல என்று.

ஒரே சமயத்தில், ஹிட்லரின் புகழ் பாடவும், இஸ்ரேலிடம் கொஞ்சி கொஞ்சி உறவு கொள்ளும் இரட்டை முகத்தை இந்துத்வாதிகளால் மட்டும் தான் முடியும். Sheer hypocrisy.

எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன் என்ற அற்ப எண்ணமே இந்துத்வாவின் சித்தாந்த கொள்கையாக இருக்கிறது என்பதே உண்மை. யூத நாடு, இஸ்லாமிய தேசங்களுக்கு எதிராக இருக்கிறது என்பதினாலே அவர்களிடத்தில் நட்பு பாராட்ட விரும்புகிறது இந்துத்வா.

மற்றபடிக்கு, ஹிட்லரின் நாமம் போற்றுவது தான் அதன் உள்ளூர கொள்கை.

நல்லடியார் -

அர்விந்த எல்லாம் அறிந்திருப்பார் - சில சமயங்களில் இத்தகைய தர்மசங்கடத்தில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்றாலும், அமைப்பு ரீதியாக ஆர்.எஸ்.எஸ் செயல்களுக்கெல்லாம் அவரை பொறுப்பாக்க முடியாது என்றே கருதுகிறேன்.

நண்பன் said...

மூசா,

ஒரு பெயரை வைத்துக் கொண்டால், அதன் மூலம் தனக்கு ஒரு அந்தஸ்து வந்துவிடும் என்று நினைத்தீர்கள் என்றால், அது உங்களுடைய அறிவின்மையே.

நீங்கள் வாந்தி எடுக்க இது இடமல்ல, என்ற செய்தியைக் கவனத்தில் வைத்து உரையாடுங்கள். No ban on discussion என்பது கடைந்தெடுத்த பொய். இந்த சிறிய விஷயத்தைக் கூட தெரிந்து கொள்ளாமல், பெரிய பெரிய விஷயங்களை எல்லாம் பேச வந்து விட்டமை கண்டு சிரிக்கிறேன்.

முதலில், உங்கள் தகவல்களைக் கொஞ்சம் சரி பார்த்து விட்டு வாருங்கள் - பின்னர் உரையாடுவோம்.

Anonymous said...

//கருத்தாடலிலாவது மற்றவர்களைத் தங்களுக்குச் சமமாக எண்ணும் மனப்பான்மை வந்த பின்னர் தான், இவர்களால், அன்றாட வாழ்க்கையிலும் சமத்துவத்தைப் பின்பற்ற இயலும். //

Yes, I Agree with you!

- Common Man

Anonymous said...

ஒரு ஆழ்ந்த ஆராய்ச்சி மேற்க்கொண்டால்
ஒரு விஷயம் வெளிப்படும்.இந்த யூத ,அரேபிய இனத்தோன்றலின் ஆதார அடிப்படையும் திராவிடர் எனும் அடிப்படையும் ஒன்றாயிருக்கும்.
ஐரோப்பிய,இந்திய ஆரிய தோன்றலின் அடிப்படையும் ஒன்றாயிருக்கும்.
இப்போது புரியும் அதன் முரண்பாடுகள்.

உடைப்பு.Sri Rangan said...

//இரண்டாம் உலக யுத்தம் முடிவுற்றதும், ஆங்கில அமெரிக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டது. நாஜி கொடுமைகளால் துயரம் அடைந்து, வெளியேற நினைத்த யூதர்களை எங்கு கொண்டு செல்வது என்று கண்டறிவதற்காக. அவர்கள் அறிந்து சொன்னது, உலகின் எந்தவொரு நாடும் இந்த யூதர்களை ஏற்றுக் கொள்ளத் தயாரக இல்லை - பாலஸ்தீனத்தைத் தவிர.

அமெரிக்க அதிபர் ட்ரூமென் பிரிட்டனை வற்புறுத்திக் கொண்டிருந்தார் - யூத அகதிகளின் 50 சதவீதத்தினரை உடனடியாக பாலஸ்தீனத்தில் கொண்டு விடுமாறு. அப்போதைய பிரிட்டீஷ் வெளியுறவு செயலாளரான எர்னஸ்ட் பேவின், அவருக்கு நக்கலான சொன்ன பதில் - ஆமாமாம், யூதர்கள் நியூயார்க்கிற்கு வருவதை நீங்கள் விரும்பவில்லை தான் என்று.

இது தான் அவர்களது யூத பாசம்.//



//ஆர்.எஸ்.எஸ். ன் ஹிட்லர் பாசம் புதிதல்ல என்றாலும், கூட்டம் போட்டு வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு வந்துவிட்டார்களா என்ற வியப்பு தான் அந்த செய்தி. ஆர்.எஸ்.எஸ் என்பது அரசு சார்பற்ற ஒரு அமைப்பு. அவர்களுக்குரிய சுதந்திரத்தின் படி, தாங்கள் விரும்பிய தலைவர்களைப் புகழ்ந்து தள்ளட்டும். //



நண்பன் மேற்காட்டிய உங்களின் இரண்டு பந்தியுமே மிகவும் மேலோட்டமான கருத்துக்கள்.இவை இன்றைய ஆளும் வர்க்கத்தின் பொய்யுரைகள்.மிக ஆழமாகப் பார்த்தோமானால் இஸ்ரேலின் உருவாக்கத்துக்குப் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் மிகவும் கபடத்தனமானது.அந்த அரசியலானது எண்ணை வள அரபு நாடுகளைத் தொடர்ந்தும் சுரண்டுவதற்கானவொரு அடிப்படை நோக்கத்தின் மீது உருவாக்கப்பட்ட இஸ்ரேல் என்பதாக இருக்கும்.இந்த இஸ்ரேலானது அமெரிக்காவின் அடியாளகவே இருத்திவைப்பதற்காக அரபிய மண்ணில் தூவப்பட்ட விஷச் செடி விதையாகும்.இது பற்றித் தனிக்கட்டுரை போடுவோம்.


மற்றும் ஆர்.எஸ்.எஸ் பற்றிய தங்கள் மதிப்பீடும் மேலோட்டமாக அவர்களே சொல்லும் கருத்தாகும்.இந்த அமைப்பு அரசு சாராதது அல்ல என்பது தப்பு.ஆர்.எஸ்.எஸ் இல்லாமல் பாரதிய ஜனதா இல்லை.இந்த அமைப்பு இந்திய ஒரு பகுதி ஆளும் வர்க்கத்தின் மிகப் பெரும் ஒத்துழைப்போடும்,ஆசியோடும் வளர்தெடுக்கப்பட்டது.இது அகண்ட பாரதத்தின் கனவோடு உலா வந்த கோட்சே மீதான புரிதலை விளங்கிக் கொள்ளும் போதும்,காந்தியைப் போட்டுத் தள்ளிய அதி புத்திசாலித்தனமான கோட்சேயின் பதில்களிலிமிருந்தும் நீங்கள் அறிய முடியும்.இவற்றையும் தாண்டி நாம் "ஞானகங்கையின்"உள்ளடக்கத்தை வாசிப்போமானால் அந்த வெளியீடுகளில் ஆர்.ஏஸ்.எஸ்சின் உப தலைவர்(இரண்டாவது தலைவர்) கோல்வாகர் சொல்வது எந்த அரசு சார்பானதென்பதை வெட்ட வெளிச்சமாச் சொல்லும்.

இவை குறித்த நீண்ட கட்டுரைகள் உடைப்புப் பதியும்.

அரவிந்தன் நீலகண்டன் said...

http://arvindneela.blogspot.com/2007/02/blog-post_16.html

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்