"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Saturday, March 31, 2007

சல்மான் ருஷ்டி என்ற சாத்தான். (இறுதி பதிவு)

மௌலானா மௌதூதி மற்றும் சர் சையத் அஹமத் கான் அவர்களது முயற்சியால் உண்மைகளை உணரத்துவங்கினர் - ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள். அவர்களும் இதை பகுத்து ஆராயத் தலைப்பட்டனர்.

Professor Kenneth Cragg of Cambridge, a Christian scholar deeply involved in reckoning with his neighbour's scripture', asks, 'In a situation so charged, in any event, with ambiguity, will the theory of deliberate, almost negotiated, compromise, made and withdrawn, be the only or the likeliest hypothesis? Did the Quraish think Muhammad was still negotiable?

Cragg answers himself: 'It would not have been the first time that worship at once common and contrasted. Certainly in the sequel the struggle continued with Muhammed resolute and the paganism stubborn.'

ப்ரொபஸ்ஸர் கென்னத் உறுதிபடுத்துகிறார் ' குரைஷிகளுக்கும் முகமதுவிற்கும் ஒப்பந்தம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் அவரவர் நிலைபாட்டில் அவர்கள் உறுதியாகவே இருந்திருக்கின்றனர். '

இந்த சாத்தானிக் வெர்ஸஸை மறுத்து, இத்தாலிய அறிஞர் Caetani தனது Annali dell'Islam என்ற புத்தகத்தில் எழுதுகிறார்.

When one considers the contempt and enmity which the Quraish tribe, who inhabitated Mecca, showed toward Mohammed on other occasions, it would seem highly improbable that they ever condescended to listen to the Prophet's reading of the Koran, to say nothing of acknowledging him as a prophet on occasion of an insignificant concession. Furthermore, such a sudden abandonment of a principle which he had previously championed so energetically would have utterly cancelled his previous success, and entirely undermined the prestige which he had gained among his followers. And one might add that a compromise with the Quraish tribe could not possibly have been reached by merely changing a few lines of the Koran at a time when a large portion of it was filled with bitter attacks upon the Meccan pagans and their gods.

(முகமதுவின் மீது குரைஷிகள் கொண்டிருந்த வெறுப்பையும், பகையையும் கணக்கிலெடுத்துக் கொண்டால், அந்த குரைஷிகள் முகமது பிரசங்கத்தைப் போய் அமர்ந்து காது கொடுத்து கேட்டிருப்பார்கள் என்ற சாத்தியப்பாட்டிற்கு வாய்ப்பே இல்லை. காசு பெறாத ஒரு சலுகைக்கு (ஒரு வரியை மாற்றிச் சொல்லுதல்) அவரை நபியாக மறுசொல் இல்லாது ஒப்புக் கொண்டிருக்கவும் மாட்டார்கள். மேலும் இந்த திடீரென்ற கொள்கை கைவிடுதலால், அதுவரையிலும் தன்னைப் பின்பற்றும் மக்களிடையே தனக்கிருந்த செல்வாக்கை முகமது இழந்திருப்பார். இத்துடன் மற்றொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் ' குரானில் ஒரு வரியை மட்டும் மாற்றி விட்டு, அதைவிட மோசமாக குரைஷிகளைத் தாக்கும் வசனங்களையெல்லாம் விட்டுவைத்திருக்க ஒப்புக்கொண்டு, ஒரு சமதான உடன்படிக்கைக்கு குரைஷிகள் வந்திருப்பார்கள் என நம்புவதற்கு வாய்ப்புகள் இல்லை. )

Caetani ஐக் மேற்கோள் காட்டி, Tor Andrae தனது Mohammad: The Man and his Faith என்ற புத்தகத்தில் எழுதுகிறார்:

It is very apparent that in this form the whole narrative is historically and psychologically contradictory.

இவர் குறிப்பிடும் narrative இப்னு ச'ஆத்-னுடையது.

அடுத்து இன்னுமொரு ஆய்வாளர் Hichem Djait - the well known, historian attached to the universities of McGill and Berkely writes:

Over the centuries Christian tradition came to look upon Islam as a disturbing upstart movement that awakened such bitter passion precisely because it laid claim to the same territory as Christianity.

தாங்கள் இயங்கும் அதே தளத்தில் அதே நிலப்பரப்பில் எழுச்சிமிகு மதமாக வளரத் தொடங்கிய இஸ்லாம் கிறித்துவ ஸ்தாபனங்களைக் கலவரப்படுத்தியது.

இது தான் உண்மை. மனம் தளர்ந்த கிறித்துவ துறவிகள் குரானின் மீதும் முகமதுவின் மீதும் அவதூறுகளை அள்ளி வீசினர். இந்த நிலைமை க்ருசேட் என்னும் சிலுவை யுத்தங்கள் தொடங்கிய காலத்தில் இன்னும் மோசமாகியது.

இவற்றைக் குறித்து, எழுதும் இத்தாலிய வரலாற்றியலாளர் Professor Francesco Francesco Gabrieli யின் வார்த்தைகள்:

We find it in various versions, inconsistent in their content, but entirely consistent in their spirit of vituperation and hatred, in the writing of chroniclers, apologists, hagiographers and encyclopaedists of the Latin Middle Ages; Guibert of Nogent and Hildebert of Tours in the eleventh century, Peter the venerable in the twelfth, Jacques de Vitry, Martinus Polonus, Vincent of Beauvais and Jacobus, a Varagine, in the thirteenth, up to Brunetto Latini and his imitators, an Dante and his commentators

ஆக, மொத்த ஐரோப்பியர்களும் கூட்டணி வைத்து எழுதி இருக்கிறார்கள் - தங்கள் வக்கிரத்தை இஸ்லாத்தின் மீது காட்டி இருக்கிறார்கள்.

அது மட்டுமா? இவர்களுடைய கூட்டணியின் லட்சணத்தைப் பாருங்கள் -

லூதர் என்பவர் முகமதுவையும், போப் ஆண்டவரையும் ஒரு அணியில் வைக்கிறார் - இருவரையும் கிறிஸ்துவின் எதிரி என்கிறார். கத்தோலிக்கர்கள் சொல்கிறார்கள் - முகமது பிராட்டஸ்டண்டுன் இணைந்து கிறிஸ்துவிற்கு எதிராக இருக்கிறார். என்ன சொல்வது!

இத்தனைக்கும் கிறிஸ்துவைத் தூக்கிப் பிடிப்பதிலும், அவரை ஏற்றுக் கொள்வதிலும் முன்னணியில் இருப்பது இஸ்லாம். ஈஸா நபிகளின் பெயர் சொல்லப்படும் பொழுதெல்லாம் - peace be upon him என்ற வாழ்த்தையும் சேர்த்தே கூறுமாறு இஸ்லாமியர்கள் பணிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இஸ்லாமியத்தை முழுதாக அறியாதவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள் ' முகமது நபிகளை anti-Christ' என்று!!!

இதற்கு நடுவே, இஸ்லாத்தைப் புரிந்து கொள்ள நேர்மையான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. குரானின் சிறந்த மொழி பெயர்ப்புகளும் ஆங்கிலத்திலும் ப்ரெஞ்சு மொழியிலும் வெளிவந்தது ' குறிப்பாக Sale ஆங்கிலத்திலும் Savary ப்ரெஞ்சு மொழியிலும் மொழி பெயர்த்த குரான்கள் சிறப்பாக அமைந்தன. Boulainvilliers and Goethe முகமது நபிகள் மற்றும் அவரது பணியைப் பற்றியும் நேர்மையாக எழுதினார்கள்.

ஆனால், எல்லாம் சாண் ஏறினால் முழம் சறுக்கிய கதை தான். 1742ல் Voltaire என்பவர் Mahomet என்ற நாடகத்தை எழுதினார் - காழ்ப்புணர்ச்சியின் உச்சம் அது. நேர்மையான மனதில் கூட நஞ்சைக் கலக்கும் நாடகம் அது.

அதை சரி செய்யும் பணி Thomas Carlyle என்பவரால் செய்யப்பட்டது. அவரது புத்தகம் - 'Hero's and Hero-worship' என்ற புத்தகத்தில், 1840ல், நபிகள் அனைவரிலும் ஹீரோவாக தேர்வு செய்து எழுதுகிறார்:

Our current hypothesis about Mahomet, that he was a scheming Imposter, a Falsehood incarnate, that his religion is a mere mass of quackery and fatuity, begins really to be now untenable to anyone. The lies, which well meaning zeal has heaped round this man, are disgraceful to ourselves only

அவர் இஸ்லாம் என்பதன் உண்மையான பொருளை தன் இனத்தவருக்குச் சொல்கிறார் - Islam means surrendering to God. If that's so, then we all live in Islam.

மேலை நாட்டினர் தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டிருக்கின்றனர். மைக்கேல் எம் ஹார்ட் என்ற அமெரிக்கர் வெளியிட்ட புத்தகத்தில் - Top 100 - புத்தகத்தின் No 1 - முகமது நபிகள். அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணங்கள், மற்றும் விபரங்களை வேறொரு பதிவில் பார்க்கலாம்.

இவ்வாறு அனைவரும் தங்களது எண்ணங்களை மாற்றிக் கொண்டு, காழ்ப்புணர்ச்சியுடன் எழுதப்பட்டவற்றைத் தூக்கிக் குப்பையில் போட்டுவிட்ட பின்பு - அந்த குப்பையைக் கிளறி, எச்சில் இலைகளிலிருந்து நக்கி எடுத்து வந்த கருவைத் தான் தனது கற்பனையாக வெளியிட்ட கேவலமான மனிதன் - சல்மான் ருஷ்டி. அயோதுல்லா கொமேனியின் அதிதீவிர தண்டனை தீர்ப்பால், எழுந்த அனுதாபம் தான் - இந்த மனிதருக்குக் கிடைத்த பரிதாபம் தான் - இன்று பலருக்கு இந்த மனிதனைப் பற்றி பரிந்து பேச தூண்டுகிறது. கொமெய்னி ஆணையிட்ட தண்டனை தேவையற்றது. முட்டாள்தனமானது. இந்தத் துரோகிக்கு அதுவே ஒரு பாதுகாப்புக் கேடயமாக மாறிவிட்டது. தன் ஈனத்தை freedom of expression என்ற சொற்றோடர்களுக்குப் பின் மறைத்து தான் தப்புவதற்கு வழி ஏற்படுத்திக் கொண்டார் இந்த மனிதன்.

ஆனால் வரலாறுகளின் உண்மையை அறிந்த எந்த ஒரு மனிதனும், மதமாச்சர்யங்களுக்கு அப்பாற்பட்டு, இந்த மனிதனை வர்ணிப்பார்கள் -

'இவன் ஒரு இனத்துரோகி என்று'


பொறுமையாக வாசித்தவர்களுக்கு நன்றி.

இன்று நபிகள் பிறந்த தினம். அவரது பிறந்த நாளில் அவர் மீது தூற்றப்பட்ட ஒரு குற்றச்சாட்டிற்கு தகுந்த பதில் எழுத முடிந்த நிறைவினால், கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது.

ஒருவர் சொன்னார் - அல்லாஹ்வைக் கூட தூற்றி விட்டு, இந்த இஸ்லாமியர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்; ஆனால், முகமது நபிகளைப் பற்றி தூற்றி விட்டு தப்பித்துக் கொள்ள முடியாது என்று.

உண்மை தான் - ஒரு உண்மையான இஸ்லாமியனின் உணர்வில், உடலின் உயிர் மூச்சில் கலந்து விட்ட பெருமித உணர்வு - முகமது நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம். உலகின் எந்த சிறப்பான பொருளுக்கும் பண்டமாற்று செய்ய இயலாத உணர்வு அது. அல்லாஹ் - ஏக இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் - எனக்கு, உங்களுக்கு, மனிதர்களுக்கு, இன்னும் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், உயிரற்றவைகளுக்கும் அவன் தான் இறைவன்.

ஆனால், முகமது நபிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவர். அவர் மீது இறைவனுக்கு அடுத்த படியாக பற்றும் பாசமும் வைப்பது இஸ்லாமியர்களின் இருப்பிற்கு ஆதாரம்.

HAPPY EID MILAD TO ONE AND ALL

7 comments:

இப்னு பஷீர் said...

நண்பன்,
தகுந்த ஆதாரங்களை முன்வைத்து தெளிவானதொரு விளக்கத்தை தந்ததற்கு நன்றி.

உங்கள் பதிவின் மூலம் கல்வியாளரும் மார்க்க அறிஞருமான சர் சையத் அஹமத் கான் அவர்களைப்பற்றிய சில உண்மைகளை தெரிந்து கொள்ள முடிந்தது. சில மாதங்களுக்கு முன்பு 'திண்ணை'யில் ஹெச்.ஜி.ரசூல் என்பவர் இதே அறிஞரை எதிர்மறையான ஒரு கருத்திற்கு மேற்கோள் காட்டி எழுதியிருந்தார்.

முஹம்மது (ஸல்) அவர்களின் உள்மனத்தூண்டலால் வெளிப்பட்ட வசனங்களே குர்ஆன் என்ற தமது கருத்திற்கு ஆதாரமாக சர் சையது அஹமது கான் அவர்களை மேற்கோள் காட்டியிருந்தார் அவர்.

//நபிமுகமதுவிற்கு அல்லா அருளிய உள்மனத் தூண்டலே திருக்குர்ஆன் என்பதை கொய்ன்ராட் எல்ஸ்ட் சொன்னாரோ என்னவோ இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்கள் சர் சையத் அகமத் கான், குலாம் அகமது பர்வேஸ் உள்ளிட்ட பலர் விளக்கியுள்ளனர்.// என்று சொன்ன ரசூல்...

//நபிகளாரை கடிந்து கொள்வது போன்ற வசனங்களும் நபிகளாரின் உள்மனம் வெளிமனத்தை நோக்கி எழுப்பும் குரல்களாகும்.// என்றும் தன் மனம்போன போக்கில் வியாக்கியானம் செய்திருக்கிறார்.

தான் தவறாக புரிந்து கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை எப்பாடு பட்டாகிலும் சரியென நிரூபிக்க முயலும் இவரைப் போன்றவர்களுக்கு உங்கள் கட்டுரைத்தொடர் நல்ல விளக்கம் அளித்திருக்கும் என்று நம்புகிறேன்.

Unknown said...

உங்களின் இந்தத் தொடர் பதிவுகளின் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. மிகச் சிறப்பான பதிவுகள். என்னைப் போன்றே, எண்ணற்ற முஸ்லீம்களுக்குக்கூட இது பற்றிய விபரங்கள் சரிவரத் தெரியாமல் இருந்தது. மிகுந்த நன்றி. வல்ல இறைவன் உங்களுக்கிருக்கும் படிக்கும் ஆர்வத்தை மென்மேலும் வளர்க்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். (அப்போதுதானே எங்களுக்கு இதுபோன்ற சிறந்த பதிவுகள் கிடைக்கும்)

உங்களது சில பதிவுகளில் உள்ள சில விஷயங்களில் உங்கள் கருத்துகளோடு நான் ஒத்தப் போகவிடினும், (அதிலும் உங்கள் கருத்து சரியானவற்றில் ஆக வேண்டுமாய் பிராரத்திக்கிறேன்) பெரும்பான்மையான கருத்துகளில் நான் மிகவும் லயித்துப் போகிறேன். கருத்துக்களை கையாளும் விதத்தில் தேர்ந்த அறிஞனின் லாவகம் தெரியும்போது (அல்ஹம்துலில்லாஹ்) உங்களைப்போலவே நிறைய படிக்க வேண்டுமென்று மனது நினைக்கிறது.

சாத்தானிய வசனங்களின் ஒரு சில பதிவுகளைப் படிக்க நேர்ந்தது. அது ஒன்றும் அத்தனை சுவையாக படிப்பவர்களை ஈர்க்கும் வண்ணம் உள்ள புத்தகம் இல்லை. கொமைனிதான் அந்த புத்தகத்துக்கு நிறைய விளம்பரம் தேடித்தந்து விட்டாரோவென நானும் நினைத்ததுண்டு. ஏனெனில் ருஷ்டி அதற்கடுத்து எழுதிய புத்தகம் (பெயர் நினைவிலில்லை) கூட கொஞ்சம் படித்து பார்த்த போது அது அத்தனை ஆர்வத்தை தூண்டும் விதமாய் எழுதப்பட்டிருக்கவில்லை. நான் சிறந்த படிப்பவன் இல்லையாதலால் முழுதும் படிக்கும் பொறுமை இல்லை.

//ஒரு உண்மையான இஸ்லாமியனின் உணர்வில், உடலின் உயிர் மூச்சில் கலந்து விட்ட பெருமித உணர்வு - முகமது நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம். உலகின் எந்த சிறப்பான பொருளுக்கும் பண்டமாற்று செய்ய இயலாத உணர்வு அது. அல்லாஹ் - ஏக இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் - எனக்கு, உங்களுக்கு, மனிதர்களுக்கு, இன்னும் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், உயிரற்றவைகளுக்கும் அவன் தான் இறைவன்.
ஆனால், முகமது நபிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவர். அவர் மீது இறைவனுக்கு அடுத்த படியாக பற்றும் பாசமும் வைப்பது இஸ்லாமியர்களின் இருப்பிற்கு ஆதாரம்.//
இறுதியில் நீங்கள் எழுதியுள்ள இவ்வாசகம் உண்மையை உரிமையுடன் கூறுவதாக சிறப்பாக உள்ளது.

தவறான எண்ணம் கொண்டோர்க்கும் சரியாகப் புரிய வைக்க முயற்சித்துள்ளீர்கள். உயர்ந்த இறைவன் மென்மேலும் உங்களுக்கு அருளட்டும்.

அழகப்பன் said...

//இன்று நபிகள் பிறந்த தினம். அவரது பிறந்த நாளில் அவர் மீது தூற்றப்பட்ட ஒரு குற்றச்சாட்டிற்கு தகுந்த பதில் எழுத முடிந்த நிறைவினால், கண்களில் நீர் பெருக்கெடுக்கிறது.

ஒருவர் சொன்னார் - அல்லாஹ்வைக் கூட தூற்றி விட்டு, இந்த இஸ்லாமியர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்; ஆனால், முகமது நபிகளைப் பற்றி தூற்றி விட்டு தப்பித்துக் கொள்ள முடியாது என்று.

உண்மை தான் - ஒரு உண்மையான இஸ்லாமியனின் உணர்வில், உடலின் உயிர் மூச்சில் கலந்து விட்ட பெருமித உணர்வு - முகமது நபி ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம். உலகின் எந்த சிறப்பான பொருளுக்கும் பண்டமாற்று செய்ய இயலாத உணர்வு அது. அல்லாஹ் - ஏக இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் - எனக்கு, உங்களுக்கு, மனிதர்களுக்கு, இன்னும் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களுக்கும், உயிரற்றவைகளுக்கும் அவன் தான் இறைவன்.

ஆனால், முகமது நபிகள் இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானவர். அவர் மீது இறைவனுக்கு அடுத்த படியாக பற்றும் பாசமும் வைப்பது இஸ்லாமியர்களின் இருப்பிற்கு ஆதாரம்.//

எழுதிய உங்களுக்கு மட்டுமல்ல வாசித்த என் கண்களும் கலங்கின. முஹம்மது நபியவர்களின் மீது முஸ்லிம்களுக்கு இருக்கும் பற்றுக்கும் பாசத்திற்குமான காரணத்தை மிக அழகாகக் கூறியுள்ளீர்கள்.

வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகள்.

நண்பன் said...

நன்றி - இப்னு பஷீர்,

பஷீர் - ரசூல் is an alternative thinker. அவ்வளவு தான் என்னால் சொல்ல முடியும். சர் சையத் அஹ்மத் கான் சொன்னதாக ரசூல் கூறியவற்றை நான் வாசித்ததில்லை.

ஆனால், அவ்வாறு கூறியிருந்தாலும் - குரான் இறைவன் அருளித் தந்தது என்பதை மறுக்க முடியாது. இங்கு ரசூல் சொல்ல முனைவது - the medium of communication between prophet and the God.

வானவர் ஜிப்ரயீல் நபிகளின் கண்களுக்கு மட்டும் தெரிந்தார் மற்றவர் கண்களுக்குத் தெரியவில்லை என்னும் பொழுது - நபிகள் வானவரின் வருகையைத் தன் அகத்தால் மட்டுமே உணர்ந்திருக்க முடியும்.

அதாவது, தன் உள்ளுணர்வால் மட்டுமே. This is quite possible. There is a branch of science called MetaPhysics. It deals mainly with the intuitive power of the humans.

ரசூல் குறிப்பிடுவதும் இந்த் intuitive power ஆகத் தான் இருக்க வேண்டும். இந்த உள்ளுணர்வினால் நிகழக் கூடிய கார்யம் எதுவுமில்லை - IT can act only as a medium of communication with some thing beyond the comprehension of the human mind in its conscious state. தான் என்ற விழிப்புடன் இருக்கும் மனம் தரும் காரணங்கள் தேவைப்படமாலே விஷயங்களைப் புரிந்து கொள்ளவும், அறியாதவற்றை எளிதாக விளங்கிக் கொள்ளவும், கிரகித்த விஷயங்களை மனம் விழிப்படைந்த பின்னும் நினைவில் வைத்துக் கொள்ளவும் இயலும்.

இப்பொழுது இஸ்லாத்தை மிகவும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ள விரும்பும் பலரும் - இந்த வஹீ - வானவர் ஜிப்ரயீல் இவற்றை விளங்கிக் கொள்ள - முயற்சிக்கின்றனர். இது இப்பொழுது வளர்ந்து வரும் - இந்த metaphysics என்ற அறிவியலின் துணை கொண்டு - they are trying to reason how the communication of the prophet and the God took place - how best the religion can be integrated with the science and the logic and reasoning required by the inquisive mind of the man of this time.

இங்கு ஜிப்ரயீல் - can fit in as a metaphor to the intuitive power of the prophet which is not an ordinary gift - but extra-ordinary gift by God himself.

இன்றைய நவீன இஸ்லாமிய சிந்தனையாளர்கள் மத்தியில் புழங்கும் இந்த தத்துவம் - சாதாரண மக்களுக்குத் தேவையில்லா சமாச்சாராமாக இப்பொழுது இருக்கலாம். ஆனால், ஒரு மிக உயர்ந்த தளத்தில், மதங்களைப் புரிந்து கொள்ள நிகழும் தர்க்கங்களில் - விஞ்ஞானத்துடன் இணைத்து சாத்தியதை உண்டா என்ற தர்க்கம் எழத்தான் செய்யும்.

இந்தத் தர்க்கம் கண்டிப்பாகத் தேவை - இந்த தர்க்கத்திற்கு உடன் பட மறுக்கும் எந்த தத்துவமும் நாளை வழக்கொழிந்து போகும். ஏற்கனவே ஒரு முறை எழுதி இருக்கிறேன் - விஞ்ஞான பூர்வ சோதனைகளுக்கு தன்னை மதம் உட்படுத்திக் கொள்வதில் தவறில்லை. இங்கு இந்த intuitive power - இது சுய உணர்வுடன் தொடர்புடையது அல்ல. This is beyond conscious reasoning of a man's mind.

அதனால், இந்த சக்தியின் மூலம் - ஒரு விரிந்த வெளியில் இறைவனுடன் நபிகளுக்கு உண்டான அனுபவத்தின் மூலம் பெறப்பட்டது குரான் என்றும் சொல்லும் பொழுது - what had been put to test is the mere communication medium - not the subject of the communication.

Still, Quran do not have a partner and its only author is the God - not the human mind of the prophet.

இங்கு - ரசூல் சொல்ல வருவதும் இந்த communication medium பற்றி மட்டுமே. அப்படி தான் நான் புரிந்து கொள்கிறேன்.

மேலும் ரசூலின் சிந்தனைகள், இன்றைய விஞ்ஞான உலகின் நடைமுறையை ஒத்த நவீன சிந்தனையாளர்களுடன் ஒத்திருக்கிறது - அதனால் தான் சொல்கிறேன் - he is an alternative thinker. அவர் பெயரைச் சொன்னதுமே வெறுப்பு கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றே உணர்கிறேன்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

அன்பின் சுல்தான்,

மிக்க நன்றி - உங்கள் பாராட்டுதலுக்கு.

என்றாலும் இப்படி சஸ்பென்ஸ் வைத்து எழுதக் கூடாது - //உங்களது சில பதிவுகளில் உள்ள சில விஷயங்களில் உங்கள் கருத்துகளோடு நான் ஒத்தப் போகவிடினும், (அதிலும் உங்கள் கருத்து சரியானவற்றில் ஆக வேண்டுமாய் பிராரத்திக்கிறேன்)//

எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.

அன்புடன்
நண்பன்

நண்பன் said...

// வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகள்.//

நன்றி, அழகப்பன்.

Unknown said...

//எதைச் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை.//
'சூபிக்கவிதைகள்', 'நபியின் பர்த்டே'
முதலியவையெல்லாம் பொதுவானதாக இருப்பதால், வாய்க்கும்போது நேரில் கலந்துரையாடுவோம் நண்பரே.

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்