"எழுத்துகளையும் தாண்டி எனக்கென்று ஒரு உலகம் உண்டு; நான் எழுதுபவற்றை மட்டுமே வைத்துக் கொண்டு, என்னை எடை போடுபவர்களை எப்பொழுதும் என் எண்ணங்கள் வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கும்....."
- நண்பன்

Wednesday, January 30, 2008

இன்றைய தினம்



இன்றைய தினம்


துளித்துளியாய் ஒவ்வொரு அசைப்பிலும்
பெருவெளியின் துறத்தலில் கரைய
அவசரமற்ற நிதானத்தில்
தன்னைக் களைந்து கொண்டிருக்கிறது
அந்த ஒற்றை மரக்காடு

ஒவ்வொரு விடியலிலும்
நேற்றைய தின பெருவன உதிர்ப்பின்
எச்சங்களை அள்ளித் தீர்க்கும்
கவலைகள் பெருகிச் சேர்கிறது

அள்ளித் தீர்க்காத வேளையில்
சட்டை உரித்துப் போட்டுப் போகும்
பாம்பொன்று வந்து போகலாம்

ஈரப்பிசுபிசுப்பில்
அவிந்து மக்கும் கழிவிற்கிடையில்
ஆயிரங்கால் பூரான்களின் குடும்பத் தொகுதியொன்று
பல்கிப் பெருகத் தொடங்கலாம்

முகவரி தேடியலையும்
புதியவன் ஒருவனுக்கு
பாதைகள் விளங்காமல் போகலாம்

நேற்றைய இழப்புகளிலும்
நாளைய அச்சங்களிலும்
பார்க்கப்படாமலே கழிந்து போகின்றது
எல்லாம் களைந்து
திசைகளெங்கும் தன்னைக் கிடத்துகின்ற
மரத்தின் காய்ந்த அம்மணம்

No comments:

நண்பர்கள் சொல்கிறார்கள்

CSM - உலகச் செய்திகள்

GF - உலகச் செய்திகள்